"ஹலோ தலைவரே, ராஜ்பவன் நடவடிக்கைகளில் சுணக்கம் தெரிகிறது...''”

"ஆமாம்பா, கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம்தான் முடிஞ்சிடிச்சே?''”

ravi

"உண்மைதாங்க தலைவரே, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலையுடன் முடிந்து விட்டது. ஜனாதிபதி சொல்லும்வரை ஒருவர் கவர்னராக நீடிக்கலாம் என்று சட்டம் கொடுத்திருக்கும் சலுகைப்படி ரவி, இன்னும் ராஜ்பவனில் அமர்ந்திருக்கிறார். ஏற்கனவே தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா, இப்படி பதவிக்காலம் முடிந்த பிறகும் கொஞ்ச காலம், சட்டத்தின் சலுகைப்படி பதவியில் நீடித்தார் என்கிறார்கள். தனது கவர்னர் பதவி முடிந்ததால்தான், அண்மை நாட்களாக கவர்னர் ரொம்பவும் அடக்கமாக நடந்துகொள்கிறார் என்கிறது ராஜ்பவன் தரப்பே.''”

Advertisment

"சசிகலாவுடம் பா.ஜ.க. ஒரு நீண்டகால டீலிங்கை நடத்திவருகிறது என்கிறார்களே?''”

"சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் வெளியே வந்தபோதே, அவருக்கு இருக்கும் மெஹா சொத்துக்களில் 40 சதத்தைக் கேட்டு பா.ஜ.க. டீலிங் நடத்தியதாம். அந்த சொத்துக்கு ஈடான தொகையை, கர்நாடகாவில் இருக்கும் ஒரு மடத்திடம் அவர் ஒப்படைக்கவேண்டும் என்றும் சொல்லப் பட்டதாம். அந்த டீலிங் முடிவுக்கு வராமல் இன்னும் இழுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்போது தனது சொத்தில் 20 சதத்தை மட்டும் பா.ஜ.க.வுக்கு தர சசிகலா முன்வந்திருக்கிறாராம். இந்த டீலிங்கின் அடிப்படையில்தான், பா.ஜ.க. தன்னை அ.தி.மு.க.வில் சேர்த்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்த்தும் என்றும் அவர் அழுத்தமாக நம்புகிறாராம். ஆனால் பா.ஜ.க.வோ 20 சதமெல்லாம் வேலைக்கு ஆகாது என்கிறதாம். இதற்கிடையில் அ.தி.மு.க. மா.செ.க்கள் பலரையும், தன் பக்கம் வளைத்து, எடப்பாடிக்கு தலைவலியை ஏற்படுத்திவருகிறாராம் மாஜி மந்திரியான வேலுமணி.”

"சபரீசனின் பென் நிறுவனத்துக்கு சீக்ரெட் விசிட் அடித்திருக்கிறாரே ஸ்டாலின்?''”

Advertisment

rs

"ஆமாங்க தலைவரே, கடந்த 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு, தேனாம்பேட்டையில் இருக்கும் தனது மருமகன் சபரீசன் நடத்தும் பென் (பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட் வொர்க்) நிறுவன அலுவலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் திடீரெனச் சென்றார். வழக்கமாக அவருடன் செல்லும் அமைச்சர்களோ, கட்சி நிர்வாகிகளோ இந்த விசிட்டின்போது இல்லை. சபரீசனும் முதல்வரின் பாதுகாப்புப் படையினரும் மட்டுமே இருந்தனர். முதல்வரின் வருகை குறித்து முன்னதாகவே அறிவிக்காததால், பென் ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடினர். அங்கு அனைவரையும் சந்தித்து உற்சாகமூட்டிய ஸ்டாலின், கான்பரன்ஸ் ஹாலில் அவர்கள் மத்தியில் மைக் பிடித்துப் பேசினார். "பென் அமைப்பின ரான உங்களின் செயல் பாட்டினைத் தொ டர்ந்து கவனித்து மகிழ்ந்துவருகிறேன். தேர்தல் பணிகள் என்று மட்டும் இல் லாது, முற்போக்குச் சிந்தனைகளான திராவிடச் சிந்தனை களை முன்னெடுத்துச் செல்வதிலும் நீங்கள் முனைந்து நிற்பது பாராட்டுக்குரியது. உங்களுக்கு நன்றி சொல்லத்தான் நான் இங்கே வந்தேன். உங்கள் பணிகள் இப்போது போல, எப்போதும் சிறக்கவேண்டும்''’என்று வாழ்த்தினார். ஏறத்தாழ ஒருமணி நேரம் அங்கிருந்த ஸ்டாலின், அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருடனும் மகிழ் வோடு புகைப்படம் எடுத்துக்கொண்டாராம்.''”

