ஜெயலலிதாவால் முடக்கி வைக்கப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்தை துவக்க வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன போராட்டத்தை கையிலெடுத்திருக்கிறது திமுக.
கடந்த வாரம் சென்னை வந்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த சந்திப்பில், மத்திய அரசிடமுள்ள சில தேசிய நெடுஞ்சாலைகளை மாநில அர சிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிதின் கட்கரியிடம் வைத்துள்ளார் எடப்பாடி. ஆகட்டும் பார்க்கலாம் பாணியில் பதில் சொன்ன நிதின்கட்கரி, துறைமுகம்-மதுரவாயல் மேம்பால திட்டத்தை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றுவது குறித்து எடப்பாடியிடம் விரிவாக விவாதித்துள்ளார். திட்டத்தை நிறைவேற்ற 5000 கோடி ரூபாய் பட்ஜெட் தேவைப்படும் என விவரித்திருக்கும் நிதின்கட்கரி, கருத்துருவை தனது அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு எடப்பாடியை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் தல
ஜெயலலிதாவால் முடக்கி வைக்கப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்தை துவக்க வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன போராட்டத்தை கையிலெடுத்திருக்கிறது திமுக.
கடந்த வாரம் சென்னை வந்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த சந்திப்பில், மத்திய அரசிடமுள்ள சில தேசிய நெடுஞ்சாலைகளை மாநில அர சிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிதின் கட்கரியிடம் வைத்துள்ளார் எடப்பாடி. ஆகட்டும் பார்க்கலாம் பாணியில் பதில் சொன்ன நிதின்கட்கரி, துறைமுகம்-மதுரவாயல் மேம்பால திட்டத்தை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றுவது குறித்து எடப்பாடியிடம் விரிவாக விவாதித்துள்ளார். திட்டத்தை நிறைவேற்ற 5000 கோடி ரூபாய் பட்ஜெட் தேவைப்படும் என விவரித்திருக்கும் நிதின்கட்கரி, கருத்துருவை தனது அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு எடப்பாடியை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் தலா 50 சதவீத நிதி பங்களிப்புடன் துவக்கப்படவுள்ள இத்திட்டத்திற்கு நிதின்கட்கரியின் விருப்பத்துக்கேற்ப எடப்பாடியும் தலையை அசைத்திருக்கிறார் என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறையினர்.
இந்த நிலையில், ஈரடுக்குத் தேவையில்லை; முடக்கி வைக்கப்பட்டுள்ள பழைய திட்டத்தையே துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தென்சென்னை மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் இம்மாதம் 10-ந்தேதி வலிமையான போராட்டத்தை நடத்துகிறது தென்சென்னை திமுக.
இதுகுறித்து மா.சுப்பிரமணியனிடம் நாம் பேசியபோது, ""கலைஞர் ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து சென்னை துறைமுகம்-மதுர வாயல் உயர்மட்ட அதிவேக மேம்பாலச் சாலை உருவாக்கலாம் என முடிவு செய்து அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, 2009ல் தொடங்கப்பட்டது. திட்டத்தின் மதிப்பு 1815 கோடி ரூபாய். 19 கி.மீ உயர்மட்ட மேம்பாலத்தில் ஒன்னரை கிலோ மீட்டர் மட்டுமே தரை வழி. மீதியுள்ள 17.5 கிலோ மீட்டரும் மேம்பால வழி. மதுர வாயலில் இருந்து துறைமுகத் துக்கு கனரக வாகனங்கள் 20 நிமிடத்திற்குள் செல்லும் வகை யில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வந்தது.
2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், கலைஞருக்கும் தி.மு.க. ஆட்சிக்கும் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியை முன் வைத்து, கூவம் ஆற்றின் இடையே மேம்பாலத்தின் தூண்கள் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் எனவும், கூவம் நீரோட்டம் பாதிக்கும் எனவும் பொய்யான, பொருந் தாத ஒரு காரணத்தைக்காட்டி திட்டத்தை முடக்கினார். இந்த சூழலில், 2014-ல் மத்தியில் மோடி ஆட்சி அமைந்தபோது தரை வழிப் போக்குவரத்துதுறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் இத்திட்டத்தை ஆய்வு செய்து, அ.தி.மு.க அரசால் வேண்டு மென்றே திட்டம் முடக்கப் பட்டிருப்பதை அறிந்து, திட்டம் நிறைவேறாது போனால் எதிர்காலத்தில் சென்னை துறைமுகத்தையே இழுத்து மூடிட வேண்டிய நிலை வரும்'' என எச்சரித்தார்.
இந்த திட்டம் மீண்டும் உயிர் பெறும் என சென்னை வாசிகள் நம்பினார்கள். எதிர் பார்ப்பும் அதி கரித்தது. ஆனால், மோடியின் முதல் 5 ஆண்டு காலத்தில் எந்த ஒரு கல்லை யும் அவர்கள் எடுத்துப்போட வில்லை. அதே சமயம், ஜெயலலிதா மறைவின் போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்., இத்திட்டத்தை விரைவில் முடிக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். எடப்பாடி வந்தபிறகு எதுவும் நடக்கவில்லை. 2019-ல் மீண்டும் பிரதமரானார் மோடி. இப்போது, துறையின் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்த நிதின்கட்கரி, இத்திட்டத்தை 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலமாக கட்டலாம் என்றும், அதற்கான கருத்துருவைக் கொடுங்கள் எனவும் எடப்பாடிக்கு உத்தரவிட்டுட்டுப் போயிருக்கிறார். இது, போகாத ஊருக்கு வழி. இத்திட்டத்திற்காக 1815 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு விட்டது. திட்டத்திற்காக அமைக்கப்பட்ட தூண்கள் எல்லாம் வலிமையாக நிற்கிறது. அப்படிப்பட்ட நிலையில், திட்டத்தை துவக்குவதற்கு பதிலாக, ஈரடுக்கு மேம்பாலம் என சொல்லி திட்டத்தையே கைவிடப் போகிறார்களா? ஈரடுக்கு என்பது புதிய திட்டமா? என்கிற சந்தேகம் வருகிறது. அதனால்தான் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட் டத்தை உயிர்ப்பிக்க வேண்டும் ; ஈரடுக்கு என சொல்லி திட்டத்தை முடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கண்டனப் போராட்டத்தை நடத்துகிறோம்''’என்கிறார் மா.சுப்பிரமணியன் விரிவாக.
தலைமைச்செயலக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""பெங்களூர்-சென்னை மற்றும் சென்னை-கன்னியாகுமரி இண்டஸ்ட்ரியல் காரிடார் சாலைகள், நீதிமன்றத்தால் தடை கொடுக்கப்பட்டுள்ள சென்னை-சேலம் 8 வழிச்சாலை ஆகியவற்றை மதுரவாயல் மேம்பால உயர்மட்டச் சாலையில் இணைக்க திட்டமிடுகிறது மத்திய அரசு. அதனால் அதனை ஈரடுக்கில் 6 வழி மற்றும் 8 வழி சாலையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். அப்படி மாறினால், அது மோடி-எடப்பாடி அரசுகளின் திட்டமாகத்தான் பதிவு செய்யப்படும்'' என்கின்றனர்.
கலைஞரின் திட்டங்களை அழிப்பது, அல்லது அவர் உருவாக்கிய திட்டடங்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைப்பது என்கிற காழ்ப்புணர்வு அரசியலை ஜெ போலவே தொடர்கிறார் எடப்பாடி.
-இரா.இளையசெல்வன்