புதுச்சேரி ஜிப்மரில் அலுவல்ரீதியான அனைத்துப் பதிவுகளும் இந்தியில் இருக்க வேண்டுமென அதன் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளி யிட்டுள்ள உத்தரவால் புதுச்சேரி போராட்டக் களமாகியுள்ளது. இது வெறும் இந்தித் திணிப்பு மட்டுமல்ல, இந்தி பேசுபவர்களை மட்டுமே வேலைக்கமர்த்தும் மறைமுகத் திட்டம் என கொந்தளிக்கின்றனர்.

புதுச்சேரியில் மத்திய அரசின் நிதியளிப்பில் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கும் ஜிப்மர் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.

pondy

Advertisment

ஜிப்மரின் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கடந்த ஏப்ரல் 28, 29-ஆம் தேதிகளில் 2 சுற்றறிக் கைகளை வெளியிட்டுள்ளார். அதிலொன்றில், ‘மொழிச் சட்டம் 1963 பிரிவு 3(3)-ன் படி பொது ஆணைகள், அறிவிக்கைகள், தீர்மானங்கள், விதிகள், நிர்வாகம், ஒப்பந்தங்கள் தொடர்பான படிவங்கள் மற்றும் ஆவணங்கள் இந்தி, ஆங்கிலம் என 2 மொழிகளில் இருக்கவேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு சுற்றறிக்கையில், "1976 அலுவல் மொழிச்சட்டம் 11(2)-ன் படி அலுவலகத்தின் அனைத்துப் பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகியவற்றின் பொருள், விவரங்களின் தலைப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப் படும். எதிர்காலப் பதிவுகள் முடிந்தளவுக்கு இந்தியில் மட்டுமே இடம்பெறும் வகையில் இருத்தல்வேண்டும். அனைத்துத் துறைகளின் தலைவர்கள், பிரிவுப் பொறுப்பாளர்கள், ஊழியர்கள் அனைவரும் இவ்விதியை கண்டிப்பாக கடைப்பிடிக்க தேவையான நடவடிக் கைகள் எடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள், அதன் பொறுப்பு அதிகாரிகள் மூலம் இவ்விஷயத்தில் கண்காணிக்கப்படும். இது தொடர்பாக உதவி தேவைப் பட்டால் இந்தி செல்லை அணுக லாம்'’என்று குறிப்பிட்டுள்ளார்

ஜிப்மரின் இந்த சுற்றறிக்கைக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து கண்டனம் எழுந் துள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் ஜிப்மர் முன்பாக தினந்தோறும் மாறி மாறி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

dd

Advertisment

இதுகுறித்து புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவா கூறுகையில், "ஆர்.எஸ்.எஸ். கூடாரத்தினால் ஜிப்மர் நிர்வாகம் சீரழிந்துகொண்டிருக்கிறது. ஜிப்மரில் 800 பணியிடங்கள் காலியாக உள்ளன. நேரடி நியமனம் மூலம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் தெரிந்தவர்கள் ஒருவர்கூட இல்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வாய்திறக்காமல் உள்ளார். ஜிப்மர் இயக்குனர் தனது அறிவிப்பை திரும்பப் பெறவில்லை என்றால் ஜிப்மர் இயக்குனரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம்''’என்றார்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறும்போது, "இந்தியை இந்தியா முழுவதும் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை பா.ஜ.க எடுத்துவருகிறது. அமித்ஷா வருகைக்குக்கூட அமைச்சர்கள் இந்தியில்தான் வரவேற்பு பேனர் வைத்தனர். அவர் வந்து சென்றபிறகுதான் மத்திய அரசு இந்தி குறித்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பா.ஜ.க. இந்தியை திணிக்கவேண்டும் என்று நினைக்கிறது. இந்தியை கொண்டுவர நாங்கள் விடமாட்டோம்''” என்றார்.

தமிழர் களம் அமைப்பாளர் புதுவை கோ.அழகர் நம்மிடம், “"ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வருவோரில் பெரும்பான்மையினர் தமிழ் பேசும் மக்கள்தான். . இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சி காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1976 அலுவல் மொழி விதியைக் குறிப்பிட்டு வரும்காலங்களில் அலுவல் பணிகளில் இந்தியில் மட்டுமே எழுதவேண்டும் என ஜிப்மர் இயக்குனர் தெரிவித்துள்ளது இந்தி பேசுபவர்களை மட்டுமே பணியிலமர்த்தும் மறைமுகத் திட்டமாகும்.

ff

தமிழ் மட்டுமே தெரிந்த நோயாளிகள் இந்தி மட்டுமே தெரிந்த மருத்துவர்களிடம் தங்களின் நோயின் தன்மை குறித்து எப்படி கூறுவார்கள்? எனவே இனி ஜிப்மரின் அனைத்து அலுவல் கோப்புகளிலும் இந்தி, ஆங்கிலத்துடன் தமிழும் கட்டாயம் இருக்கவேண்டும் எனவும், உள்ளூர் மொழி பயின்றவர் களுக்கு குறிப்பிட்ட சதவிகித பணி நியமன ஒதுக்கீடு கோரியும் போராட்டக் குரல்கள் ஒலிக்கும்''’என்கிறார்.

இதனிடையே கடந்த 9-ஆம் தேதி ஜிப்மருக்கு சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நிர்வாக இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "பொதுமக்கள் தொடர்பான கருத்துக்கள், நோயாளி களுக்கான மருத்துவ சேவை, அறிக்கை குறிப்புகள் தமிழில் இருக்கவேண் டும். உள்ளூர் மொழியான தமிழை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிப்மர் மத்திய அரசு நிறுவனம். இங்கு இந்தி மட்டுமே தெரிந்தவர்களும் பணியாற்று கின்றனர். அவர்களுக்கான சேவை புத்தகத்தில் இந்தியைப் பயன் படுத்தும்படி கூறப்பட்டுள்ளது''’என்று சமாளித்தார்.

தமிழிசை இவ்வாறு தெரிவித் துள்ள நிலையில் நோயாளிகளுக்கான பதிவு அட்டையில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே உள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற திட்டத்தை மத்திய அரசு நிறுவனங்களில் 100 சதவீதம் நடைமுறைப்படுத்த பா.ஜ.க செயல் படுத்தும் மறைமுகத் திட்டம்தான் இந்த சுற்றறிக்கை நடவடிக்கை எனும் சந்தேகம் எழுந்துள்ளது.