"ஹலோ தலைவரே, கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசிடம் இறங்கி வந்திருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்த பிறகு, கவர்னரிடம் பல விசயங்களில் மாற்றம் தெரிகிறது. குறிப்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்சனைகளில் தனது அதிகார எல்லையை கவர்னர் உணர்ந்திருக்கிறார்னு ராஜ்பவன் தரப்பே சொல்லுது. அண்மையில் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை நியமிக்க, தேடுதல் கமிட்டியை அரசிடம் கலந்துபேசாமல் தன்னிச்சை யாக கவர்னர் அமைத்திருந்தார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. உச்சநீதிமன்றத்துக்கு கவர்னரின் இடையூறு குறித்த வழக்கு சென்ற பிறகு, வழக்கின் தீவிரத்தை உணர்ந்த கவர்னர், தான் அமைத்த இந்தத் தேடுதல் கமிட்டிகளை, தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து கலைத் திருக்கிறார். இது அவரிடம் தெரிந்திருக்கும் நல்ல மாற்றம் என்கிறார்கள்.''”
"தி.மு.க. வழக்கறிஞர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் கடுமையாகப் பேசினார்னு சொல்றாங்களேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் தி.மு.க. சட்டக் குழுவினருடன் பேசிய ஸ்டாலின், குரலில் கொஞ்சம் கடுமை காட்டியிருக்கிறார். குறிப்பாக, ’கட்சிப் பொறுப்புகளில் ஆர்வம் காட்டும் நீங்கள், உங்கள் பணிகளை எந்த அளவிற்குச் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. பல விசயங்களிலும் நமக்குப் பின்னடைவு ஏற்படுகிறது. சொல்லப்போனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், முடிவுகள் எல்லாம் நமக்கு எதிராகவே வரு கின்றன. பொறுப்பை திறம்பட நிறைவேற்ற முடியாதவர்கள் விலகிக் கொள்ளுங்கள்’ என்ற ரீதியில் பேசினாராம். இதனைத் தொடர்ந்துதான் அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை சண்முகசுந்தரம் ராஜினாமா செய்திருக்கிறார் என்கிறார்கள். அப்போது அதிகம் விமர்சிக்கப்பட்டவர் மற்றொரு அரசு வழக்கறிஞரான என்.ஆர்.இளங்கோவாம். இவர்தான் செந்தில்பாலாஜி வழக்கையும் பொன்முடி வழக்கையும் கவனிக்கிறவர். அவரிடம், இனி இந்த வழக்குகளில் நீங்கள் தலையிடவேண்டாம் என்கிற அளவிற்கு சொல்லப்பட்டதாம்.''”
"அ.தி.மு.க., மா.செ,க்கள் கூட்டத்தில் எடப்பாடியும் கொந்தளிச்சிருக்காரே?''
’"அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தை 9ஆம் தேதி எடப்பாடி கூட்டியிருந்தார். இதில் சென்னை பகுதி மா.செ.க்களான பாலகங்கா, ஜெயக்குமார், கே.பி.கந்தன், ஆதிராஜாராம், விருகை வி.என்.ரவி, ஆர்.எல்.ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, சத்யா உட்பட தமிழகம் முழுவதி லும் இருந்து 72 மா.செ.க்கள் கலந்து கொண்டார்கள். அப்போது, நாடாளு மன்றத் தேர்தல் குறித்து ஆலோசித்த எடப்பாடி, "பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற உறுதியான முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம். அதே சமயம் அமைப்பு ரீதியாக நாம் பலவீனமாக இருப்பது கவலையைத் தருகிறது. காரணம், யாரும் உற்சாகமாகச் செயல்பட வில்லை'’என்று கொதிப்பைக் கொட்டிய வர், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை அமைக்கக் கூட ஆள் கிடைக்கவில்லை என்கிற தன் ஆதங்கத்தையும் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அந்தப்பகுதி மா.செ.வான வெங்கடேஷ்பாபுவிடம் அவர் விளக்கம் கேட்க, வெங்கடேசோ ‘சென்னை சிட்டியில் ஆளுங்கட்சிக்கு எதிராக வேலை பார்க்க ஆட்கள் வருவது கஷ்டம். அதிலும் முதல்வர் தொகுதி என்பதால் தயங்குகிறார்கள் என்று மழுப்ப, இது மேலும் எடப்பாடியை எரிச்சலாக்கியதாம்.''
"தேர்தல் கூட்டணிக்காக பல கட்சிகளுக்கும் எடப்பாடி தூது விட்டுப் பார்த்தாரே?''”
