கோடிகளில் ஹவாலா பணம்! மோசம்போன முதியவர்! -ஹவாலா ரிப்போர்ட்!

ss

ருவருடைய பணத்தேவை, மோசடிப் பேர்வழிகளின் பார்வையில் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. அந்த நபருக்கு பணத்தாசை காட்டி ஏமாற்றுவது மிக எளிதாகிவிடுகிறது. மனிதனின் இந்தப் பலவீனமே, ஒவ்வொரு மோசடியின் பின்னணியிலும் அடிப்படைக் காரணமாக உள்ளது.

ss

ராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவர் கணேசனுக்கு 68 வயதாகிறது. மருமகன் இறந்துவிட, மகள் தங்கேஸ்வரி நடத்திவந்த பெயின்ட் கடையில் அவருக்கு உதவியாக இருந்துவருகிறார். அந்த பெயின்ட் கடையின் வாடிக்கையாளர் என்ற முறையில் வைரமுத்து என்பவர் அறிமுகமானார்.

"அய்யா.. உங்களுக்கு வயசா யிருச்சு. மருமகன் வேற இறந்துட்டாரு. அவரு வியாபாரத்துல ரொம்ப நஷ்டப்பட்டது எனக்கு நல்லா தெரியும். இப்ப உங்களுக்கு நெறய கடன் இருக்கு. உங்களுக்கு இருக்கிற மொத்த கஷ்டத்த யும் ஒண்ணுமில்லாம பண்ணிரலாம். அதுக்கு ஒரு வழியிருக்கு..'' என்று கணேசனிடம் தூபம் போட்டார் வைரமுத்து.

"எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்னும் மனநிலையில் இருந்த கணேசன், "எனக்கு உதவணும்னு நினைக்கிற நீங்க நல்லாயிருக்கணும். கடன் பிரச் சனைல இருந்து விடுபடணும்னா நான் என்ன பண்ணணும்?'' என்று ஆர்வத்துடன் கேட் டார்.

“"உண்மையி லேயே ரொம்ப கஷ்டப்படறாங் கன்னா, அவங்க ளுக்கு ரூ.2 கோடி வரைக்கும் பணம் தந்து உதவுறதுக்கு ஒருத்தர் இருக்காரு. அவர எனக்குத் தெரியும். ஆனா.. அதுக்கான கமிஷனை முன்கூட்டியே நாம ரெண்டுபேரும் கொடுக்கணும். அவரு இப்ப சென்னைல இருந்து மதுரைக்கு வந்திருக்காரு'' எனக் கூறிய வைரமுத்து, கடந்த 10-1-2024 அன்று கணேசனை மதுரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு தனியார் விடுதியில் ஜெயக்குமார் என்பவரைச் சந்தித் தனர்.

dd

ஜெயக்குமார் கணேசனிடம், "சென்னைல ஒரு பிரைவேட் டிரஸ்ட்ல நான் வேலை பார்க்கிறேன். எனக்கு மாசம் ரூ,1,75,000 சம்பளம். எங்க டிரஸ்ட்ல வரு மான வரி செலுத்தாத, கணக்குல வராத ஹவாலா பணம் கோடிக்கணக்குல இருக்கு. அந்தப் பணத்த கஷ்டப்படறவங்களுக்கு கொடுத்து உதவுறோம். எப்படின்னா.. டிரஸ்ட் ரூ.2 கோடி கொடுத்தால், அடுத்த சில மாசங்கள்ல ரூ.1 கோடியை மட்டும் டிரஸ்ட்டுக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்'' என்று கூறியதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் இருந்த விண்ணப்பத்தில் கணேசன் கையெழுத் திட்டார். மேலும் பாஸ்போர்ட் சைஸ் புகைப் படங்கள், ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல், வங்கிக் கணக்கு பாஸ் புத்தகங்களின் நகல்களை வாங்கிக்கொண்டார் ஜெயக்குமார்.

