வரம்புமீறிய கவர்னர்! ஆவேசமான முதல்வர்!

ss

கோடை வெயிலின் தகிப்பு அதிகரித்துவரும் சூழலில், தமிழ்நாடு அரசியலின் வெப்பத்தையும் அதிகப்படுத்தி யுள்ளது ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடியான அரசியல் பேச்சு! ஒரு மாநிலத்தின் கவர்னராக இருப்பவர், எந்தெந்த தகவல்களைப் பொதுவெளியில் பேசலாம், பேசக்கூடாதென்ற வரையறை அரசியலமைப்புச்சட்டத்தில் உள்ளது. ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தனது அதிகார வரம்புகளை மீறி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் குறைத்துப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது!

governorstalin

ஆளுநர் மாளிகையில், கடந்த வியாழனன்று இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் "எண்ணித் துணிக' என்று தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பேச்சில், "இந்தியாவின் மின்னணு உற் பத்திக்கு தாமிரம் முக்கிய தேவை என்பதால் அதனை முடக்குவதற் காக ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர்'' என்று பேசியிருந்தார். ஸ்டெர்லைட் ஆலை மாசு காரணமாக, சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே மூடப்பட்டது. இந்த உண்மைகளை மறைக்கும்படியாகவும், ஸ்டெர்லைட் போராட் டத்தையும், உயிர்ப்பலியையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் ஆர்.என்.ரவி பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு, வெளிநாட்டி

கோடை வெயிலின் தகிப்பு அதிகரித்துவரும் சூழலில், தமிழ்நாடு அரசியலின் வெப்பத்தையும் அதிகப்படுத்தி யுள்ளது ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடியான அரசியல் பேச்சு! ஒரு மாநிலத்தின் கவர்னராக இருப்பவர், எந்தெந்த தகவல்களைப் பொதுவெளியில் பேசலாம், பேசக்கூடாதென்ற வரையறை அரசியலமைப்புச்சட்டத்தில் உள்ளது. ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தனது அதிகார வரம்புகளை மீறி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் குறைத்துப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது!

governorstalin

ஆளுநர் மாளிகையில், கடந்த வியாழனன்று இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் "எண்ணித் துணிக' என்று தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பேச்சில், "இந்தியாவின் மின்னணு உற் பத்திக்கு தாமிரம் முக்கிய தேவை என்பதால் அதனை முடக்குவதற் காக ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர்'' என்று பேசியிருந்தார். ஸ்டெர்லைட் ஆலை மாசு காரணமாக, சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே மூடப்பட்டது. இந்த உண்மைகளை மறைக்கும்படியாகவும், ஸ்டெர்லைட் போராட் டத்தையும், உயிர்ப்பலியையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் ஆர்.என்.ரவி பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு, வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்றும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேருபவர்களில் 90% பேர் பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மூலமாகவே செல்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை அந்நிய நிதி நம் நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவை மத மாற்றத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன என்றெல்லாம் அவர் பேசியது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்துத்வா குரலாகவே பார்க்கப்படுகிறது.

"சட்டமன்றத்தில் ஒரு கட்சிக்கு முழு மெஜாரிட்டி இருக்கலாம். அதை வைத்து எந்த மசோதவையும் நிறைவேற்றலாம். ஆனால் அதை சட்டம் ஆக்குவதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். சரியான மசோதா இல்லை என்றால் அந்த மசோதாவை நிறுத்தி வைக்கலாம். நிறுத்தி வைப்பது என்றாலே கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத்தான் அர்த்தம்'' என்று பேசியிருந்தார். ஆக, ஆளுநர் மாளிகையில் முடக்கிவைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் அனைத்தையும் அவர் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்திருப்பது தமிழ்நாடு சட்டமன்றத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களையும் இழிவுபடுத்துவதாகவே உள்ளது.

இப்படியாக, தமிழ்நாடு ஆளுநரின் வரம்புமீறிய பேச்சுக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான எதிர்வினையாற்றி யுள்ளார். ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விரிவான விளக் கங்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துக்களைப்பேசி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவந்த தமிழ்நாடு கவர்னர், தற்போது சட்டமன்ற நடைமுறைகள் குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகை யிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரி வித்துக்கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளிலிருந்து தவறியும், தனது கடமைகளிலிருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாக வைத்திருக்கிறார். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதில்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

f

தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பிவைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார். உதாரணமாக, எளிய மனிதர்களின் வாழ்க்கை யைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிக மிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது. முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற கேள்வி யைக் கேட்டார். பின்னர், "இந்தச் சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை' என்றார். "மாநில அரசுக்கே உரிமை உண்டு' என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்ன பிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதை ஏற்கவில்லை. ஏனெனில், ஏற்க மனமில்லை.

இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது. 17-10-2022 அன்று ஆளுநர் அவர்களாலேயே பரிந் துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக் கப்பட்டு, பேரவைத் தலைவரால் பண மசோதா என்று 20-10-2022 அன்று சான் றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை, அவர் 6-3-2023 அன்று திருப்பி அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தே செய்திருக்கிறாரா என்பதை பொதுமக்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன். இந்த நிலையில், நீண்ட நாள்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட தாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதை நிறுத்தி வைப்பு’ என்கிறோம்' என்று பேசியிருக்கிறார் ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு அவர்கள் மத்தியில் இப்படிப் பேசியிருக்கிறார். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்திருக்கும் ஒருவர், நிர்வாகரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறை களை மீறிய செயல் ஆகும். மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர். அதை மறந்துவிட்டு, "தி கிரேட் டிக்டேட்டராக' தன்னை ஆளுநர் நினைத்துக்கொள்ள வேண்டாம்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதா தவிர, பிற வகை மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்ப லாம். சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதை ஆளுநர் நிராகரிக்க முடியாது. எனவே, ஆளுநர் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவைத்த பிறகும் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதை நமது மாநில நிர்வாகத்தினை முடக்கும் செய லாகவே எண்ண வேண்டியிருக்கிறது. அதையும் தாண்டி, அதைச் சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதோடு, நியாயப் படுத்த முயல்வது என்பது மிக மிக மோசமான முன்னுதாரணம். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்துகொள்வது ஆகும்'' என்று வறுத்தெடுத்துள்ளார்!

இந்நிலையில், மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வருகிற 12ஆம் தேதி புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று தெரிவித்துள்ள னர். மாநில ஆளுநருக்கெதிராக இம்முறை தி.மு.க. நேரடியாகப் போராட்டத்தில் இறங்கியிருப்பதால் இந்திய அளவில் இப்பிரச்சனை கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு கவர்னரின் வரம்புமீறிய பேச்சுக்கு மூக்கணாங்கயிறு கட்டப்படுமா என்பது போகப்போகத்தெரியும்!

nkn120423
இதையும் படியுங்கள்
Subscribe