"ஹலோ தலைவரே, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, இந்த வருட தீபாவளியை அனைத்துத் தரப்பினரும் கொண்டாட்ட மனநிலையில் வரவேற்றிருக்காங்க.''”

"ஆமாம்பா, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், கடந்த கால இருள் இப்ப அனைத்துத் துறையிலும், பெரும்பாலும் துடைக்கப்பட்டிருக்கு. அதனால் தீபாவளிக்குச் சொல்லப்படும் புராணக் கதைகளை நம்பாதவர்கள் கூட, நவீன நரகாசுரர்கள் எல்லாம் விசாரணை ஆணையங்கள் மூலம் அம்பலப்பட்டதைக் கண்டு, கொண்டாட்ட மன நிலைக்கு வந்திருக்காங்க.''”

"உண்மைதாங்க தலைவரே, இந்த முறை தி.மு.க. தரப்பிலும் தீபாவளி உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. அதுக் குக் காரணம், ஆட்சி அமைந்து ஒன்றரை வரு டம் ஆகியும், தொண்டர் களிடம் பணப் புழக்கம் இல்லை. அதனால் அவர் களிடம் சுணக்கம் தெரிந் தது. இதுபற்றித் தொண்டர்களின் குமுறல்கள் என்று இரண்டு வாரத்திற்கு முன்பு நாம் நக்கீரனின் அட்டைப்படக் கட்டுரையாக எழுதியிருந் தோம். இதைத் தொடர்ந்து தொண்டர்கள் விசயத்தில் கவனம் செலுத்தத் தொடங் கியது தி.மு.க. தலைமை. உடனடியாக சில முன்னெடுப்புகள் விறுவிறுப்பாக அரங் கேறின. குறிப்பாக, தீபாவளி நாளில் தொண்டர்களின் முகத்திலும் மத்தாப்பு வெளிச்சத்தைப் பார்க்கணும் என்கிற நோக்கத்தில் பெரும்பாலான அமைச்சர் கள், பணம், பட்டாசு, துணிமணிகள், இனிப்புகள் என அவர்களை அன்போடு கவனித்திருக்கிறார்கள்.''”

"தலைமைக் கழகப் பேச்சாளர்களை யும் அறிவாலயத்தின் அன்பு மழை நனைச்சிருக்கே?''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வின் தலைமைக் கழக பேச்சாளர்கள் என சுமார் 300 பேர் தமிழகத்தில் இருக்காங்க. கட்சிப்பிரச்சாரக் கூட்டத் துக்குக் கொடுக்கப்படும் தொகையைத் தவிர இவர்களுக்கு வேறு வருமானம் இல்லை. அதனால், கட்சியின் வேர் போன்ற இவர்களைச் சந்தோசப் படுத்த நினைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த வருட தீபாவளிக்காக, அவர்கள் ஒவ்வொருவருக் கும் ரூ.10,000 கொடுக்கச் சொன்னார். அதன்படி பேச்சாளர்களின் வங்கிக் கணக்கில், அதைச் செலுத்தியிருக்கிறது அறிவா லயம். எதிர்பாராத நிலையில் தீபாவளிக்கு தலைமையிட மிருந்து கிடைத்த பரிசுத் தொகையினால் பரவசத்தில் இருக்கிறார்கள் பரப்புரை யாளர்கள்.''”

"சந்திக்கத் துடித்த எடப்பாடிக்கு கவர்னர் அப்பாயின்ட்மென்ட் தராமல் கைவிரிச்சிட்டாரே?''”

