"ஹலோ தலைவரே, இந்திய எல்லைப் பகுதியில் போர்ப் பதட்டம் ஏற்பட்டிருக்கும் நிலை யில், தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பு களுக்குப் பஞ்சம் இல்லை.''”
"உண்மைதாம்பா, 12 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்னு தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக் கழகங்களில் 12-க்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல், அவர்களின் பணி யிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இவற்றை நிரப்ப தி.மு.க. அரசு எடுத்த முயற்சிகளுக்கு கவர்னர் ரவி, தனக்கே உரிய பாணியில் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டேயிருந்தார். இந்த நிலையில், அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கவர்ன ரின் அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பைக் கொடுத்ததால், பல்கலைக்கழகங்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்குன்னு கல்வி யாளர்கள் உற்சாகமாகச் சொல்றாங்க. இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களில் புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கு, சர்ச் கமிட்டிகளை அரசு அமைத்திருக்கிறது. அந்த கமிட்டியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முன்னாள் துணை வேந்தர்களும் இடம் பெற்றி ருக்காங்க. இந்த கமிட்டிகள், தங்கள் பணியை விறுவிறுப்பாக செய்யத் தொடங்கியிருப்பதால், அவற்றின் பரிந்துரையின் பேரில், புதிய துணை வேந்தர்களை முதல்வர் ஸ்டாலின் நியமிப்பார் என் கிறார்கள்.''”
"சரிப்பா, சிவகிரி படுகொலையை வைத்து இங்கே அரசியல் செய்யும் முயற்சிகளும் நடந்ததே?''”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, ஈரோடு மாவட்டம் சிவகிரியில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்துவந்த முதிய தம்பதிகளான ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோர் நகை, பணத் துக்காக கொடூரமாகக் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிரவைத்தது. உடனே, மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சரஸ்வதி, படுகொலை செய்யப்பட்ட வர்களின் உறவினர்களைச் சந்தித்து ’"போராடினால்தான் நீதி கிடைக்கும். குற்றவாளிகளைக் கைது செய்யும்வரை, அவர்களின் உடல்களை வாங்கமாட் டோம்னு அதிரடிப் போராட்டத்தை நடத்துங்கள்'’என்று உசுப்பிவிட்டார்.''”
"ம்...''”
"அதேபோல் அ.தி.மு.க. தரப்பி லிருந்து அவர்களைத் தொடர்பு கொண்ட எடப்பாடியும் ’"சும்மா விடாதீங்க... போராடுங்க. உங்களுக்கு எங்க கட்சி துணையாக இருக்கும்'னு தன் பங்கிற்குப் பதட்டத்தைப் பற்றவைக்க முயன்றார். இப்படி இவர்கள், இந்த விவகாரத்தை அரசியலாக்கத் துடிப்பதை அறிந்ததும், மாவட்ட அமைச்சர் முத்துசாமியும், தி.மு.க. எம்.பி. பிரகாஷும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், "நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. சம்பவத்தை அறிந்ததும் நம் முதல்வர் பெரும் வேதனை யடைந்தார். குற்றவாளிகளைப் பிடிக்க, காவல்துறையை உடனடியாக முடுக்கிவிட்டி ருக்கிறார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டி ருக்கு. எனவே, பிண அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு துணை போய்விடாதீர்கள்'’ என்றெல்லாம் பேசி, அவர்களை அமைதிப் படுத்தியிருக்கிறார்கள்.''”
"தமிழக காங்கிரஸில் சலசலப்பு அதிகம் தெரிகிறதே?''”
"அண்மையில் மத்திய பா.ஜ.க. பாசிச அரசைக் கண்டித்து, நாடுமுழுதும் காங்கிரஸ் கட்சி கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்தியது. அந்த வகையில் சென்னை காமராஜர் அரங்கின் அருகேயுள்ள காங்கிரஸ் திடலில், 4ஆம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டம் முடிந்ததும், அந்தத் திடலுக்கு வரும் பிரதான சாலையை, மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்கள் அவசர அவசரமாக, சுவர் எழுப்பி அடைத்துவிட்டனர். 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் திடலின் தற்போதைய மதிப்பு, ஏறத்தாழ 1000 கோடி ரூபாயாம். இதை மார்வாடி ஒருவரிடம் கட்சியே அடமானம் வைத்திருந்ததாம். எனவே அந்த மார்வாடியிடம் பேசி, முறைப்படி திடலை மீட்பதை விட்டுவிட்டு, இப்படி அடாவடியாக சுவர் எழுப்பியிருப்பதால், கட்சிக்குத்தானே தலைவலி என்கிறார்கள் காங்கிரஸின் சீனியர்கள். ஆனால் செல்வப் பெருந்தகையோ அன்று இரவே, சீனாவில், தான் நடத்திவரும் பிஸினசைப் பார்த்து வருவதற்காக, ஓட்டல் அதிபர் ஒருவரோடு பிளைட் ஏறிவிட்டாராம். அடிக்கடி இவர் சீனா சென்று வருவது குறித்து மத்திய உளவுத்துறை, ஏற்கனவே டெல்லிக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம்.''”
"நெல்லை காங்கிரஸ் எம்.பி.யை பொதுமக்கள் அதிரடியாக முற்றுகை யிட்டு மிரள வைத்திருக்கிறார்களே?''”
