முதியவர்களைத் துன்புறுத்தி சொத்துக்கள் அபகரிப்பு? சர்ச்சையில் ஆதரவற்றோர் இல்லம்!

ss

முள்ளிக்கொரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆதர வற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் மொத்தம் 87 பேர் தங்கியிருக்கின்றனர். இந்தக் காப்பகத்தில் முறை கேடாகப் பணம் வசூலிக்கப்பட்டும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி முதியவர்கள் தாக்கப்பட் டும் வருகின்றனர். கூடுதலாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றது என புகார் எழுந்துள்ளது.

இதுசம்பந்தமாக வீடியோக்களும், ஆடியோக்களும் உலாவருவதால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.

dd

அதனடிப்படையில் செப். 24 அன்று ஆர்.டி.ஓ. மகாராஜ், நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, தனி தாசில்தார் சங்கீதா ராண

முள்ளிக்கொரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆதர வற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் மொத்தம் 87 பேர் தங்கியிருக்கின்றனர். இந்தக் காப்பகத்தில் முறை கேடாகப் பணம் வசூலிக்கப்பட்டும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி முதியவர்கள் தாக்கப்பட் டும் வருகின்றனர். கூடுதலாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றது என புகார் எழுந்துள்ளது.

இதுசம்பந்தமாக வீடியோக்களும், ஆடியோக்களும் உலாவருவதால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.

dd

அதனடிப்படையில் செப். 24 அன்று ஆர்.டி.ஓ. மகாராஜ், நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, தனி தாசில்தார் சங்கீதா ராணி தலைமையில் குழுவினர் முள்ளிக்கொரை பகுதியிலுள்ள அப்துல்கலாம் ஆதரவற்றோர் காப்பகத்தில் விசாரணையைத் துவக்கினர்.

உதகை நகர மேற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிக்கொரை பகுதியில், உதகை நகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி, அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் நடத்தப்பட்டுவருகிறது. அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் நிறுவனரான தஸ்தகீர் பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். மேற்படி ஆதரவற்றோர் இல்ல பொறுப்பாளர் தஸ்தகீர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக ஒருசிலர் வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் களுக்கு புகாரளித்துள்ளார்கள்.

இதனடிப்படையில் விசாரணை மேற் கொண்டதில், ஊட்டி இந்து நகரைச் சேர்ந்தவர் ரோகினிதேவி. இவரது அக்கா சரோஜா என்பவ ருடன் வசித்து வந்த நிலையில் சரோஜா இறந்துவிட்டார். ரோகினிதேவி வீட்டில் தனியாக இருந்துவந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் ஆதரவற்று இருந்த ரோகினிக்கு, அவரது பக்கத்து வீட்டுக்காரரான பஷீர் (உதவி ஆய்வாளர். உதகை நகர போக்குவரத்து காவல் நிலையம்) ஆதரவாக இருந்துவந்துள்ளார். திடீரென, ரோகினிக்குச் சொந்தமான நகைகளை தன்னிடம் தந்துவிட வேண்டுமெனவும், வீட்டுப் பத்திரத்தை பஷீர் மகள் பெயருக்கு எழுதிக் கொடுக்கவேண்டும் எனவும் கூறி அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

இதில் ரோகினி உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சென்ற நிலையில், அங்கும் போய் பிரச்சனை செய்துள்ளார். இந்நிலையில் அருகிலுள்ளவர்களால் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரோகினி தேவியிடம் புகாரைப் பெற்று, உதகை நகர மேற்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்தனர். உதவி ஆய்வாளர் பஷீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ss

இதனையடுத்தே ரோகினி தேவியை அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர் அருகிலுள்ளவர்கள். அப்போது அவருக்குச் சொந்தமான நகைகள் மற்றும் வீட்டுப் பத்திரத்தை பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினர் வீடியோ பதிவுசெய்து மேலே சொல்லப்பட்ட அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 18.08.2023 அன்று ரோகினிதேவி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ஆதர வற்றோர் இல்லத்திலேயே இறந்துவிட்டார். இவருக்கு உறவினர்கள் யாருமில்லாததால் அப்துல்கலாம் ஆதர வற்றோர் இல்ல பொறுப்பாளர் தஸ்தகீர், ரோகினிதேவி இறந்தது சம்பந்தமாக காவல் நிலையத்திற்கோ, கிராம நிர்வாக அலுவலருக்கோ தகவல் தெரிவிக்காமல் மஞ்சனகொரை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.

இறந்துபோன ரோகினி தேவியுடைய நகைகளை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், போலிப்பத்திரம் மூலம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் கிருஷ்ணம்மாள் புதூரைச் சார்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு (ரோகினிதேவியின் வீட்டைப் பராமரித்து வந்ததற்காக ரோகினி தேவி எந்த பணமும் கொடுக்கவில்லை எனவும், அவரது கடைசிக் காலத்தில் கடனாளியாக இறக்க விருப்பமில்லை எனவும், அதனால் அவரது நகைகளை, சுப்பிரமணியன் என்பவருக்கு சுயநினைவோடு கொடுப்பதாகவும்) போலியாக பத்திரத்தில் ரோகினி தேவியின் கையெழுத்து போட்டு போலியான ஆவணம் தயார் செய்துவைத்துள்ளதாக தகவல் தெரியவருகிறது.

இதுபோன்று வீடற்று சுற்றித்திரியும் மக்களை இல்லத்தில் வைத்து கவனிப்பது மட்டுமல்லாமல், வீடு, சொத்து இருந்தும் கவனித்துக்கொள்வதற்கு ஆளில்லாதவர்களையும் அழைத்துவந்து, அவர்களை கவனிப்பதுபோல் அவர்களிடமிருக்கும் பணம், நகை, வீட்டுப் பத்திரம் போன்றவற்றை பறித்துக்கொள்கிறார்களாம். இல்லத்தில் வசிக்கும் முதியோர்களை சொந்த வேலைக்காக பயன்படுத்துவது, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காதது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது'' என்கின்றது நீலகிரி மாவட்ட காவல்துறையின் உளவுக் குறிப்பு.

இதுகுறித்து பேசிய காப்பகப் பொறுப்பாளர் தஸ்தகீரோ, "இது அப்பட்டமான பொய். வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். விசாரணையில் தெரியவரும்'' என்றார். விசாரணையின்பொழுது காப்பகப் பொறுப்பாளர், ஊழியரை வைத்து முதியவர்களிடம் கேள்வி கேட்டால் உண்மையான பதில் கிடைக்குமா..? பாதிக்கப்பட்டது குறித்து எப்படி தைரியமாக பேசுவார்கள்..? என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

படங்கள்: விவேக்

nkn280924
இதையும் படியுங்கள்
Subscribe