மேலும் கணேசனிடம், "ரெண்டு கோடிங் கிறது

ருவருடைய பணத்தேவை, மோசடிப் பேர்வழிகளின் பார்வையில் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. அந்த நபருக்கு பணத்தாசை காட்டி ஏமாற்றுவது மிக எளிதாகிவிடுகிறது. மனிதனின் இந்தப் பலவீனமே, ஒவ்வொரு மோசடியின் பின்னணியிலும் அடிப்படைக் காரணமாக உள்ளது.

ss

ராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவர் கணேசனுக்கு 68 வயதாகிறது. மருமகன் இறந்துவிட, மகள் தங்கேஸ்வரி நடத்திவந்த பெயின்ட் கடையில் அவருக்கு உதவியாக இருந்துவருகிறார். அந்த பெயின்ட் கடையின் வாடிக்கையாளர் என்ற முறையில் வைரமுத்து என்பவர் அறிமுகமானார்.

"அய்யா.. உங்களுக்கு வயசா யிருச்சு. மருமகன் வேற இறந்துட்டாரு. அவரு வியாபாரத்துல ரொம்ப நஷ்டப்பட்டது எனக்கு நல்லா தெரியும். இப்ப உங்களுக்கு நெறய கடன் இருக்கு. உங்களுக்கு இருக்கிற மொத்த கஷ்டத்த யும் ஒண்ணுமில்லாம பண்ணிரலாம். அதுக்கு ஒரு வழியிருக்கு..'' என்று கணேசனிடம் தூபம் போட்டார் வைரமுத்து.

"எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்னும் மனநிலையில் இருந்த கணேசன், "எனக்கு உதவணும்னு நினைக்கிற நீங்க நல்லாயிருக்கணும். கடன் பிரச் சனைல இருந்து விடுபடணும்னா நான் என்ன பண்ணணும்?'' என்று ஆர்வத்துடன் கேட் டார்.

“"உண்மையி லேயே ரொம்ப கஷ்டப்படறாங் கன்னா, அவங்க ளுக்கு ரூ.2 கோடி வரைக்கும் பணம் தந்து உதவுறதுக்கு ஒருத்தர் இருக்காரு. அவர எனக்குத் தெரியும். ஆனா.. அதுக்கான கமிஷனை முன்கூட்டியே நாம ரெண்டுபேரும் கொடுக்கணும். அவரு இப்ப சென்னைல இருந்து மதுரைக்கு வந்திருக்காரு'' எனக் கூறிய வைரமுத்து, கடந்த 10-1-2024 அன்று கணேசனை மதுரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு தனியார் விடுதியில் ஜெயக்குமார் என்பவரைச் சந்தித் தனர்.

dd

ஜெயக்குமார் கணேசனிடம், "சென்னைல ஒரு பிரைவேட் டிரஸ்ட்ல நான் வேலை பார்க்கிறேன். எனக்கு மாசம் ரூ,1,75,000 சம்பளம். எங்க டிரஸ்ட்ல வரு மான வரி செலுத்தாத, கணக்குல வராத ஹவாலா பணம் கோடிக்கணக்குல இருக்கு. அந்தப் பணத்த கஷ்டப்படறவங்களுக்கு கொடுத்து உதவுறோம். எப்படின்னா.. டிரஸ்ட் ரூ.2 கோடி கொடுத்தால், அடுத்த சில மாசங்கள்ல ரூ.1 கோடியை மட்டும் டிரஸ்ட்டுக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்'' என்று கூறியதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் இருந்த விண்ணப்பத்தில் கணேசன் கையெழுத் திட்டார். மேலும் பாஸ்போர்ட் சைஸ் புகைப் படங்கள், ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல், வங்கிக் கணக்கு பாஸ் புத்தகங்களின் நகல்களை வாங்கிக்கொண்டார் ஜெயக்குமார்.

