ஆளுநர் ஆணவம்! பறிபோன அப்பா -மகன் உயிர்! -நீட் கொடூரம்

ss

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் மாளி கையில் மாண வர்களின் பெற்றோர்களுடன் சந்திப்பை மேற்கொண்ட தமிழக ஆளுநர் ரவி, மசோதா தொடர்பாக கையெழுத் திடுவதைக் குறித்துக் கேட்ட பெற்றோர்களிடம், “""ஒரு போதும் நீட் விலக்கு மசோ தாவில் கையெழுத்திடமாட் டேன். அது மாணவர்களின் போட்டிபோடும் திறனைப் பாதிக்கும்''’என ஆணவமாக வும் சத்தமாகவும் பதிலளித் தார். அவர் பேச்சின் ரீங்காரம் அடங்குவதற்குள்ளே, நீட் பிரச்சனையால் இரண்டு உயிர் கள் பறிபோனது அதிர்ச்சி யைக் கிள

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் மாளி கையில் மாண வர்களின் பெற்றோர்களுடன் சந்திப்பை மேற்கொண்ட தமிழக ஆளுநர் ரவி, மசோதா தொடர்பாக கையெழுத் திடுவதைக் குறித்துக் கேட்ட பெற்றோர்களிடம், “""ஒரு போதும் நீட் விலக்கு மசோ தாவில் கையெழுத்திடமாட் டேன். அது மாணவர்களின் போட்டிபோடும் திறனைப் பாதிக்கும்''’என ஆணவமாக வும் சத்தமாகவும் பதிலளித் தார். அவர் பேச்சின் ரீங்காரம் அடங்குவதற்குள்ளே, நீட் பிரச்சனையால் இரண்டு உயிர் கள் பறிபோனது அதிர்ச்சி யைக் கிளப்பியிருக்கிறது.

ss

சென்னை, குரோம் பேட்டை, குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் போட்டோ கிராபர் செல்வம். இவர் தன் மனைவி சந்தியாவைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். இவர்களு டைய மகன் ஜெக தீஸ்வரன், குரோம்பேட்டை சைதன்யா சி.பி.எஸ்.சி. பள்ளியில், பிளஸ் 2 படித்துமுடித்தான். ஜெகதீஸ் வரனுக்கு மருத்துவப் படிப் பில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வு எழுதி யுள்ளான். ஆனால் இரண்டு முறையும் அவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மூன்றாவது முறையாக நீட் பயிற்சி மையத்துக்குப் பணம் கட்டிய நிலையில், தன்னோடு பயின்றவர்களில் சிலர் பொறியி யல் படிப்புக்கும், சிலர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டியும் மருத்துவம் படிக்கச் சேர்ந்ததனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தான் ஜெக தீஸ்வரன். சில நாட்களாக தனது தந்தையிடம் புலம்பியபடி இருந்துள்ளான். தந்தை செல்வ மோ மகனுக்கு ஆறுதலும் நம் பிக்கையும் கூறிவந்தார். எனினும் ஜெகதீஸ்வரன், கடந்த 12-ஆம் தேதி சனிக்கிழமை தனது படிக் கும் அறையில், வேட்டியால் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண் டுள்ளான். மாலை யில் வீட்டு வேலை செய்வதற்காக வந்த மூதாட்டி, தூக்கில் தொங்கியபடி இருந்த ஜெகதீஸ் வரனைக் கண்டு அதிர்ச்சியடைந்து செல்வத்திற்கு தகவலளித் தார். பதறியபடி வீட்டுக்கு வந்த செல்வம், ஜெகதீஸ் வரனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டான் என்று தெரிவித்தனர்.

governor

மகன் இறந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனை அடைந்த செல்வம் நீட்டுக்கு எதிராகப் பேட்டியளித்த தோடு திங்களன்று அதிகாலை 2 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெகதீஸ்வரனின் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து சிட்லபாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீட் பெருந்தொற்று தமிழத்தில் காவு வாங்கும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே செல்கிறது.

nkn160823
இதையும் படியுங்கள்
Subscribe