"ஹலோ தலைவரே, எல்லாப் பக்கமும் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் விறுவிறுப்பா இருந்தாலும் முழுமையான உடன்பாடு ஏற் படுவதில் இழுபறி நீடிக்கத்தான் செய்யுது.''”

"கூட்டணிக் கட்சிகள் விடாக்கண்டர் களாகவும், தலைமை வகிக்கும் கட்சிகள் கொடாக் கண்டர்களாகவும் இருப்பது வழக்கம்தானே?''”

"உண்மைதாங்க தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு பிப்ரவரி 4-ந் தேதிதான் கடைசி நாள். அதற்குள் பேச்சுவார்த்தைகளை முடித்து, நல்லபடியா வேட்பாளர்களை மனுத் தாக்கல் பண்ண வச்சிடணுங்கிற பரபரப்பில், எல்லாக் கட்சிகளுமே இருக்குது. தி.மு.க. தலைமையைப் பொறுத்தவரை, மாவட்டம் தோறும் போட்டியிடத் தகுந்தவர்களின் பட்டியலை 31-ந் தேதிக்குள் தனக்கு அனுப்பிவைக்கும்படி மா.செ.க்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 5 வேணும்னு காங்கிரஸ் கேட்குது. அதேபோல, 138 நகராட்சிகளில் 25 வேணும்குதாம்.”

"பேரூராட்சிகள்ல?''”

Advertisment

ksalagiri

"அதுலயும் தங்களுக்குக் கணிசமா ஒதுக்கீடு இருக்கணும்னு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி, தி.மு.க.விடம் கோரிக்கை வச்சிருக்கார். ஏறத்தாழ உள் ளாட்சி அமைப்புகளில் 25 சதவீத இடங்களை காங்கிரஸ் தி.மு.க.விடம் எதிர்பார்க்குது. தி.மு.க.வின் அனைத்து மா.செ.க்களும் மேயர் மற்றும் சேர்மன் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றாங்க. அதனால் வார்டுகளில் போட்டியிடுவதை மட்டும் பேசலாம். தேவையின்றி எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தாதீர்கள்னு மற்றக் கட்சிகளிடம் சொல்வதோடு, 90 சதவீத வார்டுகளில் தி.மு.க.தான் போட்டியிடும். 10 சதவீத இடங்களை மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க முடியும்னு சொல்வதால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் அப்செட்ல இருக்கு.''”

"ம்...'' ”

Advertisment

"அதிலும் பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகளின் வார்டுகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு 1 சீட் கூட ஒதுக்கமாட்டோம். வேணும்னா பேரூராட்சி வார்டுகளில் நில்லுங்கன்னு தி.மு.க. பொறுப்பாளர்கள் சொன்னதால், காங்கிரஸ் மாவட்டப் பொறுப்பாளர்கள், தங்கள் தலைமையைத் தொடர்புகொண்டு, புலம்பியிருக் காங்க. இதைக்கேட்ட அழகிரி, எனது அனுமதியில்லாமல் எந்த ஒப்பந்தத்திலும் யாரும் கையெழுத்துப் போட்டு டாதீங்க. நான் முதல்வர் ஸ்டாலினிடம் பேசிவிட்டுச் சொல்றேன்னு மாவட்ட தலைவர்களுக்குத் தகவல் கொடுத்திருக்கார். கடைசிக் கட்டத்தில் தி.மு.க கொடுப்பதை ஏற்றுக்கொண்டு போட்டியிடத் தீர்மானித்தாலும், பல இடங்களில் தங்களுக்கு செல்வாக்கான பகுதிகளில் தனித்துப் போட்டியிடவும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ரகசிய வியூகங்களை வகுத்துக்கிட்டிருக்குது.''”

"தி.மு.க.வில் மகளிரணியினரிடம் அதிருப்தி தெரியுதேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, பெண்கள் வார்டுகளில் தங்கள் மனைவி அல்லது மகள்களை களமிறக்கவே தி.மு.க.வில் இருக்கும் சீனியர் நிர்வாகிகள் துடிக்கிறாங்க. அதனை நேர்காணலின் போது பரவலாகப் பார்க்க முடிந்தது. பெண்கள் வார்டுகளில் தி.மு.க மகளிர் அணியில் இருக்கும் திறமையான, படித்த பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க மா.செ.க்கள் முதல் நிர்வாகிகள் வரை யாருமே அக்கறை காட்டவில்லை. இதனால், கட்சியில் எதுக்கு மகளிர் அணின்னு ஒன்னு இருக்குதுனு அந்த அணித்தரப்பில் புலம்பலைக் கேட்க முடிகிறது. உள்ளாட்சியில் 50 சதவீத இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டும், மகளிரணிக்கு இடம் ஒதுக்க மனம் வரலையேன்னு அவங்க முனங்கறாங்க.''”

stalin

"மகளிர் அணியின் மனநிலை கட்சி மேலிடம் வரை சென்ற நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வியூகம் குறித்து உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், பெண்களுக்கான இடங்களில் மகளிரணி உள்பட கட்சியின் பல அணிகளில் செயல்படுபவர்களுக்கும், கட்சிப் போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கணும்னு வலியுறுத்தியிருக்காரு. ஆனாலும், 10 வருடமா வார்டு கவுன்சிலர், சேர்மன், மேயர்னு கணக்குப்போட்டு கட்சி வேலை பார்த்த நிர்வாகிகள், மகளிர் வார்டுகளில் தங்கள் குடும்பத்துப் பெண்களை முன்னிறுத்துறாங் கப்பா. அ.தி.மு.க. சைடிலும் இதே நிலைமை தானாம்.''”