மேலும் கணேசனிடம், "ரெண்டு கோடிங் கிறது ரொம்ப கம்மியான அமவுண்ட். உங்களுக்கு அஞ்சு கோடி வரைக்கும் வாங்கித் தரமுடியும். உங்களுக்கு அஞ்சு கோடி வேணும்னா.. சர்வீஸ் சார்ஜா ரூ.5 லட்சத்தை மொதல்ல கொடுத்துற ணும்..” என்று டிரஸ்ட்டின் விதிமுறைகளை ஜெயக்குமார் விவரித்ததும், எங்கெங்கோ கடன் வாங்கி 18-1-2024 அன்று சிவகாசி பெல் ஹோட்டலில் வைத்து ரூ.4 லட்சத்தை கணேசனும், தன் பங்காக ரூ.1 லட்சத்தை வைரமுத்துவும் சர்வீஸ் சார்ஜாக கொடுத்தனர்.

29-1-2024 அன்று கணேசனைத் தொடர்புகொண்ட ஜெயக்குமார், "டிரஸ்ட் உங்களுக்கு 12 கோடி ரூபாய் கொடுக்கிறதுக்கு அனுமதி தந்திருக்கு. இன்னும் ரூ.4 லட்சம் சர்வீஸ் சார்ஜ் கட்டணும்'' என்று கூற, கணேசனும் வைரமுத்துவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன் காத்திருந்து, ஆளுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்தை ஜெயக் குமாரிடம் கொடுத்தனர். அதன்பிறகு ஜெயக் குமார் கணேசனைத் தொடர்புகொண்டு, "மீதிப் பணம் ரூ.1,50,000 தந்தால்தான் ரூ.12 கோடியை டிரஸ்ட் சேங்ஷன் பண்ணும்'' என்று பேச, அந்தப் பணத்தையும் கொடுத்தார் கணேசன்.

10-2-2024 அன்று ஜெயக்குமார் கணேசனைத் தொடர்புகொண்டு “உங்களுக்கு ரூ.12 கோடி கொடுப்பதற்கு டிரஸ்ட் ஆர்டர் கொடுத்திருச்சு. அதற்கான விண்ணப்ப ரசீதில் உங்களிடம் கையெழுத்துப் பெறவேண்டும். அவசரமா சென்னைல இருந்து பிளைட் பிடிச்சு வந்திருக்கேன். விமானச் செலவு ரூ.25,000ஐ நீங்க தரணும்.” என்று கூற, அதையும் கொடுத்திருக்கிறார் கணேசன்.

dd

ரூ.12 கோடி கைக்கு வராத நிலையில் கணேசன், "நீங்க கேட்ட எல்லா சர்வீஸ் சார்ஜையும் கொடுத்துட்டேன். ஆவணங்களையும் தந்துட்டேன். ஏன் பணம் தரமாட்டேங்கிறீங்க?'' என்று ஜெயக் குமாரிடம் கேட்க, "தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறதுனால கோடிக்கணக்குல பணம் கொண்டுவர முடியல. எங்க டிரஸ்ட் மேனேஜிங் டைரக்டர் இதுசம்பந்தமா நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்கிட்ட பேசிக்கிட்டிருக்காரு'' என்று கூலாகச் சொல்லியிருக்கிறார்.

