சென்ற இடமெல்லாம் "செருப்பு' என்பது போல இருக்கிறது நிர்மலாதேவியின் நிலை. மதுரை சிறையிலிருந்து கிளம்பிய அந்தப் போலீஸ் வாகனம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்துக்குள் நுழைந்தபோது, வெளியில் நின்று, ""பெண் இனத்தைக் கேவலப்படுத்திய நிர்மலாதேவி ஒழிக'' என்று ஆவேசமாக கோஷமிட்டார்கள் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர். கோர்ட் வளாகத்துக்குள்ளேயே, படிக்கட்டில் ஏறி நின்று, ""பொம்பள புரோக்கர் ஒழிக'' என்று உணர்ச்சிவசப்பட்டு குரல் எழுப்பினார் ஒரு வழக்கறிஞர்.
5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு மாஜிஸ்ட்ரேட் அனுமதி வழங்கிய நிலையில், விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார் நிர்மலாதேவி. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.ராஜேஸ்வரி, டி.எஸ்.பி.க்கள் முத்துசங்கரலிங்கம், ஷாஜிதா தலைமையில் 9 ஆய்வாளர்களைக் கொண்ட 9 தனிப்படையினர் அமைக்கப்பட்டு, விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். மதுரை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா தலைமையிலும் 5 பேர் கொண்ட குழு அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக் கல்லூரியில் விசாரித்து வருகிறது. இன்னொரு புறம், விசாரணை ஆணைய தலைவர் சந்தானம் ஐ.ஏ.எஸ். தலைமையில், பேராசிரியைகள் கமலி, தியாகேஸ்வரி ஆகியோர் மதுரை, அருப்புக்கோட்டை என, களம் இறங்கியிருக்கின்றனர்.
“கவர்னர் பன்வாரிலால் புரோகித் அமைத்த ஒருநபர் கமிஷனின் விசாரணை என்பது, "ஃபார்மல்' ஆகத்தான் இருக்கும். "சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேகம் காட்டினால்தான் உண்டு' என்று அலுத்துக்கொண்டார் விருதுநகர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர். "சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணை எப்படி போகிறது?' என காவல்துறை தரப்பிடம் மெல்ல விசாரித்தோம்.
சி.பி.சி.ஐ.டி.யை கிறுகிறுக்க வைத்த நிர்மலா!
விசாரணையின்போது, ‘பை-லா’ என்பதே இல்லாமல், தேவாங்கர் கலைக்கல்லூரி இயங்கி வருவதை அறிந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நொந்துபோயிருக்கிறார்கள். விசாரணையில் நிர்மலாதேவி பதற்றமோ, பயமோ துளியும் இல்லாதது போல இருந்திருக்கிறார். "என்ன காரணத்துக்காக இப்படி பண்ணுன?'’ என்று போலீஸ் கேட்டபோது, "பணத்தேவை இருந்துச்சு. அதான், பண்ணுனேன்'’ என்று கூலாகச் சொல்லியிருக்கிறார் நிர்மலா. வேறு கோணத்தில் விசாரிக்கலாம் என்று கருதி, ‘"உனக்கு பணத்தேவை இருந்துச்சுன்னா.. உன்கிட்ட படிக்கிற பிள்ளைகளை எதுக்கு ஏற்பாடு பண்ணுற?' என்று குரலை உயர்த்திக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு வித்தியாசமான கதை சொல்லியிருக்கிறார். அப்போது அவர் குறிப்பிட்டுச் சொன்ன காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகனையும், பி.எச்டி. ஆய்வாளர் கருப்பசாமியையும், அவரிடமிருந்து நம்பர் வாங்கி தொடர்பு கொண்டிருக்கிறார்கள். போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததையும், இருவரும் தலைமறைவாகிவிட்டதையும் அறிந்து, ‘"சரி.. இவரையே இன்னும் விசாரிப்போம்'’ என்ற மனநிலைக்கு வந்திருக்கின்றனர்.
“கம்பு முழுக்க உடம்புக்குள்ள போயிரும்!’’
