மூத்த பத்திரிகை யாளர் சின்னகுத்தூசி 91-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21, 2025 அன்று மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில், திராவிட இயக்கச் சிந்தனையாளர் செல்வேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1 லட்ச ரூபாய் விருது தொகையும் வழங்கப்பட்டது. கோவி. லெனின் எழுதி இயக்கி சின்னக்குத்தூசி அவர்களின் தோற்றம் முதல் மறைவு வரையிலான வாழ்க்கை நிகழ்வுகளைத் திறம்பட தொகுத்திருந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு விழா தொடங்கியது.

விழாவுக்கு வருகைதந்திருந்த விருந்தினர்களை யும் பொதுமக்களையும் சின்னகுத்தூசி அறக் கட்டளையின் நிறுவனர் நக்கீரன் ஆசிரியர் வரவேற்று உரையாற்றினார். விழா நிகழ்வை அறக் கட்டளையாளர்களுள் ஒருவரான அருள்செல்வன் தொகுத்துவழங்கினார். விழாவுக்கு சின்னகுத்தூசி அறக்கட்டளை செயலாளர் கௌரா ராஜசேகர் முன்னிலை வகித்தார். பின்பு தலைமையுரை ஆற்றவந்த அறக் கட்டளையின் தலைவரும், திராவிட இயக்க நிகழ்வுகளைத் தொகுத்துப் புத்தகமாகப் பதிப்பித்தவருமான க. திருநாவுக்கரசு தலைமையுரையாற்றினார். “

"சின்னகுத்தூசியார் மறைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று நம்மோடு அவர் இருந்திருந்தால் அவருக்கு 91 வயதானதைக் கொண்டாடி மகிழ்ந்திருப்போம். அவருடைய அறை ஒரு மாநாடுபோல் எப்போதும் கொண்டாட்டத்துடன் இருக்கும். அங்கு கருத்தரங்கு, விவாதம், சண்டை, ஆலோசனை அனைத்தும் நடக்கும். அந்தப் பேச்சுக் கடை இரவு பதினொரு மணி வரை திறந்திருக்கும்.

Advertisment

அவரது அறைக்கு அருமை நண்பர் பால கிருஷ்ணன் வரும்போதே சிந்தாதிரிப்பேட்டையில் கிடைக்கும் பலகாரங்கள் அனைத்தையும் கொண்டு வந்துவிடுவார். கோபண்ணா காஸ்மோ பாலிட்டன் கிளப்பிலிருந்து பலகாரங்கள் கொண்டு வருவார். அங்கே பத்திரிகைத் தோழர்கள், மார்க்சிய சிந்தனையாளர்கள் என பலதரப்பட்ட தரப்பினர் வந்து பேசி, விவாதித்துச் செல்வர். விவாதம் முரண்படும்போது அவரே மத்தியஸ்தராகவும் விளங்கியிருக்கிறார்.

ஒருமுறை ஒரு விஷயத்தில் கலைஞரிட மிருந்து நான் வெளியேறவேண்டிய சூழல். அடுத்த நாள் என்னைப் பார்க்கும்போது என்ன நடந்தது என கேட்டார். அதுல ஒரு வருத்தம். டைட்டில் கார்டுல போடும்போது பராசக்தி படத்தில் மூலக் கதை எம்.எஸ். பாலசுந்தரம்னு இடம்பெற்றிருக்கும். பாவலர் பாலசுந்தரம்னுதானே தெரியும். அப்படியே போட்டி ருக்கலாம். நீங்க சொல்லியிருக்கலாம்னு கருத்துத் தெரிவிக்க, அதில் பிரச்சனையாகி இருவரும் ஒரு வாரமாகப் பேசிக்கொள்ளவில்லை. 

