"ஹலோ தலைவரே, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தை கவர்னர் ரவி உருட்டிக்கொண்டிருப்பதன் பின்னணி குறித்து அதிரவைக்கும் தகவல்கள் டெல்லியில் இருந்து வருது.''’
"ஆமாம்பா, இதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருக்கிறதாமே?''
"உண்மைதாங்க தலை வரே, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஏதாவது காரணத்தைச் சொல்லி, அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி, தமி ழக அரசைக் கலைத்து விடவேண்டும் என்று மோடி அரசு நினைக்கிற தாம். அதற்குத் துருப்புச் சீட்டாகத்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தை கவர்னர் ரவி மூலம் பூதாகர மாக்க டெல்லி திட்டமிட்ட தாம். இதற்காக டெல்லியில் கவர்னர் ரவி, மூன்று நாட்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தா ராம். இதைத் தொடர்ந்துதான், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து கவர்னர் ரவி கேள்வி எழுப்பத் தொடங்கினார் என் கிறார்கள். இதுகுறித்து தேசிய பாதுகாப்புத் துறையில் இருக்கும் தன் நெருங்கிய நண்பர் அஜித் தோவலின் ஆலோசனையையும் கவர்னர் ரவி கேட்டாராம்.’''
"சதி வலை, பலமாகத்தான் பின்னப்பட்டிருக்கே?''
"ஆமாங்க தலைவரே, அஜித் தோவல் கொடுத்த ஆலோசனை யின் பேரில்தான், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை நீக்குவதாக அடுத்தகட்ட அதிரடி யைக் காட்டினாராம் கவர்னர். அதே நேரம், இதற்கு தி.மு.க. சட்ட ரீதியிலான ரீயாக்ஷனை பலமாகக் கொடுக்க ஆரம்பித்தது. அதேபோல், இந்த நேரத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட கல வரத்தால் அங்கே சட்டம் ஒழுங்கு மோசமானதால், அந்த மாநிலத்தை விட்டுவிட்டு, தமிழகத்தின் மீது நடவடிக்கை எடுத்தால், உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பலாம் என்று டெல்லிக்கு சட்ட ஆலோசகர்கள் அறிவுரை சொல்லத் தொடங்கினார்களாம். மேலும், அகில இந்திய அளவில், தமிழக கவர்னரின் அத்துமீறலுக்கு பலமாக எதிர்ப்பு கிளம்பிய தாலும், ஆட்சிக் கலைப்பு முடிவை தற்போதைக்கு டெல்லி கைவிட்டிருக்கிறதாம். இருந்த போதும் செந்தில் பாலாஜி விவகாரத்தில், கவர்னர் மூலம் மேலும் மேலும் தி.மு.க. அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தவும் வியூகம் வகுக்கப்பட்டிருக் கிறதாம்.''
"சரிப்பா, அமைச்சர் செந்தில்பாலாஜி இப்போது எப்படி இருக்கிறார்?''
"அமைச்சர் செந்தில்பாலாஜி, காவேரி மருத்துவ மனையில் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மருத்துவர் களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவர்களைத் தவிர, குடும்பத்தினர் கூட அவரை சந்திக்க முடியாத அளவிற்கு, டைட் செக்யூரிட்டியைப் போட்டு வைத்திருக்கிறது சிறைத்துறை. செந்தில் பாலாஜியின் உடல்நலம் நன்றாகவே தேறி வரும் நிலையில், தன்னை மையமாக வைத்து நடக்கும் சட்டப் போராட்டங்களை எல்லாம் அவர், டாக்டர் கள் மூலமாக உடனுக்குடன் அறிந்துகொள் கிறாராம். அமைச்சரவையில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என கவர்னர் அனுப்பிய உத்தரவு தொடங்கி, அது உடனடியாக நிறுத்தி வைக்கப் பட்டது வரை, எல்லாத் தகவல்களையும் அவர் அப்டேட்டாக அறிந்துவைத்திருக்கிறாராம். எனினும் அறுவை சிகிச்சையின் போது, தன் குடும்பத்தினர் கூட அருகில் இல்லாத துயரம் அவரை வாட்டுகிறதாம்.''
"செந்தில் பாலாஜியைக் குறிவைத்து, பிரபல மருத்துவமனைகளிலும் ரெய்டை நடத்தி இருக்கிறார்களே?''
"செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பண மோசடி வழக்கில், தங்கள் பக்கம் இருக்கும் பலவீனத்தை உணர்ந்திருக்கும் அமலாக்கத்துறை, அவர் மீது புதிய வழக்குகளைப் போட முனைவது பற்றி, ஏற்கனவே நாம் பேசியிருக்கிறோம். தற்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிவைத்து, பிரபல மருத்துவ மனைகளான அப்பல்லோ மற்றும் சிம்ஸ் ஆகியவற்றிலும் சைலண்ட்டாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி யிருக்கிறார்கள். இந்த மருத்துவமனைகளுக்கு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் நண்பர்கள் நடத்தும் மருந்து கம்பெனிகள் மூலம், மருந்துகள் சப்ளை ஆகிறதாம். இந்த வர்த்தகப் பரிவர்த்தனைகளில் ஏதேனும் முறைகேடான விசயங்கள் சிக்குமா? என்ற தேடலில்தான் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கின்றனவாம். இதில் கிடைத்திருக்கும் ஆவணங்களை வைத்து, அமைச்சர் மீதான பிடியை இறுக்க முடியுமா? என்ற கோணத்தில் ஒன்றிய புலனாய்வு அமைப்பினர் ஆராய்ந்து வருகிறார்களாம்."
"அமைச்சரின் தம்பி அசோக்கையும் தீவிரமாகக் குறி வைத்திருக்கிறார்களே?"
"அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்த வேகத்திலேயே அவரது சகோதரர் அசோக்கையும் கைது செய்யத் துடித்தது அமலாக்கத் துறை. இதைத் தெரிந்துகொண்ட அசோக், அவர்களுக்குத் தண்ணிகாட்டிவிட்டு, அப்போதே தலைமறை வாகி விட்டார். இந்த நிலையில், அவருக்கு மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை. இதில் அவர் ஆஜரானால், நிச்சயம் அசோக் கைது செய்யப்படுவார் என்கிறார்கள். அவரைத் தங்கள் கஸ்டடியில் டெல்லியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறது அமலாக்கத்துறை. அவர் சம்மனுக்கு ஆஜராகா விட்டாலும், நீதிமன்றத்திடம் அதைக் காரணம் காட்டியே, அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கச் செய்யவும் அமலாக்கத்துறை திட்டம் வகுத்திருக்கிறதாம்.''
"லண்டன் சென்றிருந்த பா.ஜ.க. அண்ணாமலை அங்கே ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் அரங்கில் ஈழத்தமிழர்கள் பற்றி எல்லாம் பேசி இருக் கிறாரே?''
"லண்டனைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்.பி.யான மார்டின் டேயின் ஏற்பாட்டில் தான் அந்த அரங்கில் அண்ணாமலை பேசி இருக்கிறார். இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த கோல்ட்வின் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தோடு தொடர்பு வைத்துக்கொண்டு லாபம் பார்த்தவராம் அந்த எம்.பி. இந்த மோசடி விவகாரத்தின் முக்கிய ஃபோர்ஜரி குற்றவாளிகளான சுனில் குமார் மற்றும் சுதேஷ் குமார் ஆகியோரின் அரவணைப்போடுதான் இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டாராம். மற்றபடி இந்தக் கூட்டத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லையாம். அது ஒரு செட்டப் கூட்டம்தான் என்கிறார்கள்.’''
"கர்நாடக அரசு, தமிழக அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்குதே?''
"ஆமாங்க தலைவரே, காவிரியின குறுக்கே மேகதாது பகுதியில், அணை யைக் கட்டுவதற்கான அனுமதி கேட்டு, கடந்த வாரம் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அதில் தேவையில்லாமல் தமிழக அரசை மிகக் கடுமையாகக் கண்டித்து எழுதியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பதிலடி வராத நிலையில், இதை, அ.தி.மு.க. அரசியலாக்கும் முயற்சியில் இறங்கியது. இது தொடர்பாக, கர்நாடக அரசையும், தமிழக முதல்வரையும் ஒரு சேரக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி, கர்நாடகாவில் தங்கள் கூட்டணி ஆட்சி நடப்பதாலும், அங்கு நடந்துவரும் தங்கள் குடும்பத் தொழில்கள் பாதிக்கப்படும் என்பதாலும் தி.மு.க. தலைமை அமைதி காப்பதாக, அதில் குற்றம் சாட்டி இருக்கிறார். அறிவாலயத் தரப்போ, இந்த மேக தாது விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு சில அறிவுறுத்தல் களைச் செய்யவேண்டும் என்று ராகுல்காந்திக்கு தகவல் அனுப்பி இருக்கிறோம் என்கிறது.''
"ஏடாகூட அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் தரப்பட்டிருக்கிறதே?''
"சர்ச்சைக்குரிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இளம்பகவத்தை, கூடுதலாக மகளிர் உதவித் திட்டத்திற்கும், நந்தகுமாரை பொதுத்துறைக்கும், கார்த்தி கேயனை நகராட்சி நிர் வாகத்துறைக்கும் தற்போது நியமித்திருக்கிறார்கள். இவர்களில் கார்த்தி கேயன் மீது கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டை தி.மு.க. வைத்தது. அதேபோல் நந்தகுமார், கல்வித்துறையில் இருந்து கொண்டு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்ற புகாரில் சிக்கினார். அதேபோல் இளம்பகவத்தும், தனக்குத் தெரிந்த மீடியாக்களுக்கு இஷ்டம்போல் செய்தி களைக் கொடுத்த சர்ச் சையில் சிக்கியவர்தான். இப்படிப்பட்டவர்களை, இப்போதும் செல்வாக்காக இருக்கும் உதயமான அதிகாரியின் ஆலோசனை யின் படிதான் அரசு நிய மித்திருப்பதாக, கோட்டை முழுக்க முணுமுணுப்பு கேட்கிறது.’''