"சரிப்பா, முதல்வரை மோசமாக விமர்சித்த பா.ஜ.க. நிர்வாகியை காவல்துறையில் இருக்கும் சிலரே காப்பாற்ற முயன்றிருக் கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த ஒன்றாம் தேதி முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தை பா.ஜ.க. நடத்தியது. இதில் பேசிய, வட சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கபிலன், முதல்வரை மிகக்கேவலமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். இது அப்பகுதி பொதுமக்களை அதிர வைத்திருக்கிறது. இருந்தும், சம்பவம் நடந்து 3 நாட்கள்வரை லோக்கல் போலீசார் இதைக் கண்டுகொள்ள வில்லை. இந்த நிலையில், முதல்வரை கீழ்த்தரமாக கபிலன் பேசிய விபரம், அமைச்சர் சேகர்பாபுவின் காதுக்குப் போயிருக்கிறது. அதையறிந்து ஷாக்கான அவர், முதல்வர் அலுவலகத்துக்குத் தெரிவித்ததோடு, இதை காவல்துறை மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார். உடனே, காவல்துறை மேலிடம், பா.ஜ.க. பீட் பார்க்கும் உளவுத் துறை போலீஸா ரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ’"அப்படி யாரும் முதல்வர் குறித்துப் பேசவில்லை யே?'’என்று நடந்ததை மறைக் கப் பார்த்திருக் கிறார்கள்.''”

"பிறகு?''”

"இதனையறிந்து டென்ஷனான முதல்வர் அலுவலகம், மாநில உளவுத்துறை உயரதிகாரிகளிடம் விசயத்தை சொல்ல, அவர்கள் இதைத் தீவிரமாக விசாரித்திருக்கிறார்கள். இதன் பிறகே பா.ஜ.க. கபிலன் பேசிய, அந்தத் தரக்குறைவான பேச்சின் ஆடியோவை உளவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில், வரம்பு மீறி கபிலன் பேசியிருப்பதை அறிந்து, காவல் துறை யினரே கோபப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, 4ஆம் தேதி பா.ஜ.க. நிர்வாகி கபிலனை கைது செய்திருக்கிறார்கள். சென்னை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவான ஐ.எஸ். பலவீனமாக இருப்பதற்கு இந்த ஒரு சம்பவமே சரியாக உதாரணம் என்கிறார்கள், ஏனைய காவல் அதிகாரிகள். கைதான கபிலன், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனின் தீவிர ஆதரவாளராக இருப்பவராம்.''”

r

"கொங்கு மண்டல அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வில்லங்க விவகாரத்தில் சிக்கியிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, கொங்குமண்டலத் தில் உள்ள சிங்காநல்லூரைச் சேர்ந்த ஒரு அ.தி.மு.க. பிரமுகர் ஒரு பெண் விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். அந்தப் பெண், அங்குள்ள விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவராம். இந்த விவகாரம் தொடர்பான ஏடாகூட ஆடியோ, வீடியோக்கள் விரைவில் வெளிவரவிருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் அந்தப் பெண்மணியே, அந்த அ.தி.மு.க. பிரமுகர் குறித்து, பகிரங்கமாக மீடியாக்களிடம் பேசவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்த விவகாரம் அ.தி.மு.க. வில் ஒரு நிலநடுக் கத்தை உருவாக்கும் என்கிறார்கள்.''”

"புதுக்கோட்டை யில் செயல்படும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று, அமைச்சர் பெயரைச் சொல்லிக்கொண்டு அடாவடி செய்வ தாகப் புகார் கிளம்புகிறதே?''”

"புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி யில் நல்லசாமி என்பவர் ஃபை னான்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்திவரு கிறார். இந்த நிறுவனம் மூலம் நல்லசாமி, கந்துவட்டி ரேஞ்சுக்கு வட்டி வாங்கி வருவதோடு, பொதுமக்கள் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக் களை அடமானம் வைக்க வரும்போது, குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் சொத்து எங்களுக்கே சொந்தம் என்று அவர்களிடம் எழுதி வாங்கிக்கொள்கிறாராம். இது குறித்து யாராவது காவல் நிலையத்துக்குப் போவோம் என்று சொன்னால், ’தாராளமாக போங்க. அமைச்சர் மெய்யநாதனே எங்களுக்காக வருவார். அவர் இருக்கும் வரை எங்களை ஒன்றும் செய்யமுடியாது’ என்ற ரீதியில் நல்லசாமி மிரட்டுவாராம். லோக்கல் காவல்துறையும், நல்லசாமி விவகாரம் என்றால் நழுவுகிறதாம்.''”