"அருப்புக்கோட்டைல அரெஸ்ட் பண்ணி, அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரிச்சப்ப சில சமாச்சாரம் நடந்துச்சு..' என்று நம்மிடம் கிசுகிசுத்தது காக்கிகள் வட்டாரம். ""ஸ்டேஷனுக்குள்ள போறதுக்கு முன்னால, நிர்மலா எங்களிடம்.. "என்னை விடுங்க சார். இங்கே ரெண்டு மூணு பேரை செருப்பால அடிச்சிட்டு வரேன்'னு கோபப்பட்டார். அந்த ரெண்டு மூணு பேருக்கும் இவருக்கும் என்ன விவகாரம்னு தெரியல. அதை விடுங்க, வெளிப்பார்வைக்குத்தான் நாங்க அவரை மதிச்ச மாதிரி தெரியும். உள்ள நடந்த கவனிப்பே வேற. அவர் பேசுறத மட்டும்தான் வீடியோ எடுத்தோம். மொதல்ல கேள்வி கேட்டப்ப, இப்ப சி.பி.சி.ஐ.டி. போலீஸ்கிட்ட பண்ணுற மாதிரிதான், பணத்தேவைக்கா பண்ணுனேன்னு எங்ககிட்டயும் பாசாங்கு பண்ணுனாரு. எங்க போலீஸ் புள்ளைங்களுக்கு கோபம் வந்திருச்சு. "எதுக்கு பொய் சொல்லுற? யாரைக் காப்
சென்ற இடமெல்லாம் "செருப்பு' என்பது போல இருக்கிறது நிர்மலாதேவியின் நிலை. மதுரை சிறையிலிருந்து கிளம்பிய அந்தப் போலீஸ் வாகனம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்துக்குள் நுழைந்தபோது, வெளியில் நின்று, ""பெண் இனத்தைக் கேவலப்படுத்திய நிர்மலாதேவி ஒழிக'' என்று ஆவேசமாக கோஷமிட்டார்கள் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர். கோர்ட் வளாகத்துக்குள்ளேயே, படிக்கட்டில் ஏறி நின்று, ""பொம்பள புரோக்கர் ஒழிக'' என்று உணர்ச்சிவசப்பட்டு குரல் எழுப்பினார் ஒரு வழக்கறிஞர்.
5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு மாஜிஸ்ட்ரேட் அனுமதி வழங்கிய நிலையில், விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார் நிர்மலாதேவி. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.ராஜேஸ்வரி, டி.எஸ்.பி.க்கள் முத்துசங்கரலிங்கம், ஷாஜிதா தலைமையில் 9 ஆய்வாளர்களைக் கொண்ட 9 தனிப்படையினர் அமைக்கப்பட்டு, விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். மதுரை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா தலைமையிலும் 5 பேர் கொண்ட குழு அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக் கல்லூரியில் விசாரித்து வருகிறது. இன்னொரு புறம், விசாரணை ஆணைய தலைவர் சந்தானம் ஐ.ஏ.எஸ். தலைமையில், பேராசிரியைகள் கமலி, தியாகேஸ்வரி ஆகியோர் மதுரை, அருப்புக்கோட்டை என, களம் இறங்கியிருக்கின்றனர்.
“கவர்னர் பன்வாரிலால் புரோகித் அமைத்த ஒருநபர் கமிஷனின் விசாரணை என்பது, "ஃபார்மல்' ஆகத்தான் இருக்கும். "சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேகம் காட்டினால்தான் உண்டு' என்று அலுத்துக்கொண்டார் விருதுநகர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர். "சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணை எப்படி போகிறது?' என காவல்துறை தரப்பிடம் மெல்ல விசாரித்தோம்.
சி.பி.சி.ஐ.டி.யை கிறுகிறுக்க வைத்த நிர்மலா!
