"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவி களைச் செய்துள்ள லலிதா ஜுவல் லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டான். ஒரு திருட்டுக்கு வந்த கூட்டாளிகளை அடுத்த திருட்டுக்கு வைத்துக்கொள்ள மாட்டான். இவை எல்லாம் க்ளூ கண்டு பிடிப்பதில் போலீசுக்கு சவாலாக உள்ளது.

hhh

முருகன் குறித்து நன்கு தெரிந்த சிமெண்ட் கலவை தொழிலாளி ஒருவரை திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் சந் தித்து விசாரித்தோம். ""முருகனுக்கு சொந்த ஊர் திருவாரூர் கிடையாது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமம். பிழைப்புக்காக திருவாரூர் வந்து, நான்கு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் கொளுத்தும் வெயிலில், காலில் செருப்புக்கூட இல்லாமல் சாலை போடும் வேலைகளை செய்தாங்க. திருவாரூர் சீராத்தோப்புலதான் முருகனின் குடும்பம் ஆரம்பத்திலிருந்தே இருக்கு. அக்கா கனகவள்ளிதான் குடும்பத்தைக் காப்பாற்றினார். சாலைப் பணியில் பொழுதுக்கும் வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் கொடுக்கும் போது குறைத்தும், இழிவாகப் பேசுவதையும், தனது சமூகத்துப் பெண்களை தவறாகப் பேசுவதை யும் தினசரி கண்டு கோபப்பட்ட முருகன், அந்த வேலையை வெறுத்துவிட்டு, பெங்களூர் சென்று விட்டான். அங்கு டிரைவர் வேலையில் திருநெல் வேலியை சேர்ந்த தினகரன் என்பவனோடு முதல் நட்பு ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்கத் துவங்கியவன், பிறகு வங்கிகள், நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித் தான். அங்கேயே மஞ்சுளா என்கிற பெண்ணுடன் வாழ்க்கையை ஆரம்பித்தான். இரண்டு குழந்தை களோடு எலக்ட்ரானிக் சிட்டியில் வீடு வாங்கிக் கொண்டு அங்கிருந்தபடியே கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் கொள்ளையைத் தொடர்ந்தான்.

அந்தப் பணத்தில், சாலை போடும் வேலை யில் அல்லல்படும் தனது சமூகத்து மக்களுக்கு உதவிகளை செய்யத் தொடங்கினான். காலில் அணியும் செருப்பில் தொடங்கிய உதவி, ஜே.சி.பி. ரோடு ரோலர், கான்கிரிட் கலவை மெசின் எனத் தொடர்ந்தது. அவர்கள் குடும்பத்து திருமணங் களில் மெயின் செலவும் முருகனுடையதுதான். எங்க ஊருக்கு அவன் காட்பாதர். எங்களை எல்லாரை யும் பிடித்தாலும் அடித்தாலும் அவன் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது. அப்படியே தெரிய வந்தாலும் சொல்லமாட்டோம்''’என்றார்.

Advertisment

ஒரு வழக்கு விஷயமாக முருகனுக்கு உதவிய வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்தோம்...’’ ""நான்கு மாநிலங்களில் முருகன் மீது வழக்கு இருந்தாலும், அவனது குடும்பம் எங்கு இருக்கிறது என்கிற தகவல்கூட காவல்துறையிடம் இல்லை. திருவாரூர் ஏரியாவுக்குள் அவன் கைவரிசை காட்டாததால், அந்த மாவட்ட காவல்துறை கண்டுகொள்ளவில்லை. கொள்ளையடித்த பணத்தில் ஹைதராபாத்தில் வீடு, பாண்டிச்சேரியில் வீடு, பெங்களூரில் வீடுன்னு எல்லா மாநிலத்திலும் அவனுக்கு வீடு இருக்கு. அங்கங்கே பெண் துணையும் இருக்கு. ஆந்திராவில் இருக்கும்போது சினிமாவில் ஆசைப்பட்டு, படமும் எடுத்தான். அதில் அவனது அக்கா மகனையும் நடிக்கவைத்தான். அப்போது நிறைய துணை நடிகைகளோடு தொடர்பில் இருந்தபோது, அவனுக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது,