"தலைவரே.. அ.தி.மு.க. கூட் டணியில் பாஜக, த.மா.கா., புரட்சி பாரதம், சிவகாமியின் சமூக சமத்துவ படை ஆகிய கட்சிகள் இருக்கு. அதிமுக-பாஜக கூட்டணி நீடிக் கிறதா இல்லையாங்கிற சந்தேகம் எழுந்த நிலையில், 29-ந் தேதி அ.தி.மு.க. தலைவர்களான ஓ.பி.எஸ், இ.பி.எஸ், வைத்தியலிங்கம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை யைத் தமிழக பா.ஜ.க. நடத்தியது. பா.ஜ.க சார்பில் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, பொன்.ராதா கிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துக்கிட்டாங்க. சென்னை, கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய 6 மாநகராட்சிகளையும் , 50 நகராட்சிகளையும், 220 பேரூராட்சிகளையும் கேட்டு அதற்கான லிஸ்டை கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. ஆனால், தி.மு.க.வைப் போலவே, மாநகராட்சிகள் அனைத்திலும் அ.தி.மு.க.வே போட்டியிட விரும்புதுன்னு அவர்களிடம் அழுத்தமாக சொல்லிவிட்டாராம் எடப்பாடி.''”

annamalai

"இதற்கு பா.ஜ.க.வின் ரியாக்ஷன்?''”

"எடப்பாடியின் தீர்மானமான முடிவைக் கேட்டு பா.ஜ.க. தரப்பு பலத்த அப்செட் ஆயிடுச்சாம். இறுதியில் ஒரே ஒரு மாநகராட்சி தருகிறோம். அதையும் நாங்க கொடுக்கிற மாநகராட்சியை நீங்கள் எடுத்துக்கணும்னு ஓ.பி.எஸ்., கறாராகச் சொல்லியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க. இதை ஏற்க மறுத்துவிட்டது. அப்ப அ.தி.மு.க. ஜெயக் குமார், நீங்கள் எதிர் பார்க்கிற எண்ணிக் கையில் நாங்கள் சீட் ஒதுக்கி னால், அந்த அளவுக்குப் போட்டியிட உங்களிடம் வேட்பாளர் கள் இருக் கிறார் களான்னு நையாண்டி செய்திருக் கிறார். இது, அ.தி.மு.க.வுக்கு ஆண்மை இருக் கிறதான்னு நயினார் நாகேந்திரன் கேட்டதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி இருந்ததாம். கடைசியில் 5 சதவீத இடங்களை ஒதுக்குறோம்னு அ.தி.மு.க. சொல்ல, அதை ஏற்க மறுத்துடுச்சி பா.ஜ.க. அதனால் முதல்கட்டப் பேசுவார்த்தை தோல்வியடைஞ்சிருக்கு”

"கூட்டணி நிலவரம் பற்றி டெல்லிக்கும் தகவல் போயிருக்குமே?''”

rang"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க தலைவர்கள் நமக்குத் தேவையான சீட்டை ஒதுக்க மறுக்கின்றனர்னு பா.ஜ.க அண்ணாமலை, தங்கள் தேசிய தலைமைக்கு தகவலை அனுப்பி இருக்கிறார். 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனமாக இருக்கும் பா.ஜ.க, தலைமையோ, தமிழக உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், விடுங்கள்... 2024-நாடாளுமன்றத் தேர்தலின்போது அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம்ன்னு அண்ணாமலைக்கு பதில் அனுப்பிவிட்டதாம். தலைமையிடம் இருந்து இப்படி ஒரு பதிலை அண்ணாமலை எதிர்பார்க்கவில்லையாம். டெல்லியில் இருந்து அவர்கள் அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்தால்தானே அவர்கள் வழிக்கு வருவார்கள். . வெறும் எம்.பி. தேர்தலை மட்டுமே வைத்து அரசியல் செய்ய முடியுமா என்று இப்போது அண்ணாமலை புலம்பு கிறாராம்.''

"“பா.ஜ.க.வுக்குள்ளேயே இன்னும் பல புகைச்சல்கள் இருக்குதாமே?''”

"ஆமாங்க தலைவரே.. .. பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் கண்டதையும் பேசி கைதாகி, ரிலீசான யூ-டியூபர் மாரிதாஸ் விவகாரமா பா.ஜ.க.வுக்குள்ளேயே புகைச்சல் ஏற்பட்டிருக்கு. அவரை கட்சியில் சேரச் சொல்லி அண்ணாமலை உள்பட கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியும் அவர் சேரலை. ஆனா இப்பவும் பா.ஜ.க.வுக்கு சப்போர்ட் பண்ணி, தி.மு.க அரசுக்கு எதிராத்தான் மாரிதாஸ் செயல்படுறாரு. அவருக்கு கட்சிக்குள் சிலர் கொடுக்குற முக்கியத்துவம் பற்றி, நிர்வாகிகளின் வாட்ஸ்ஆப் குரூப்பில் விவாதம் நடந்திருக்கு.''”