விசாரணையின்போது, ‘பை-லா’ என்பதே இல்லாமல், தேவாங்கர் கலைக்கல்லூரி இயங்கி வருவதை அறிந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நொந்துபோயிருக்கிறார்கள். விசாரணையில் நிர்மலாதேவி பதற்றமோ, பயமோ துளியும் இல்லாதது போல இருந்திருக்கிறார். "என்ன காரணத்துக்காக இப்படி பண்ணுன?'’ என்று போலீஸ் கேட்டபோது, "பணத்தேவை இருந்துச்சு. அதான், பண்ணுனேன்'’ என்று கூலாகச் சொல்லியிருக்கிறார் நிர்மலா. வேறு கோணத்தில் விசாரிக்கலாம் என்று கருதி, ‘"உனக்கு பணத்தேவை இருந்துச்சுன்னா.. உன்கிட்ட படிக்கிற பிள்ளைகளை எதுக்கு ஏற்பாடு பண்ணுற?' என்று குரலை உயர்த்திக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு வித்தியாசமான கதை சொல்லியிருக்கிறார். அப்போது அவர் குறிப்பிட்டுச் சொன்ன காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகனையும், பி.எச்டி. ஆய்வாளர் கருப்பசாமியையும், அவரிடமிருந்து நம்பர் வாங்கி தொடர்பு கொண்டிருக்கிறார்கள். போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததையும், இருவரும் தலைமறைவாகிவிட்டதையும் அறிந்து, ‘"சரி.. இவரையே இன்னும் விசாரிப்போம்'’ என்ற மனநிலைக்கு வந்திருக்கின்றனர்.
“கம்பு முழுக்க உடம்புக்குள்ள போயிரும்!’’
"அருப்புக்கோட்டைல அரெஸ்ட் பண்ணி, அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரிச்சப்ப சில சமாச்சாரம் நடந்துச்சு..' என்று நம்மிடம் கிசுகிசுத்தது காக்கிகள் வட்டாரம். ""ஸ்டேஷனுக்குள்ள போறதுக்கு முன்னால, நிர்மலா எங்களிடம்.. "என்னை விடுங்க சார். இங்கே ரெண்டு மூணு பேரை செருப்பால அடிச்சிட்டு வரேன்'னு கோபப்பட்டார். அந்த ரெண்டு மூணு பேருக்கும் இவருக்கும் என்ன விவகாரம்னு தெரியல. அதை விடுங்க, வெளிப்பார்வைக்குத்தான் நாங்க அவரை மதிச்ச மாதிரி தெரியும். உள்ள நடந்த கவனிப்பே வேற. அவர் பேசுறத மட்டும்தான் வீடியோ எடுத்தோம். மொதல்ல கேள்வி கேட்டப்ப, இப்ப சி.பி.சி.ஐ.டி. போலீஸ்கிட்ட பண்ணுற மாதிரிதான், பணத்தேவைக்கா பண்ணுனேன்னு எங்ககிட்டயும் பாசாங்கு பண்ணுனாரு. எங்க போலீஸ் புள்ளைங்களுக்கு கோபம் வந்திருச்சு. "எதுக்கு பொய் சொல்லுற? யாரைக் காப்பாத்தப்போற? முழுக்க நனைஞ்சிட்ட, அப்புறம் என்ன முக்காடு? உண்மையைச் சொல்லலைன்னா, கையில வச்சிருக்கிற கம்பு முழுக்க உன் உடம்புக்குள்ள போயிரும்'னு அதட்டலா சொன்னதோடு நாலு ரவுண்டு பின்னி எடுத்துட்டாங்க. நிர்மலாவுக்கு முகரையெல்லாம் வீங்கிருச்சு.
