முதலமைச்சர், நீதிபதிகள், வங்கிகள், வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆயுதப்படை பிரிவு காவலர்களின் முக்கியப் பணியாகும். குற்றவாளிகளை நீதிமன்றங் களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் அழைத்துச் செல்வதும், கொலை, கொள்ளை நடந்தால் பாதுகாப்பு மேற்கொள்வதும்கூட ஆயுதப்படை காவலர் பணிகள்தான்.

விருதுநகர் மாவட்டத்திலோ, ஆயுதப்படை காவலரான தனுஷ்கோடி தொடர்ந்து திருட்டு வழக்குகளில் சிக்கி, இரண்டு தடவை சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.

tt

திருட்டுச் சம்பவம் 1

வத்திராயிருப்பு வட்டம், பெரியகுளம் கண்மாயில் 28-7-2020 அன்று அதிகாலை 1 மணிக்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளிய போது பிடிபட்ட டிராக்டர், கூமாபட்டி காவல்நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டி ருந்தது.

Advertisment

அதேநாள் அதிகாலை 3 மணிக்கு அந்த காவல்நிலையத்துக்கு வந்த ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி, டிராக்டரை விடுவிக்கும்படி அப்போது பாரா பணியில் இருந்த முதல் நிலைக் காவலர் வனலிங்கம்மாளிடம் பிரச் சினை பண்ணியதோடு, டிராக்டரை எடுக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று அடம்பிடிக்கவும் செய்தார். அதிகாலை 5 மணியளவில் வனலிங்கம்மாள் ரெஸ்ட்-ரூம் சென்றபோது, மணலுடன் கூடிய டிராக்டரை ஒருவர் அங்கிருந்து கிளப்ப, அதன் பின்னால் ஓடினார் தனுஷ்கோடி. இந்தத் திருட்டு வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் கூமாபட்டி காவல்நிலையத்தில் தனுஷ்கோடி மீது வழக்கு பதிவானது. கிருஷ்ணன்கோவில் ஆயுதப்படை பிரிவு பணியிலிருந்து தனுஷ்கோடி சஸ்பெண்ட் செய்யப் பட்டார் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

திருட்டுச் சம்பவம் 2

தனுஷ்கோடி விடுமுறையில் இருந்தபோது, கடந்த 9-2-2025 அன்று விருதுநகர் வட்டம் - வச்சக்காரப்பட்டியில் திருட்டு டூ வீலருடன் (பச 84 எ 3675) மாட்டினார். அப்போது அவரிடமிருந்து உரிமம் பெறாத ஒரு கைத் துப்பாக்கியும் 5 தோட்டாக்களும் கைப்பற்றப் பட்டன. வச்சக்காரப்பட்டி காவல்நிலையத்தில் தனுஷ்கோடி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் - நாசரேத் பகுதியில் தனுஷ்கோடியும், அவன் கூட்டாளி சுரேஷும் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் 35 பவுன் திருட்டு நகைகளைக் கைப்பற்றியதாகவும், ஒரு தோட்டா மிஸ்ஸிங் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

விருதுநகர் காவல்துறை வட்டாரத்திலோ, "தனுஷ்கோடியிடமிருந்து நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அப்படி நடந்திருந்தால், மீடியாக்களின் பார்வையிலிருந்து தப்ப முடியுமா? துளியும் உண்மை இல்லாத திருட்டு நகை பேச்செல்லாம் பொதுவெளியிலிருந்து கிளப்பப் படுகிறது'’என்கிறார்கள்.

ஆயுதப்படை காவலர் ஒருவர் மாறி மாறி திருட்டு வழக்குகளில் சிக்குவது, காவல்துறையின் மாண்பினைக் களங்கப்படுத்துவ தாக உள்ளது.