"கடந்த இரண்டு தேர்தல்களைப்போல், நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த முறையும் வாக்களிக்கப் போவதில்லை; அக்கட்சியை வீழ்த்துவதற்கு ஆளுநர்களே போதும்,'' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-ன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ss

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞ ரணி இரண்டாவது மாநில மாநாடு, ஜனவரி 21-ல் நடந்தது. இளைஞரணி சார்பில் 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு இது. தி.மு.க.வின் நேரடி அரசியல் எதிரியான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மண்ணில் நடப்பதாலும், பா.ஜ.க.வுடனான உச்சகட்ட மோத லுக்கு இடையில் நடைபெறுகிறது என்பதாலும் இந்த மாநாட்டிற்கு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

மாநாடு ஸ்பெஷ-ஸ்டான அமைச்சர் கே.என்.நேருவிடம்தான் இந்த மாநாட்டிற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஆறு மாதத் திற்கு மேலாக அமைச்சர் தலைமையில் சேலம் மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி குழுவினர் சுழன்றடித்து மாநாட்டுப் பணிகளைச் செய்துவந்தனர். மாநாடு நடந்த இடம், சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலிருக்கிறது. இதற்காக 100 ஏக்கர் நிலத்தை வளைத்துப்பிடித்தனர். இதுவரை இல்லாத வகையில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தல் போடப்பட்டது. இது, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

Advertisment

மாநாட்டு அரங்கத்தின் நுழைவுவாயில், கோட்டை கொத்தளம்போல் செட் போடப் பட்டிருந்தது. பெரியார், அண்ணா, கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்களை 3டி தொழில்நுட்பத்தில் வடிவமைத்து கவனம் ஈர்த்தனர். இந்த உருவப்படங்களின் கீழே மாநாட்டு நாயகன் உதயநிதி ஸ்டாலின் படம் மட்டும் வண்ணத்தில், கையில் தி.மு.க. கொடியை ஏந்திச்செல்வதுபோல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, கம்பம் செல்வேந்திரன், சுப.வீ., திண்டுக்கல் லியோனி, கோவி.லெனின், வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ட திராவிட இயக்க சிந்தனையாளர்கள் 22 தலைப்புகளில் பேசினர்.

salem

Advertisment

காலையில் உதயநிதி, மாநாட்டுத் தீர்மானங் களை வாசித்தார். மொத்தம் 25 தீர்மானங்கள். தமிழக முதல்வருக்கு நன்றி கூறியும், பா.ஜ.க. அரசை வெளுத்துவாங்கியும் தீர்மானங்கள் இருந்தன.

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மாநாட்டு மேடைக்கு மாலை 4.33 மணிக்கு வந்துசேர்ந்தார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் வெள்ளிச் செங்கோல் வழங்கினார். அமைச்சர் கே.என்.நேரு வெள்ளி வாளும், கேடயமும் வழங்கினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இன்று ராமேஸ்வரத்தில் ஒருவர் இருக்கிறார். 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமரைப் பார்க்க போய்க்கிட்டு இருக்கிறார். ஆனால் இங்கு நமது மாநில உரிமைகளைக் காக்க 22 தலைப்புகளில் நமது பேச்சாளர்கள் ஆற்றிய உரை, நம்முடைய கிழவன் ராமசாமியை நோக்கி அமைந்துள்ளது'' என எடுத்த எடுப்பிலேயே பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாகக் கிண்டலடித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "ஒட்டு மொத்த இந்தியாவுமே இந்த மாநாட்டைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகால பாசிச ஆட்சிக்கு முடிவுகட்டும் படை இங்கிருந்து தான் புறப்படுகிறது. உங்களைப் பார்க்கும் போது எனக்கு உடல் சிலிர்க்கிறது. இந்த இரண்டாவது மாநில மாநாட்டு நாளை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.

கலைஞர், நமது தலைவரிடம் இளைஞரணியை ஒப்படைத்தார். அதை அவர் மாபெரும் அமைப்பாக்கி, என்னிடம் ஒப்படைத்தார். எத்தனையோ அணி இருந்தாலும் முதன்மை யான அணி இளைஞர் அணி என்பதால் ஆரம் பத்தில் எனக்கு பதற்றம் இருந்தது.

உழைப்பின் அடிப் படையில் இளைஞ ரணிக்கு நிர்வாகிகளை நியமனம் செய்தோம். இந்த மாநாட்டை நடத்த என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தபிறகு அனைத்து மாவட்டத்திற்கும் சென்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினோம்.

salem

மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கின்ற நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி 50 நாளில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். ஆனால் 85 லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்றுள்ளோம். அடுத்து, டெல்லிக்குச் சென்று நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தலைவர் உத்தரவிட்டால் அதற்கும் தயாராக இருக்கிறோம்.

