"கட்டாயமாக நடத்தப்படவேண்டும்' என்று சட்டமே சொல்வதால், கிராமசபைக் கூட் டங்களில் அனைவரும் பங்கேற்கும் விதமாகத்தான் ஜனவரி-26, மே-1, ஆகஸ்ட்-15, அக்டோபர்-2 ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு விடுமுறை தேதிகளும் இதற்கென ஒதுக்கப்பட்டுள் ளன. சட்டமன்ற, நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத் திற்கு உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத் திற்கு உட்பட்ட எந்த ஒரு கிராம சபை தீர்மான மும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப் படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீ காரம் கிடைக்கும். அப்படியிருக்கையில் கிராம மக்கள் ஏன் கொந்தளிக்கிறார்கள்?
கிராம சபை கூட்டங்களின் தீர்மானத்திற்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்து தீர்மானங்கள் மனுக்களாக கொடுக்கப்படுகின்றன. அந்த மனுக்கள் தீர்மான நோட்டுகளில் எழுதப்படுவதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பனை ரத்து செய் என்று தீர்மானங்களை கொண்டு வந்தனர். பல கிராமங்களில் தீர்மானத் தை நோட்டுகளில் எழுதாமல் மனுக்களை மட்டும் பெற்றுச் சென்றுவிட்டனர் அதிகாரிகள். நெடு வாசல், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தீர்மானத்தை நோட்டுகளில் எழுதியுள்ளனர். ஆனாலும் அந்த தீர்மானங்கள் மீதான நடவடிக்கை என்ன ஆனது? இது குறித்து ஊராட்சி ஒன்றியங்களில் கேட்டால் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியதாகவும், மாவட்ட நிர்வாகமோ ஒன்றியத்தில் உள்ளது என்றும் பதில் கூறுகின்றன.
காந்திஜெயந்தி அன்றும் நடந்த கிராம சபை கூட்டங்களில் பல முக்கிய தீர்மானங்களை மக்கள் கொண்டுவந்தனர். வழக்கம்போலவே, முன்னதாக எழுதப்பட்டிருந்த தீர்மானங்களை தவிர பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளை தீர்மான நோட்டுகளில் எழுதாமல் மனுவை கையில் வாங்கிச் சென்றுவிட்டனர் அதிகாரிகள்.
ஏழை மாணவர்களை பாதிக்கும் தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் புகுத்தி தமிழக மாணவர்களின் கல்வியை சீரழிக்கக் கூடாது. அதற்கு தமிழ்நாடு அரசு துணைபோகக் கூடாது. தேசிய கல்விக் கொள்கைகளை அரசு எதிர்க்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் வேண்டாம். இதை தமிழ் நாட்டில் செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று பல தீர்மானங்களை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல கிராமங் களில் மனுவாக கொடுத்தனர். அவற்றை அதிகாரிகள் தீர்மான நோட்டில் எழுதவில்லை.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் 80 ஆண்டு கால கனவுத் திட்டமான காவிரி -வைகை -குண்டாறு இணைப்பு திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று இளைஞர்கள் கொடுத்த கோரிக்கையையும் மனுவாகவே பெற்றுக் கொண்டு, தீர்மான நோட்டில் எழுதவில்லை கிராம சபை அதிகாரிகள்.
குழந்தைகளின் கல்வியை முழுவதும் பாதிக்கும் விதத்தில் வரைவு செய்யப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக்கொள்கையில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து விலகவேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் செல்லங்குப்பம் கிராமத்தில் நடந்த கூட்டத்தில், அரசுப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி தலைமையில் கிராம மக்களும் கையெழுத்து போட்டுக்கொடுத்த மனுவையும் தீர்மான நோட்டில் எழுதவில்லை. நிர்வாகத்திடம் கேட்டு நோட்டில் எழுதுவ தாக கூறி சென்றுவிட் டார்கள் அதி காரிகள்.
கிராம சபையில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் தீர்மான நோட்டுகளில் எழுதப்படுவதே இல்லையா? என்று சில ஊராட்சி செயலர்களிடம் கேட்டபோது, ""மழைநீர் சேகரிப்பு, நூறுநாள் வேலைக்கான ஒதுக்கீடுகள், வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு, தனிநபர் கழிவறை பயனாளிகள் என்று அரசின் திட் டங்களை தீர்மானமாக எழுதி வைத்துக்கொள்வோம். அதற்கு, கூட்டத்தில் வரும் நபர்களிடம் கையெழுத்து வாங்குவோம். புதிய தீர்மானங்களை மக்கள் கொண்டு வந்தால், அது அரசுக்கு எதிரான கோரிக்கைகளாக இருந்தால் நோட்டில் எழுதமாட்டோம். அரசுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவந்தால் புறக்கணிக்கப்படும்''’’என்று சொல்கிறார்கள்.
""எங்க கிராம மக்களின் கோரிக்கைகளை நான் தீர்மானமாக நிறைவேற்றிக்கொடுக்கிறேன். அந்த தீர்மானங்களை தீர்மான நோட்டில் எழுதவும் வைத்தேன். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கை யும் இல்லை''’என்கிறார் இயற்கை ஆர்வலர் "மரம்'’தங்க.கண்ணன். புதுக்கோட்டையை சேர்ந்த அவர் மேலும், ""ஆர்.டி.ஐ. மூலமாக புதுக் கோட்டை ஆட்சியரிடம் கேட்டால், "திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அதிகாரிகள்தான் பதில் சொல்லவேண்டும்' என்று சொல்கிறார். ஒன்றிய அதிகாரி களோ, "மாவட்ட நிர்வாகம்தான் பதில் சொல்லவேண்டும்' என்கின்றனர். இப்படி மாறி, மாறி அலையவிடு கிறார்களே தவிர, சரியான பதில் இல்லை. மக்கள் அதிகார சக்தி என்று சொல்லப்படும் கிராம சபை கூட்டங் கள் வெறும் கண் துடைப்பு நாடகமாகத் தான் இருக்கிறது''’என்கிறார் வேதனை யுடன்.
-இரா.பகத்சிங், து.ராஜா