நாலாவது ரவுண்டுலதான், கருப்பசாமி, முருகன் இருவர் பேரையும் நிர்மலா சொன்னாரு. அப்புறம், தன்னோட மகளுக்கு மெடிக்கல் சீட் கேட்டு, ஒருத்தர்கிட்ட ரூ.30 லட்சம் கொடுத்து ஏமாந்தேன்னு சொன்னார். விட்ட பணத்தைப் பிடிக்கிறதுக்காகத்தான் அந்த ரெண்டு பேரும் சொன்னதையெல்லாம் செஞ்சேன்னும் சொன்னார். அப்புறமும் ஒரு கதை சொன்னார்- ஸ்ரீவில்லிபுத்தூர் பொண்ணு ஒருத்தி இவர் மககூட படிக்கிறாராம். அந்தப் பொண்ணோட அப்பா இவர்கிட்ட வழிஞ்சாராம். அப்படியே கனெக்ஷன் ஆயிருச்சாம். நிர்மலா பேசுறத கேட்டுக் கேட்டு நம்ம புள்ளைங்களுக்கு மண்டை காய்ஞ்சிருச்சு. அடுத்த ஸ்டெப்பாக, "கவர்னர் உன்னைத் தெரியாதுன்னு சொல்லுறாரு.. நீ எதுக்கு கவர்னரைப் பத்தியெல்லாம் பேசின'ன்னு கேட்டிருக்காங்க. அதுக்கு‘"கவர்னருக்கு என்னைத் தெரியாதாக்கும்'னு சொல்லி, அத்தனை அடி வாங்கியும், அந்த வலியிலும் சிரிச்ச நிர்மலா "கவர்னரை எத்தனை தடவை மீட் பண்ணிருக்கேன்? அவரோட நான் இருந்த இமேஜை எங்க காலேஜ்ல எத்தனை பேர்கிட்ட காட்டிருக்கேன்'னு சொல்லிருக்காரு. உடனே நம்ம புள்ளைங்க "கவர்னர் அது இதுன்னு பொய்யா சொல்லுற'ன்னு ரெண்டு சாத்து சாத்திருக்காங்க. அதுக்கு நிர்மலா, "சந்தேகம்னா காலேஜ்ல போயி விசாரிங்க'ன்னு சொல்லிருக்காரு. "எங்களுக்கே ரூட் சொல்லுறியா'ன்னு இவங்க மறுபடியும் லத்திய உயர்த்தினப்ப, விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு வந்த எஸ்.பி. கிராஸ் பண்ணிருக்காரு. அப்ப நம்ம புள்ளைங்களைப் பார்த்து, "டீச்சரம்மாவ எதுக்கு அடிக்கிறீங்க? பொறுமையா கேளுங்க.. எல்லாத்தயும் சொல்லிருவாங்க..' என்று சொல்ல, அதுக்குப் பிறகு பெரிசா அடி விழல'' என்றனர் விசாரணையை விளக்கமாக.
இறுகும் விசாரணை வளையம்!
நாம் மாணவி ஒருவரின் அம்மாவை சந்தித்தோம், ""நாங்க உங்ககிட்ட எதுவும் பேசக் கூடாது. எம்புள்ள வாழ்க்கையைக் கெடுத்துடாதீங்க'' என்று கையெடுத்துக் கும்பிட்டார். மறுநாள், "மாணவிகள் குறித்து ஊடகங்களில் செய்தி வருவதால், அவர்கள் மன உளைச்சலில் தேர்வு எழுதுவது பாதிக்கக்கூடும்' என்று விசாரணை ஆணையர் சந்தானம் கூறியிருக்கும் நிலையில், "மாணவிகள் எவ்வாறு விசாரணையை எதிர்கொள்கிறார்கள்?' என்று விசாரித்தோம்.
""விசாரணைக் கமிஷனோ, சி.பி.சி.ஐ.டி. போலீஸோ, எங்களை தனித்தனியாக விசாரிக்கக்கூடாது. மொத்தமாகத்தான் விசாரிக்க வேண்டும். அப்போது பெற்றோரும் உடன் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும்'' என்றெல்லாம் மாணவிகள் தரப்பில், கல்லூரி நிர்வாகத்தினரிடம் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். அப்போது நிர்வாகத் தரப்பில் விசாரணையின்போது, ""எக்காரணம் கொண்டும் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றம் சொல்லக்கூடாது. நிர்மலாதேவி பேசியதை மட்டும் கூறினால் போதும்'' என்று வகுப்பு எடுத்திருக்கிறார்கள். இதே கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, டிகிரி வாங்க வேண்டிய நிலையில் இருப்பதால், நிர்வாகம் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியிருக்கிறார்கள் மாணவிகள்.
