கடந்த 14ஆம் தேதி, செவ்வாயன்று, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட, முதலமைச்சர் மு.க. ஸ்டா லினின் பிறந்த நாள் விழாவில், "ஜனநாயக வலிமை தமிழ்நாட்டின் தலைமை' என்ற தலைப்பில் நடை பெற்ற எழுத்தியல் அரங்கத்தை நடிகர் நாசர் தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்து என்.ராம், ஆசிரியர் நக்கீரன் கோபால், நடிகர் நாசர், தராசு ஷியாம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
முதலமைச்சரின் குணநலன்கள், அரசியல் செயல்பாடு குறித்து பேசிய பத்திரிகையாளர் இந்து என்.ராம், "கலைஞரைப் பற்றி முன்பு நிறைய பேசி யிருக்கேன். இந்தியாவிலேயே சிறந்த மூத்த அரசி யல் தலைவர். அவருக்கு இருக்கக்கூடிய அனுபவம் யாருக்குமே இருந்ததில்லை. இறுதிவரை ஒரு எலெக்சனில்கூட அவர் தோற்கவில்லை. நக்கீரன் கோபால் சொல்ற மாதிரி... இப்ப இருக்கும் முதலமைச்சரை கலைஞர் என்ற லென்ஸ் வழியாகப் பார்ப்பது தவறு. அதை முழுமையாக ஒத்துக்கொள் கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர் களின் குணநலன்கள் குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். விடிகாலையில் முதல்வரை ரெகுலராக பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு உண்டு. அவரோடு சேர்ந்து காலையில் நடைப்பயிற்சி செய்வதுண்டு. இதற்கு முன்னர் கலைஞரே இது போன்ற மேடையில் முன்பு சொல்லியிருக்கார். உழைப்பு என்றால் ஸ்டாலின் என்று. இதில் மிகைப் படுத்தி எதுவுமே சொல்லவில்லை. ரொம்ப அதிகமா, கடினமா வேலை செய்கிறார். வெளியூரிலிருந்து வர்றார். வந்ததும் ஒரு நடைப்பயிற்சி போகிறார். அதன்பின் ஆய்வு நடத்தப் போகிறார். காலையிலிருந்து இரவுவரை செல்கிறார். அவரே அதிலிருக்கும் உடல் வலியைப்பற்றி பேசுகிறார்.
அதனால், குற
கடந்த 14ஆம் தேதி, செவ்வாயன்று, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட, முதலமைச்சர் மு.க. ஸ்டா லினின் பிறந்த நாள் விழாவில், "ஜனநாயக வலிமை தமிழ்நாட்டின் தலைமை' என்ற தலைப்பில் நடை பெற்ற எழுத்தியல் அரங்கத்தை நடிகர் நாசர் தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்து என்.ராம், ஆசிரியர் நக்கீரன் கோபால், நடிகர் நாசர், தராசு ஷியாம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
முதலமைச்சரின் குணநலன்கள், அரசியல் செயல்பாடு குறித்து பேசிய பத்திரிகையாளர் இந்து என்.ராம், "கலைஞரைப் பற்றி முன்பு நிறைய பேசி யிருக்கேன். இந்தியாவிலேயே சிறந்த மூத்த அரசி யல் தலைவர். அவருக்கு இருக்கக்கூடிய அனுபவம் யாருக்குமே இருந்ததில்லை. இறுதிவரை ஒரு எலெக்சனில்கூட அவர் தோற்கவில்லை. நக்கீரன் கோபால் சொல்ற மாதிரி... இப்ப இருக்கும் முதலமைச்சரை கலைஞர் என்ற லென்ஸ் வழியாகப் பார்ப்பது தவறு. அதை முழுமையாக ஒத்துக்கொள் கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர் களின் குணநலன்கள் குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். விடிகாலையில் முதல்வரை ரெகுலராக பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு உண்டு. அவரோடு சேர்ந்து காலையில் நடைப்பயிற்சி செய்வதுண்டு. இதற்கு முன்னர் கலைஞரே இது போன்ற மேடையில் முன்பு சொல்லியிருக்கார். உழைப்பு என்றால் ஸ்டாலின் என்று. இதில் மிகைப் படுத்தி எதுவுமே சொல்லவில்லை. ரொம்ப அதிகமா, கடினமா வேலை செய்கிறார். வெளியூரிலிருந்து வர்றார். வந்ததும் ஒரு நடைப்பயிற்சி போகிறார். அதன்பின் ஆய்வு நடத்தப் போகிறார். காலையிலிருந்து இரவுவரை செல்கிறார். அவரே அதிலிருக்கும் உடல் வலியைப்பற்றி பேசுகிறார்.
