ரசு மருத்துவமனை களில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு என புகார்கள் ஒருபுறமென்றால், காலாவதியான மருந்துகள் பெட்டி பெட்டியாகத் தேங்கிக் கிடப்பது மறுபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சேலம் கன்னங்குறிச்சியில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கிவரும் இந்த மருத்துவமனையின் நேரடிக் கண்காணிப்பில் 2 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 5 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில்தான் பெட்டி பெட்டியாக காலாவதி மருந்துகளை கீழே கொட்டி அழித்துள்ளனர்.

gg

இந்த மருத்துவமனையில், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்து, மாத்திரைகள் உரிய காலத்தில் பயன்படுத்தப்படாமல் தேக்கமடைந்து காலாவதியான தகவல் கிடைக்கவே நேரில் சென்றோம். அங்கே ஓர் அறையில் மலை போல் காலாவதி மருந்து, மாத்திரைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. ஊழியர்கள் சிலர், போலிக் ஆசிட் சிரப் எனப்படும் இரும்புச்சத்து மருந்து குப்பிகளை உடைத்து, மருந்தை ஒரு பக்கெட்டில் ஊற்றிக் கொண்டி ருந்தனர். ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்கவும், ரத்த சோகையைப் போக்கவும் பயன்படுத்தக்கூடிய பெர்ரஸ் சல்பேட் & போலிக் ஆசிட் மாத்திரைகள் (30 ஆயிரம் எண்ணிக்கை) கொட்டி அழிக்கப்பட்டன. இந்த மாத்திரைகள் கடந்த பிப்ரவரி மாதத்துடன் காலாவதி ஆகியிருந்தன.

அதேபோல், 500 மி.-. அளவுள்ள, நரம்பு வழியாக செலுத்தக்கூடிய சோடியம் குளோரைடு இன்ஜக்சன் மருந்து, பாட்டில் பாட்டில்களாக பயன்படுத்தப்படாமல் கிடந்தன. பாராசிட்டமால் பீடியாட்ரிக் ஓரல் சஸ்பென்ஷன் & 15 மி.கி. மருந்து (காலாவதி: ஆகஸ்ட் 2022), குளுக்கோஸ் -டி (காலாவதி: 06/2022), அயர்ன் அன்டு போலிக் சிரப் (100 மி.லி./ காலாவதி: 08/2022), ஜென்டாமைசின் (காலாவதி: 06/2022), பெனிரமைன் மேலியட் இன்ஜக்சன் (காலாவதி: 07/2021), கால்சியம் கார்பனேட் & விட்டமின் டி3 மாத்திரைகள் (09/2022), கால்சியம் "டி' மாத்திரைகள் (காலாவதி: 08/2022) ஆகியவை, செப்டம்பர் 13ஆம் தேதி கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து குப்பையில் கொட்டப்பட்டன. இவை தவிர, 20 ஆயிரம் சானிட்டரி நாப்கின்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

Advertisment

gg

ஆர்த்தி பிரியா என்ற மருத்துவரிடம் கேட்டபோது, "இந்த மருந்து, மாத்திரைகள் எல்லாம் எப்படி தேக்கம் அடைந்தன என்றே தெரியாது. நாங்கள் இவ்வளவு மருந்துகளைக் கேட்கவே இல்லை'' என்றார். மருந்தாளுநர் கல்யாணியிடம் கேட்டபோது, "கொஞ்ச நாளைக்கு முன்பு பலத்த மழை பெய்தபோது, மருந்துப் பெட்டிகள் வைத்திருந்த அறைக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. அதனால் வேறு அறைக்கு மருந்து, மாத்திரைகளை அப்புறப் படுத்துகிறோம். கொரோனா காலத்தில் அனுப் பப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், மருந்து, மாத்திரைகளை முழுமையாக பயன்படுத்த முடியாததால் காலாவதியாகிவிட்டன'' என்றார்.

இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில், "ஆளுங்கட்சியினர், மருந்துக்கழக அதிகாரிகள், மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு, காலாவதி ஆவதற்கு குறுகிய காலமே இருக்கும் நிலையில் நிறைய மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தள்ளி விடுகின்றனர்'' என் றார்கள். மாவட்ட சுகா தாரப்பணிகள் துணை இயக்குநர் நளினி, "கன்னங் குறிச்சி அரசு மருத்துவ மனையில் உள்ள ஃபார்மசிஸ்ட்தான் மருந்து, மாத்திரை களின் இருப்பு விவரம், காலாவதி விவரங்களைப் பராமரித்திருக்க வேண்டும். அவர் செய்யாமல் விட்டு விட்டார்'' என்றார்.

தமிழ்நாடு மருந்துக் கழக நிர்வாக இயக்குநரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான தீபக் ஜேக்கப்பிடம் கேட்டபோது, "எந்த வொரு அரசு மருத்துவ மனையும் அவர்களின் தேவைப் பட்டியலில் எந்தெந்த மருந்துகளை, எவ்வளவு கேட்கிறார் களோ அதைத்தான் விநியோகம் செய்வோமே தவிர, கேளாத ஒன்றை அனுப்பி வைக்கமாட்டோம். மருந்து களை உரிய காலத்திற்குள் பயன்படுத்த முடியாமல் தேக்கம் அடையலாம் என்று கருதினால் அவற்றை உடனடியாக எங்களுக்கே திருப்பி அனுப்பிவிடலாம்'' என்றார்.

Advertisment

gggg

கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை, காலாவதி ஆவதற்கு கிட்டத்தட்ட ஓராண்டு கால இடைவெளியில் அனுப்பி வைக்கப்பட்டவை என தெரியவந்தது. கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் சவுமியாவிடம் கேட்ட போது, ''பார்மசிஸ்ட் கல்யாணி, தனது பணியில் கவனம் செலுத்தியிருந்தால் இத்தகைய தவறு நடந்திருக்காது. காலாவதி மருந்துகளின் மதிப்பு எவ்வளவோ அந்தத் தொகை, அவருடைய ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்'' என்றார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத் திடம் தகவல் அளித்தபோது, "காலாவதி மருந்துகளை யாருக்கும் கொடுக்கவில்லை தானே? அதனால் அங்கு ஏதும் பிரச்னை இல்லையே?'' என்று "கூல்' ஆக கேட்டுவிட்டு, "இதெல்லாம் ஒரு பிரச்னையா?' என்பதுபோல் "டீல்' செய்தார். தமிழக அரசு, உடனடியாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் காலாவதி மருந்துகள் குறித்து சிறப்புத் தணிக்கை நடத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.