ttt

எய்ட்ஸ் நோயால் அதிகமாக பாதித்த முரு கனை பெங்களூர் போலீஸார் தேடத் துவங்கினர். அப்போது மஞ்சுளாவுடன் வந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்ந்தான். இதை ஸ்மெல் செய்த பெங்களூரு காக்கிகள் திருவாரூர் வந்துவிட்ட னர். அதன் பிறகு வழக்கறிஞர்கள் சிலரோ மாவட்ட ஆட்சியரிடம் கருணை மனு கொடுத்துவிட்டு கொள்ளையடித்த நகைகளை, அந்தக் காவலர்களிடமே ஒப்ப டைக்க வைத்தோம். அவன் பிழைக்கமாட்டான் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். ஆனா இந்தப் போடு போட்டிருக்கான். சமீபகாலமாக முருகனின் அக்கா மகன் சுரேஷ், முருகனின் அண்ணன் மகன்கள், நண்பர்களோடு முரு கனைப் போலவே கொள்ளையடிப் பதாக தகவல் கிடைத்தது. அவன் பெரும்பகுதி பாண்டிச்சேரி யிலும், பெங்களூரிலுமே அதிக மாக இருப்பான். ஒரு வேலைக்கு ஒருவனை ஒருமுறைதான் பயன்படுத்துவான், வழக்கறிஞரை யும் கூட அப்படித்தான். அவ னைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவனுக்கு நான்கு மாநில காவல்துறையிலும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. ஆறு மாதங் களுக்கு முன்புகூட ஒரு காவல் துறை அதிகாரி ஒருவருக்கு சைலோ கார் வாங்கிக் கொடுத் துள்ளான்''’என்கிறார் விவரமாக.

Advertisment

முருகனைத் தேடும் தனிப் படையில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம்.’’ திருவாரூரில் பிடிபட்ட மணிகண்டனையும் முருகனின் அக்கா கனகவள்ளி, அண்ணன் மகன் முரளி, நண்பர்கள் குணா உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரித்தோம், சமீப காலமாக துணை நடிகை ஒருவரோடு இருப்பதாக தகவல் கிடைத்துள் ளது. விரைவில் பிடித்துவிடுவோம். மணிகண்டன், சுரேஷின் நண்பன். மடப்புரத்தைச் சேர்ந்த 17 வது வார்டு அ.தி.மு.க. அவைத்தலைவர் இளங்கோவ னின் மகன். அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் கட்சிக்கும் அணிக்கும், பிறகு திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்திலும் இணைந்து நகர பொருளாளராகவும் இருக்கிறான். நாகையில் உள்ள தாஸ் என்கிற பத்தரின் (நகை ஆசாரி) உதவியோடு கொள்ளையடித்த தங்கத்தை காயினாக மாற்றி விற்றுள்ளனர். தங்களைத் தேடும் போலீஸ் மீது உள்ள கோபத்தை விநாயகர் ஊர்வலத்தில் வைத்து வஞ்சம் தீர்த்தனர். முருகன் செய்துள்ள உதவிகளுக் கான நன்றியும், அவனைப் பற்றிச் சொன்னால் தீர்த்துடுவாங்கிற அச்சமும் அவங்ககிட்ட இருக்கு''’என்கிறார். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, திருவாரூரைச் சேர்ந்த திருமாறனும், பிரதீப்பும் கைது செய்யப் பட்டு விசாரணையை எதிர்கொண்டனர். புதிய கைதுகள் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ""தி.மு.க.வின் முன்னாள் நகரச் செயலாளர் இரா.சங்கரின் அண்ணன் திருமாறன் என்கிற மாறன் அ.தி.மு.க.வில் முக்கியமானவர். ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பெயரில் மன்றம் ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். ஏற்கனவே இவர் மீது ஆக்கிரமிப்பு, பஞ்சாயத்து, புலிகளுக்கு டீசல் சப்ளை என வழக்குகள் போடப்பட்டாலும் அவற்றிலிருந்து சட்டப்படி விடுதலையானவர். தனது தனிப்பட்ட செல்வாக்கால் பலரிடமும் தொடர்பில் உள்ள திருமாறன், முருகன் தரப்புக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக் கிறோம் எந்த ஒன்றையும் அலட்சியப்படுத்துவ தில்லை''’என்றார்.