கல்லூரியில் 20-ஆம் தேதி சந்தானம் நடத்திய விசாரணையில், கிளிப்பிள்ளை போல மாணவிகள் ""நடந்தது இதுதான்!'' என்று ஒரே விதத்தில் வாக்குமூலம் தர, வேறு தகவல்கள் தேவைப்பட்ட நிலையில், வெளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் தோழிகளும் அழைக்கப்பட்டு, விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்கள். விசாரணையின் போக்கு எல்லா திசைகளிலும் பயணிப்பதை அறிந்த தேவாங்கர் கல்லூரியின் முன்னாள் மாணவிகளும் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். "எங்ககிட்டயும் அந்த நேரத்துல நிர்மலாதேவி அப்படித்தான் நடந்துகிட்டாங்க. அதையெல்லாம் நாங்க சொல்ல வேண்டியது வருமோ? விசாரணைக்கு எங்களைக் கூப்பிட்டால், "கணவர்-குடும்பம் எல்லாருக்கும் தர்மசங்கடம்' என்று முன்னாள் மாணவிகள் சிலர், அக்கம்பக்கத்தில் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
புரளியா? உண்மையா?
கவர்னரின் செயலாளர் ராஜகோபால் விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றியவர். அதே மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை கல்லூரியின் பேராசிரியரான நிர்மலாதேவியை அவருக்கு நன்கு தெரியும் என்று தகவல் பரவுகிறது. ராஜகோபால் கலெக்டராக இருந்தது 1996-97ஆம் ஆண்டில். நிர்மலாதேவி கல்லூரியில் சேர்ந்தது 2008ஆம் ஆண்டில். இடிக்கிறதே என்கிறார்கள் விவரமறிந்தோர். அதுபோல 2002-2005-ல் பல்கலை துணைவேந்தராக பி.கே.பொன்னுசாமி இருந்தபோது, ஆசிரியருக்கான விடுதி அறை ஒன்றில் உள்பக்கமாக தாழிட்டு, போதை மயக்கத்தில் ஒரு பெண் பேராசிரியர் படுத்திருந்திருக்கிறார். பல்கலைக்கழகத்தின் மானம் காக்க அவரின் பெயர் அப்போது வெளியிடப்படவில்லை. அவர்தான் நிர்மலாதேவி என்கிற வதந்தியும் காலப் பொருத்தமற்று பரவுகிறது.
இரவில் தங்கினார்கள்!’’
நக்கீரன் கவர் ஸ்டோரியைப் படித்துவிட்டு, நமது இன்பாக்ஸுக்கு வந்தார் ஒரு இளைஞர். ""போன மாசம்.. இவரை அங்கே பார்த்திருக்கேன்..'' என்றார். ‘"யாரை? எங்கே?' என்று கேட்டோம். “""அதான் சார்.. கவர்னர் பன்வாரிலால் புரோகித்.. அப்புறம்.. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்''’ என்றவர், “""மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் இருவரும் இரவில் தங்கினார்கள். ஒரு வேலையாகச் சென்றபோது நான் பார்க்க நேரிட்டது'' என்றார். "அங்கு வேறு யாரையும் பார்த்தீர்களா?' என்று நாம் கேட்டவுடன், ""இவங்க ரெண்டு பேரும்தான். வேறு யாரும் இல்லை'' என்றார். அவரது வார்த்தையில் ஒரு நேர்மை இருந்தது.
விலகிய வக்கீல்!
