ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்! -பின்னணியில் அமைச்சர் சக்கரபாணி!

cc

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, விவசாயிகள் அதிகம் காணப்படும் தொகுதி. என்றாலும் இப்பகுதி மக்கள், தங்களின் பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார்கள். என்னதான் பள்ளியில் கற்றுத்தந்தாலும், ஆங்கிலம் என்றால் கிராமப்புற பிள்ளைகள் தடுமாறவே செய்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் பேசுவதென்றாலே நடுக்கம்தான்!

c

இதனால் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் தொடங்கி, அதன்மூலம் வருங்கால இளைய சமுதாயமான மாணவ- மாணவிகள் சகஜமாக ஆங்கிலம் பேசவேண்டும் என்ற நோக்கத்தில் தனது தொகுதியிலுள்ள தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியிலுள்ள கே.ஆர். மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அம்பிளிக்கை சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 26 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளோடு 35 பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்த

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, விவசாயிகள் அதிகம் காணப்படும் தொகுதி. என்றாலும் இப்பகுதி மக்கள், தங்களின் பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார்கள். என்னதான் பள்ளியில் கற்றுத்தந்தாலும், ஆங்கிலம் என்றால் கிராமப்புற பிள்ளைகள் தடுமாறவே செய்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் பேசுவதென்றாலே நடுக்கம்தான்!

c

இதனால் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் தொடங்கி, அதன்மூலம் வருங்கால இளைய சமுதாயமான மாணவ- மாணவிகள் சகஜமாக ஆங்கிலம் பேசவேண்டும் என்ற நோக்கத்தில் தனது தொகுதியிலுள்ள தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியிலுள்ள கே.ஆர். மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அம்பிளிக்கை சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 26 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளோடு 35 பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின் றன. இந்த ஆங்கில பேச்சுப் (SPOKEN ENGLISH) பயிற்சி வகுப்புகளை அமைச்சர் சக்கரபாணி தன் சொந்தச் செலவில் வீடாக் பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் நடத்திவருகிறார்.

வீடாக் நிர்வாக மேலாளரான முகம் மது யாசர், "கடந்த 13 வருடங்களாக ஆங்கி லப் பயிற்சி வகுப்பு களை (வீடாக்) பழனியில் நடத்தி வருகிறேன். அதன் மூலம் மாணவ -மாணவிகள் ஆங் கிலம் கற்று வருகிறார்கள். கடந்த ஆண்டு அமைச்சர் சக்கரபாணியைச் சந்தித்தபோது, "அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் பெரும்பாலும் எல்லாவற்றிலும் முதல் இடத்தைப் பிடித்துவருகிறார்கள். ஆனால் ஆங்கில பேச்சுத் திறனில் பின்தங்கியிருக் கிறார்கள். இந்த நிலையை மாற்றி அரசுப் பள்ளி மாணவ- மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவேண்டும். எனது தொகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் என 35 பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் போல இங்கிலீஷில் பேசவேண்டும் என்பது என் விருப்பம்' என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து 6ம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வாரம் இரண்டு நாள் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறோம். இதற்காக 16 பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து நகரம் முதல் கிராமங்கள் வரை உள்ள பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ஆசிரியர்களுக்கு பாடம் சம்பந்தமான ஆலோசனைகளை நானும் வழங்கிவருகிறேன். கடந்த ஆண்டு மட்டும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் 4000 மாணவ- மாணவிகள் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கியுள்ளனர்.

cc

கடந்த பிப்ரவரியில் ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆங்கில விழா நடத்தினோம். அதில் 300 மாணவ -மாணவிகள் கலந்துகொண்டு சகஜமாக இங்கிலீஷில் பேசியதைப் பார்த்து அமைச்சரும், உடனிருந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தனர். பயிற்சியளித்த எங்கள் ஆசிரியர்களுக்கும் அமைச்சர் விருது கொடுத்துப் பாராட்டினார். இந்த ஆண்டு 6000 மாணவ- மாணவிகள் ஆங்கில பயிற்சி வகுப்புகள் மூலம் பயனடைய இருக்கிறார்கள். தயக்கத்தைக் கடந்து மாணவ- மாணவிகள் ஆங்கிலம் பேச ஊக்கப்படுத்திய, பயிற்சியளிக்க ஆசிரியர்களை நியமித்த அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போல தமிழகம் முழு வதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியளித் தால் மாணவ- மாணவி களுக்கு பயனுள்ளதாக இருக்கும்''’என்றார்.

cc

பயிற்சி வகுப்பு களில் படித்துவரும் மாணவ- மாணவி களிடம் கேட்டபோது, “"வகுப்புகளில் பாடம் நடத்தும்போது மட்டுமே ஆங்கில வகுப்புகளைக் கவ னிப்போம். திருப்புதல் தேர்வு, ஆண்டுத் தேர்வுகளில் ஆங்கிலத்தில் எழுதினாலும் ஆங்கிலத்தில் பேசமாட்டோம். இந்த ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு பயமில்லாமல் ஆங்கிலத்தில் உரையாடவும், ஆங்கிலப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறவும் உறுதுணையாக இருக்கிறது. தினசரி அன்றாட வாழ்வில் பேசும் தமிழ் உரையாடல்களை தற்போது ஆங்கிலத்தில் பேசவும் கற்று வருகிறோம்''’என்றார்கள்.

மார்க்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயியான பட்டதாரி சசிக்குமாரிடம் கேட்டபோது, "அமைச்சர் சக்கரபாணியைப் பொறுத்தவரை கட்சிப் பாகுபாடுகள் பார்க்காமல் தொகுதியிலுள்ள அனைத்து ஊர்களிலும் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்துகொள்வார். தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். கல்விக்கும் பெரிதும் உதவி செய்துவருகிறார். தற்பொழுது ஸ்போக்கன் இங்கிலீஷ் கொண்டுவந்து மாணவ -மாணவிகளை இங்கிலீஷில் சரளமாகப் பேசவைத்து கல்வி அறிவையும் வளர்த்து வருகிறார்''’என்றார்.

-சக்தி

nkn021024
இதையும் படியுங்கள்
Subscribe