Advertisment

"சட்டசபையில் ரகளை யில் இறங்கிய எடப்பாடித் தரப்பை சபாநாயகர், பேரவை யில் இருந்து வெளியேற்றிய தால், அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய எடப் பாடியைக் கைது செய்து, அன்று மாலையே விடுவித்து வீட்டுக்கு போய் தீபாவளி கொண்டாடுங்கன்னு தமிழக அரசு அனுப்பிடுச்சு. இருந்தும் எரிச்சல் குறையாத அவர், கவர்னரை சந்திச்சி தி.மு.க. அரசுக்கு எதிராகப் புகார் மனு கொடுக்கணும்னு வரிஞ்சிகட்டினார். இதற்காக ராஜ்பவனிடம் அப்பாயின்ட்மெண்ட்டும் கேட்டார். கவர்னர் ஆர்.என்.ரவியோ, சட்டசபை யில் ஒழுங்கீனமாக நடந்தால், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார். இதில் நான் எப்படி தலையிட முடியும்ன்னு, எடப்பாடிக்கு அப்பாயின்ட்மெண்ட் தர மறுத்துவிட்டார். இதனால் அப்செட்டான எடப்பாடி, கவர்னரைச் சந்திக்க வேறு காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாராம்.''”

"ஆனாலும் இப்ப சொந்தக் கட்சியினரின் எரிச்சலையும் எடப்பாடி சம்பாதிச்சிருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, இப்ப ஆறுமுகசாமி கமிஷனின் அறிக்கையும், அருணா ஜெகதீசன் கமிஷனின் அறிக்கையும் வெளியாகி, அ.தி.மு.க. பிரபலங்கள் பலரின் முகத்திரையையும் கிழிச்சிருக்கு. இதில் எடப்பாடியின் லீலைகளும் அம்பலமாகி இருக்கு. இதைக்கண்டு அவர் தரப்பினர் ஆடிப்போயிருக்காங்க. இருந்தாலும் தனக்கும் இந்த பரபரப்புக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல, சட்டசபையில் ஓ.பி.எஸ். ஒருவரின் சீட்டை மட்டும் குறிவைத்து, தலைபோகிற பிரச்சினை போல் எடப்பாடி டிராமா செய்வதை அவர்களால் ஜீரணிக்க முடியலை. இதையறிந்த எடப்பாடி, சென்னை யில் இருந்த தன் நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு, சொந்த ஊர்ப்பக்கம் பெட்டியைக் கட்டி விட்டார்.''”

"ஓ.பி.எஸ். மகனுக்கும் சிக்கல் அதிகரிச்சிருக்கே?''”

r

"உண்மைதாங்க தலைவரே, தேனி மாவட்டம் கைலாசாப் பட்டியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.க்கு ஒரு பிர மாண்டமான தோட்டம் இருக்கு. இங்கு சமீபத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், அதன் சடலத்தை மீட்டுச் சென்றார்கள். இந்த சிறுத்தை விவகாரம் பெரிய அளவில் பரபரப்பானது. இது குறித்துத் தீவிரமாக விசாரிக்கும் படி வனத்துறை அதிகாரிகளுக்கு அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, அந்தத் தோட்டத் தின் பொறுப்பாளர்களாக இருந்த ராஜவேல், தங்கவேல் மற்றும் அங்கே ஆட்டு கிடை அமைத்திருந்த அலெக்ஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை முறைப்படி கைதும் செய்திருக்கிறார்கள். இது குறித்து நம் நக்கீரனிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.''”

"ரவீந்திரநாத் எம்.பி.மீதும் மீதும் நடவடிக்கை பாயுதே?''”

"ஆமாங்க தலைவரே, இதில் தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத் மீதும் நடவடிக்கை எடுக்கணும் என்கிற கோரிக்கை எழுந்தது. வனத்துறைக்கு தயக்கம் இருந்தது. ஆனால், ரவீந்திரநாத்துக்கு எதிராக எடப்பாடித் தரப்பு இந்த விவகாரத்தில் தொடர்ந்து நெருக்கடி தந்ததால், இதையொட்டி ரவீந்திரநாத்தை விசாரிக்கும்படியும் மாவட்ட வனத்துறைக்கு உத்தரவுகள் பறந்தன. அவர் எம்.பி.யாக இருப்பதால் நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகரின் அனுமதி இல்லாமல் விசாரிக்க முடியாது. அதனால்தால், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு வனத்துறை யினர் கடிதம் எழுதினாங்க. அங்கிருந்தும் இதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கு. அதனால், விசாரணைக்கு ஆஜராகும்படி ரவீந்திரநாத்துக்கு மாவட்ட வனத்துறை சம்மன் அனுப்பிவிட்டது. இதில் ஓ.பி.எஸ். தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம்.''

"தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கூடுதல் உற்சாகம் தெரிகிறதே?''”

"அகில இந்திய காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன் கார்கே, பல்வேறு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்களை மாற்றியமைக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை மாற்றவேண்டும் என்று, எதிர்கோஷ்டித் தலைவர்கள் டெல்லியை நச்சரித்துவருகின்றனர். ஆனால் ராகுல்காந்தியோ, இப்போதைக்கு அழகிரியை மாற்றவேண்டாம். நாடாளுமன்றத் தேர்தல் வரை அவரே இருக் கட்டும்னு சொல்லிவிட்டாராம். இந்தத் தகவல் அழகிரியின் காதுக்கு வர, இந்தமுறை அவர் இருமடங்கு மகிழ்வோடு தீபாவளி கொண்டாடி இருக்கார்.''”

"என்னப்பா? பா.ஜ.க. கூடாரத்தில் சலசலப்பு அதிகமா இருக்குதே?''”

rr

"பா.ஜ.க.வில் அண்ணாமலைக்கும் வானதி சீனிவாசனுக்கும் இடையில் ஏற்பட்ட உரசல் இப்போது பெரிதாக வெடித்துக்கொண்டு இருக்கிறது. கட்சிக்குள் அண்ணாமலை சாதி அரசியல் செய்கிறார் என்று சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டி, கட்சித் தலைமைக்கு வானதி புகார் கொடுக்க, இதைத் திசை திருப்பவே, தேவர் ஜெயந்திக்கு மோடி தமிழகம் வருகிறார் என்ற பொய்ச்செய்தியை, அவர் தரப்பு பத்திரிகையாளர்கள் சிலரின் உதவியோடு கிளப்பியதாம். இது குறித்தும் புகார் போக, அவரை நேரில் அழைத்து டெல்லித் தலைமை கடுமையாகக் கண்டித்திருக்க்கிறதாம்.''”

"அவர் மீது வானதி இன்னொரு புகாரையும் இப்ப கிளப்பிக்கிட்டு இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவராக வானதி சீனிவாசன் வரவேண் டும் என்று, அக்கட்சியின் சீனியர்களான பொன். ராதாகிருஷ்ணன், கேசவ விநாயக மூர்த்தி போன் றோர், கட்சிக்குள் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் வந்த கட்சியின் முக்கியமான டெல்லி பிரமுகரான பியூஷ்கோயலை, தன் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாராம் வானதி. அண்ணாமலையோ, வானதியைப் பழிவாங்கும் எண்ணத்தோடு, பியூஷ்கோயலை அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிடாமல் தடுத்து, அவரை டைவர்ட் பண்ணிவிட்டாராம். இதற்காகவும் டெல்லியிடம் மூக்கைச் சிந்தியிருக்கிறார் வானதி.''”

"பா.ஜ.க.வில் இருப்பவருக்கு நித்தியின் கைலாசா, விருது கொடுத்துப் பாராட்டி இருக்குதே?''”

"இந்துமதத்திற்கு சிறப்பாக சேவை புரிகிறார்னு திருச்சி சிவாவின் மகனான பா.ஜ.க.வின் புதிய வரவு திருச்சி சூர்யாவைப் பாராட்டி, அவருக்கு நித்தியின் கைலாசாத் தரப்பு, "தர்ம ரட்சகர்'’என்கிற விருதைத் தந்திருக்கு. இதை அவர் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் காட்டி வாழ்த்தைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் மோடி அரசால், லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்துத் தேடப்பட்டுவரும் நித்தியிடம் இருந்து சூர்யா எப்படி இப்படியொரு விருதைப் பெறலாம்? இதை அண்ணாமலை எப்படிப் பாராட்டலாம்னு, தமிழக பா.ஜ.க.வுக்குள்ளேயே சர்ச்சைகள் கிளம்பி இருக்கு. இதற்கிடையே பா.ஜ.க. புள்ளிகள் சிலருக்கும் நித்தி ஆசிரமத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், அதுகுறித்த ஏடாகூடத் தகவல்கள் விரைவில் பூதாகரமாக வெளிவரப்போகுது என்றும் சொல்லப்படுகிறது.''”