போலீசாரால் நிர்மலாதேவி கைதுசெய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை சந்தித்து திரும்பிய வழக்கறிஞர் "நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என பேட்டியளித்து பரபரப்பை உண்டாக்கினார். மேலிட-உயர்மட்டங்களுடன் தொடர்புடைய விவகாரம் என்பதால் நிச்சயமாக நிர்மலாதேவியை பலிகடாவாக்கிவிட்டு மற்றவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்ற அச்சம் பல தரப்பிலும் உள்ளது. நிர்மலாதேவியுடன் ஜூனியர் ஆசிரியர்கள் பழிபோட்டு, நிர்வாக நடவடிக்கை சட்ட நடவடிக்கை என விவகாரத்தை முடித்துவிடவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், நிர்மலாதேவிக்காக ஆஜராகி வந்த வக்கீல்.. இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாகவும், இது சொந்த காரணங்களுக்காக எடுத்த முடிவு.. யாரும் நெருக்கடி தரவில்லை எனச் சொல்லியிருப்பது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. கவர்னர் புரோகித் அவசர அவசரமாக நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் விசாரணை எந்தத் திசையில் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “சந்தானம் ஐ.ஏ.எஸ். தனது சர்வீஸ் காலத்தில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக தலித் சமுதாய உயரதிகாரிகள் சிலர் அப்போது புகார் தெரிவித்திருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். சந்தானம் குழுவில் இடம்பெற்றுள்ள பெண் உறுப்பினர்கள் கமலி, தியாகேஸ்வரி இருவரில், கமலிக்கு உறவினர்தான் தேடப்படும் உதவிப் பேராசிரியர் கருப்பசாமி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நிர்மலாதேவி வழக்கை எவ்விதம் நகர்த்தப் போகிறார்கள்? யாருக்கு என்ன தண்டனை கிடைத்துவிடும்? ஆனால், ஒரு பாவமும் அறியாத மாணவிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இந்த விசாரணையே பெரிய தண்டனைதான்!
-சி.என்.இராமகிருஷ்ணன்
அட்டை மற்றும் படங்கள்: ராம்குமார்
--------------------------------------
பல்கலைக்கழக பலான பங்களா! சி.சி.டி.வி.யில் சிக்கும் புள்ளிகள்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள சொகுசு பங்களாவில் மார்ச் 13 ஆம் தேதி கவர்னர் தங்கியிருந்தார். அன்று நிர்மலா தேவியும் அதே பங்களாவில்தான் இருந்தார் என்றால் பதற்றமாகத்தானே இருக்கும்.
நிர்மலாதேவியை தனக்கு தெரியவே தெரியாது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை கூறுகிறார். ஆனால், "பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சொகுசு பங்களாவில் வி.வி.ஐ.பி.க்கள் தங்கும்போதெல்லாம் அவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு நிர்மலாதேவி மேடத்திடம்தான் ஒப்படைக்கப்படும்' என்று பேராசிரியர்களே கூறுகிறார்கள்.
நிர்மலாதேவி விவகாரத்தை விசாரிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்ட கமிஷனின் தலைவர் சந்தானம் கடந்த வியாழக்கிழமை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய செல்லதுரை, ""எங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் எழுத்துப்பூர்வமாகவே கமிஷனிடம் கொடுக்கப்போகிறோம். நிர்மலாதேவி பல்கலைக்கழகத்திற்கு வந்தாரா என்று கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்? இந்த வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் பதிவான வீடியோவைக் கேட்டால் கொடுக்க தயாராக இருக்கிறோம். இந்த வளாகத்தில் விருந்தினர் தங்குவதற்காக ஒரு பங்களா இருக்கிறது. அதில் மற்றவர்கள் சொல்வதுபோல 150 அறைகளெல்லாம் இல்லை'' என்றார்.
அந்த பங்களாவை படம்பிடிக்கப் போனபோது நம்மிடம் பேசிய பேராசிரியர் ஒருவர், ""இந்த பங்களா எப்பவுமே ஜேஜேன்னு இருக்கும் ஸார். மார்ச் 13 முதல் 15 வரை நடந்த அறிவியல் கண்காட்சியில் அமைச்சர்கள் அன்பழகன், உதயக்குமார், ஆளுநர் ஆகியோர் பங்கேற்றார்கள்.
இரவில் இந்த பங்களாவில்தான் தங்கினார்கள். முக்கிய விருந்தினர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை நிர்மலா, கருப்பசாமி, முருகன் ஆகிய மூவரிடம்தான் கொடுப்பார்கள். இவர்களில் முருகன் உதவிப்பேராசிரியர்தான். ஆனால், வெளிக்கல்லூரிகளில் நடக்கும் பட்டமளிப்பு விழாக்களில் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு டிகிரி சான்றிதழ்களையெல்லாம் கொடுப்பார்'' என்றார் வேதனையோடு.