மாநில உரிமைகளைப் பறிப்பதையே ஒன்றிய பா.ஜ.க. அரசு முழுநேர வேலையாகச் செய்துவரு கிறது. அடிமை அ.தி.மு.க. மற்றும் தவழ்ந்து தவழ்ந்து முதல்வரான பழனிசாமியின் துணை யோடுதான் மாநில உரிமைகளைப் பறித்தது. வெளியுறவுத்துறை, ராணுவம் ஆகிய துறைகளை மட்டும் ஒன்றிய அரசு வைத்துக்கொண்டால் போதும் என்பதுதான் நமது கொள்கை.

ஆனால் கல்வி, சுகாதாரம் என எல்லா துறைகளிலும் சட்டத்திற்குப் புறம்பாக மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துவிட் டது. நம்மிடம் அதிகமாக வரி வருவாயைப் பெற்றுக்கொண்டு, அதை முறையாக திருப்பித் தருவதில்லை. கடந்த 9 ஆண்டுகளில் தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசுக்கு வரி வருவாயாகச் செலுத்தி உள்ளது. அதிலிருந்து வெறும் 2 லட்சம் கோடி மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளனர். இதனால் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைச் செய்யமுடியாத நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது.

அண்மையில், மழை வெள்ளத்தால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. அப்போது நமது முதல்வர் இழப்பீடு கேட்டு கோரிக்கை வைத்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாங்கள் என்ன ஏ.டி.எம். மெஷினா?' எனக்கேட்டார். அதற்குதான் நான், "நாங்கள் உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்?' என்று கேட்டேன்.

கல்வி, மொழி, நிதி, வேலைவாய்ப்பு, அதிகாரம், பண்பாட்டுத் தளத்தில் ஒன்றிய அரசு நம் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. புதிய கல்விக்கொள்கையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கே நுழைவுத்தேர்வு கொண்டுவருகின்றனர்.

salem

நீட் தேர்வால் அனிதா முதல் ஜெகதீஷ் வரை 11 பேர் தற்கொலை செய்துள்ளனர். மருத்துவம் மட்டுமின்றி எல்லா பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வைக் கொண்டுவர உள்ளனர். மொழி, நம்முடைய உரிமை மட்டுமல்ல. தமிழ் மொழி நம்முடைய உயிர். தமிழை அழிக்க நினைத்தால், அதைத் தடுக்க நாங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். இன்னும் 2000 வருஷம் ஆனாலும் உங்களால் தமிழர்களின் அடையாளத்தை அழிக்கமுடியாது. தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்துபோவீர்கள்.

ஈ.டி., சி.பி.ஐ., ஐ.டி. ரெய்டு மூலம் இந்த இயக்கத்தைப் பயமுறுத்த நினைக்கின்றனர். நாங்கள் ஈடிக்கும் பயப்படமாட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க.விலுள்ள சாதாரண குழந்தைகூட பயப்படாது.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாய் அமைந்துள்ளார் நம்முடைய தலைவர். தொண்டர்களை தி.மு.க. என்றைக்கும் கைவிட்டது கிடையாது. அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் கட்சித் தலைவரே களத்தில் இறங்கிச் செயல்படுவார்.

திராவிட இயக்கம் ஏற்கனவே நூற்றாண்டைக் கடந்துள்ளது. இன்னும் ஒரு நூறாண்டாவது நாம் காக்கவேண்டும். இந்த இயக்கத்தை நாம் பாதுகாத்தால்தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி காப்பாற்றப் படும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வேண்டும். இந்தியா கூட்டணிக்கு வரும் தேர்தலிலும் நீங்கள் வெற்றியை அளிக்கவேண்டும்.

நாடெங்கும் காவிச்சாயம் பூசும் பாசிஸ்டுகளை வீழ்த்தவேண்டும் என்ற கனவைக் காண்பதாக நம்முடைய தலைவர் ஒருமுறை சொன்னார். உங்கள் கனவை நனவாக்கித் தருவதுதான் எங்களுடைய அடுத்த இலக்கு.

நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுங்க. கண்டிப்பாக இளைஞரணியினர் உழைத்து வெற்றியை சமர்ப்பிப்பார்கள்''’என்றார் உதயநிதி ஸ்டாலின்.

salem

நிறைவாகப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எழுச்சிமிக்க இந்த மாநாட்டைப் பார்க்கையில் எனக்கு 20 வயசு குறைந்தது போன்ற தெம்பு வருகிறது. இந்த உணர்வை, எழுச்சியை ஏற்படுத்தித் தந்திருக்கும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை வாழ்த்துகிறேன். கட்சிப் பணிகளிலும், மக்களுக்கான பணிகளிலும் எனக்குத் துணையாக இருக்கிறார் உதயநிதி.

