அடேய் நாய்களா... தாலியைக் கழற்றிய... நீட் கொடூரம்!

ss

ருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு என சொல்லப்படும் நீட், உயிர் விழுங்கும் தேர்வாக மாறி, இந்திய அளவில் மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது. அனிதா தொடங்கி 40 பேர் வரை நீட் அரக்கன் பலிவாங்கியுள்ளது. நீட் தேர்வு எழுதி வெற்றிபெறுவது ஒரு சவாலெனில், நீட் தேர்வு நடக்கும் மையங்களில் சோதனையைத் தாண்டி உள்ளே நுழைவதே இன்னொரு சவாலாக மாறியுள்ளது.

மே 4-ஆம் தேதி, 2025-க்கான நீட் தேர்வு இந்தியாவெங்கும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ -மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு நடைபெற, மாணவ -மாணவியர் கடும் கெடுபிடியுடன் தேர்வு மையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கூந்தல் முதல் காதில் போடும் கம்மல், மூக்குத்தி என எந்தவித நகைகளும் அணிய மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. மாணவ- மாணவிகள் முழுக்கை உடையணிந்து வந்திருக்கும்பட்சத்தில் அவற்றை வெட்டிக் குறைத்தனர்.

neet

ப்ளூடூத் போன்ற சாதனங்களை ரகசியமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற எண்ணத்தில், தீவிரவாதிகளைச் சோதிப்பதுபோல, மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தபின்பே தேர்வறைக் குள் அனுமதித்தனர். மாணவ- மாணவிகள் கொண்டுவரும் ஹால் டிக்கெட்டைக்கூட அவை அசலானதுதானா என்று சரிபார்த்தே அனுமதித் தனர். இந்தக் கெடுபிடி சோதனை பற்றி அறியாமல் முதல் முறை தேர்வு எழுதவந்த மாணவிகள் தங்கள் கம்மல், செயின், மூக்குத்தி, வளையல், கொலுசைக் கழற்றி, இருண்ட முகத்துடன் தங்கள் பெற்றோரிடம் கொடுக்கும் காட்சியை பல்வேறு இடங்களில் காணமுடிந்தது.

அதேபோல மாணவர்கள் பெல்ட், ஷீவை அணியக்கூட தேர்வு மையங்கள் அனுமதிக்க வில்லை. திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் நீட் தேர்வு எழுத ஒரு புதுமணப் பெண்

ருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு என சொல்லப்படும் நீட், உயிர் விழுங்கும் தேர்வாக மாறி, இந்திய அளவில் மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது. அனிதா தொடங்கி 40 பேர் வரை நீட் அரக்கன் பலிவாங்கியுள்ளது. நீட் தேர்வு எழுதி வெற்றிபெறுவது ஒரு சவாலெனில், நீட் தேர்வு நடக்கும் மையங்களில் சோதனையைத் தாண்டி உள்ளே நுழைவதே இன்னொரு சவாலாக மாறியுள்ளது.

மே 4-ஆம் தேதி, 2025-க்கான நீட் தேர்வு இந்தியாவெங்கும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ -மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு நடைபெற, மாணவ -மாணவியர் கடும் கெடுபிடியுடன் தேர்வு மையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கூந்தல் முதல் காதில் போடும் கம்மல், மூக்குத்தி என எந்தவித நகைகளும் அணிய மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. மாணவ- மாணவிகள் முழுக்கை உடையணிந்து வந்திருக்கும்பட்சத்தில் அவற்றை வெட்டிக் குறைத்தனர்.

neet

ப்ளூடூத் போன்ற சாதனங்களை ரகசியமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற எண்ணத்தில், தீவிரவாதிகளைச் சோதிப்பதுபோல, மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தபின்பே தேர்வறைக் குள் அனுமதித்தனர். மாணவ- மாணவிகள் கொண்டுவரும் ஹால் டிக்கெட்டைக்கூட அவை அசலானதுதானா என்று சரிபார்த்தே அனுமதித் தனர். இந்தக் கெடுபிடி சோதனை பற்றி அறியாமல் முதல் முறை தேர்வு எழுதவந்த மாணவிகள் தங்கள் கம்மல், செயின், மூக்குத்தி, வளையல், கொலுசைக் கழற்றி, இருண்ட முகத்துடன் தங்கள் பெற்றோரிடம் கொடுக்கும் காட்சியை பல்வேறு இடங்களில் காணமுடிந்தது.

