"திரும்பத் திரும்ப பேசற நீ' என்று வடிவேலு காமெடியில் வருவதுபோல், திரும்பத் திரும்ப தமிழ்நாடு அரசோடு மோதுவதையே தனது அஜென்டாவாக வைத்துச் செயல் பட்டுவருகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தற்போது கர்நாடகத் தேர்தலில் கவனம் செலுத்திவருவதால், தற்காலிகமாக தலைவர் பொறுப்பை ஆளுநர் ஏற்றுள்ளாரோ என்பதற்கேற்ப அவரது பேச்சுக் கள் அமைந்துள் ளன. இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த ஆளுநர் ரவி, "ஒரே நாடு ஒரே பாரதம் கொள் கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் அரசு என்று எதுவும் கிடையாது. திராவிட மாடல் என்பது அரசியல் கோஷம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கை எப்போதோ காலாவதியாகிவிட்டது. அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க நினைக்கின்ற னர்''’என்று தெரிவித்து தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வரும் போதே சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் ஆட்சி நடத்தப்படும் என்று அறிவித்த
"திரும்பத் திரும்ப பேசற நீ' என்று வடிவேலு காமெடியில் வருவதுபோல், திரும்பத் திரும்ப தமிழ்நாடு அரசோடு மோதுவதையே தனது அஜென்டாவாக வைத்துச் செயல் பட்டுவருகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தற்போது கர்நாடகத் தேர்தலில் கவனம் செலுத்திவருவதால், தற்காலிகமாக தலைவர் பொறுப்பை ஆளுநர் ஏற்றுள்ளாரோ என்பதற்கேற்ப அவரது பேச்சுக் கள் அமைந்துள் ளன. இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த ஆளுநர் ரவி, "ஒரே நாடு ஒரே பாரதம் கொள் கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் அரசு என்று எதுவும் கிடையாது. திராவிட மாடல் என்பது அரசியல் கோஷம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கை எப்போதோ காலாவதியாகிவிட்டது. அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க நினைக்கின்ற னர்''’என்று தெரிவித்து தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வரும் போதே சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் ஆட்சி நடத்தப்படும் என்று அறிவித்தார் முதல்வர். சமூக நீதி என்பது, பிறப்பால் மக்களைப் பிளவுபடுத்தித் தாழ்த்தக்கூடிய சனாதனத்துக்கு எதிரானது. தீவிர சனாதனப் பற்றாளரான ஆளுநரின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், "மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புணர்வை மீறி ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார். பதவிப்பிரமாணத்தை மீறி நிர்வாக விவகாரங்களையும், அடிப்படையற்ற கருத்துக் களையும் பொதுவெளியில் பேசி வருகிறார். இந்த அடிப்படையற்ற கருத்துகளுக்கு மறுப்பு தெரி விக்காவிட்டால் அது சரியான கருத்துகளாக புரிந்து கொள்ளப் படும். இதனால் தான் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி வரவில்லை. கமலா லயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டி யவர், ராஜ்பவனில் அமர்ந்து அரசியல் செய்கிறார். ஆன்லைன் ரம்மி தடை மசோதவை பல மாதங்களாக கிடப்பில் போட்டார். இதன்மூலம் அவர் எத்தகைய மனிதர் என்பது தெரியவரும். ஆரியத்துக்கு ஆலாபனை பாடும் ஆளுநர், திராவிட மாடலுக்கு தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளை திரிக்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆளுநர் பணியைத் தவிர அனைத்து பணிகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்கிறார்.
சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார். தனக்குத் தோன்றும் புதிய காரணங்களை, புனைவுக் காரணங் களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்கள் சொல்கிறார். ஆளுநரிடம் இன்னும் 17 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. ஆளுநர் மாளிகை நிதி தொடர்பாக நிதி யமைச்சர் எழுப்பிய கேள்விக்கு இது வரை உரிய விளக்கம் அளிக்கப் படவில்லை''" என்று ஆளுநரின் சட்டத்துக்குப் புறம்பான செயல் பாட்டைக் கடுமையாக விமர் சித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. "ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் பேசுவது தவறான ஒன்று. அவர்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டவர்களா? இல்லை. காலாவதியானது சனாதனம் தான். இனிமேல் காலாவதியாகப் போவது ஆளுநர் தான். திராவிடம் அகில இந்திய அளவில் பரவத் தொடங்கியுள்ளது. திராவிடம் என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஏற்ற கொள்கை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திராவிட மாடல் செத்துப்போன தத்துவம். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது. பரிணாமக் கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று சொல்லும் ஆளுநர் அவர்களே, களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம். அமையப்போகும் கலைஞர் நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்களே உண்டாம். வருத்தப்படும் ஆளுநரே, உங்கள் உள்ளார்ந்த வேதனை புரிகிறது. இதுதான் தமிழ்நாட்டின் பெருமை, முத்தமிழ் கண்ட மதுரைக்கு பெருமை. இந்தித் திணிப்புக்கு எதிரான அரசியல் களமாகவும் இருப்பது கலைஞர் நூலகத்தின் கூடுதல் பெருமை'' என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநரின் விஷமக் கருத்துக் களைக் கண்டித்துள்ள திராவிடர் தலைவர் கி.வீரமணி, ஆளுநருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, திராவிட மாடலையும், குஜராத் மாடலையும் ஒப்பிட்டு, திராவிட மாடலின் பெருமையை எடுத் துரைத்தார். அதோடு, கடந்த 50 ஆண்டுகளாக திராவிடம்தான் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது எனக் குறிப்பிட்டவர், திராவிட மாட லின் தயவில் லாவிட்டால், தேசியக் கட்சிகளால் ஜாமீன் தொகை யையும் பெற முடியாது, நோட்டாவையும் முந்த முடியாதென்று எதார்த்தத்தை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், "மக்களை மதத்தால், சாதியால், ஆணவத்தால் பிரித்துப் பார்க்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் தெரியாது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல். இந்த ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல, சமூக நீதி. அறிவார்ந்த தமிழக மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன வென்று தெரியும்'' என்று ஆளுநரின் பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இனியாவது திருந்துவாரா ஆளுநர்?