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை அளிக்கும்விதமாக சேலம் மாநாடு அமைந்துள்ளது. இளைஞரணி என் தாய் வீடு. என்னை வளர்த்த, உருவாக்கிய இடம். தொண்டர்களோடு தொண்டனாக பணியாற்றுவதற்கும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று மக்கள் தொண்டாற்றுவதற்கும் அடித்தளமிட்டது இந்த இளைஞரணிதான். அதனால் எனக்கு எப்போதும் இந்த அணி மீது பாசம் உண்டு.

கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சியது இளைஞரணி. எப்போதும் நான் சுறுசுறுப் பாக இயங்க என்னைச் சுற்றிலும் இருந்த இளைஞர்கள்தான் காரணம். இந்த அணியிலிருந்துதான் பலர் எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர்களாக உயர்ந்தனர். நாளை அப்படியான பொறுப்புக்கு நீங்களும் வரவேண்டும். உழைப்பால் உங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்தை உணர்ந்து தடுப்பதற்காகத்தான் மாநில உரிமை மீட்பு மாநாடாக இந்த மாநாட்டை நடத்துகிறோம். தமிழ்ப் பண்பாட்டையும், மொழியையும், மாநில உரிமைகளையும் அழித்து, அதன்மூலம் தமிழினத்தை அழித்து, நம்மை அடையாள மற்றவராக ஆக்க பாசிச பா.ஜ.க. திட்ட மிட்டுள்ளது.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் கலைஞரின் முழக்கம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபிறகு அந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாறப்போகிறது.

இன்று பிரதமராக இருக்கும் மோடி, ஒருகாலத்தில் குஜராத் முதல்வராக இருந்தார். இப்போது மொத்தமாக மாநில உரிமைகளை ஒழித்துக்கட்ட முயற்சி செய்துவருகிறார். எந்த சட்டத்தைக் கொண்டுவந்தாலும் மாநில அரசிடம் ஆலோசனை செய்வதில்லை. புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. இப்படி மாநில அரசிடமிருந்து கல்வி, நிதி அதிகாரத்தைப் பறித்துவிட்டனர். ஒன்றிய அரசு, மாநில அரசுகளை ஏ.டி.எம். மெஷினாக மாற்றிவிட்டனர்.

இவர்கள் திருக்குறளைச் சொன்னால் போதும்; பொங்கல் விழா கொண்டாடினால் போதும்; அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழர்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று கருதுகின்றனர்.

இது பெரியார் மண்; பேரறிஞர் அண்ணா வின் மண்; கலைஞரின் மண். நரேந்திரமோடி இரண்டு முறை பிரதமராகியிருக்கிறார். இரண்டு தேர்தலிலும் அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. இந்தமுறையும் நிச்சயம் வாக்களிக்கப் போவதில்லை.

கட்சியை உடைப்பது; எம்.எல்.ஏ.க்களை இழுப்பது; ஆளுநர் மூலமாக குறுக்கு வழியில் ஆட்சி நடத்துவது ஆகிய வேலைகளை பா.ஜ.க. செய்துவருகிறது. பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஆளுநர்களே போதும். அவர்களே அந்த காரியத்தைச் சிறப்பாக செய்துமுடித்துவிடுவார்கள்.

நாங்கள் உருவாக்கி இருக்கின்ற இந்தியா கூட்டணி அமைக்கும் ஆட்சி, ஒற்றைக் கட்சி ஆட்சியாக இருக்காது. சர்வாதிகார ஆட்சி யாக இருக்காது. மாநிலங்களை மதிக்கக்கூடிய ஆட்சியாகவும், கூட்டாட்சியாகவும் இருக்கும்.

பல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி முகவர்கள், லட்சக்கணக்கான நிர்வாகிகள் இருக்கின்ற னர். நீங்கள் உழைக்கின்ற உழைப்பில்தான், இந்தியாவின் அடுத்த ஐம்பது ஆண்டுகாலம் இருக்கிறது.

இந்தியா கூட்டணியை வெல்லவைப்பதுதான், சேலம் மண்ணிலிருந்து நாம் சொல்லும் செய்தி.

என் உயிரினும் மேலான இளைஞரணி தம்பிமார்களே... உதயநிதி மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே என்னுடைய மகன்தான். (இப்படி மு.க. ஸ்டாலின் சொன்னபோது, தொண்டர்களிடம் இருந்து ஆரவாரத்துடன் கிளம்பிய விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது).

இந்தியா கூட்டணி வெல் லட்டும்; அதை காலம் சொல்லட்டும். நாளை நமதே; நாற்பதும் நமதே என்று சேலத்தில் சூளுரைப்போம்,'' என்றார் மு.க.ஸ்டாலின்.

சேலம் இளைஞரணி மாநாடு, தி.மு.க. தொண்டர்களை தேர்தலை நோக்கி உசுப்பி விட்டிருக்கிறது.