ராணுவ உதவியுடன் பசுமைவழிச் சாலையில்ல கனிம வளம் கொள்ளை

greenfieldroad

-மக்களை மிரட்டும் அரசு!

""நாங்க அளந்துக்கிட்டுப் போறோம். நீங்க வந்து காசு வாங்கிக்குங்க. அதுக்கு மேல ஏதாவது பேசுனீங்கன்னா போலீஸ்தான் பதில் சொல்லும்'' என இடத்துக்குச் சொந்தக்காரர்களை எச்சரித்து விட்டு அவர்களது இடத்தையும் நிலத்தையும் அளந்து கல் நடுகிறார்கள் அதிகாரிகள். எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் நிற்கிறார்கள் மக்கள். எதிர்த்துக் கேட்டால் சித்ரவதைதான்.

greenfieldroad

சேலம் -சென்னை வரை 277 கிலோமீட்டர் தூரத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமைவழி விரைவுச்சாலை அமையவுள்ளது. 900 அடி அகலத்தில் எட்டுவழிச் சாலையாக அமையவுள்ள இந்தச் சாலை, திருவண்ணா மலை மாவட்டத்தில் மட்டும் 122 கிலோமீட்டரும், பிற நான்கு மாவட்டங்களில் 155 கிலோமீட்டரும் அமைய வுள்ளது.

முழுக்க முழுக்க விவ சாயத்தை மட்டுமே நம்பியுள்ள திருவண்ணாமலை மாவட்டம்தான் பசுமைவழிச் சாலையால் அதிகளவு பாதிக்கப்படப்போகிறது. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள், பல கிராமங்கள் நேரடியாக அழியப்போகின்றன. இத்தோடு சேலம் மாவட்டத்தில் மஞ்சவாடி, ஜருகுமலை, தருமபுரி மாவட்டத்தில் நொங்கனூர், பள்ளப்பட்டி, பூவம்பட்டி, திருவண்ணா மலை மாவட்டத்தில் நம்பேடு, பிஞ்சூர், சொரக்குளத்தூர், ஆலாலமங்களம், முன்னார்மங்களம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுவஞ்சூர் என காப்புக் காடுகள் அழிக்கப்படவுள்ளன.

சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கெனவே மூன்று வழித்தடங்கள் இருப்பதால், நான்காவதாக உருவாகும் இச்சாலைக்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதைப் பொருட்படுத்

-மக்களை மிரட்டும் அரசு!

""நாங்க அளந்துக்கிட்டுப் போறோம். நீங்க வந்து காசு வாங்கிக்குங்க. அதுக்கு மேல ஏதாவது பேசுனீங்கன்னா போலீஸ்தான் பதில் சொல்லும்'' என இடத்துக்குச் சொந்தக்காரர்களை எச்சரித்து விட்டு அவர்களது இடத்தையும் நிலத்தையும் அளந்து கல் நடுகிறார்கள் அதிகாரிகள். எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் நிற்கிறார்கள் மக்கள். எதிர்த்துக் கேட்டால் சித்ரவதைதான்.

greenfieldroad

சேலம் -சென்னை வரை 277 கிலோமீட்டர் தூரத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமைவழி விரைவுச்சாலை அமையவுள்ளது. 900 அடி அகலத்தில் எட்டுவழிச் சாலையாக அமையவுள்ள இந்தச் சாலை, திருவண்ணா மலை மாவட்டத்தில் மட்டும் 122 கிலோமீட்டரும், பிற நான்கு மாவட்டங்களில் 155 கிலோமீட்டரும் அமைய வுள்ளது.

முழுக்க முழுக்க விவ சாயத்தை மட்டுமே நம்பியுள்ள திருவண்ணாமலை மாவட்டம்தான் பசுமைவழிச் சாலையால் அதிகளவு பாதிக்கப்படப்போகிறது. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள், பல கிராமங்கள் நேரடியாக அழியப்போகின்றன. இத்தோடு சேலம் மாவட்டத்தில் மஞ்சவாடி, ஜருகுமலை, தருமபுரி மாவட்டத்தில் நொங்கனூர், பள்ளப்பட்டி, பூவம்பட்டி, திருவண்ணா மலை மாவட்டத்தில் நம்பேடு, பிஞ்சூர், சொரக்குளத்தூர், ஆலாலமங்களம், முன்னார்மங்களம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுவஞ்சூர் என காப்புக் காடுகள் அழிக்கப்படவுள்ளன.

சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கெனவே மூன்று வழித்தடங்கள் இருப்பதால், நான்காவதாக உருவாகும் இச்சாலைக்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் நிலம் கையகப்படுத்தும் பணியில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும், நிலம் கையகப்படுத்துவதற்கெனவே 6 தாசில்தார்களை நியமித்துள்ளார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவண்ணாமலை எம்.பி.யான வனரோஜாவின் ஊரில் சர்வே எடுக்கும் பணியைத் தொடங்கி யுள்ளார்கள். சர்வேயின்போது, நிலத்துக்கு உரிமையாளர்களை அருகே வரவிடாமல் போலீஸை வைத்து தடுத்துவிட்டு அளந்து அளவுக்கல் நடும் வேலையை மும்முரமாகச் செய்துவருகின்றனர் அதிகாரிகள். நிலங்களை, வீடுகளை இழக்கும் மக்கள் குமுறினாலோ… எதிர்த்தாலோ காவல்துறை எச்சரித்து விரட்டுகிறது.

greenfieldroad

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி கொடூரங்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளதால், போராட்டத்துக்குச் சென்றால் எங்கே தங்களையும் சுட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் மக்கள். எனினும் தங்கள் கிராமத்தில் மட்டும் 155 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சிப்பதால், பயத்தையும் மீறி ஜூன் 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர் சி.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.

எட்டுவழி பசுமைச்சாலை எதிர்ப்பு போராட் டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாசறை பாபுவை சந்தித்துப் பேசி னோம். “""ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் மலைகளிலிருந்து தாதுக்களை வெட்டியெடுக்க இந்த சாலை அமைக்கவில்லை என தெரிவிக் கிறார்கள். ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் வேடியப்பன் சாலைக்கு ஒரு இணைப்புச் சாலை, சேத்பட் அருகே கங்ககூடாமணி கிராமத்தில் ஒரு இணைப்புச் சாலை செங்கல்பட்டு அருகே ஒரு இணைப்புச் சாலை அமைகிறது. இணைப்புச் சாலை வரும் இடங்கள் எல்லாமே தாதுக்கள் உள்ள மலைப்பகுதிகள். எதற்காக இந்த இடங்களில் இணைப்புச் சாலை? பன்னாட்டுக் கம்பெனி களுக்காக பாதை உருவாக்கித் தர எங்களது விவசாயத்தை, வசிப்பிடத்தை, மலைவளத்தை முற்றிலும் அழிக்கிறது''’என்கிறார் ஆவேசமாக.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விநாயகம், இந்த சாலைகளின் பின்னணி குறித்துப் பேசினார். “""திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி, சேலம் டூ வாணியம்பாடி, உளுந்தூர்பேட்டை டூ சேலம் நாற்கர சாலைகளை அகலப்படுத்தவேண்டு மென்பது மக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கை. திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி சாலைப்பணி தனியாருக்கு டெண் டர் விடப்பட்டு அந்தப் பணி பாதியில் கைவிடப்பட்டது. அதற்கு நிதி ஒதுக்கி அந்தத் திட்டத்தை முடிக்கச் சொல்லி எம்.பி., எம்.எல். ஏ.க்களோடு பொதுநல அமைப்பு களும் மத்திய தரைவழிப் போக்கு வரத்துத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தபோது நிதி இல்லையென கைவிரித்தது.

மற்ற இரண்டு திட்டங் களுக்கும் இதே பதில்தான். இந்த மூன்று திட்டங்களுக்கும் அதிக பட்சம் 2 ஆயிரம் கோடி ரூபாய் போதும். இந்த மூன்று திட்டங் களுக்கும் நிதியில்லை என்ற அதே அமைச்சகம், பத்தாயிரம் கோடி செலவில் பசுமைவழி விரைவுச் சாலை அமைக்க நிதி ஒதுக்கி யுள்ளது. பொதுமக்கள் கேட்கவே கேட்காத சாலையமைப்பதில் இத்தனை அவசரம் காட்டக் காரணம்... சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மலைகளின் தாதுவளம்தான். இரும்பு, பிளாட்டினம் போன்றவற்றை வெட்டியெடுத்து கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் பார்க்கவே இந்தச் சாலைகள் அமைக்கப் படுகின்றன.

