"ஹலோ தலைவரே, இந்தியா முழுக்க பெரிய அளவில் கவர்னர்கள் மாற்றம் நடந்திருக்கு.''”
"ஆமாம்பா, 13 மாநி லங்களில் இந்த மாற்றம் நடந்திருக்கு. அதில் தமி ழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. சீனியர் ஒருவரும் புதிதாக கவர்னர் ஆக்கப்பட்டி ருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ் ணன், ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப் பட்டிருக்கிறார். ஏற்கெனவே தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங் கானா கவர்னராகவும், புதுவை மாநில துணைநிலை கவர்னராகவும் இருக்கிறார். அதேபோல் மற்றொரு பா.ஜ.க. மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக ஆக்கப்பட்டிருந்தார். தற் போது இல.கணேசன் மணிப்பூரில் இருந்து நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பா.ஜ.க. பிரமுகர்கள் கவர் னர்களாக இருக்கிறார் கள். தற்போது சி.பி. ஆருக்கு கவர்னர் பதவி கிடைத்திருப்பது, அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கு. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய வர் அவர். பல வருடங்க ளாகவே அவருக்கு இப்ப டிப்பட்ட பட்டாபிசேகம் நடக்கும்னு அவர் தரப்பு எதிர்பார்த்திருந்த நிலை யில், அந்த எதிர்பார்ப்பு ஒருவழியாக நிறைவேறி இருக்கு.''”
“"சரிப்பா, கவர்னர் பதவிக்காகக் காத்திருந்த இன்னொரு பா.ஜ.க. பிரமுகர், இப்ப கடுமையான அப்செட்டுக்கு ஆளாகியிருக்கிறாரே?''”
“"நீங்க யாரைப் பற்றிச் சொல்றீங்கன்னு தெரியுதுங்க தலைவரே, சர்ச்சை நாயகரான ஹெச்.ராஜாவுக்கு தான் இப்ப பலமான ஏமாற்றம் கிடைச்சிருக்கு. இவர் நீண்ட வரு டங்களாகவே கவர்னர் பதவியை எதிர்பார்த்து டெல்லிக்கு மனு போட்டுக்கொண்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்ற போது, அடுத்துவரும் கவர் னர்களுக்கான நியமனப் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கும் என்று அங்கிருக்கும் சிலர் அவருக்கு கிக் ஏற்றி இருந்தனர். அத னால் அண்மைக்காலமாக அதிகார தோரணையோடு நடக்க ஆரம்பித்திருந்தார் ஹெச்.ராஜா. ஆனால், வழக்கம்போல இந்த முறையும் பிரதமர் மோடி, ஹெச்.ராஜாவின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டுவிட் டார். இதனால் கடும் அப்செட்டான ஹெச். ராஜா, செல்வாக்கே இல்லாதவங்களுக்குக் கூட ஜாக்பாட் அடிக்கிறது. எனக்கு மட்டும் தொடர்ந்து குழி வெட்டறாங்கன்னு புலம்பறா ராம். அவருக்கு எதிரி மோடியில்லை. அவர் நாக்குல நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கிற சனிதான்னு இங்குள்ள பா.ஜ.க.வினர் சொல் றாங்க. இதுக்கிடையில், கவர்னர் பதவிங்கிறது பா.ஜ.க.வுக்குக் குத்தகையா?ன்னு சி.பி.ஐ. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புது.''
"அது கிடக்கட்டும். தமிழ்நாட்டு கவர்னர் ரவியின் செயல்பாடு, இஸ்லாமியர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, சென்னை கவர்னர் மாளிகை வளாகத்திற்குள் ஒரு பழைய பள்ளி வாசல் இருக்குது. இதில் அந்தப் பகுதி யில் உள்ள முஸ்லீம்கள் பல ஆண்டுகளாக தொழுகை நடத்தி வந்தாங்க. குறிப்பாக, அரு கில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அந்தப் பள்ளிவாசல் பேருதவியா இருந் தது. கொரோனா நெருக்கடி காலத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்ட போது, இந்தப் பள்ளிவாசலும் மூடப்பட்டது. இப்ப கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் ராஜ்பவன் மட்டும் இந்த பள்ளிவாச லைத் திறக்காமல் நிரந்தரமாக மூடிவைத்துவிட் டது. காரணம், ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தம் கொண்ட கவர்னர் ரவி, இதைத் திறக்கவேண் டாம் என்று முட்டுக்கட்டை போடுகிறாராம். இதுதான் இஸ்லாமியர்கள் மத்தியில் கொதிப் பை ஏற்படுத்தி இருக்கு. இது சம்பந்தமா, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கவர்னரைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார். இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”
"தி.மு.க. இளைஞரணியிலும் பரபரப்பு தெரியுதே?''”
"அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட தால், அவரது ரசிகர்களின் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி எழுந்தது. உடனே அவர்களை இளைஞரணியில் மாவட்ட நிர்வாகிகளாக ஆக்கிவிடலாம் என்று உதய நிதி தரப்பு முடிவெடுத் தது. ஆனால் ஏற்கனவே இளைஞரணியில் பொறுப்பில் இருப் பவர்கள், அவர்களுக்கு எங்கள் பதவி யைக் கொடுத்தால், நாங்கள் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்ப, அங்கே பரவலாக பரபரப்பு ஏற்பட்டி ருக்கிறது. இதற்கிடையே, தன் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக ஆக்கி விடவேண்டும் என்று உதயநிதி தரப்பு வியூ கம் வகுத்திருக்கிறதாம். பொதுக்குழுவில் தன் ரசிகர் மன்றத்தினரை அதிகம் நுழைத்தால், எதிர்காலத்தில் எந்த விதப் பிரச்சினையும் வராது என்றுதான் இப்படி ஒரு வியூகம் வகுக்கப்படுகிறதாம். எது எப்படியோ, உதயநிதி ரசிகர்கள், தங்களை எந்த நிலை யிலும் உதயநிதி கைவிட மாட்டார்னு அழுத்த மாக நம்புகிறார்கள்.''”
"ஈரோடு இடைத்தேர் தலில் தன் அதிகார பலத்தை டெல்லி காட்டுகிறதே?''”
"உண்மைதாங்க தலை வரே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எந்த வகையிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று கருதுகிறது டெல்லி. காங்கிரஸ் வெற்றி பெற்றால், அது தி.மு.க. ஆட்சிக்குக் கிடைக்கிற அங்கீகாரமாக ஆகிவிடும் என்று பா.ஜ.க. தலைமை நினைக்கிதாம். அத னால் எப்படியாவது அங்கே அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. வரிந்து கட்டுகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு செக் வைக்கும் வகையில், அந்தத் தரப்பின் பண நடமாட்டத் தைத் ஒடுக்க நினைத்த டெல்லி, தி.மு.க. தரப்பு மீது அமலாக்கத் துறையை ஏவி விட்டிருக்கிறது. அ.தி.மு.க. தரப்பிடம் அதிக கெடுபிடி காட்டாத அவர்கள், கடந்த 20 நாட்களாக தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்கள்ன்னு அனைவரையும் தீவிரமாகக் கண்காணிப்பதோடு, அண்மையில் பெரிய அளவில் அங்கே பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறதா? என்றும் அமலாக்கத்துறை குடைந்துகொண்டு இருக்கிறது. அதேபோல் தேர்தல் பணிக்கு வந்திருக்கும் தி.மு.க. பிரமுகர்களின் ஒவ்வொரு அசைவும் ஒன்றிய அரசின் உளவுத்துறையால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.''”
"இலங்கைத் தமிழர்கள் சிலரின் தயவில்தான் போலிச் சாமியார் நித்தியானந்தா, வாழ்கிறார்னு செய்தி வருதே?''”
"ஆமாங்க தலைவரே, தென் அமெரிக்கவுக்கும் மத்திய அமெரிக்காவுக்கும் இடையே பசிபிக் கடல் பகுதியில் கோஸ்ட்டாரிகா என்கிற அனாம தேயத் தீவுக்கூட்டம் இருக்கிறது. வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உற்பத்தியாகும் இந்தத் தீவுகளில் ஒன்றைத்தான் நித்தி, ரியல் எஸ்டேட் பாணியில் விலைக்கு வாங்கி இருக்கிறா ராம். இதை பாஸ்கரன் என்கிற இலங்கைத் தமிழர் ஒருவர்தான் நித்திக்கு வாங்கிக்கொடுத்தார் என்கிறார்கள். அந்தத் தீவுக்குத் தான் கைலாசா என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு பெண் சிஷ்யைகள் புடைசூழ நித்தி அங்கே தலமறைவு வாழ்க்கை நடத்தி வரு கிறார். இதேபோல், அமெ ரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில கோயில் களையும் விலைக்கு வாங்கி இருக்கும் நித்தி, அவற்றை கார்ப்பரேட் நிறுவனம் போல் நவீனமாக்கி, பெருமளவில் நிதிவசூலை நடத்தி வருகிறாராம். இந்தக் கோயில்களுக்கான தேரை, இலங்கையில் பார்ட் பார்ட்டாகத் தயாரித்து, கொழும்புத் துறைமுகம் மூலம் அந்தக் கோயில்களுக் குக் கொண்டு போயிருக்கிறாராம் நித்தி. இப்படிப் பட்ட தகவல்கள் தற்போது சிறகடிக்கின்றன.''”
"புதிய டி.ஜி.பி.யாக யார் வருவார் என்ற எதிர் பார்ப்பும் காவல்துறை மத்தியில் எழுந்திருக்கிறதே?''
"தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வருகிற ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். அந்த இடத்திற்கு ஒரு புதிய டி.ஜி.பி.யை நியமிப்பது என்றால், அதற்கான புதிய பேனலை, 3 மாதங்களுக்கு முன்பாகவே, தமிழ்நாட்டு அரசு தயாரிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியுள்ள முதல் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களை அது தேர்வு செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் இருந்து மூன்று அதிகாரிகளை ஒன்றிய அரசு டிக் அடித்து இங்கு அனுப்பி வைக்கும். அந்த மூவரில் இருந்து ஒருவர் டி.ஜி.பி.யாக தேர்வு செயப்படுவார். இதுதான் நடைமுறை. அந்த வகையில், ஒன்றிய அரசுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். அதில் யார் யார் பெயர் இடம்பெற்றிருக்கும்? அந்தப் பட்டிய லில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் அடுத்த டி.ஜி.பி. யார்? என்கிற விவாதங்கள் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது.''”
"இதுதொடர்பாக நானும் சில தகவல்களை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். டி.ஜி.பி. பதவிக்குப் பரிசீலிக் கப்படும் பட்டியலில் இடம்பெறும் தகுதி உள்ள அதிகாரிகள்னு சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக, சீனியாரிட்டி யின் அடிப்படையில், 1988 ஆம் வருட பேட்ஜ் அதிகாரி சஞ்சய் அரோரா, 1990ஆம் வருட பேட்ஜ் அதிகாரி களான சங்கர் ஜுவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஸ் குமார், ஷீமா அகர்வால் மற்றும் 1991ஆம் வருட பேட்ஜைச் சேர்ந்த அம்ரேஷ் பூஜாரி ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெறும் தகுதியைப் பெற்றிருக்கிறார் கள். எனினும், இவர்களில் சஞ்சய் அரோரா தற் போது டெல்லி போலீஸ் கமிஷனராக டெபுடேசனில் இருக்கிறார். அவர் டெல்லியில் 3 வருடங்களாவது இருப்பார் என்பதால், அவரது பெயர் பட்டியலில் இடம்பெறாது என்கிறார்கள். தற்போதைய நிலவரப் படி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜுவால், மற்றும் ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஸ் குமார் ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையேதான் ஃபைனல் போட்டி. இவர்களில் ஏ.கே.விஸ்வநாதன் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு குருப், அவருக்கு எதிராகக் காய் நகர்த்தி வருகிறதாம்.''
_________________
இறுதிச் சுற்று :உயிருடன் உள்ளார் பிரபாகரன்?
வெளிநாடுகளில் இருந்து புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த சில பிரதிநிதிகள் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்கள். ஈழ விடுதலையை ஆதரிக்கும் தமிழக தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த சந்திப்பின் போது, " தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர்தான் தங்களை யெல்லாம் சந்தித்து பேசுமாறு எங்களை அனுப்பி வைத்ததார்'' என்று தெரிவித்துள்ளனர். இதனை நம்ப மறுத்து பல்வேறு சந்தேகங்களை ஈழ ஆதரவு தலைவர்கள் கேட்க, அதற்கெல்லாம் தெளிவாக பதில் சொல்லியிருக்கின்றனர். இதனையடுத்து, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நம்பத் தொடங்கியிருக்கிறார் கள் பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஈழவிடுதலை ஆதரவு தலைவர்கள். இந்த விசயம் தமிழ்த்தேசிய வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து 13-ம் தேதி திங்களன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் பத்திரிகையாளரிடம் பழ.நெடுமாறன், "பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார். உரிய நேரத்தில் வெளிப்படுவார். பிரபாகரன் குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருப்பதால் அவர்களது அனுமதியுடன் இதனைச் சொல்கிறேன்'' என்கிறார்.
-இளையர்
திருவண்ணாமலை ஒரே நாளில் 4 ஏ.டி.எம்.களில் கொள்ளை!
பிப்ரவரி 12ஆம் தேதி விடியற்காலையில், திருவண்ணாமலை நகரம் மாரியம்மன்கோவில் தெருவிலுள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்., தேனிமலை யில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்., கலசப்பாக்கத்தில் இந்தியா ஒன் ஏ.டி.எம்., போளூர் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். இயந்திரங்களும் உடைக்கப்பட்டிருப்பது போலீசாருக்குத் தெரியவந்ததும் அதிர்ச்சியானார் கள். இச்செய்தி வெளியே தெரியக்கூடாதென் பதற்காக, எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸாரை அலார்ட் செய்துவிட்டு, ஏ.டி.எம் அறைகளை பக்கத்து வீடுகளில் பூட்டு வாங்கிப் பூட்டினர். பின்னர் எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு தகவல் சொன்னபோது, அவர்கள் அலட்சியமாக இருந்ததால், உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தபின்னர் வங்கிக்கு வந்து, மொத்தம் 72.5 லட்சம் திருடப்பட்டதைக் கூறினார்கள்.
கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியான டி.ஜி.பி. சைலேந்திர பாபு. உடனடியாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணனை தொடர்புகொண்டு, "கொள்ளை யர்களைப் பிடிக்க தனிப்படை அமையுங்கள், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யோடு உங்க மண்டலத்தில் உள்ள மற்ற எஸ்.பி.க்களை கொள்ளையர்களைப் பிடிக்க இறங்குங்கள்'' என உத்தரவிட்டார். பக்கத்து மாநிலங்களுக்கு அலர்ட் மெசேஜ் அனுப்பினார்.
- து.ராஜா