rr

"தினகரனின் அ.ம.மு.க.வைச் சேர்ந்த கோவை மாவட்டப் பிரமுகர் ஒருவர், அ.தி.மு.க. பக்கம் தாவத் துடிக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, தினகரனுக்கு நெருக்கமானவராக இருந்த சேலஞ்சர் துரை, இப்போது அவர் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அதற்குக் காரணம், தன்னை அதிகம் முன்னிலைப்படுத்தி வந்த தினகரன், இப்போது அவருக்கு தாராளமாக அள்ளிக்கொடுக்கும், அ.தி.மு.க. மாஜி மந்திரி சண்முகவேலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகக் குறை கூறி இருக்கிறார். இவர், எடப்பாடிப் பக்கம் தாவத் துடிக்கிறார். இதற்காக அவர் பலமுறை தூதுவிட்டும், சேலஞ்சரை சேர்க்காதீங்க என்று, மாஜி வேலுமணி பிரேக் பிடிக்கிறாராம். இதில் அதிக அப்செட்டில் இருக்கிறாராம் சேலஞ்சர்.''”

"ஆறுமுகசாமி கமிஷன் சசிகலா தரப்புமீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அவர் வினோதமான விளக்கங்களைத் தருகிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட் வெளியானதில் இருந்து, அ.தி.மு.க. தொண்டர் களின் கோபத்துக்கு பயந்து, ஜன்னி கண்ட மாதிரி, விளக்கம் என்ற பெயரில் ஏதேதோ பினாத்திக்கொண்டு இருக்கிறார் சசிகலா. ஜெ.வுக்கு சிறுநீர்க் குழாய் பொருத்தப்பட்டிருந்தது என்றும், அதோடு அவர், மருத்துவமனை வார்டின் வராந்தாவில் வாக்கிங் போவார் என்றும், அதனால் அந்த மாதிரிப் படங்கள் வெளியில் போய்விடக்கூடாது என்றுதான் மருத்துவமனையில் இருந்த அத்தனை கேமராவும் ஆஃப் செய்யப்பட்டதுன்னு சசிகலா சொன்னார். அப்படின்னா, அப்பல்லோவுக்கு ஜெ’வைக் கொண்டுவரும் முன்பே எதுக்காக, அந்த பரபரப்பான நேரத்திலும் திட்டமிட்டு அப்பல்லோவின் கேமராக்களை ஆஃப் பண்ணணும்னு பலரும் கேள்வி எழுப்பறாங்க. அதேபோல் தனக்கு ஐஸ்கிரீம் கொடுக்கலைன்னா, தான் அந்த டியூப்புகளை பிய்ச்சிடுவேன்னு ஜெ.’மிரட்டியதால்தான், நுரையீரல் பாதிப்பும் சுவாசக்கோளாறும் இருந்த அவருக்கு ஐஸ்கிரீம் கொடுக்கப் பட்டது என்றும்... விதவிதமாக விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் சசி.''”

"இதுதொடர்பா எனக்கு வந்த தகவலையும் நான் சொல்றேன். "ஜெ.வுக்கு ஆஞ்சியோ பண்ணலை. சிகிச்சைக்காக வெளிநாடு அழைத் துச் செல்லலைன்னு என்மீது புகார் சொல்றாங்க. மருத்துவத்தைப் பத்தி எனக்கு என்ன தெரியும்?' என்றும் சசிகலா சொல்லிவருகிறார். அப் புறம் எதுக்கு ஜெ.வை யார் கண்ணி லும் காட்டாமல் அப்பல்லோவின் தனிமைச் சிறையில் வைத்து, அவரை இம்சை செய்யணும்? எங்களைக் கூட ஜெ. இருந்த வார்டு பக்கம் அனுமதிக்காம இருக்கணும்னு அ.தி.மு.க. மாஜி மந்திரிகளில் சிலரே விரக்தியில் புலம்பறாங்களாம். அதோட, சசியின் புருடாக்களை அவர் பக்கத்தில் இருக்கும் இளவரசி தரப்பே கிண்டலடித்துச் சிரிக்குதாம்.''”