"தமிழக பா.ஜ.க.வில் ஒருவித ஆடு -புலி ஆட்டம் நடந்துவருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. நிர்வாகி லண்டன் செல்வதையொட்டி, அக்கட்சியின் தேசியத் தலைமை, தமிழ் நாட்டுக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் ஆலோசனையில் இருக்கிறதாம். இதையொட்டி பதவிக்கு முண்டியடிக்கும் நிர்வாகிகள், தங்கள் டெல்லி லாபியை வைத்துக்கொண்டு, ‘எனக்கு அந்தப் பதவி கிடைக்காட்டியும் பரவால்ல, அந்த நபர் மட்டும் வந்துடக் கூடாது. அதுக்கு ஏத்தபடி காய் நகர்த்துங்க’ என்று, யாராவது ஒரு கோஷ்டித் தலைவருக்கு பிரேக் போடும் முயற்சியில் இறங்கி உள்ளார்களாம். இப்படி இங்குள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் ஒவ்வொருவரும் யாரையாவது ஒருவரை கார்னர் செய்து, அவர்களின் காலுக்குக் கீழ் குழிபறிக்க முயல்வதைப் பார்த்து, டெல்லியில் சிரிப்பாய் சிரிக்கிறார்களாம்.''”

"’டெல்லியிடம் நம் தமிழக அமைச்சர்கள் நிதி பெறுவதில் முழுமையான அக்கறை காட்டவில்லை என்கிற டாக் கோட்டை வட்டாரத்திலேயே அடிபடுகிறதே?''”

"ஒன்றிய அரசிடம் இங்குள்ள தி.மு.க. அரசு நிதி கேட்டுப் போராடிவருகிறது. அதேசமயம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடத்தி வருவதோடு, எதற்கும் நிதி தராமல் கைவிரித்து வருகிறது. இந்த நிலையில் கோட்டை அதிகாரிகளோ, ஒன்றிய அரசிடம் நிதி வாங்குவதில், முதல்வருக்கு இருக்கும் ஆர்வம், பெரும்பாலான அமைச் சர்களுக்கு இருப்பதில்லை என்கிறார்கள். அதாவது, மற்ற மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள், தங்கள் துறைக்கு நிதி தேவைப்படுகிறபோதெல்லாம் டெல்லிக்கு படையெடுத்துச் சென்று, சம்மந்தப்பட்ட துறையின் ஒன்றிய அமைச்சரையும், துறையின் செயலாளரையும் சந்தித்து, எங்களுக்கு இந்தத் திட்டத்திற்காக நீங்கள் இவ்வளவு நிதி தந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை எதையும் தரவில்லை’என்று புள்ளிவிபரங்களு டன் ஃபைட் செய்து நிதியை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், நம் தமிழக அமைச்சர்களில் பெரும்பாலானோர், இப்படிப்பட்ட அணுகு முறையைக் கடைப்பிடிப்ப தில்லை என்று ஆதங்கப்படு கிறார்கள்.''”

"’நானும் என் காதுக்கு வந்த காவல்துறை பற்றிய தகவல்களைப் பகிர்ந்துக் கறேன். தற்போது, குற்றப் பிரிவு ஐ.ஜி. ராதிகா,மத்தியக் குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணிக்கு வேண்டப்பட்டவராம். இவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்தபோது, வேலுமணி மீதான ஊழல் வழக்கை நீர்த்துப்போகச் செய்தார் என்றும் விமர்சனங்கள் எழுந் தன. அப்படிப்பட்டவரை தி.மு.க. அரசு இப்படியொரு பதவியில் அமர்த்தியிருப்பது, அந்தத் துறையில் இருப்பவர்களுக்கே நெருடலைத் தந்திருக்கிறதாம். அதேபோல், முன்னாள் சென்னை கமிஷனரான சந்தீப் ராய் ரத்தோரை, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத் தலைவராக நியமிக்க ஒரு மூவ் நடந்தது. இதையறிந்த அமைச்சர் உதயநிதி, அந்த மூவைத் தடுத்து நிறுத்திவிட்டாராம். தற்போது, அந்த இடத்திற்கு சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.’அதேவேளை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரியை சென்னைக்கு மாற்றிவிட்டு சென்னையில் பணியாற்றிய ஐ.ஜி. செந்தில்குமாரை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமித் திருப்பதை கொங்கு மண்டல போலீசார் வரவேற்கிறார்களாம். கண்டிப்பு மிகுந்த நேர்மையான அதிகாரியான செந்தில் குமாரின் பூர்வீகம் ஈரோடு மாவட்டத்திலுள்ள’சிவகிரிதானாம். ஏற்கனவே சேலம் சரக டி.ஐ.ஜி. மதுரை, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்புகளிலும் சிறப்பாக பணியாற்றியவராம்.