நாட்களை கடத்திக்கொண்டே போன ஜெயக்குமார் திடீரென்று, "ரூ.12 கோடி உங்களுக்கு மட்டும்தான். வைரமுத்து கொடுத்த ரூ.3 லட்சத்தை அவருகிட்ட திருப்பிக் கொடுத்திருங்க'' என்று கறாராகச் சொல்லிவிட, மிகவும் கஷ்டப்பட்டு 7 தவணைகளில் ரூ.3 லட்சத்தை வைரமுத்துவிடம் கொடுத்தார் கணேசன். அதன்பிறகு ஜெயக்குமார், "உங்களுக்குத் தரவேண்டிய ரூ.12 கோடி திண்டுக்கல் குடோனில் இருக்கு. அந்தப் பணத்தை பேக்கிங் பண்ணி ராஜபாளையத்துக்கு கார்ல எடுத்துட்டு வர்ற செலவுக்கு ரூ.50000 தரணும்'' எனச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி, 28-5-2024 அன்று பச76 ஆக 0005 பதிவு எண் கொண்ட வெள்ளை நிறக் காரில் சிலருடன் வந்த ஜெயக்குமார், அழகாபுரி பஸ் நிலையத்திற்குக் கீழ்புறம் காத்திருந்த கணேசனிடமிருந்து ரூ.50000ஐயும் கையெழுத்திட்ட நிரப்பப்படாத காசோலை களையும் பெற்றுக்கொண்டு, நிரப்பப்படாத புரோநோட் ஒன்றில் கையெழுத்து வாங்கிக்கொண்டு “முதல் தவணையாக ரூ.2 கோடி இந்த ஏர்பேக்கில் இருக்கிறது.” என்று சிறிதளவு ஜிப்பைத் திறந்து காண்பித்திருக்கிறார். கணேசனின் கண்ணுக்கு 500 ரூபாய் கட்டு ஒன்று தெரிந்திருக்கிறது.

அப்போது பரபரப்பான ஜெயக்குமார், "பணத்துடன் கணேசனைப் பத்திரமாக ராஜபாளையம் வீட்டில் கொண்டுபோய் விட்ருங்க'' என்று டிரைவருக்கு உத்தரவிட்டு, காரிலிருந்து இறங்கிக்கொண்டார். "நீங்க ஏன் இறங்குறீங்க?'' என்று கணேசன் கேட்க, "தேனியில் ஒருத்தருக்கு ரூ.10 கோடி கொடுக்கப் போறோம். எங்க மேலதிகாரி இன்னொரு கார்ல வந்துக்கிட்டிருக்காரு. அதுல நான் போய்க்கிருவேன்.” என்று கூறியிருக்கிறார் ஜெயக்குமார்.

ஏர்பேக்கில் பணத்துடன் அந்தக் காரில் கணேசன் ராஜபாளையம் நோக்கிச் சென்ற போது, இரவு 9-30 மணியளவில் நத்தம்பட்டி அருகில் ஒரு இருட்டுப் பகுதியில், போலீஸ் யூனிபார்மில் இருந்த ஒருவரும், மேலும் இருவரும் காருடன் நின்று மறித்துள்ளனர். காரைச் சோதனையிட வேண்டும் என்று கூறியபடி, பின் சீட்டில் இருந்த அந்த ஏர்பேக்கைத் திறந்தபோது, ஒரு ஓரத்தில் கொஞ்சம் பணமும், பனியன், ஜட்டி வைக்கும் அட்டைப் பெட்டிகளுமாக இருந்துள்ளது. அதைப் பார்த்ததும், ஏர்பேக் முழுவதும் ரூ.2 கோடி பணம் நிறைந்திருக்கும் என்ற கணேசனின் நம்பிக்கையில் இடி விழுந்தது. காருக்குள் சோதனை நடத்தியவர்கள், அந்த ஏர்பேக்கை எடுத்துக்கொண்டு, கணேசன் வைத்திருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு “நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வா..” என்று சத்தம் போட்டபடி, அவர்கள் வந்த காரில் ஏறிச் சென்றுவிட்டனர். கணேசனுடன் வந்த டிரைவர், ''என்னை ஆளை விடுங்க..'' என்று சலித்துக்கொண்டு, நடுவழியில் அந்தக் காரிலிருந்து அவரை இறக்கி விட்டு கிளம்பிவிட்டார். அப்போதுதான், ரூ.12 கோடிக்கு பேராசைப்பட்டு ரூ.11,25,000ஐ இழந்ததும், ஜெயக்குமாரும் வைரமுத்துவும் கூட்டுச் சதி செய்து தன்னை ஏமாற்றியதும் கணேசனுக்கு உறைத்தது.

