பெற்றோருக்காக உயிருக்குயிராய் நேசித்த காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலியின் கொடூரச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையை சேர்ந்த ஜெயராஜன்-பிரியா தம்பதியின் மகன் ஷாரோன்ராஜ். குமரி மாவட்டம் நெய்யூரிலுள்ள தனியார் நர்சிங் கல்லூரி யில் பி.எஸ்.சி. ரேடியாலஜி படித்துவந்தார். இதேபோல் களியக்காவிளை, ராமன்வர்மசிறயைச் சேர்ந்த ஸ்ரீகுமார் -சிந்து தம்பதியின் ஒரே மகள் கிரிஷ்மா, திருவிதாங் கோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்துவந்தார்.
இருவரும் பாறசாலையிலிருந்து ஒரே பஸ்சில் கல்லூரிக்கு வருவதால் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலர்களாக மாறினார்கள். கடந்த ஓராண்டாக இவர்கள் காதலித்துவந்த நிலையில், 5 மாதமாக இருவரும் பஸ்சில் கல்லூரிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டு ஷாரோன்ராஜின் பைக்கில் கல்லூரிக்குச் சென்றுவந்தனர். கிரிஷ்மா, ஷாரோனுடன் பைக்கில் செல்வதைப் பெற்றோர் பார்த்து அவளைத் திட்டியதால், அதன்பிறகு கிரிஷ்மா பாறசாலையில
பெற்றோருக்காக உயிருக்குயிராய் நேசித்த காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலியின் கொடூரச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையை சேர்ந்த ஜெயராஜன்-பிரியா தம்பதியின் மகன் ஷாரோன்ராஜ். குமரி மாவட்டம் நெய்யூரிலுள்ள தனியார் நர்சிங் கல்லூரி யில் பி.எஸ்.சி. ரேடியாலஜி படித்துவந்தார். இதேபோல் களியக்காவிளை, ராமன்வர்மசிறயைச் சேர்ந்த ஸ்ரீகுமார் -சிந்து தம்பதியின் ஒரே மகள் கிரிஷ்மா, திருவிதாங் கோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்துவந்தார்.
இருவரும் பாறசாலையிலிருந்து ஒரே பஸ்சில் கல்லூரிக்கு வருவதால் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலர்களாக மாறினார்கள். கடந்த ஓராண்டாக இவர்கள் காதலித்துவந்த நிலையில், 5 மாதமாக இருவரும் பஸ்சில் கல்லூரிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டு ஷாரோன்ராஜின் பைக்கில் கல்லூரிக்குச் சென்றுவந்தனர். கிரிஷ்மா, ஷாரோனுடன் பைக்கில் செல்வதைப் பெற்றோர் பார்த்து அவளைத் திட்டியதால், அதன்பிறகு கிரிஷ்மா பாறசாலையிலிருந்து பஸ்சில் ஏறி படந்தாலுமூட்டில் இறங்கி, அங்கிருந்து ஷாரோனுடன் கல்லூரிக்குச் சென்றுவந்தார்.
இருவரும் வெவ்வேறு ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர்கள். படிப்பில் சுட்டியான கிரிஷ்மா, இளங்கலை பட்டத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் 8-வது ரேங்க் எடுத்திருந்தார். தற்போது முதுகலை இரண்டாமாண்டில் மதிப்பெண் குறைவாக எடுத்தது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரிஷ்மா வின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவர அவர்களுக்கு மகள் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் காதலன் ஷாரோனை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் பாறசாலை போலீசார் கிரிஷ்மாவை கைது செய்துள்ளனர். இதுகுறித்து திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி. ஷில்பா நம்மிடம், "ஷாரோனும் கிரிஷ்மாவும் காதலர்களாக நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். இதற்கு கிரிஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், கிரிஷ்மாவின் சம்மதத்துடன் அவளை இன்னொரு வருக்கு திருமணம் பேசி நிச்சயதார்த்தம் நடந்து, பிப்ரவரி மாதம் திருமணமும் முடிவு செய்யப்பட்டது.
கிரிஷ்மா, ஷாரோனிடம் இதுபற்றிக் கூறி, “"என்னுடைய ஜாதகப்படி என் முதல் கணவர் இறந்துவிடுவார் என ஜோதிடர் சொல்லியிருக்கிறார்'’என்று கூற... ஷாரோன், "நான் செத்தாலும் பரவாயில்லை. உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்'’என கூறியிருக்கிறார்.
