"ஹலோ தலைவரே, தமிழக அரசிடம் தொடர்ந்து இறுக்கத்தைக் கடைப்பிடிக்குது ராஜ்பவன்''”
"ஆமாம்பா, கவர்னர் ரவி, அவர் போக்கில் தமிழகத்தில் தனியா ஒரு அரசாங்கத்தை நடத்துற மாதிரி இருக்குதே?''
"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசின் நிர்வாகத்திடம் இருந்து, கவர்னர் நாளுக்கு நாள் விலகிச் செல்வதோடு, முதல்வர் ஸ்டாலின் மீதான வெறுப்பை, தன் இணக்கமில்லாச் செயல்கள் மூலம் காட்டிவருகிறார். அதனால் முதல்வர் ஸ்டாலினும், வருவது வரட்டும். நாமும் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், இனி நம் போக்கில் போவோம்னு முடிவெடுத்துட்டார்னு கோட்டை வட்டாரம் சொல்லுது. பல்கலைக் கழகங்களுக்கும் மாநில அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போலவே கவர்னர் நடந்துவருவதை, பல்கலைக்கழக வட்டாரமே ரசிக்கலை. கவர்னரின் தனி ஆவர்த்தனத்தைத் தாங்க முடியாமல் தான் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்னு ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றியது.''”
"இதற்கு ஒப்புதல் தராத கவர்னர், அந்த மசோதாவை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டேன்னு தன்னிச்சையா நடந்துக்குறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு எதிராக, கடந்த வாரம் 3 பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை கவர்னர் தன்னிச்சையாக நியமனம் செய்திருக்கிறார். இது குறித்து அரசிடம் அவர் எந்த ஆலோசனையையும் பெறவில்லை. இது முதல்வரையும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியையும் கோபப்பட வைத்திருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்த, ஒரு திட்டம் போடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கப் போகுதாம். அதில், புதிய கல்விக் கொள்கை தேவை இல்லை என்றும், திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளைத்தான் மாணவ மாணவிகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் எந்த வடிவத்திலும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் துணைவேந்தர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்துவார் என்று சொல்லப்படுது. இனி அதிரடிதான்.''”
"இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலம் போயிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, கொங்குப் பகுதியைச் சேர்ந்த கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கும் 3 நாள் அரசு முறைப் பயணமாக 24-ந் தேதி கிளம்பினார். கோவை சென்ற ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைத் தடபுடலாகச் செய்திருந்தார் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி. விளம்பர போஸ்டர்களும், பேனர்களும் தூள் பரத்தின. விளம்பரங்கள் மூலம், கொங்குன்னா இனி தான்தான்னு செந்தில் பாலாஜி நிலைநிறுத்திக் காட்டியிருக்காராம்.''”
"அங்கு நடந்த முதல்வரின் வரவேற்பிலும் லோக்கல் அரசியல் புகுந்திருந்ததே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வின் தகவல் தொழில் நுட்ப அணி இணைச்செயலாளரான டாக்டர் மகேந்திரனும் ஸ்டாலினை வரவேற்று, பிரமாண்டமான விளம்பரங்களைச் செய்திருந்தார். இதில் அமைச்சர் படம் இல்லைன்னு சிலர் செந்தில்பாலாஜியிடம் போட்டுக் கொடுத்திருக்காங்க.''”
"ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துக்கிட்டு இருக்குதே?''”
"ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள்விரோதப் போக்கைக் கண்டித்து செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையைத் தொடங்கும் அவர், காஷ்மீரில் அதை நிறைவுசெய்கிறார். 2024 நாடாளு மன்றத் தேர்தலை மையப்படுத்திதான் இந்த யாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொதுக்கூட்டத்தில் ராகுல் பேச இருக்கிறார். இந்த யாத்திரைக்காக சென்னை வரும் ராகுல், தனது தந்தையின் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறார். இந்த யாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ளணும்னு ராகுல் விரும்பறாராம். இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.''”
"அகில இந்திய காங்கிரசின் காரிய கமிட்டி 28-ந் தேதி டெல்லியில் கூடுதே?''”
"ஆமாங்க தலைவரே, காங்கிரசைப் பொறுத்தவரை காரிய கமிட்டிதான் கட்சியின் பவர்ஃபுல் அமைப்பு. தற்காலிகத் தலைவராக இருக்கும் சோனியாவே தலைவர் பொறுப்பை ஏற்கணும்னு, இந்த கமிட்டியினர் வலியுறுத்தியும், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் மறுத்து விட்டார். விரைவில் மருத்துவப் பரி சோதனைக்காக வெளிநாடு கிளம்பு கிறார் சோனியா. ராகுலும் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்து விட்ட நிலை யில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மனநிலைக்கு ஒட்டு மொத்த கட்சியும் வந்திருக்கிறது.''”
"ம்...''”
"காங்கிரஸ் கட்சியின் புதிய தேசியத் தலைவரா யாரை அமர்த்து வது என்கிற ஊசலாட்டத்தில் இருக் கிறாராம் சோனியா. இருப்பினும் ராஜ்ய சபா காங்கிரஸ் தலை வர் மல்லிகார் ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ப.சிதம்பரம் ஆகிய மூவரில் ஒருவ ரைத் தலைவராக்கி னால்,தான் நினைப் பது போல் கட்சி யைக் கொண்டு செல்லலாம் என்று அவர் நினைக்கிறாராம். இது குறித்து அசோக் கெலாட்டை அழைத்து அவர் பேசியிருக்கிறார். அவரும் தங்கள் மாநிலத்தில் நிகழும் சில பிரச்சனைகளைச் சொல்லி, தட்டிக் கழிக்கப் பார்த்தாராம். அந்த பிரச்சனைகள் குறித்து சில யோசனைகளைச் சொல்லி, புதிய தலைவர் பதவியை ஏற்கும்படி அவரிடம் சோனியா வலியுறுத்தினாராம்.''”
"கட்சித் தலைவர் பதவியை ஏற்க கெலாட் ஒத்துக்கிட்டாரா?''”
"உறுதியாக கெலாட் எந்த பதிலையும் சொல்லாமல், யோசிக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொன்னாராம். இதற்கிடையே, சோனியாவின் தலைமையை எதிர்த்து முன்பு போர்க்கொடி உயர்த்தி சர்ச்சைகளைக் கிளம்பிய 23 மூத்த தலைவர்கள் இப்போது, நேரு குடும்பத்திலிருந்து ஒருவரை நியமியுங்கள். அது யாராக இருந்தாலும் ஏற்கிறோம். அதைத் தவிர்த்து வேறு எவரை முன்னிறுத்தினாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடு வோம். தேர்தல் நடக்கட்டும். யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு ஓ.கே. என்று சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட, தேர்தல் இன்றி, போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்ய லாம். ஒத்துழையுங்கள் என்று அந்த 23 தலைவர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். ராகுலின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில், நீங்கள் கலந் துக்கணும்னு முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து தகவல் தரப்பட்ட நிலையில், ஸ்டாலின் தரப்பில் இருந்து இன்னும் பதில் தரப்படவில்லையாம். ஸ்டாலினும் டைட் செட்யூலில் இருப்பதால், அவரால் கலந்துகொள்ள முடியுமா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கு. காங்கிரஸ் சீனியர்களோ, ஸ்டாலின் அந்த நிகழ்ச்சி யில் கலந்துக்குறாரோ இல்லையோ, தமிழகம் வரும் ராகுல், எப்படியும் ஸ்டாலினை சந்தித்துவிட்டுத்தான் செல்வார்னு சொல்றாங்க.''”