ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆளுநர் ஆதரவு! கொந்தளிப்பில் தமிழ்நாடு!

ss

மிழ்நாடு அரசோடு ஆளுநரின் லேட் டஸ்ட் மோதல்... தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம்! இது வெறுமனே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கு மான மோதலாக இல்லாமல், ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 44 உயிர்களைப் பலிகொடுத்துள்ள தமிழ்நாட்டு மக்களுக்கும், ஆளுநருக்குமான மோதலாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உயிரும், பொருள் இழப்பும் ஆளுநருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வல்லுநர் குழுவை நியமித்து, ஆய்வு செய்த பின்னர், கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி, 4 மாத காலமாக கிடப்பில் போட்டுவிட்டு, திடீரெனத் தற்போது திருப்பியனுப்பியுள்ளார்.

rummy

ஆன்லைன் சூதாட்ட வலையில் சிக்கி, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்த தால், கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் அவசர அவசரமாக ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டம் வலுவானதாக இல்லாததால், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்ததில், உயர் நீதிமன்றம் அச் சட்டத்தை ரத்து செய்தது. பின்னர், தி.மு.க. ஆட்சியில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக வலுவான சட்டத்தை இயற்றுவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் ஆய்வுக்குப் பின்னர், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு படுத்துதல் அவசர சட்ட மசோதா உரு வாக்கப்பட்டு, உடனடியாக ஆளுநரின

மிழ்நாடு அரசோடு ஆளுநரின் லேட் டஸ்ட் மோதல்... தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம்! இது வெறுமனே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கு மான மோதலாக இல்லாமல், ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 44 உயிர்களைப் பலிகொடுத்துள்ள தமிழ்நாட்டு மக்களுக்கும், ஆளுநருக்குமான மோதலாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உயிரும், பொருள் இழப்பும் ஆளுநருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வல்லுநர் குழுவை நியமித்து, ஆய்வு செய்த பின்னர், கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி, 4 மாத காலமாக கிடப்பில் போட்டுவிட்டு, திடீரெனத் தற்போது திருப்பியனுப்பியுள்ளார்.

rummy

ஆன்லைன் சூதாட்ட வலையில் சிக்கி, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்த தால், கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் அவசர அவசரமாக ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டம் வலுவானதாக இல்லாததால், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்ததில், உயர் நீதிமன்றம் அச் சட்டத்தை ரத்து செய்தது. பின்னர், தி.மு.க. ஆட்சியில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக வலுவான சட்டத்தை இயற்றுவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் ஆய்வுக்குப் பின்னர், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு படுத்துதல் அவசர சட்ட மசோதா உரு வாக்கப்பட்டு, உடனடியாக ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது. அச்சட்டப்படி ஆன்லைன் சூதாட்டத்துக்கு, 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த அவசரச் சட்டத்தை நிரந்தரமாக்குவதற்காக, மசோதாவை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி, சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

justice chandru

இந்த மசோதாவைத்தான் 4 மாத காலமாகக் கிடப்பில் போட்ட ஆளுநர், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இந்த விவகாரம் வருவதாகவும், இதில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம்? என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பி திருப்பியனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயல் பாட்டுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா தயாரிப்புக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு, மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை என்றும், சட்டம் செல்லுமா? செல்லாதா? என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்றும் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், சட்டமன்றத்தில் rummyநிறைவேற்றப்பட்ட மசோதாவை பல்வேறு கார ணங்களைக்கூறி திருப்பியனுப்பிய ஆளுநர், அவசரச் சட்டத்துக்கு மட்டும் எப்படி கையெழுத்திட்டார்? அவசரச் சட்டம் சட்டப்பூர்வமாகவும், நிரந்தர சட்டம் சட்டத்திற்கு எதிராகவும் இருப்பதாக ஆளுநர் கருதுவது சரியான நிலைப்பாடு இல்லை என்றும், ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநர் இரட்டை நாடகம் போடுகிறார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆளுநரின் முடிவையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை முறைப் படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட் டது. அவர் சில சந்தேகங்களைக் கேட்டபோது, நேரிலேயே தெளி வான விளக்கம் தந் தோம். ஆனால், அந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த ஆளுநர், கடந்த 6ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளார். சட் டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியபோது, சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, உரிய விளக்கங்களை அளித்து, புதிய சட்டத்தை அரசு கொண்டுவர எந்தத் தடையும் இல்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சட்டம் இயற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆனால், அதிகாரம் இல்லை என்று ஆளுநர் கூறுகிறார்.