"நெல்லை கிழக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் அரங்கேறி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இதையொட்டி, கடந்த 4 ஆம் தேதி காலை, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நினைவஞ்சலி செலுத்த வந்தார் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ். இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் அங்கே திரண்டுவந்து அவரை முற்றுகையிட்டனர். “"ஜெயகுமாருக்கு என்ன ஆச்சு? அவர் எப்படி இறந்தார்? அவர் படுகொலை செய்யப் பட்டாரா? என்றெல்லாம் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுது. இதுபத்தி அக்கறையா ஒரு தடவையாவது விசாரிச்சீங்களா?' என்று கொதிப்போடு கேள்வியெழுப்பி, அவரை மிரளவைத்தனர். இதையறிந்து அங்கே ஓடிவந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், எம்.பி,.யை அவர்களிடம் இருந்து மீட்டு, பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். கிறிஸ்தவ முறைப்படி கல்லறைத் தோட்டத்தில் ஜெயக்குமாரை அடக்கம் செய்து, அங்கே பலிபீடம் அமைத்திருக்க வேண்டுமாம். அவரது மரணம் குறித்து விசாரணை நடந்துவருவதால், மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படலாம் என்று கருதி, அவருக்கு இன்னும் கல்லறை கட்டப்படவில்லையாம்.''”
"அது இருக்கட்டும்பா, மூப்பனார் நினைவிடத்துக்கு ஆபத்துன்னு த.மா.கா. தரப்பு கைபிசைகிறதாமே?''”
"ஆமாங்க தலைவரே... காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனை சமீபத்தில் சந்திச்சிருக்காங்க. அப்போது அவர்கள், ’மூப்பனார் ஐயா மீதான பழைய பாசத்தில் ஒரு தகவலை உங்களிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்திருக்கிறோம். காமராஜர் திடலை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும், உங்கள் தந்தையாரான ஐயா மூப்பனாரின் நினைவிடத்துக்கு, இப்போது ஆபத்து வந்திருக்கு. அது காங்கிரஸுக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதால், நினைவிடத்தை அகற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் மேலிடத்தில் செல்வப் பெருந்தகை காய் நகர்த்த ஆரம்பிச்சிருக்கார். இதுகுறித்து, காங்கிரஸின் சொத்து பாதுகாப்பு கமிட்டியின் தேசியத் தலைவர் சிங்காலாவிடம் அவர் விவாதிச்சிருக்கார். அதனால், உங்கள் தந்தையாரின் நினைவிடத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்னு சொல்லிவிட்டுக் கிளம்பினார்களாம். இது வாசன் தரப்பைப் பதட்டமாக்கியிருக்கிறது என்கிறார்கள்.''”
"காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் மெஹா ஊழல் நடந்திருக்குன்னு காற்று வாக்கில் செய்தி வருகிறதே?''”
"காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், ஆண்டு தோறும் அதன் லாபத்தை, அதிலேயே முதலீடாக்குவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு லாபமாகக் கிடைத்த ரூபாய் 21 கோடியில், 14.13 கோடி ரூபாயை ஒரே நாளில் தளவாடப் பொருட்களை வாங்க செலவு செய்திருப்பதாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்களாம். எனினும் அவர்கள் வாங்கியதாகச் சொன்ன எந்த பொருளும், வங்கிக்கு வரவில்லையாம். காரணம், பொய்க்கணக்கு எழுதியிருக்கிறார்களாம். இதுகுறித்து அங்கு பணியாற் றும் ஒருவரே லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகாரை அனுப்ப, அந்தக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை உணர்ந்த அவர்கள், அதிரடி விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்களாம். அதனால், இந்த வில்லங்க விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பதிவாளர் சுப்பையன் மற்றும் கூடுதல் பதிவாளர் உள்ளிட்டோர் சிக்குவார்கள் என்கிறார்கள், அங்கிருக்கும் ஊழியர்கள் பலரும்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந் துக்கறேன். சென்னை ராய புரம் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஐ டிரீம்ஸ் மூர்த்தி. வரும் சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தி.முக. சார்பாக மகளிரணியைச் சேர்ந்த ஒருவரை களமிறக்க தலைமை முடிவு செய்துள்ளதாக கிசு கிசுக்கிறார்கள் உடன்பிறப்புக் கள்.''
___________
இறுதிச் சுற்று!
தமிழக அமைச்சரவை மீண்டும் வியாழக்கிழமை (8-5-2025) மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அவர்கள் வசமிருந்த இலாகாக்களை மூத்த அமைச்சர்களுக்கு வழங்குவதற்காக அமைச்சரவையை சமீபத்தில் மாற்றி யமைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தச் சூழலில் தற்போது, நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனிடம் கூடுதலாக சட்டத்துறையும், துரைமுருகனிடம் இருந்த கனிமவளத் துறையை மட்டும் அமைச்சர் ரகுபதிக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார். மீண்டும் அமைச்சரவை மாற்றப்பட்டிருப்பதும், மூத்த அமைச்சர் வசமிருந்த இலாகா பறிக்கப்பட்டிருப்பதும் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கனிமவளத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சில விவகாரங்களில் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு துரைமுருகன் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் (குறிப்பு: ராமச்சந்திரனை கட்டி அழுவதாலும்), துரைமுருகனுக்கு எதிராக அமலாக்கத்துறையின் நட வடிக்கைகள் இறுகிவருவதாலும் இந்த இலாகா மாற்றம் நடந்திருக்கிறது' என முதல்கட்டத் தகவல்கள் கோட்டை வட்டாரத்திலிருந்து கிடைக்கின்றன.
-இளையர்