"எடப்பாடி புதிதாக ஃபோர்ஸ் அர்பானியா ரக காரை வாங்கி இருக்கிறாரே?''
"ஆமாங்க தலைவரே, தேர்தலை மனதில் வைத்து, புதிதாக ஃபோர்ஸ் அர்பானியா காரை எடப்பாடி வாங்கி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் இந்த காரைத் தான் பயன்படுத்தப் போகிறாராம். அதற்கு வசதியாக, அந்தக் காரின் முன் பக்கம், அவர் அமர்வதற்கான இருக்கை சற்று உயரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், காரின் இருபுறமும், பாதுகாப்புப் படையினர் நின்று கொண்டு வருவதற்கான வசதிகளும் இதில் ஏற்பட்டுத்தப்பட்டு இருக்கின்றன. இதுவரை அவரது பயணங்களின் போது, காரினுள்ளே அவர் உட்கார்ந்திருப்பது வெளியே அவ்வளவாகத் தெரியவில்லை என்ற ஆதங்கம் அவர் தரப்பிடம் இருந்ததாம். அதை மனதில் கொண்டுதான் எடப்பாடி இந்த புதிய காரை வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.''
"மின்சாரத்துறையில் அதிகாரப்பகிர்வில், மின்வாரிய அலுவலர்கள் மத்தியில் முணு முணுப்பு இருக்குதாமே...?''
"தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்ததுமே மின்சாரத்துறையிலும் சில மாற்றங்களை பண்ணியிருக்காங்க. குறிப்பா, மின்சார வாரி யத்துக்கான பொருட்கள் பர்ச்சேஸ் அதிகாரம் முன்பு, மேற்பார்வை பொறியாளர்களிடம் இருந்துச்சாம். இப்போ தலைமைப் பொறியாளர் களுக்கு இந்த அதிகாரத் தை மாற்றிட்டாங்களாம். அதனால இப்போ தலை மைப் பொறியாளர்கள் ஏகத்துக்கும் சம்பாதிக் கிறாங்களாம். அதே போல் மின் உற்பத்தித் திட்டங்களில் ஒப்பந்த தாரர்களாக இருக்கும் நிறுவனங்களில், கமிஷன் பெர்சன்டேஜ் அதிகமா தர்றவங்களுக்கு பில் சென்டில்மென்ட் வேகமா நடக்குதாம். மத்தவங்களை அலைய விடுறாங்களாம். மின் வாரிய அலுவலர் களோட பணி மாறுதல், பணி உயர்வுக்காக வசூலிக்கிற அமவுன்டும் அதிகமாக்கிட்டாங் களாம்! ஏற்கெனவே வெயில் புழுக்கத்தோட, இந்த மனப்புழுக்கமும் மின்வாரிய அலுவலர் களுக்கு சேர்ந்துடுச்சாம்.''
"நானும் ஒரு தகவலைச் சொல்றேன். கடந்த இதழில் அதிரடி காட்டிய முதல்வர் என்ற தலைப்பிலான கட்டுரையில், அமைச்சர் துரைமுருகனின் பி.ஏ. பெருமாள் ராஜ் என்று குறிப்பிட்டி ருந்தோம். ஆனால் அவர் பி.ஏ. இல்லையாம். அமைச்சரின் பெயரைச் சொல்லி பல வேலைகள் செய்பவராம். மேலும் அமைச்சர் துரைமுருகன் ஹங் கேரி சென்றிருந்தபோது முதல்வர் ஸ்டா லின், அவர் பெயரில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டதாக, வந்த செய்தி தவறென்றும் அமைச்சர் தரப்பில் மறுப்பு தெரிவித்திருக்கிறாங்க.''
_______
இறுதிச் சுற்று!
தமிழக அரசின் "முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' குறித்து திங்கள் கிழமை ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே 5 முறை இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துள்ள நிலையில், 3ந் தேதி 6வது முறையாக இந்த ஆலோசனை நடந்தது. முக்கியத்துறைகள் மூலம் தி.மு.க. அரசு அறிவித்துள்ள திட்டங்களின் தற்போ தைய நிலை என்ன? நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளதா? செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் நடைமுறைக்கு எப்போது வரும்? என்பது உள்பட பல விசயங்களை ஆராய்ந்தார் ஸ்டாலின். இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா மற்றும் துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
-இளையர்