வர்தான் கோடிக்கணக்கான தொண்டர்களையும் அசைய வைக்கும் ஆற்றல் கொண்டவர். அவரே அசையாமல் இருக்கிறார் என்றதும் ஜூலை 26-ஆம் தேதி இரவிலிருந்தே கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க.தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள். 27-ஆம் தேதி காலையிலிருந்து தொண்டர்களின் கூட்டமும், கலைஞரின் உடல்நலம் விசாரிக்கும் தலைவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே இருந்தன. தலைவர் நலம் பெற்றுவிட்டார் என்ற சேதியைக் கேட்பதற்காக, பசி மறந்து, தூக்கம் இழந்து தவித்துக் கொண்டிருந்தனர் தொண்டர்கள். மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்துவிட்டு வரும் ஒவ்வொரு தலைவரும் கூறும் "தலைவர் நலமாக இருக்கிறார்' என்கிற ஒற்றைச் சொல் தான் ஒவ்வொரு தொண்டனின் உயிரையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது.

gobackyama

27-ஆம் தேதி காலை 9 மணிக்கு காவேரி மருத்துவமனையிலிருந்து ஐந்து டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கோபாலபுரம் வந்தனர். 11.30 மணிக்கு மீடியாக்கள் முன் வந்த மு.க.ஸ்டாலின், "தலைவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தனது காந்தக் குரலால் கர்ஜிப்பார்' என்று சொன்னதும்தான் தாமதம், தொண்டர்கள் எழுப்பிய "தலைவர் கலைஞர் வாழ்க' கோஷம் கோபாலபுரத்தையும் தாண்டி அதிர வைத்தது. நேரம் செல்லச் செல்ல, தொண்டர்களின் கூட்டம் கூடிக் கொண்டே இருந்ததே தவிர, யாரும் கலைந்து செல்ல மனம் இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.

Advertisment

மாலை 4 மணிக்கு மேல் பக்கத்து மாவட்டங்களில் இருந்தெல்லாம் தொண்டர்கள் கோபாலபுரம் நோக்கி வர ஆரம்பித்தனர். "ஏன் இன்னும் தலைவரை வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள். ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனால் நல்லா இருக்குமே' என பெண்கள் பரிதவிப்புடன் பேசியதைக் கேட்க முடிந்தது.

இரவு 11.30 மணிக்கு கலைஞரின் ரத்த அழுத்தமும் பல்ஸ் ரேட்டும் குறையத் தொடங்கியதும் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர்களின் மத்தியில் பதட்டமும் பரபரப்பும் பரவ ஆரம்பித்தது. காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சைப் பார்த்ததும் ""வாழ்க, வாழ்க வாழ்கவே, தலைவர் கலைஞர் வாழ்கவே'' என தொண்டர்கள் எழுப்பிய கோஷம் கலைஞர் இருந்த மேல்மாடி வரை ஒலித்தது. அதேபோல் கலைஞரை ஸ்ட்ரெக்சரில் தூக்கி வரும் போது, முண்டியடித்து வந்த தொண்டர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதுமான ஆட்கள் இல்லாமல் ரொம்பவே சிரமமாகிவிட்டது. ஆம்புலன்சில் கலைஞரை ஏற்றும் போதும் வாழ்த்துக் கோஷம் வானைத் தொட்டது.

gobackyama

Advertisment

அவசர நிலை கருதி, ஆம்புலன்சின் டிரைவர் ஸ்பீடாகப் போன போது, ""பொறுமையா போப்பா, பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது'' எனச் சொல்லி ஆம்புலன்சின் வேகத்தைக் குறைத்தனர் டாக்டர்கள். அதனைப் பின் தொடர்ந்து, கோபாலபுரத்தில் இருந்த தொண்டர்கள் ஆழ்வார்பேட்டைக்கு இடம் பெயர்ந்தனர்.

ஒரு சில நிமிடங்களில் கோபாலபுரத்திலிருந்து கலைஞரின் ஆம்புலன்சைத் தொடர்ந்து வந்த தொண்டர்கள், காவேரி மருத்துவமனை முன்பாக அந்த பின்னிரவிலும் ஆயிரக்கணக்கில் குவிந்து, ஆம்புலன்ஸ் காவேரி மருத்துவமனைக்குள் நுழையும் போது, கலைஞரின் காதுகளைச் சென்றடையும் வண்ணம்’""தலைவர் கலைஞர் வாழ்க'' கோஷத்தை உணர்ச்சிப்பூர்வமாக எழுப்பத் தொடங்கினார்கள். அதிகாலை 3.30 மணிக்கு “ஐங் ண்ள் நற்ஹக்ஷப்ங்’’ (தலைவர் நன்றாக இருக்கிறார்) என ஆ.ராசா சொன்னதுடன், மருத்துவமனையின் அறிக்கையையும் காட்டிய பிறகுதான் உடன்பிறப்புகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது.

gobackyama

29-ஆம் தேதி காலை 8.30-க்கு கலைஞரின் பல்ஸ் ரேட் 30 என்ற ரேஞ்சுக்கு குறைய ஆரம்பித்ததும் பதட்டம் பரவ ஆரம்பித்தது. தொண்டர்களிடையே, ""தலைவர் செயற்கை சுவாசத்தில்தான் இருக்கிறார்'' என்ற வதந்தியும் வேகமாக பரவ ஆரம்பித்தது. ஆனால் அது வதந்திதான் என்பது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையின் போது ஊர்ஜிதமானது. கலைஞரை வெங்கையா நாயுடு பார்க்கும் போட்டோ ரிலீசான போது தான், கலைஞருக்கு வெண்டிலேசன் பொருத்தப்படவில்லை என்பது ஊர்ஜிதமாகி, தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

கலைஞர் மீது மாறாத பற்று கொண்ட நெல்லை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த 84 வயது செல்லம்மா பாட்டி தனி மனுஷியாக கிளம்பி வந்து காவேரி மருத்துவமனையை அண்ணாந்து பார்த்தபடி தலைக்கு மேல் கை எடுத்துக் கும்பிட்டு, ஐயா கலைஞரே உனக்கு ஒண்ணும் ஆகாது' என வணங்கிய போது, கண் கலங்காதவர்களே இல்லை.

இதேபோல் கலைஞரின் சமூக நலத்திட்டங்களால் பயன் அடைந்த பெண்கள், தங்கள் குழந்தைகளுடனும் முதல் தலைமுறை பட்டதாரிக்காக கலைஞர் கொண்டு வந்த புரட்சித் திட்டத்தால் பலன் அடைந்த இளைஞர்கள் தங்களின் பெற்றோர், பாட்டன் ஆகியோருடன் சாரை சாரையாக காவேரிக்கு வந்த வண்ணமிருந்ததைப் பார்த்த போது, சமூகப் போராளியான கலைஞரின் சரித்திர சாதனை காட்சிகளாக விரிந்தன.

இளைஞர்களின் அந்த நன்றிப் பெருக்குதான் “""எங்கள் தலைவா எழுந்து வா, உடன்பிறப்பே எழுந்து வா, எங்களைக் காக்க எழுந்து வா'' என்ற இடி முழக்கமாக வெளிப்பட்டது. இதேபோல் தி.மு.க.வின் ஐ.டி.விங் இளைஞர்கள் பிரம்மாண்ட கேன்வாஸ் துணியில், கலைஞரின் சாதனைகளை எழுதச் சொல்லி, அனைவரிடமும் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள்.

மாலை 6 மணிக்கு மேல் வெளி மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். அதிலும் 22 லிருந்து 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு, ""எழுந்து வா தலைவா அறிவாலயம் போகலாம், கோபாலபுரம் போகலாம்''’ என மனதின் அடித்தளத்திலிருந்து எழுப்பிய கோஷம் காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் குழுமியிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கண் கலங்கச் செய்தது, பலர் கதறி அழ ஆரம்பித்துவிட்டனர்.

gobackyama

இரவு 7 மணிக்கு என்ன தகவல் கிடைத்ததோ, கலைஞர் குடும்பத்து உறுப்பினர்கள் வரிசையாக காவேரிக்கு வரவே, சீனியர்கள் சிலரிடமே அவநம்பிக்கை வார்த்தைகள் வெளிப்பட ஆரம்பித்தன.