அதேபோல மாணவர்கள் பெல்ட், ஷீவை அணியக்கூட தேர்வு மையங்கள் அனுமதிக்க வில்லை. திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் நீட் தேர்வு எழுத ஒரு புதுமணப் பெண் தேர்வு மையத்துக்கு ஓடோடி வந்தார். ஆபரணங்கள் அனுமதிக்கப்படாததால் அவர் அணிந்திருந்த தாலியைக் கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற காட்சி கண்டவர்களைப் பதறவைத்தது. வேறொரு தேர்வு மையத்தில் பட்டன் களை அகற்றச் சொன்னதால், தன் உடையில் பட்டன்கள் அகற்றப்பட்டால் அணியமுடியாது என்பதால், காவலர்கள் வேறு உடை வாங்கித்தர அதை அணிந்துகொண்டு தேர்வறைக்குச் சென்றார் ஒரு மாணவி.

விவரம்தெரியாமல் உலோக பட்டன் உடைவைத்த மேற்சட்டைகள், டாப்புகள் அணிந்து வந்தவர்களை, அவர்கள் ஆணா, பெண்ணா என்று பாராமல் அவர்களது பட்டன்களை அறுத்தெடுத்த பின்பே உள்ளே அனுமதித்தனர்.

neet

தமிழகத்தில் இப்படியென்றால் கர்நாடகத்தில் ஸ்ரீபாத் பாட்டில் எனும் மாணவர் பூணூல் அணிந்து நீட் தேர்வு மையத்துக்கு வந்திருந்தார். அவரை பூணூலைக் கழட்டும்படி தேர்வர்கள் கூற, அவரோ மறுத்தார். கழட்டாமல் தேர்வு மையத்துக்குள் அனுமதி யில்லை எனக் கூறப்பட்டதால் அவர் தடுமாறினார். கடைசி நிமிடத்தில் பூணூலைக் கழற்றி வைத்துவிட்டு ஸ்ரீபாத் உள்ளே சென்றார். அவரது சமூகத்தினர், அந்த தேர்வு மையம் முன்பு போராட்டம் நடத்தியது வைரலானது.

நீட் தேர்வு கெடுபிடிகள் குறித்து விமர்சித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “"நீட் வந்த நாள் முதலே குளறுபடிகள்தான். நீட் தேர்வுக்கு தாலியைக் கழற்றிவைத்து விட்டுப் போய் தேர்வெழுதவேண்டுமென்பது வரலாறுகாணாத அத்துமீறல். கணவரே மனைவியின் தாலியைக் கழற்றிவிட்டு மையத்துக்கு அனுப்பிவைக்கும் துர்பாக்கிய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது''’எனக் கடுமையாக விமர்சித்தார்.

neetexam

தமிழகத்திலும் தென்மாநிலங்களிலும் இப்படி தேர்வறைக்குள் அனுமதிக்கவே கடும் கெடுபிடிகள் நடக்க, கடந்த வருடம் இந்தியாவின் பல பகுதிகளில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை கிளம்பியது.

மத்திய புலனாய்வுத் துறை இதுகுறித்த விசாரணையில் இறங்கியது. சமீபத்தில் 26 எம்.பி.பி.எஸ். மாணவர்களை நீட் தேர்வு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி சஸ்பெண்ட் செய்துள்ளது. 2025, 2026 நீட் தேர்வில் கலந்துகொள்ள ஒன்பது பேருக்கு அனுமதி மறுத்துள்ளது. தேர்வின்போது நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்தியதாகக் கூறி 42 மாணவர்களை, மூன்று ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதித்துள்ளது. தேசிய தேர்வு முகமை. அதேபோல நீட்டுக்கு விண்ணப்பித்த 215 மாணவர்களின் விண்ணப்பங்களை, அவர்கள் விண்ணப்பம் விசாரணையில் இருப்பதாகக் கூறி நிறுத்தி வைத்திருக்கிறது.

இவ்வாண்டும் நீட் தேர்வு முடிந்ததும், வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை கிளம்பியது. ஆனால் அவ்வாறு வெளியான தகவல் பொய் என ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

அதேசமயம், நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு மாற்றாக வேறொரு நபரை நீட் தேர்வெழுதி பாஸாக வைக்க பெரிய நெட்வொர்க்கே வடமாநிலங்களில் இயங்கிவருவதாகவும், அவர்கள் இதற்கு 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூலிப்ப தாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில்கூட இதுதொடர்பாக ஒடிஷாவைச் சேர்ந்த இருவரையும் ஜார்க்கண்ட், பீகாரைச் சேர்ந்த தலா ஒருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நீட் தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் பூஜ்ய மதிப்பெண் பெற்றாலும்கூட, காசு கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடிக்க லாம் என்ற திருத்தத்தை 2022-ல் ஒன்றிய அரசு கொண்டுவந்தது. இதனால் தகுதியுள்ளவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கமுடியும் என்று நீட் அறிமுகத்தின்போது பா.ஜ.க. கூறியது பொய்யாகி யுள்ளது. கோடியில் பணம் வைத்திருப்பவர்கள், பேருக்கு நீட் தேர்வு எழுதிவிட்டு காசு கொடுத்து சீட் வாங்கிவிடலாம். நீட் தேர்வின் வினாத்தாளை கசியவிடுபவர்களை அடையாளம் கண்டு செலவழிப்பவர்களுக்கும் மருத்துவச் சீட்டு கிடைத்துவிடும். இன்னும் சிலரோ, நீட் தேர்வை வெற்றிபெறக்கூடிய நபரை ஆள்மாறாட்டம் மூலம் தேர்வெழுத வைத்துவிட்டு மருத்துவக் கல்லூரி இடத்தைப் பெற்றுவிடக்கூடும்.

ஆனால் உண்மையாகப் படித்து தேர்வெழுத வருபவர்களை சட்டையக் கிழி, பட்டனை அறு, கம்மலைப் பிடுங்கு என நீட் தேர்வு மையங்களின் வாசலில் வைத்து இவர்கள் படுத்துகிற பாட்டைப் பார்த்தால்... ஒருபக்கம் வேதனையாகவும், மாணவர்களின் வேதனையைப் பார்த்து மறுபக்கம் கொதிப்பாகவும் இருக்கிறது.

________________

மாணவன் விபரீத முடிவு! பலியான மாணவி!

neetexamதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த தனபால் மற்றும் சாவித்திரி தம்பதியின் மகன் சங்கீர்த்தன். தனபால் விசைத்தறி தொழில் செய்துவரும் நிலையில் சங்கீர்த்தன் தனது பள்ளிப் படிப்பை பல்லடம் அரசுப் பள்ளியில் முடித்துள்ளார்.

சிறுவயது முதலே மருத்துவர் ஆகவேண்டுமென்ற கனவோடு கடந்த வருடம் நீட் நுழை வுத் தேர்வு எழுதிய நிலையில் 230 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மீண்டும் கடந்த வருடம் முழுவதும் நீட் நுழைவுத் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பயிற்சிபெற்று வந்துள்ளார். இந்த வருடம் இரண்டாவது முறையாக சென்ற 4-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை திருமுருகன்பூண்டியிலுள்ள மையத்தில் எழுதிவிட்டு வீடு திரும்பினார். பிறகு வினாத்தாள் களை வீட்டில் வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண் கள் வரும் என சரி பார்த்துள்ளார்.

"தேர்வை ஒழுங்காக எழுதாத தால் பெற்றோருக்குக் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஆகவே எம்.பி.பி.எஸ். சீட்டோடுதான் வருவேன்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டுச் சென்றுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், “"அம்மா, அப்பா... நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. நான் டாக்டராகணும்னு சொன்ன உடனே எனக்கு என்ன வேணும்னு கேட்டு எல்லாம் செஞ்சீங்க. என்னை கோச்சிங் கிளாஸ் சேர்த்து விடறதா சொன்னீங்க. நான்தான் வீட்டிலிருந்தே படிக்கிறேன்னு சொன்னேன். சொன்னதைச் செய்ய முடியவில்லை. இருந்தாலும் என்னு டைய கனவை என்னால் விடமுடிய வில்லை. உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல. அதனால் நான் வீட்டைவிட்டு வெளியே போறேன். ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டோட திரும்பி வருவேன். நான் எந்த ஒரு தப்பான முடிவையும் எடுக்கமாட்டேன். நீங்களும் எடுக்கமாட்டீங்கனு நம்பிப் போறேன். அப்பா... அம்மாவையும், ஸ்ரீயையும் நல்லா பாத்துக்கோங்க. என் படிப்புக்குத் தேவையான டாக்குமெண்ட்ஸ், புக் மட்டும் எடுத்துச் செல் கிறேன்'” என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு பல்லடம் காவல் நிலையத்தில் புகாரளித் துள்ளனர்.

மேல்மருவத்தூரைச் சேர்ந்த மாணவி கயல்விழி. அவரை, நீட் தேர்வுக்கு ஆயத்தம் செய்ய அவரது தாயார் எழுப்பவந்த நிலையில், வீட்டில் பிணமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தேர்வு காரணமாக எழுந்த மனஉளைச்ச லால் அவர் தற்கொலை செய் திருக்கிறாரா என மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமிர்த லிங்கம் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

-ஜீவாதங்கவேல்

nkn100525
இதையும் படியுங்கள்
Subscribe