greenfieldroadஇதை வெளிப்படையாக அரசாங்கம் கூறவில்லை. ஆனால் பா.ஜ.க. பிரமுகர்கள் கூறிவரு கிறார்கள். அந்த பா.ஜ.க பிரமுகர் களும் கூறாத ஒரு ரகசியமும் இந்தச் சாலையின் பின் மறைந் துள்ளது. இந்தச் சாலை இராணுவ பயன்பாட்டுக்காகவும் அமைக் கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் இராணுவ கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மோடி பேசும் போது, "தமிழகத்தில் இராணுவத் தளவாடங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும்' என்றார். சேலத்தில் அந்த இராணுவ பூங்கா அமைப்பதற்காக 1000 ஏக்கர் இடத்தை வளைத்துள்ளது மத்திய உள்துறை. தனியார் துறையினருடன் இணைந்து அங்கு இராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் வரப் போகின்றன.

இந்தத் தொழிற்சாலைகளுக்கு கச்சாப்பொருட்களைக் கொண்டுபோகவும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும்தான் இந்தச் சாலை. தமிழகத்தை இராணுவ மையமாக்கி வருங்காலங்களில் போராட்டம் எதுவும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளும் திட்டமும் இதன் பின்னணியில் உண்டு''’என இதன் நோக்கங்களை விவரித்தார். “

ஜிண்டால் நிறுவனம் நடத்திய ஆய்வில் திருவண்ணா மலை மாவட்டம் கவுத்தியப்பன்- வேடியப்பன் மலையில் 35 மில்லியன் டன் இரும்புத்தாது உள்ளதாகக் கண்டறிந்திருக்கிறது. அதேபோல் சேலம் கஞ்ச மலையிலும் இரும்புத்தாது கண்டறியப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை வேடியப்பன் மலையை ஜிண்டாலிடம் தருவது சம்பந்தமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. அப்போதைய ஆட்சியர் ராஜேந்திரன் மக்க ளின் எதிர்ப்பை அப்படியே பதிவுசெய்து அரசுக்கு அனுப்பினார். அதனால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் உள்ளது. இந்தத் திட்டத்துக்கு புத்துயிர் அளித்து, திட்டத்தைத் தொடங்க அனுமதிவழங்க பா.ஜ.க. முடிவுசெய்துள்ளது’’என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த சாலைக்கு எதிராக 26 அமைப்புகள் ஒன்றிணைந்த போராட்டக் குழு உருவாகியுள்ளது. இல்லாதவன் நிலத்தைப் பிடுங்கி இருப்பவரிடம் அளிப்பதுதான் ஜனநாயகமா எனக் கேட்கும் இந்தக் குழு, ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று விவசாயிகள் பொதுமக்களிடம் இத்திட்டத்தின் பாதிப்பு குறித்து பேசி பயத்தை அகற்றி, போராட்டக் களத்துக்கு அழைக்கிறது. இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது மாநில உளவுத்துறை. ஸ்டெர்லைட் விவகாரம்போல், இந்த விவகாரத்தில் போராட்டம் விஸ்வரூபமெடுத்து விடக்கூடாது என அரசு கவனமாக இருக்கிறது. அதற்காக உளவுத்துறை, க்யூபிராஞ்ச், ஒருங்கிணைந்த குற்றங்கள் கண்காணிப்பு பிரிவு, ஐ.பி. என ஐந்துவிதமான போலீஸ் பிரிவுகளை களமிறக்கி கிராமங்கள் தோறும் ஆட்களைத் திரட்டுவது யார், போராட்டத்துக்கு யார் முன்னிலை வகிப்பது, போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான நிதி எங்கிருந்து வருகிறது எனும் தகவல்களைத் திரட்டுகின்றனர். அத்துடன் போராட்டக்காரர்களின் நடவடிக்கையைக் கண்காணித்து தகவலளிக்கும் பொறுப்பை அ.தி.மு.க.வினரிடமும் அளித்துள்ளனர்.

கார்ப்பரேட்டுகளின் நலத்தைப் பாதுகாக்க இத்தனை முஸ்தீபுகளைக் காட்டும் மாநில அரசு, மக்கள்நல விவகாரங்களில் இந்த சுறுசுறுப்பில் பத்திலொரு பங்கை காட்டினால் நன்றாயிருக் குமே என்கிறார்கள் மாநில அரசு போகும் திசையறிந்தவர்கள்.

-து.ராஜா

green corridor project nkn26.06.18
இதையும் படியுங்கள்
Subscribe