ராஜபாளையத்தில் தான் வசிக்கும் பகுதியிலேயே வசிக்கும் ஜெயக்குமார் விமானம் மூலம் சென்னையிலிருந்து வந்ததாகக் கூறி, ஆசை காட்டி மோசடி செய்தது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் புகாரளித்தார் கணேசன். விசாரணையின்போது காவல்துறையினர் கடுமை காட்டிய நிலையில் ரூ.2 லட்சம் மட்டும் தந்துள்ளார் ஜெயக்குமார். மீதிப் பணத்தை ஒரு மாத காலத்திற்குள் திருப்பித் தருவேன் என்று எழுதித் தந்திருக்கிறார். அதேநேரத்தில், கணேசனிடமிருந்து பறிக்கப்பட்ட கையெழுத்திட்ட இரண்டு காசோலைகளில் ரூ.4 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் என நிரப்பி, பெடரல் வங்கியில் செலுத்தியிருக்கிறார் கணேசனுக்கு யாரென்றே தெரியாத ராமர்பாண்டியன்.

ஜெயக்குமாரை கணேசனுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப்படும் வைர முத்துவைத் தொடர்பு கொண்டோம். "நடந்தது மோசடி கிடையாது. போலீசுக்கு பணம் கொடுத்து ஜெயக்குமாரை அடிக்க வைத்து ரூ.2 லட்சத்தை வாங்கிவிட்டார் கணேசன். மீதிப் பணத்தைத் தருவதாகத்தானே சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்? எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறோம்'' என்று டென்ஷனாகப் பேசினார் வைரமுத்து.

வி.சி.க. கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற எட்வின் ஜெயக்குமாரைத் தொடர்பு கொண்டபோது... "நான் அந்தமாதிரி இல்ல. கணேசன்கிட்ட எந்த கொடுக்கல் வாங்கலும் இல்ல. அவருக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்ல'' என்று முதலில் மறுத்துப் பேசிவிட்டு, "என் மேல போலீஸ் ஸ்டேஷன்ல கணேசன் கம்ப்ளைண்ட் பண்ணிருக்காரு. எஸ்.ஐ. என்னைக் கூட்டிட்டுப்போயி விசாரிச்சாரு. நான் தனிப்பட்ட முறைல வாங்கின ரூ.2 லட்சத்தை அப்பவே கையில கொடுத்தாச்சு. அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல என்ன நடந்துச்சுன்னா.. என்னை அடிச்சி, முட்டில மிதிச்சி, முட்டி நகன்று, இப்ப பிசியோதெரபி பண்ணிட்டு இருக்கேன். லாக்கப்ல என்னை அடிச்சு சித்ரவதை பண்ணுனாங்க. போலீஸ் ஷூ காலால முட்டில மிதிச்சப்ப.. வலிக்குது.. வலிக்குதுன்னு கத்தியும் மிதிச்சாங்க. நான் கணேசனை ஏமாத்தல. செக், ப்ரோநோட் விஷயம் எதுவும் எனக்குத் தெரியாது. வைரமுத்துவும் நானும் ஒரே தெருதான். நாங்க மோசடி பண்ணுனதா கணேசன்கிட்ட ஆவணங்கள் ஏதாவது இருந்தால், எங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்க'' என்று கூலாகச் சொன்னார்.

ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாசனிடம் பேசினோம். "பெரியவர் கணேசனைப் பார்த்தா பாவமா இருக்கு. அது இதுன்னு சொல்லி அவரை ஏமாத்திருக் காங்க. ஹவாலா பணம்னு சொல்லி மோசடி நடந்திருக்கு. ஜெயக்குமாரைக் கேட்டா, இவருகிட்ட வாங்கி அவருகிட்ட கொடுத் தேங்கிறாரு. இன்னொரு குரூப் மேல இருக்கு. அவங்களுக்கு கொடுத்ததா சொல்லுறாரு. போலீஸ் விசாரணைக்குள்ள அந்த நெட்வொர்க் இன்னும் வரல. சிவகாசில கொடுத்தேன். அழகாபுரில கொடுத்தேன்னு கணேசன் சொல்லுறாரு. அது ராஜபாளையம் -மிட்டுக்குள்ள வரல. கொடுத்ததுக்கான எவிடென்ஸ் வேணும்ல. எஸ்.ஐ.தான் விசாரிச்சாரு. அவரு ஜெயக்குமாரை அடிச்சாராங்கிறது எனக்குத் தெரியாது. நான் அன்னைக்கு இல்ல. ஏமாற்றி வாங்கின பணத்தை போலீஸ் மீட்டுத் தரலன்னு கணேசன் மாறி மாறி பெட்டிஷன் போடுறாரு. வாங்குன ஆளு பணத்த கொடுத்தாத்தான போலீஸ் வாங்கிக் கொடுக்கமுடியும். ஒருத்தர்கிட்ட இருந்து புடுங்கிக் கொடுக்கமுடியாதுல்ல. மண்ணெண்ணெய்ய ஊத்தி கொளுத்திக்கிட்டு சாகப்போறேன்னு எஸ்.பி.க்கு வீடியோ மெசேஜ் அனுப்பிட்டாரு கணேசன். அன்னைக்கு நைட் ஒரு மணிக்கு போலீஸ் எல்லாம் ஓடிப்போயி அவர சமாதானப்படுத்துனோம். அப்ப ஜெயக்குமார் 15 நாள் டைம் சொல்லிட்டுப் போனாரு. பணம் கொடுக்கல் வாங்கல் போலீஸ் விசாரிக்கக் கூடாதுன்னு சொல்லுறாங்க. அப்புறம் விசாரிங் கங்கிறாங்க. என்ன செய்யுறதுன்னு புரியாம போய்க்கிட்டிருக்கு'' என்றார் குழப்பத்துடன்.

சட்டம் என்ற இருட்டறை வழியாக மோசடிப் பேர்வழிகள் தப்பித்துவிடக் கூடாது.

__________

சீக்ரட் டீலிங்.. பொண்டாட்டிகிட்ட கூட சொல்லக்கூடாது..”

முதியவர் கணேசன் நம்மிடம், "கோடி கோடின்னு அவங்க பேசிப் பேசி என் மூளைல கோடி கோடியா கொட்டப்போகுதுங்கிற சிந்தனைய ஆழமா பதியவச்சிட்டாங்க. ஏன்னா.. அந்த அளவுக்கு என் குடும்பத்துல கஷ்டம். அவங்க போட்ட கண்டிஷன் என்னன்னா.. இங்கே நடக்கிறது எல்லாமே சீக்ரட் டீலிங். உனக்கு ஹவாலா பணம் வரப்போகுதுங்கிற விஷயத்த உன் பொண்டாட்டிகிட்ட கூட சொல்லக்கூடாதுங்கிறதுதான். அதனாலதான்.. யாருகிட்டயும் சொல்லல. 12 கோடி கைக்கு வரும்போது 12 லட்ச ரூபாய் கடனை ஈஸியா அடைச்சிறலாம்னு, சொந்தக்காரங்க ஒருத்தர்விடாம, எல்லாருகிட்டயும் வெறித்தனமா கடன் வாங்கினேன். அந்தப் பணத்த ஜெயக்குமார்கிட்ட கொடுத்தேன். கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாத கொள்ளைக்காரங்ககிட்ட மாட்டிக்கிட்டேன். இந்தமாதிரி கொள்ளையடிச்சு சொகுசா பங்களா கட்டி வாழுறான் ஜெயக்குமார். நான் பட்ட கடனை எப்படி அடைக்கப்போறேனோ? தூக்கம்கிறது இல்லாம போச்சு. பைத்தியம் பிடிச்சுருமோன்னு பயமா இருக்கு. செத்துறலாம்னு தோணுது. போலீஸ் டிபார்ட்மெண்ட் நல்லபடியா நடவடிக்கை எடுக்கணும். நான் இழந்த பணத்தை மீட்டுத் தரணும்'' என்று கண்ணீர்விட்டார்.

nkn140824
இதையும் படியுங்கள்
Subscribe