"ஷாரோனுடன் சுற்றித் திரிந் தது, ஒன்றாகச் சேர்ந்திருந்த வீடியோ, போட்டோக்களை வைத்து திரு மணத்தை தடுத்தால் என்ன செய்வது...' என நினைத்த கிரிஷ்மா, ஷாரோனை கொலைசெய்ய முடிவுசெய்தாள். இதை தனது தாயார் சிந்து, தாய் மாமன் நிர்மல்குமாரிடம் சொன்ன தும் அவளுக்கு உதவ அவர்களும் முன்வந்தனர்.
யாரும் கண்டுபிடிக்காமல் கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடியிருக்கிறாள். இதற் காக மீண்டும் ஷாரோனைக் காதலிப்பதாக அவ னிடம் கூறினாள். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே "காப்பிக்" என்ற கிருமிநாசினி மருந்தை ஜூஸில் கலந்து அடிக்கடி கொடுத்துவந்தாள். அதை குடிக்கும்போதெல்லாம் ஷாரோன் வாமிட் எடுத்துள்ளார். ஷாரோனை நம்பவைப்பதற்காக கடந்த மாதம் திருவனந்தபுரம் வெட்டுக்காடு சர்ச்சில் வைத்து ஷாரோனின் கையால் தாலியும் கட்டிக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் 14-ஆம் தேதி கிரிஷ்மா, "வீட்டில் யாரும் இல்லை. நான் மட்டும்தான் இருக்கிறேன். உனக்கு வயிற்று வலின்னு சொன்னாய் இல்லையா?…அதற்கு கசாயம் வாங்கி வச்சிருக்கேன்'னு சொல்லி காலை 10.30 மணிக்கு ஷாரோனை வரவழைத்து விஷம்கலந்த கசாயத்தை கொடுத்திருக்கிறாள். கசாயத்தின் கசப்பை மாற்ற, விஷம் கலந்த ஜூஸும் கொடுத்திருக்கிறாள். இரண்டிலும் கலந்த விஷத்தை குடித்த ஷாரோன் வயிற்று வலி மற்றும் நுரையீரல் பாதித்த நிலையில், 10 நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இறந்தார்.
கிரிஷ்மாவோடு அவளுக்கு உடந்தையாக இருந்து தூண்டிய தாயார் சிந்து, விஷம் வாங்கிக் கொடுத்த தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோரை யும் கைது செய்துள்ளோம்''’என்றார்.
ஷாரோனின் அண்ணன் ஹோமியோபதி மருத்துவர் ஷிமோன் கூறும் போது, “"தம்பி வீட் டில் வயிற்றுவலியால் துடித்து வாமிட் எடுத்ததும் பாறசாலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு முடியாத தால் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜுக்கு கொண்டுபோனதும் அங்கு டாக்டர் "என்ன சாப்பிட்டீர்கள்?' என கேட்டபோது, "ஒண்ணுமே சாப் பிடலை'னுதான் சொன்னான். கிரிஷ்மா, "நான் இதுல விஷம் கலந்திருக்கேன்'னு அவள் வேடிக்கையாகவும் விஷம மாகவும் சொல்லியிருக்கிறாள். அதை அவன் ஜாலியா எடுத்திட்டு, "நீ எனக்கு விஷம் கலந்து தந்திருந்தாகூட யாரிடமும் சொல்லாத. ஏன்னா... நான் செத்துட்டா உன்னை கொலைகாரினு சொல்லுவாங்க'னு சொல்லியிருக்கிறான். ஷாரோன் இறந்துபோவதற்கு இரண்டு நாளைக்கு முன் என்கிட்ட இதைச் சொன்னான். நான் கிரிஷ்மாவிடம் போனில் "ஜூஸில் என்ன கலந்துகொடுத்தாய் அந்த விஷத்தின் பெயரைச் சொல்லு அல்லது அந்த பாட்டிலையாவது போட்டோ எடுத்து அனுப்பு. சிகிச்சை கொடுக்கவேண்டும். அவன் உயிருக்குப் போராடிட்டு இருக்கிறான்' என கெஞ்சிக் கேட்டேன். இதைக் கேட்டுட்டிருந்த அவன், ‘"கிரிஷ்மா என்னை அப்படியெல்லாம் செய்யமாட்டாள். நான் அவளுக்கு தாலி கட்டி கல்யாணமும் செய்துட்டேன்'’ என்றான். மரணத்தின் கடைசி நிமிடம் வரை அவள் மீது நம்பிக்கை வைத்திருந்தான்'' என்றார்.
பத்தினிகள் மட்டுமல்ல...… காதலிகளும் கொலை செய்வார்கள்போல!