"பா.ஜ.க. இல்லாத நிலையில் தங்கள் கூட்டணியை எப்படியாவது வலுப்படுத்த வேண்டும் என்று நினைத்த எடப்பாடி, பல கட்சிகளுக்கும் ரூட் விட ஆரம்பித்தார். முதலில் காங்கிரஸை தி.மு.க. கூட்டணியில் இருந்து தங்கள் பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும் என்று, அரசியல் வியூக அமைப்பாளர் சுனில் மூலம் காய் நகர்த்திப் பார்த்தவர், இப்போது காங்கிரஸின் சீனியர் தலைவர்களில் ஒருவரான சல்மான்குர்ஷித் துக்கு தனது டெல்லித் தொடர்புகள் மூலம் தூதுவிட்டார். அவரோ, அடிக்கடி ஸ்டாலின் தரப்போடு ராகுல்ஜி பேசிவருகிறார். அப்படி யிருக்க, உங்களோடு எப்படி கூட்டணி? என்று அவர் கழற்றிவிட்டுவிட்டார். அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அவர் தூது விட்டபோது, அவர்களும், ’இதெல்லாம் நடக்கிற காரியமா? அடுத்த மாதம் எங்கள் மாநாடு நடக்கிறது. அதற்கு சிறப்பு அழைப்பாளரே முதல்வர் ஸ்டாலின்தான். அதனால் வேறு கட்சியைப் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டார்களாம். பேருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் அ.தி.மு.க.வுடன் கைகோர்த்த கம்யூனிஸ்டுகளும், ’இது வேறு, தேர்தல் கூட்டணி வேறு, மனசப் போட்டுக் குழப்பிக்காதீங்க’ என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் கடும் அப்செட் மூடில் இருக்கிறாராம் எடப்பாடி.''”
"கூட்டணியில் இருந்து விலகிய எடப்பாடிக்கு, பா.ஜ.க. கடுமையான பாடம் புகட்டப் போகிறதாமே?''”
"வரும் நாடாளுமன்றத் தேர்தலில், களத்தில் தங்களுக்கு எதிராக பலமான எதிரியாக தி.மு.க.தான் இருக்கிறது என்று கருதும் பா.ஜ.க., தங்கள் கூட்டணியை விட்டுவிலகிய எடப்பாடிக்கு பாடம் புகட்டியே தீருவது என்று பழிவாங்கும் வியூகங் களை வகுத்து வருகிறதாம். தேர்த லுக்கு முன் எடப்பாடி தலைமையி லான அ.தி.மு.க.வை மாஜி மந்திரி வேலுமணி மூலம் பலவீனப் படுத்துவதோடு, எடப்பாடிக்கு எதிரான கொட நாடு வழக்கில் அதி தீவிரமாக நெருக்கடி தரவும் அது முடிவெடுத் திருக்கிறது. இதைத் தொடர்ந்து கொடநாடு கொலை வழக்கில் சிக்கியிருக்கும் மொபைல் போன் சிக்னல்களையும் பதிவுகளையும் ஆராய, குஜராத் தடய அறிவியல் துறையினரை இப்போதே தமிழகத்தில் களமிறக்கியுள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாகவே, எடப்பாடியை சிறையில் தள்ள டெல்லி தீர்மானித்துள்ள தாக உளவுத்துறை வட்டாரங்களில் விறுவிறு தகவல்கள் உலவுகின்றன.''”
"பா.ஜ.க. அண்ணாமலை, கட்சியின் தேசியத் தலைமை மீது ஆதங்கத்தில் இருக்கிறார்னு தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, கூட்டணி பற்றி தமிழக நிர்வாகிகள் என்ன மாதிரி மன நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள, கட்சியின் சீனியர்களில் ஒருவரான பியூஷ்கோயலை தமிழகத்திற்கு அனுப்பியது. இங்கு வந்த பியூஷ்கோயல், மாநில பா.ஜ.க. பிரமுகர்களிடம், கூட்டணி எப்படி அமைய வேண்டும் என்று நிறைய ஆலோசனைகளை நடத்தினார். இதைக்கண்ட அண்ணாமலை, ‘"கட்சியின் மாநிலத் தலைவராக நான் இருக்கும்போது, என்னைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், எல்லோரிடமும் கருத்துக் கேட்டிருக்கிறார். இது எப்படி நியாயம்?'’என்று ஆதங்கத்துடன் பொருமிக் கொண்டிருக்கிறாராம்.''”
"இந்த நிலையில் ஓ.பி.எஸ். தரப்புடன் பா.ஜ.க. தேர்தல் குறித்துப் பேசியிருக்கிறதே?''”
"பா.ஜ.க.வைப் பொறுத்தவரை தமிழகத்தில் தனது தலைமையில் கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டுகிறது. மொத்தமுள்ள 40 தொகுதி களில், 20-ல் பா.ஜ.க.வும், மீதமுள்ள 20 இடங்களில் தன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடலாம்னு மோடியும் அமித்ஷாவும் முடிவெடுத்திருக்கிறார் களாம். இதைத் தொடர்ந்தே ஓ.பி.எஸ்.ஸின் அர சியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரனை தேசியத் தலைவரின் அறிவுறுத்தலின்படி தமிழக பா.ஜ.க.வினர் சந்தித்து தேர்தல் குறித்துப் பேசியிருக் கிறார்கள். அப்போது, ஓ.பி.எஸ். டீம், தினகரன் டீம் ஆகியவற்றுக்கு தலா 4 சீட்டுகளை ஒதுக்க நினைக்கிறோம்,. அதேபோல் தே.மு.தி.க.வுக்கு 4 சீட். பா.ம.க. வந்தால் அதற்கும் 4 சீட் தருவோம். பா.ம.க. வராத பட்சத்தில், அந்த 4 சீட்டுகளையும் உங்கள் மூன்று தரப்புக்கும் பிரித்துத் தரும் திட்டமும் இருக்கிறது, இது தவிர புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் பச்சமுத்து ஆகியோ ருக்கும் தலா 1 சீட் தரலாம் என்பதுதான் எங்கள் முடிவு என்று அப்போது சொல்லியிருக்கிறார்கள். மேலும், தாமரை சின்னத்தில்தான் நீங்கள் எல்லோரும் போட்டியிட வேண்டும். உங்களுக்கான தேர்தல் செலவுகளை எங்கள் தேசிய மேலிடம் பார்த்துக்கொள்ளும் என்றும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். பண்ருட்டியோ, எங்கள் தரப்பில் மற்றவர்களிடமும் கலந்து ஆலோசித்துவிட்டுச் சொல்கிறோம் என்றாராம்.''”
"கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சியே ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்திருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம் பரம், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, மோடிக்கு இணையானவர் இந்தியாவில் யாரும் இல்லை என்கிற தொனியில் பேசியிருக்கிறார். இது காங்கிரஸில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருக்கு. ’அப்பாவும், புள்ளையும் காங்கிரசின் பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு மோடிக்கு ஆதர வாக பேசுவதா? மோடியையே வீழ்த்தக்கூடியவர் ராகுல்காந்தின்னு நம் கட்சி சொல்லிக்கொண்டி ருக்கும்போது, அதற்கு நேர்மாறாக அவர் பேசி யதை எப்படி சகிக்கமுடியும்?”என்று எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். இதையெல்லாம், காங்கிரஸின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராம சாமிக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்த, இதைத் தொடர்ந்தே விளக்கம் கேட்டு கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.''”
"கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பும் உரிமை கட்சியின் மாநிலத் தலைமைக்கு இல் லைன்னு அவர் ஆதரவாளர்கள் சொல்றாங்களே?''”
"அகில இந்திய காங்கிர சின் உறுப்பினராக கார்த்தி இருப்பதால், அவருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இல்லைன்னு அவர் ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல், குடும்பத்தில் ஒருவருக் குத்தான் சீட் என்றும், அதனால் சிதம்பரம் எம்.பி.யாக இருப்பதால், அவர் மகனான கார்த்திக்கு எம்.பி. சீட் கிடையாதுன்னும் காங்கிரஸ் தலைமை சொல்லிவிட்டது. அதனால், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியையாவது எனக்குக் கொடுங்கள் என்று அவர் கேட்டார். இதற்குத் தோதாக தன் ஆதரவாளர்களிடமும் அவர் தெம்பாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் ராகுலோ, தலைவர் பதவியும் அவருக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம். எனவே, கட்சியின் தேசியத் தலைமை மீது கடுப்பான கார்த்தி, தன் கோபத்தைக் கொட்டும்விதமாக, மோடிக்கு இணையான தலைவர் யாருமில்லை என்று அவரைப் புகழ்ந்து, கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தாராம். இந்த விவகாரம் வேகமெடுத்து வருகிறது.''”
"நெல்லை மாநகராட்சியில் ஒரே பூகம்பமா இருக்கேப்பா''”
"ஆமாங்க தலைவரே, மொத்தம் 55 வார்டுகள் கொண்ட நெல்லை மாநகராட்சியில் வெறும் 4 வார்டுகளை மட்டுமே அ.தி.மு.க. கைப்பற்ற, அறுதிப் பெரும்பான்மையோடு அங்கே தி.மு.க. வெற்றிவாகை சூடியது. இதைத் தொடர்ந்து மேயராக சரவணன் பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால், இவர் பதவி ஏற்ற நாளில் இருந்தே, தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் முட்டல் மோதல் ஆரம்பித்துவிட்டது. ’எதற்கெடுத்தாலும் மேயர் கமிஷன் கேட்கிறார், எங்கள் வார்டுகளைப் புறக்கணிக்கிறார்’ என தி.மு.க. கவுன்சிலர்களே அவருக்கு எதிராகப் புகார்க் குரல் எழுப்பினர். இதற்கிடையே அமைச்சர் தங்கம் தென்னரசு வந்து சமாதானப்படுத்தியும் சமாதானம் ஏற்படவில்லை. இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் ரவீந்தர், மன்சூர், பவுல்ராஜ் மற்றும் மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணியன் ஆகியோர் மீது அறிவாலயம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமெனக் கடிதம் கொடுத்து, அறிவாலயத்தையே அதிரவைத்திருக்கிறார்கள்.''”
"நானும் என் காதுக்கு வந்த தகவலை பகிர்ந்துக்கறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மீண்டும் சிதம்பரத்தில் போட்டி யிட முடிவெடுத்திருக்கிறார். இதையறிந்த பா.ஜ.க., வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் திருமாவளவனுக்கு எதிராக நடிகர் ராகவா லாரன்சை களமிறக்கலாமா? என்று பா.ஜ.க. ஆலோசிக்கிறதாம்.''