chinnakuthoosi1

Advertisment

பிறகு சமாதானமாயிட்டார். சின்னகுத்தூசி போய் என்ன சொன்னார்னு தெரியலை. மறுநாள்ல இருந்து கலைஞர் பேசத் தொடங்கிவிட்டார். கலைஞர்ட்ட என்ன பேசினாருன்னும் நமக்குச் சொல்லமாட்டார். கோள்சொல்றது, புறம்சொல்கிற பண்பு சின்னகுத்தூசியிடம் கிடையாது. இன்னொரு முறை முரசொலியில் எழுதிய கட்டுரை காரணமாக அதிலிருந்து வெளியேறிவிட்டேன். எனக்கு பத்திரிகையாளர் பென்ஷன் வாங்கித் தரணும்னு சின்னகுத்தூசிக்கு ஆசை. நான் அதெல்லாம் வேண்டாம் என்றுவிட்டேன். இதுக்கிடையில ஒருநாள் நக்கீரன் கோபால் தொலைபேசியில, “"அண்ணன் நம்ம ஆபீஸுக்கு கொஞ்சம் வந்து போங்களேன்'னு கூப்பிட்டார்.

சரின்னு வந்தேன். வந்ததும் நாலு வரி எழுதி, அதுல ஒரு கையெழுத்துப் போடுங்கன்னார். பென்ஷன் சம்பந்தமா நான் கோரிக்கை விடுக்கிறது மாதிரி அதுல எழுதியிருந்துச்சு. அதை எடுத்துக் கொண்டுபோய் கலைஞர்ட்ட சின்னகுத்தூசி சேர்க்க, கலைஞர் அதுல கையெழுத்துப் போட்டபடியே, “"உங்க நண்பர் என்ன நினைக்கிறாராம். என்னைப் பத்தி ஏதாவது சொன்னாரா'னு கேட்டிருக்கார். அத்தகைய பண்புடையவர் சின்னகுத்தூசி.

திருச்சி செல்வேந்திரன், சின்னகுத்தூசி ஐயா அறைக்குள் இருக்கும்போது சிரிப்பு மழை பொழியும். கூடவே இளவேனிலும் சேர்ந்துட்டா இரட்டை நாயனம்தான்.

இந்த விருதுக்கு மூன்று பேரை பரிசீலித் தோம். அதில் முதல் இடத்தைப் பிடித்தது செல்வேந் திரன். திருச்சி செல்வேந்திரன் போன்றோரின் கருத்தியல், ஆற்றல் போன்றவை இன்றைய அரசியல் காலகட்டத்தில் தேவை. அவரது அரசிய லமைப்புச் சட்ட எரிப்பைப் பற்றிய நூல் மூன்று பாகங்களுடையது. அதன் ஒவ்வொரு பாகமுமே ஒரு வாழ்நாள் சாதனையாளர் பரிசு பெறுவதற்கு தகுதியுடையது''’என முத்தாய்ப்பாக உரையை நிறைவுசெய்தார்.

chinnakuthoosi2

உடல்நலக் குறைவுடனிருந்த திருச்சி செல்வேந்திரன், மிகுந்த சிரமங்களுக்கு இடையிலும் விழாவுக்கு வருகை தந்த நிலையில் மேடையிலுள் ளோர்க்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன் னாடை போர்த்தப்பட்டது. பின் திருச்சி செல்வேந் திரன் அவர்களுக்கு, பழ.நெடுமாறன் ஐயா வாழ் நாள் சாதனையாளர் விருதை வழங்கிக் கௌரவித்தார்.

தனக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்றுக் கொண்ட செல்வேந்திரன், “"தஞ்சை மாவட்டத்தின் எழுச்சிமிகு நினைவுகளை எழுப்பிய தலைவர் நெடுமாறன் அவர்களே, திருநாவுக்கரசு அவர்களே பெரியோர்களே, நண்பர்களே, என் உடல்நிலை யைக் கருத்தில்கொண்டு விழாவை ஒரு மாதம் தள்ளிவைத்துவிடலாம் என்றேன். பழ.நெடுமாறன் ஐயா போன்றோரிடம் தேதி வாங்கியாகிவிட்டது. எப்படியாவது வந்துசேரவேண்டும் என்றார் நக்கீரன் ஆசிரியர். அவர் கேட்டுக்கொண்டபடி வண்டியில் படுத்தபடியே விழாவுக்கு வந்துசேர்ந்திருக்கிறேன்.. இந்த மரியாதைக்கு நான் உரியவனா தெரியாது.

