வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் நகரில் உள்ளது மவுண்ட் வியூ அடுக்குமாடி குடியிருப்பு. தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை 1987-ல் கட்டி விற்பனை செய்துள்ளது. 72 வீடுகளுள்ள இந்த அபார்ட்மெண்டில் பாதியளவுக்கு இந்துக்களும், மீதி வீடுகளில் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் உள்ளனர். திடீரென வளாகத்தில் ஒரு சாய்பாபா கோயில் கட்டப்பட்டிருப்பதும், அதுபற்றி கேள்வியெழுப்பும் சிலரை இந்து முன்னணியினர் மிரட்டுவதும் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய குடியிருப்போர் நலச்சங்க செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கவுதம், உறுப்பினர் வசந்தகுமார் இருவரும், “""மிச்சமிருக்கும் காலியிடத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால் 72 குடியிருப்புவாசிகளின் கருத்தைக் கேட்டு அவர்களின் சம்மதத்துடன்தான் முடிவுகள் எடுக்கவேண்டும் என்பதுதான் விதி. இதனை கடைப்பிடிக்க மறுக்கிறார்கள் தற்போது பதவியிலுள்ள சிலர். இந்த குடியிருப்பு வளாகத்தில் 1992-ல் கட்டப்பட்ட விநாயகர் கோயில் நுழைவாயில் பகுதியில் உள்ளது. இந் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 15 பேரிடம், குடியிருப்போர் சங்கத் தலைவரான நாராயணன், "விநாயகர் கோயில் உள்ளே ஒரு பாபா சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' எனச்சொல்லி அனுமதி கேட்டார்.
"கோயில் உள்ளேதானே' என ஒப்புக்கொண்டோம். பின்னர் "கோயி லுக்குள் இடமில்லை வெளியே வைக் கிறோம்' என்றார்கள். பின் "கீற்றுக் கொட்டாய் போட்டு தனியே வைக்க லாம்' எனச் சொன்னார்கள். தற்போது பார்த்தால் தனியே ஒரு கோயிலையே கட்டிவிட்டார்கள்''’என்றனர்.
செயற்குழு உறுப்பினர் ராதாவோ, ""தனியாக கோயில் கட்டும்போதே நான் தலைவருக்கு கேள்வி கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அவர் பதிலே சொல்ல வில்லை. தற்போது குடியிருப்பு பகுதிக்குள் யார் யாரோ வருகிறார்கள். உள்ளே வருபவர்களிடம் "நீங்கள் யார் எனக்கேட்டால், நீ யாரென எங்களை கேள்வி கேட் கிறார்கள். கோயில் கட்ட நோட்டீஸ் அச்சடித்து பணம் வசூலித்த விவகாரமே தாமதமாகத்தான் தெரியவந்தது' என முறையிடுகிறார்.
பேராசிரியர் கவுதம் மனைவி பொன்னரசி, ""யாருக் கும் தெரியாமல் 5 நாட்களில் கோயிலை பெரும்பகுதி கட்டிமுடித்தனர். ஒருநாள் இந்து முன்னணி நிர்வாகி மகேஷ் குடும்பத்தோடு வந்தார். உள்ளே போக வழியில்லாத அளவுக்கு மறித்துக்கொண்டு நின்றதால் கேள்வி கேட்டோம். வா, போ என மரியாதையில்லாமல் பேசினார். அதன்பின்பே காவல்நிலையத்தில் புகார் தந்தோம்''’என்றார்.
குற்றச்சாட்டு குறித்து குடியிருப்புவாசிகள் நலச்சங்க தலைவரும், சி.பி.எம். கட்சியின் முன்னாள் மா.செ.வுமான நாராயணனிடம் கேட்டபோது, ""கும்பாபிஷேகம் செய்யவும், பாபா கோயில் கட்டவும் அனுமதி கேட்டார்கள். நிர்வாகக் கூட்டம் போட்டு அனுமதி தந்தோம். எல்லா குடும்பத்தாருக்கும் தகவல் கூறிவிட்டோம். அபார்ட்மெண்ட்க்கு அருகில் தலித் மக்கள் வசிக்கிறார் கள். பாபா கோயில் கட்டியபின் அவர்கள் அதிகளவில் கோயிலுக்கு வருகிறார்கள். அந்த தீண்டாமை மனநிலைதான் இந்தப் பிரச்சினைக் குக் காரணம். கம்யூனிஸ்டாக இதை ஏற்றுக்கொள்ள முடியாது''’என்றார்.
-து. ராஜா