இன்னொரு பேராசிரியரோ, ""அமைச்சர் உதயகுமார் தனது சக அமைச்சர்கள் இருவருடன் வெளிநிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு இந்த பங்களாவில் தங்கினார். இதற்கு பதிவாளரிடம் எதிர்ப்புத் தெரிவித்தோம். அவரோ "துணைவேந்தரிடம் பேசுகிறேன்' என்று கூறிவிட்டார். சொகுசு பங்களாவில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை சோதனை செய்தால் வி.வி.ஐ.பி.க்களின் உண்மை முகம் தெரியும். பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் விதிமீறல்களை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடமும், கவர்னர் கமிஷன் தலைவர் சந்தானத்திடமும் எழுத்துபூர்வமாக கொடுத்துள்ளோம். பல்கலைக்கழக சிஸ்டத்தையே சீர்செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
இதுபற்றியெல்லாம் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் கேட்டோம். ""நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் எடுத்தாலும் அவரிடம் 25 ஆம் தேதி விசாரணை நடத்துவேன்'' என்றார். ஆனால், "கவர்னரிடம் விசாரணை நடத்துவீர்களா' என்றபோது, பதில் அளிக்காமல் நகர்ந்தார்.
இதற்கிடையே சொகுசு பங்களா சி.சி.டி.வி. பதிவுகளை அழிக்கும்படி பிலிம் மீடியா ஸ்டடீஸ் தலைவர் கர்ணமகாராஜனிடம் கூறியிருப்பதாக கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தோம்.
""நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை. பல்கலைக்கழகம் சம்பந்தமான வீடியோ போட்டோக்களை விசாரணை அதிகாரிகள் கேட்டால் கொடுத்துவிடும்படி சொல்லியிருக்கிறார்கள்'' என்றார்.
விசாரணை அதிகாரிகளிடம் சி.சி.டி.வி. ஆதாரங்களை அளிப்பார்களா, அழிப்பார்களா என்பதே இப்போதைய கேள்வி.
-அண்ணல்
-------------------------------------------
பணம்... இல்லைன்னா பெண்! -மூட்டா தலைவர் வேதனை!
மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, அன்னை தெரசா பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சுயநிதிக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களின் பலம் வாய்ந்த ஒரே சங்கமாக மூட்டா செயல்பட்டு வருகிறது. அச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சுப்பாராஜு நம்மிடம் பேசினார்.
""உயர் கல்வியில் 1990-க்குப் பிறகு, தனியார்மயம் வந்தது. அதன் பிறகுதான், பல்கலைக்கழக நிர்வாகம் சீர்கெட்டுப் போய்விட்டது. ஊழல், இந்த மாதிரியான முறைகேடுகளைச் செய்வதற்கு ஆட்களை ரெடி செய்வதற்கு பணம் பிரயோஜனப்படாத இடத்தில், பெண்களைப் பயன்படுத்துவது நடக்கிறது. எந்தெந்த வழியில் ஆட்களை சரிக்கட்ட முடியுமோ, அந்தந்த வழியில் சரிக்கட்டி, பல்கலைக்கழக நிர்வாக விதிமுறைகளை மீறுகிறார்கள்.