20 ஆண்டுகள் பெரியாருடன் இருந்தேன். பின் தி.மு.க.வில் இருந்தேன். என்னுடன் சம்பந்த மில்லாத கோபால் இந்த சின்னகுத்தூசி விழாவை தொடர்ந்து நடத்திவருகிறார். அறக்கட்டளை உறுப்பினர் அனைவருக்கும் நன்றி. இந்திரா தன் மகன் என பாராட்டிய பெருமைக்குரிய பழ.நெடு மாறன் கையால் விருதுபெற்றதில் பெரு மகிழ்ச்சி''’என நெகிழ்ச்சியுடன் ஏற்புரையாற்றினார்.

பின்பு தி.மு.க. செய்தித் தொடர்பாளர் அணியின் மாநில துணைத் தலைவரான கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி வாழ்த்துரை வழங்கினார். "மேடையில் திராவிட கழகத்தின் சிகரங்கள் எல்லாம் அமர்ந்திருக் கிறார்கள். இவர்களை எல்லாம் நேரில் காண்பேனா என ஏங்கியிருக்கிறேன். ஆனால் ஒரே மேடையில் அவர்களோடு நானும் பேச்சாளராக இடம் பெறுவேன் என்று கனவு கண்டதில்லை. இது என் வாழ்க்கையின் பொன்னாள்,

chinnakuthoosi3

தமிழ் நிலத்தை, தமிழ்ச் சுயமரியாதையை நிமிர்த்திவைக்க தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி யவர்கள் ஐயா நெடுமாறன், திருநாவுக்கரசு, செல்வேந்திரன் போன்றவர்கள். திராவிட இயக்க வரலாற்றின் நடமாடும் என்சைக்ளோப்பீடியா போன்றவர் ஐயா. திருநாவுக்கரசு.

இன்றைக்குள்ள சூழலைப் பார்க்கும்போது, தமிழ் மண்ணுக்கு சின்னக்குத்தூசி ஐயா போன்ற எழுத்தாற்றலும் சிந்தனையும் மிக்கவர்கள் ஒருவர் போதாது. நூறு பேர் வேண்டும்.

அவரது நினைவாக வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் செல்வேந்திரன், அவர்கள் என்னிலும் மூத்தவர். சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்தலாமா... இதுகுறித்து வள்ளலார் ஓரிடத்தில் உதாரணம் காட்டியிருக் கிறார். நாம் வாழ்த்துகிறவர்களின் ஆற்றலை, சிந்தனையை, உத்வேகத்தைப் பெறுகிறோமென. அதனால் அது ஏற்புடையதே''” என்று பேசியமர்ந்தார்.

சிறப்புரையாற்றவிருந்த பழ.நெடுமாறனுக்கு முன்பாக மேடையறிய கோபண்ணா, பழ.நெடுமாறன், சின்னகுத்தூசி அவர்களுடனான நினைவுகளைச் சுருக்கமாகப் பேசியமர்ந்தார்.

பின்பு பேசவந்த பழ.நெடுமாறன், "மிக்க அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இனிய தோழன் செல்வேந்திரன் அவர்களே'' என விழா நாயகனை விளித்து. பின்பு ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு உரைக்குள் புகுந்தார்.

"இன்றைக்கு நண்பர் செல்வேந்திரன் அவர்களுக்கு அறக்கட்டளை வாழ்நாள் சாதனையாளர் விருதை அளித்திருக்கிறது. விருதுக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர் அவர் என்பதில் ஐயமில்லை. தமிழகம் முழுவதிலும் சுற்றிச் சுற்றி வந்து பெரியாரின் கருத்துக்களை பரவச் செய்தவர், பிரச்சாரம் செய்தவர் செல்வேந்திரன்.

இந்தக் கூட்டங்களில் சில பெரிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எதற்கும் அஞ்சாமல் ஊர் ஊராகச் சென்று அவர் பெயரை, புகழைப் பரப்பியவர் செல்வேந்திரன். அன்றும் இன்றும் லட்சியத்தில் உறுதியாக இருப்பவர். மற்றவர் களையும் அப்படி இருக்கச்செய்பவர்.