இன்னும் சற்று நேரத்தில் காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியாகப் போகிறது என்ற பிரேக்கிங் நியூஸ் இரவு 8.30 மணிக்கு சேனல்களில் ஃப்ளாஷ் ஆகி கோடிக்கணக்கானவர்களின் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வேன்களிலும் கார்களிலும் தி.மு.க.தொண்டர்கள் சென்னைக்கு புறப்பட ஆரம்பித்தனர். ""வீட்ல வச்சிருந்தா சரிப்படாது, ஆஸ்பத்திரிக்கு போனால்தான் நல்லா இருக்கும்னு நினைச்சோம். இப்ப ஆஸ்பத்திரியிலும் தலைவருக்கு சிக்கல்னா வேற எங்க போறது'' என வெடித்து அழ ஆரம்பித்தனர் தொண்டர்கள்.

இரவு 9.50 மணிக்கு ‘"கலைஞரின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் சீராகி வருகிறது' என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியாகி, கோடிக்கணக்கானோரின் இதயத்துடிப்பை ஓரளவு சீராக்கியது. இரவு 10.05-க்கு மீடியாக்களைச் சந்தித்த ஆ.ராசா ""தலைவர் உடல்நலம் சீராகி வருகிறது, தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்'' என்ற நல்ல சேதி சொல்லி தெம்பூட்டினார். வெளியில் பெருகி வரும் கூட்டத்தைக் குறைக்கும் ஐடியாவோடு மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் கிளம்பினார். ஆனால் நிலைமையோ பேரிகாடுகளைத் தள்ளிவிட்டு, தொண்டர்கள் ஆவேசமாக பாயும் நிலைக்குப் போனது. போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்த போது, ஒரு தொண்டருக்கு சிறிய அளவில் மண்டை உடைந்தது. இதை அறிந்த ஸ்டாலின், ‘"தொண்டர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்' என்ற அறிக்கையை வெளியிட்டு சாந்தப்படுத்தினார்.

மு.க.அழகிரி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும் மீடியாக்கள் மைக் நீட்டிய போது, “""தலைவர் நல்லா இருக்கிறதாலதான் நானே வீட்டுக்குப் போறேன்''’ எனச் சொன்னதைக் கேட்டதும் தொண்டர்களுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

30-ஆம் தேதி காலை 10.30-க்கு பல்ஸ் ரேட் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்து பிற்பகலுக்குப் பின் நிலைமை சுமுகமாகி தமிழர்கள் எல்லோருடைய உள்ளத்துச் சுமை சற்றே இறங்க ஆரம்பித்தது. கலைஞருக்கும் அவரது உடன்பிறப்புகளுக்குமான பந்தம், வேறெந்த அரசியல் கட்சி வரலாற்றிலும் இல்லை என்பதை நிரூபித்தது காவேரி மருத்துவமனை வளாகம்.

-ஜீவாபாரதி

படங்கள் : சுந்தர், ஸ்டாலின், அசோக், குமரேஷ்

_____________________

நலம் பெற!

"தலைவர் வாழ்க'’ என்ற உடன்பிறப்புகளின் விண்ணதிரும் கோஷம்தான் கலைஞரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் கலைஞர் நலம் பெற வேண்டி, காவேரி மருத்துவமனையின் முன்பாக தொண்டர்கள் மொட்டையடித்து வேண்டுகிறார்கள். கலைஞரின் குடும்பத்தினரில் செல்வி உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்கிறார்கள். திருவாரூரில் கலைஞர் படித்த வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் கூட்டுப் பிரார்த்தனை நடத்தியுள்ளனர். அதே திருவாரூரில் இருக்கும் ஆரூரான் ஆதரவற்றோர் இல்ல மாணவர்களின் கூட்டுப் பிரார்த்தனை, நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இருக்கும் கால சம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள், தமிழகம் எங்கும் சர்ச்சுகள், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.