இதற்கிடையில்தான் கடந்த இதழில் காக்கி ஒருவருக்கு முருகனுடன் நெருக்கம் இருக்கிறது என்று கூறியிருந்தோம். அந்த காக்கியை ஸ்மெல் செய்த விசாரணை உயர் அதிகாரி ஒருவர் சில தகவல்களைக் கறந்துள்ளார். அதன்படியே பாண்டிச்சேரிக்கு ஒரு டீம் சென்றுள்ளது.

-க.செல்வகுமார்

கொள்ளை நகைகளை உருமாற்றும் ஹைதராபாத் மார்வாடி!

நீட் தேர்வு மோசடியில் தேடப்படும் முகமது ரபி, ஜார்ஜ் ஜோசப் ஆகியோரின் புகலிடம் பெங்களூருதான். அதுபோலவே, லலிதா ஜுவல்லரி கொள்ளையின் கேங் லீடர் முருகனின் புகலிடமும் பெங்களூருதான். ஏற்கனவே அவனைப் பிடித்தவர் ஹரிசேகரன் என்ற போலீஸ் அதிகாரி. கர்நாடக உயரதிகாரியான இவர் தமிழ்நாட்டின் பெரம்பலூர்க்காரர். அப்போது கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகளை தமிழக போலீசாரிடம் தந்துள்ளார். கார் டிரைவிங்கில் படுகில்லாடியான முருகன், ரேஸ்கார் ரேஞ்சுக்கு வண்டியை விரட்டி ஓட்டுவதில் கெட்டிக்காரன் என்பதால், பல சந்தர்ப்பங்களில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்துள்ளான். கொள்ளையடிக்கும் நகைகளை ஹைதராபாத்தை சேர்ந்த கமல்நாத் ஜெயின் என்ற மார்வாடி மூலம் உருக்கி, உருமாற்றி, சிக்கிக்கொள்ளாமல் விற்பனை செய்வது முருகனின் டெக்னிக். அந்த ஜெயின் மீதும் போலீசின் பார்வை பதிந்துள்ளது.

-தாமோதரன் பிரகாஷ்

__________

இறுதிச்சுற்று

fff

ராதாபுரம் என்னவாகும்?

உயர்நீதிமன்றத்தின் மேற் பார்வையில் ராதாபுரம் தொகுதிக் கான மறுவாக்கு எண்ணிக்கை கடந்த 4-ந் தேதி முடிந்த நிலையில், வெளியே வந்த தி.மு.க. வேட்பாளர் அப்பாவு, நம்பிக்கையான வார்த்தை களைத் தெரிவித்துச் சென்றார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை அப்போது எதுவும் சொல்லாவிட் டாலும், அடுத்தடுத்த நாட்களில் அளித்த பேட்டியில், ""200-க்கும் அதிகமான தபால் ஓட்டுகளில் ஒரே தலைமையாசிரியர் சான்றொப்பம் அளித்திருப்பதை சுப்ரீம் கோர்ட்டில் சுட்டிக் காட்டியிருப்பதாகவும், அதனால் இதில் தனக்கு நம்பிக்கையான தீர்ப்பு வரும்'' என்றும் தெரிவித்தார். அப்பாவு தரப்பிலோ, ""பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பம் அளிக்கலாமா என்பதுதான் வழக்கு. அவர் அளிக்கலாம் என்கிறது சட்டம். எத்தனை பேருக்கு சான்றொப்பம் அளிக்கலாம் என்பது வழக்கிலும் இல்லை. சட்டரீதியாகவும் அது பற்றி கேள்வி எழவில்லை. மறுவாக்கு எண்ணிக்கை முடிவு நல்ல தீர்ப்பை தரும் என்கிறார்கள்.'' அ.தி.மு.க. தரப்பில் டெல்லியில் முகாமிட்டு, 23-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் வரும் வழக்கு விசாரணைக்காக தீவிரம்காட்டி வருகிறார்கள்.

-கீரன்