அதனால், குறிப்பாக, திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், உறுப்பினர்கள், தலைவர்கள் எல் லோரும், அவருக்கு அதிக பாரத்தைச் சுமத்துவது தவறு. அதுபற்றி அவரே பல நேரம் வெளிப்படையாகப் பேசி யிருக்கார். அவருடைய முக்கியமான நோக்கம்... ஒரே குறிக்கோள்... மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும். ஒரு பக்கம் கட்சியை நடத்துவது முக்கியம். அதேவேளை எல்லா மக்களுக்கு மாகச் செயல்பட வேண்டும். வெறும் தி.மு.க. ஆதரவாளராக மட்டுமல்லாமல், எல்லா மக்களுக்கும் நன்மை செய்வதுதான் தன்னுடைய கடமை என்று அவர் செயல்படுவது நன்றாகத் தெரிகிறது.
நடைப்பயிற்சியின்போது பல பேர் வர்றாங்க. என்னென்ன சொல்றாங்கன்னு கேட்பேன். சில நேரம் அவங்களோட பெர்சனல் தேவைகளை சொல்வாங்க. நல்லா செயல் படுறீங்கன்னு சொல்வாங்க. ஒரு தனி மனிதர் இவ்வளவு கடுமையான வேலைகளை ஒரு குறிக்கோளுடன் செய்கிறார். அதே நேரத்தில், அகில இந்திய பிரச்சனைகள் பலவும் வருது. பி.ஜே.பி. அரசாங்கம் ஒரு வகுப்புவாத அரசு மட்டுமல்ல, ஜனநாயகத்தை மோசமாக இடித்து, அச்சத்தை ஏற்படுத்து வதுபோல் நடந்துகொள் கிறார்கள். மைனாரிட்டி மக்களைத் தாக்குகிறார்கள். குறிப்பாக முஸ்லிம் மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். சட்டத் துக்கு மதிப்பில்லை. ஜனநாயகம் இன்றைக்கு பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளது. நீதிமன்றத்தைக்கூட மதிப்பதில்லை.
மாநில உரிமைகள் என்றால் என்ன? என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகவே இருக்கிறது. போதுமான அளவுக்கு உரிமைகள் கிடைக்கவில்லை என்றாலும்கூட இருப் பதைவைத்து நன்றாகவே அரசியல் நடத்தலாம். அரசையும் நடத்த முடியும். இன்னும் வளர்ச்சிகளைப் பெற முடியும். ஆனால் அந்த உரிமைகளை மதிக்கிறார்களா? நடைமுறையில் மதிக்கிறார்களா என்றால் இல்லை. "ஒன் இண்டியா' என்றுதான் சொல்றாங்க. குறிப்பாக, கவர்னர் பதவியை ஒரு ஆயுதமாக எடுத்துத் தவறாகப் பயன்படுத்துறாங்க. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகராறு செய்றதே அவங்க வேலைங்கற மாதிரி நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுக்கு முன்ன காங்கிரஸ் இருக்கும்போது கூட, பல தவறுகள் நடந்திருக்கு. கவர்னரை வைத்து கலைஞர் அரசை கலைச்சிருக்காங்க. பொய் ரிப்போர்ட் வாங்கி கலைச்சிருக்காங்க. அதெல்லாம் சரித்திர உண்மை தான். இன்றைக்கு ஒன்றிரண்டு கவர்னர்கள் தான் கொஞ்சம் டீசன்ட்டா இருக்காங்க. நம்ம நண்பர் நக்கீரன் கோபாலுக்கு கூட தெரியும். ஒரு கவர்னரோட சில சர்ச்சைகள் நடந்தது. நான் அவரோட நல்லா பேசுவேன். நல்லபடிதான் நடந்துப்பாரு. கோபாலுடைய வழக்கறிஞர் பெரு மாளுக்குகூட ஒரு தடவ டீ பார்ட்டி கொடுத்தார். பிரச்சனை இருந்தால் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் அந்த கவர்னருக்கு இருந்தது. ஆனால் இன்றைய கவர்னர் என்ன செய்றார்... பல சட்டங்களை டேபிள்லயே வச்சுக்கறார். பாக்கெட்ல போட்டுக்கறார்.