இதையெல்லாம், தனியார் பல்கலைக்கழகங்களை சப்போர்ட் பண்ணுவதற்காகவே செய்கிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் என்பது ஒரு ஜனநாயக அமைப்பே கிடையாது. அதாவது, பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உண்டு. செனட் உண்டு. இந்த அமைப்புக்களெல்லாம் பெயரளவில்தான். இந்த அமைப்பில் மூன்றில் ஒரு பகுதியாக அரசு அலுவலர்கள் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். பிறகு, எஜுகேசன் செக்ரட்டரி, மெடிக்கல் செக்ரட்டரி, லா செக்ரட்டரி. அப்புறம் டைரக்டர் நாலு பேர், ஆக மொத்தம் 7 பேர் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். இந்த 7 பேர் போக, பல்கலைக்கழக ஆசிரியர்ன்னு நாலஞ்சு பேரு வந்து உட்கார்ந்து கொள்வார்கள். பல்கலைக்கழக ஆசிரியர்கள் துணைவேந்தருக்கு எதிராக பேச மாட்டார்கள். ஆக, அரசு அதிகாரிகளுக்கும் துணைவேந்தருக்கும் அண்டர்ஸ்டேண்டிங் வந்துவிட்டால், மெஜாரிட்டி ஆகிவிடும். இதுபோக, எங்களைப் போன்ற கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் உண்டு. நானும் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் மெம்பராக இருந்திருக்கிறேன். அதுல இருக்கிறது ஒண்ணு ரெண்டு பேருதான். இந்த ஒண்ணு ரெண்டு பேரு இருக்கிற ஊழல்களைச் சுட்டிக்காட்டினாலும், தவறென்று சொன்னாலும், யாரும் கண்டுகொள்வது இல்லை.
பெண்களையும் பணத்தையும் ஏன் பயன்படுத்துகிறார்கள்? அதிகாரிகளோ, பொறுப்பில் உள்ளவர்களோ, உடனே கவனித்தால், இது போன்ற பிரச்சனைகளே வராது. யாராவது மறுப்பு சொன்னாலோ, ஊழல் நடக்கிறது என்று சுட்டிக்காட்டினாலோ, கவனிப்பதே இல்ல. உயர் கல்வித்துறையில் விதிமீறல் நடப்பது கவர்னருக்கும் தெரியும். கவர்னரிடம் நாங்களே பெட்டிஷன் கொடுத்திருக்கிறோம். மது, மாது எல்லா துறையிலும் இருக்கிறது. கல்வித்துறையும் அரசுத் துறையில் ஒன்றுதான். நிர்மலாதேவி ஒரு கருவிதான். அந்தம்மாவை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது. 10 நாட்களில் இது அமுங்கிப் போய்விடும். பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த கணபதி ரூ.30 லட்சம் பணம் வாங்கினார். கையும் களவுமாகப் பிடிபட்டார். மாட்டியவர்களை மட்டுமே பழி சொல்வார்கள். காமராஜர் பல்கலைக்கழகம் சரியில்லை என்றால், மற்ற பல்கலைக்கழகங்கள் உத்தமமா? இதுபோன்ற குற்றச் செயல்களை வேரடி மண்ணோடு பிடுங்கி எறிய வேண்டும்'' என்றார் ஆதங்கத்துடன்.
""மதுரைல வெரி சிம்பிள்ங்க. ஹால் டிக்கெட்ட காமிச்சி, எக்ஸாம் அட்டென்ட் பண்ணுனா போதும். அங்கே பேப்பர்ஸை கொடுத்துட்டு, வெளிய வந்து, லாட்ஜுக்கோ, ரூமுக்கோ போயிடணும். அங்கே ஏற்கெனவே பிளாக்ல வாங்கி வச்சிருக்கிற ஆன்ஸர் பேப்பர்ல, எல்லா க்வெஸ்டினுக்கும் புக்கை பார்த்து எழுதிட்டு, அப்படியே மதுரை கட்டபொம்மன் சிலைக்கு பக்கத்துல இருக்கிற ஸ்கூல்கிட்ட வந்தாச்சுன்னா.. அங்கே யுனிவர்சிட்டி ஆளு நிப்பாரு. அவரு கையில் ஆன்ஸர் பேப்பர்ஸை கொடுத்துட்டா, கட்டுல சேர்த்து, யுனிவர்சிடிக்கு கொண்டு போயிருவாரு. அப்புறம் என்ன? பாஸோ பாஸ்! மார்க்கோ மார்க்! எல்லாத்துக்கும் இங்கே பணம்தான்!'' என்று பல்கலைக்கழக ஆட்களின் சித்து வேலையைப் போட்டு உடைத்தார் ஒரு நண்பர்.
-ராம்கி