"என்ன பேசிக்கிட்டாங்களாம்?''“

"அவரைக் கட்சியில் சேரச் சொல்லி கூப்பிட்டோம். அவர் அப்படி இப்படின்னு சில விஷயங்களை எதிர்பார்த்து சேர மாட் டேன்னுட்டாரு. சேர்ந்திருந்தா கைது பண்ணி யிருக்க மாட்டாங்க. ரஜினி அரசியலுக்கு வருவார்னு அவரு நம்பிக்கிட்டிருந்தாரு. அது அவருக்கு மைனஸ் ஆயிடிச்சி. அப்புறம், இரண்டு மூணு டிமாண்ட் வச்சாரு. அதை யாரும் பார்ட்டியிலே ஏத்துக்கலை. சோஷியல் மீடியாங்கிறது வேற. அரசியல் களம்கிறது வேற. அது தெரியாம அவருக்கு நம்மாளுங்களே முக்கியத்துவம் கொடுத்துட்டாங்கன்னு அந்த விவாதத்தில் பேசப்பட்டது ஆடியோவாகவே வெளியாகியிருக்கு. தமிழக பா.ஜ.க. ஐ.டி. விங் பொறுப்பு, தேசிய அளவில் கட்சியில் அங்கீகாரம், அப்புறம் வெயிட்டான கவனிப்பு இந்த மூணும்தானாம், யூ-டியூபரின் எதிர்பார்ப் பாம். வாட்ஸ்ஆப் குரூப் விவாதம் கசிந்திருப்ப தால கட்சிக்குள் செம புகைச்சலாம்.''”

"சரிப்பா, அமைச்சர் முத்துசாமியும், மாஜி அ.தி.மு.க. மந்திரி செங்கோட்டையனும் சந் தித்து சீக்ரெட் பேசியதாக டாக் அடிபடுதே?''”

rang

"கடந்த வாரம் செங் கோட்டையன் உறவில் ஒரு துக்க நிகழ்ச்சி நடக்க, அதை விசாரிக்க அ.தி.மு.க. பிரமுகர்களான மாஜி வேலுமணி, எடப்பாடி மகன் மிதுன், உள்ளிட்டவர்கள் செல்ல, தி.மு.க. அமைச்சரான முத்து சாமியும் அங்கே சென்றி ருக்கிறார். அப்போது முத்துசாமியிடம் நெருக்கம் பாராட்டிப் பேசிய செங் கோட்டையன், தோப்பு வெங்கடாசலம் உங்க கட்சிக்கு வந்திருக்கிறார். அவர் விசுவாசம் இல்லாதவர். அவரைக் கட்சியில் வளர விட்றாதீங்க. ரொம்பவும் டேஞ்சரான ஆள்ன்னு எச்சரிக்கை செய்தாராம். அதற்கு, நான் எல்லாவற்றி லும் கவனமானவன்னு சொல்லி இருக்கார் முத்துசாமி. அப்ப, மாவட்ட அரசியல் பற்றியும் பழைய நண்பர்கள் பற்றியும் இருவரும் மனம் திறந்து பேசிக்கொண்டார்களாம்.''”

"முதல்வர் ஸ்டாலின் காவல்துறை அதிகாரி களைக் கடிந்துகொண்டார்ன்னு செய்திவருதே?''

"ஆமாங்க தலைவரே, தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த மாணவி லாவண்யா, மதமாற்ற முயற்சியால் தற்கொலை செய்துகொண்டார்ன்னு, விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர், ஒரு வீடியோவை வெளியிட, அதை பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கையில் எடுத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கு. அது திட்டமிட்டு எடிட் செய்து வெளி யிடப்பட்ட வீடியோ என்றும், உண்மையில் லாவண்யா பேசிய வீடியோவில், குடும்பம் மற்றும் விடுதி சார்ந்த மன உளைச்சலால்தான் அவர் அப்படியொரு முடிவை எடுத்தார் என் றும் மாணவியின் உண்மையான வாக்குமூலம் உணர்த்தியிருக்கு. இந்த விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவல் மீடியாக்களில் பரவக் காரணமாக இருந்தது போலீஸ்தான் என்பதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், காவல்துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்துத் தன் அதிருப்தியைத் தெரிவித்தாராம்.''”

"நானும் ஒரு தகவலை பகிர்ந்துக்கறேன். பொங்கல் பரிசுப்பொருட்களில் நடந்த முறை கேடுகள் பற்றி ஏற்கனவே நாம் பேசியிருக் கோம். அந்த முறைகேடுகளைச் செய்த நிறு வனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்னு பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், கொள்முதலுக்குக் கொஞ்சமும் சம்பந்த மில்லாத, தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஒரு வரை பலிகடாவாக்கி அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குதாம்.”