மாநிலப் பட்டியலில் பொது அதிகாரம், பொது சுகாதாரம், கேளிக்கை மற்றும் சூதாட் டம் ஆகியவற்றின் கீழ் வரும் ஷரத்துகளின் அடிப்படையில் சட்ட மசோதா இயற்றி, நாங்கள் ஆளுநருக்கு அனுப்பியுள் ளோம். ஆனால், திறன் விளை யாட்டைக் குறிப்பிட்டு, அதை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அமைச்ச ரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதாவை நிறை வேற்றி, ஆளுநருக்கு அனுப்ப முடிவு எடுக் கப்பட்டுள்ளது. சட் டத்தை நிறைவேற்ற எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதைத் தெரிவித்து ஆளுநருக்கு அனுப்புவோம். வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத்தைக் கொண்டுவர உள்ளோம்." என அழுத் தந்திருத்தமாகக் குறிப் பிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "அவசரச் சட்டத்திற்கு ஒப்பு தல் அளித்த ஆளுநருக்கு திடீரென எங்கிருந்து, எந்த அழுத்தம் வந்ததோ தெரியவில்லை. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், ஆளுநரைச் சந்தித்த பின் மசோதா தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என்று சட்டத்தைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏதோவொரு அழுத்தத்தால் தான் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். இது திறமைக்கான விளையாட்டு அல்ல. முதலாளிகள் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் திறனுக்கான விளையாட்டு'' எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

r

இவ்விவகாரம் குறித்து தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "நீதியரசர் சந்துரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட விவ காரத்தில் சட்டத்தை இயற்றக்கூடிய அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. ஒன்றிய அரசில் இதனை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் இல்லாதபோது, மாநில அரசுக்கு இதற்கான அதிகாரம் இல்லையென்று சொல்லக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் என்ன நீதியரசரா? ஆளுநர் செய்வது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். இதில் முக்கியமான முரண்பாடாக அனைவரும் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அவசர சட்டத்துக்கு ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் சட்டமன்றத் தில் இயற்றப்பட்ட மசோதாவை மட்டும் கையெழுத்திடாமல் தள்ளிவைக்கிறார். இதற்காக நான்கு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தினரை ஆளுநர் ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வருகின்றன. அது உண்மையா? பொய்யா? என ஆளுநர் மறுப்பு தெரிவிக்கவில்லை. கண்ட கண்ட விஷயங்கள் குறித்தெல்லாம் ராஜ்பவன் தரப்பிலிருந்து ட்வீட் போடும்போது, இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுநருக்கு இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான அரசாங்கப் பொறுப்பிலிருக்கக்கூடியவர், ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தினரைச் சந்திக்கக்கூடிய அதிகாரம் இருக்கிறதா? எப்படி இத்தகைய செயலை இவர் செய்ய முடியும்? அவர்களைச் சந்தித்தபின் இப்படிச் செய்திருப்பாரென்றால், அந்த சந்திப்பில் என்ன நடந்திருக்கக்கூடும்? இந்தச் சட்டம் நிறைவேற்றப் படாவிட்டால் ஆதாயமடையப் போவது ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தினர் தான். அப்படியானால் அவர்கள் ஆதாயம் அடைவதற்கு ஆளுநர் மெனக்கெடுகிறாரா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறக்கூடிய ஆளுநர் இப்படியான சந்தேகங்களுக்கு இடம் தரலாமா? இப்படி இடம்தருவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகாகுமா? கவர்னரின் அசரீரி குரல் போல அண்ணாமலை தான் பேசுகிறார். இருவருமே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதைத்தவிர இருவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எனவே இதுகுறித்தெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்தாவது ஆளுநர் தெளிவுபடுத்துவாரென்று எதிர்பார்க்கிறோம்'' என்றார். ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியாகி, தற்கொலைக்குத் தள்ளப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், இதுகுறித்து ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், நடவடிக்கை எடுக்கும் மாநில அரசையும் ஆளுநரின்மூலம் தடுக்க நினைப்பது, எவ்விதத்தில் நியாயமாகும்?

nkn150323
இதையும் படியுங்கள்
Subscribe