சட்டமன்றத்துல முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கவர்னருக்கு அனுப்பு றாங்க. அவர் அப்படியே வச்சுக்கறார். இவரே செய் றாரா, டெல்லியிலிருந்து அட்வைஸ் வருதான்னு யாருக்கும் தெரியாது. வெளிப்படைத்தன்மையே கிடையாது. கேட்பதற்கு யாரும் இல்லை. அதைப் பற்றி மாண்புமிகு முதலமைச்சர் பல நேரங்களில் பேசியிருக்கார். பத்திரிக்கைகளிலும் கவர்னர் செய் வது சரியில்லைன்னு தலையங்கங்கள் வந்திருக்கு. இந்த மாநிலத்தில் மட்டுமில்லை, கேரளாவிலும் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்கிறது. தமிழ்நாட் டில் ஒரு நல்ல ஆட்சியை நடத்தக்கூடிய நிலையில் கவர்னர் தடையாக இருக்கார். இன்னொரு விஷயம், அரசியலமைப்புச்சட்டத்தில் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று இருக்கிறது. இவர் வந்து, தமிழகம்னு இருக்கணும், தமிழ்நாடுன்னு இருக்கக்கூடாதுன்னு சொல்றார். இவர் இந்திக்காரர். நிலைமை மோசமாகப் போன தால டெல்லியில கூப்பிட்டு அட்வைஸ் பண்ணியிருப்பாங்க போல... இதெல்லாம் தேவை யில்லைன்னு. அதுக்கப்புறம் முதலமைச்சரை யும், அமைச்சர்களையும் டீ பார்ட்டிக்கு கூப்பிட்டாங்க... அங்க போனாங்க. எதாவது சமரசம் வரும்னு நான்கூட எதிர்பார்த் தேன். அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியல. அந்த பொங்கல் இன்விடேஷன்ல தமிழ்நாடுன்னு இல்ல. டெல்லியிலிருந்து திரும்பி வந்ததும் அடுத்த இன்விடேஷன்ல தமிழ்நாடுன்னு திருத்தப்பட்டது. இது சின்ன முன்னேற்றம். எதாவது குழப் பத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற மனநிலை தான் இதுக்கு கார ணம். விஷமத்தனமான ஒரு நடவடிக்கைன்னு தான் சொல்வேன்.
கவர்னர் பதவி தேவையான்னு என்னைக் கேட்டால், தேவையில்லை. சென்ட்ரல் கவர்மென்டோட ஏஜென்டாக இருக்கக்கூடிய ஆளுநர் பதவி தேவையில்லை. ஒன்றியத்தி லிருந்து சொல்லக்கூடியதையெல்லாம் கேட்கக்கூடிய... தடையைப் போடக்கூடிய ஒரு ஆளுநர் இருந்தால் எப்படி ஆட்சியை நடத்த முடியும்? இந்த சவால்கள் இப்ப இருக்கிறது. தேவையில்லாத பிரச்சனைகளில் முதல்வர் மோதுவதில்லை. தேவையில்லாமல் பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லை. ஆனால் தேவையிருந்தால், மதச்சார்பின்மை அரசியலுக்கான தேவை இருந்தால் உறுதியான நிலை எடுப்பது அவசியம். இதுதான் தி.மு.க.வின் ஒரு சிறந்த குணம் என்று கருதுகிறேன். அண்ணாதுரை அவர்களும் அப்படித்தான். தேவையில்லாத விஷயங்களில் மோத மாட்டார். இது சிறந்த அரசியல் பாதை... கொள்கை!
இன்னொரு விஷயம் சொல்லணும். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குணமென்று நினைக்கிறேன். மற்ற கட்சித் தலைவர்களையும் மதிக்கின்றவர். அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவதில்லை. ஒரு கண்ணியத்தோடுதான் விமர்சனம் செய்வார். அதை நான் கூர்மையாகக் கவனித்திருக் கிறேன். யாராவது மறுக்கமுடியுமா? கலைஞரின் மறைவுக்குப் பிறகு நெருக்கடி ஏற்பட்டது. அவரது உடலை எங்க எடுத்துட் டுப் போறது என்றிருந்தபோது, அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவரைப் போய்ப் பார்த்து, வேண்டிக்கொண்டாரல்லவா? அதைவிட நல்ல தனிப்பட்ட குணத்தை யாரும் வைத்திருக்க முடியாது. குறைந்த நிதிச் சூழலோடு தான் முதல்வரின் தலைமையில், பி.டி.ஆர். மற்றும் அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து சிறந்த முறையில் அரசின் நிதியைக் கையாளுகிறார்கள். பட்ஜெட் மிகவும் நன்முறையில் வரும்னு நினைக்கிறேன். நல்ல ஆட்சி... நல்ல குணங்கள்... கடுமையான உழைப்பு... நேர்மையாக நடந்துகொள்வது... வேறு கருத்தில் இருப்பவர்களை மதிப்பது... தவறாகச் செயல்பட்டால் உறுதியாக எதிர்ப்பது... இதெல்லாம் நாம் இன்று பாராட்டவேண்டிய விஷயம்.
தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் நல்ல நிலையில் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் கருத்துச் சுதந்திரம் இல்லை. அமைச்சர் சேகர்பாபு கூப்பிடும் அனைத்துக் கூட்டங்களுக்கும் நானும் நக்கீரன் கோபாலும் செல்கிறோம். நல்லதொரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருக்கிறார். அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி!'' என்றார்.
-தெ.சு.கவுதமன்
படங்கள் : ஸ்டாலின்