கடந்த வாரம் திருச்சி சென்றபோது பக்கத்தில் செல்வேந்திரன் வீடு. வீட்டுக்குச் சென்றபோது உடல்நலமில்லாமல் இருந்தார். இருந்தும் விழாவுக்காக இத்தனைதூரம் வந்திருப்பது பெரிய விஷயம்.

1961-ல் சின்னகுத்தூசியும் நானும், ஈ.வி.கே. சம்பத் தலைமையில் ஒன்றுபட்டிருந்தோம். கடைசி வரை சின்னகுத்தூசியிடம் அவரது தோழமை உணர்வு குறையவில்லை.

அப்போது ஒருமுறை தி.மு.க.வை எதிர்த்து நான் கட்டுரை எழுதினேன். மறுநாள் முரசொலி யில் அந்தக் கட்டுரையை விமர்சித்து எழுதியவர் சின்னகுத்தூசி. செல்வேந்திரன் இதைச் சுட்டிக் காட்டி இதுதான் நட்பு என்றார். அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். ஒரு கருத்தை எதிர்த்து நாகரிகமாக விமர்சிக்கலாம். ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டும். எங்களுக்குள் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. அதேசமயம் ஒருவரை ஒருவர் மதிக்கவும் கற்றுக்கொண்டிருந்தோம்.

தமிழகத்தில் சென்ற தலைமுறை தலைவர்களான காமராஜர், பெரியார், அண்ணா, ம.பொ.சி. போன்றோர் ஒருவருக்கொருவர் கடுமையான எதிர்க்கருத்துகளைக் கொண்டவர்கள். ஆனால் தமிழர் பிரச்சனை, மொழிப் பிரச்சனை என்றால் ஒன்றிணைந்துவிடுவார்கள்.

மொழிவாரி மாகாணங்கள் பிரிப்பதில் நேரு பின்னடைந்தபோது, அதுதான் நடந்தது. மொழிவாரி மாகாணங்களாகப் பிரிப்பதற்குப் பதில் இந்தியாவை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்க நேரு முடிவெடுத்தார். தட்சிண மண்டலத்துக்கு காமராஜர்தான் தலைமை என கன்னட, மலையாளப் பகுதிகளின் காங்கிரஸ் தலைவர்கள் மூலம் சொல்லவைத்தார் நேரு. 

காமராஜர், நேருவுக்கு நெருக்கமானவர். இருந்தும் நேருவின் அத்திட்டத்தை எதிர்த்தார். அதன்விளைவாக அத்திட்டம் அடியோடு கைவிடப்பட்டது. தமிழகம் பிறந்தது. இந்த ஒற்றுமை தமிழர்களிடம் இருக்கவேண்டும்.

செல்வேந்திரன் பெரியாரால் உருவாக்கப் பட்டவர். தமிழக மக்களால் மதிக்கப்படுகிற அளவுக்கு தொண்டுபுரிந்தவர். அவரது தொண்டை சிறப்பித்தாகவேண்டும். இந்த விருது அறக்கட்டளை கொடுப்பதல்ல... தமிழகத்திற்கு தொண்டு செய்த ஒருவருக்கு, தமிழக மக்களே கொடுப்பதாகத்தான் பொருள்.

நான் செய்த செயல்களில் சிறந்த செயல் செல்வேந்திரனுக்கு என் கையால் விருது வழங்கியதுதான்'' எனும் நெத்தியடி பேச்சுடன் தனது சிறப்புரையை நிறைவுசெய்தார்.

சின்னகுத்தூசி அவர்கள் வசித்த மேன்ஷனின் உரிமையாளர் ராயப்பனின் நன்றியுரையுடன் விழா நிறைவை எட்டியது.

சின்னகுத்தூசி நினைவு விருது பெற்ற மறுநாள், திருச்சி செல்வேந்திரன் தனது குடும்பத்தினரோடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தொகுப்பு: -சுப்பிரமணி
படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின்