(16) கொரோனா அச்சமில்லா போர்க்களம்!

மைதியாகச் சென்றுகொண்டிருந்த உலகத்திற்கு ஓர் அதிர்ச்சிதரும் செய்தி, 2020-ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு முதல்நாள், அதாவது டிசம்பர் 31-ஆம் தேதி வந்து சேர்ந்தது. அப்பொழுது அந்தத் தகவலை யாருமே பொருட்படுத்திக்கொள்ளவில்லை. நாள்தோறும் வெளிப்படும் பல்லாயிரம் செய்திகளில் இதுவும் ஒன்றாக இருக்குமோ என்று கருதிக்கொண்டார்கள். ஆனால் அது வெகுவிரைவில் உலகத்தையே கட்டிப்போட்டு, தலைகீழாக தொங்கவிடப் போகிறது என்பதை அப்பொழுது யாருமே அறிந்திருக்க வில்லை.

சீனாவின் ஊகான் மாநிலத்திலிருந்து நிமோனியா காய்ச்சலைப் போன்ற ஒரு வைரஸ் பற்றிய செய்தி வெளிப்பட்டது. நுண்ணுயிரிகளை ஆராய்ந்த முதல் தலைமுறை விஞ்ஞானி பாஸ்டன், பிரபஞ்சத்தில் இத்தனை லட்சம் நுண்ணுயிரிகள் மத்தியில் எவ்வாறு இந்த மனிதக் கூட்டம் உயிர் வாழ்ந்திருக்கிறது என்று ஆச்சரியப்பட்டுப் போனார். தொலைவுமிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்னர், இறுதியில் அவர் கண்டறிந்த உண்மைதான், "மனிதக் கூட்டத்திடம் இயல்பாக அமைந்த எதிர்ப்பு சக்திதான் இதுநாள்வரை அவர்களைக் காப்பாற்றி வந்திருக்கிறது' என்பது.

kumbamela

Advertisment

இதற்கு முன்னர் வந்த நுண்ணுயிரிகளைவிட மானுடத்தை கோவிட் 19 அல்லது கொரோனா மிகவும் தீவிரமாக பாதித்துவிட்டது. பொதுமுடக்கம் என்ற சொல்லை இதற்கு முன்னர் நாம் கேட்டதில்லை. 2020 மார்ச்சு 26 மாலை அறிவிக்கப்பட்டது. 138 கோடி இந்திய மக்களும் பொது முடக்கம் செய்யப்பட்டார்கள். கொரோனாவின் பெயரில் கைககளைத் தட்டிப் பார்த்தோம், விளக்கணைத்தோம், அகல் விளக்கேற்றி னோம். இதையெல்லாம் கொரோனா செய்ய வைத்ததா? அல்லது மோடி செய்ய வைத்தாரா? என்பது இந்திய மக்களால் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று.

சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லியின் சிங்கு பகுதிக்கு வந்துசேர்ந்த நான், பல்வேறு மனிதர்களைச் சந்தித்தேன். எனக்கு அது சுதந்திரமான உலகமாகத் தோன்றியது. விரும்பிய போது தூங்கலாம். விரும்பியபோது கண் விழித்து எழுந்துகொள்ளலாம். என்னை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர் களையும் நான் அறிந்திருக்கவில்லை. எல்லா இடத்திலும் சுதந்திரமாக சுற்றித் திரிந்துகொண்டிருந்தேன். ஒரே ஒரு சந்தேகம் மட்டும் அடிக்கடி எழுந்து கொண்டே இருந்தது. கொரோனா உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில் யாருமே அங்கு முகக்கவசம் அணிய வில்லை. சமூக இடைவெளி இல்லை.

மருத்துவர் டெண்ட்டில் அமர்ந் திருந்த நான், அந்த இளம் மருத்துவ ரிடம் இதைப்பற்றி கேட்டேன். அவர் எல்லா விபரங்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார். அவரது உறவினரான பொறியியல்துறை சார்ந்தவரும் எங்கள் உரையாடலில் தேவைப்படும்போது பங்குபெற்றார். மருத்துவர் கூறிய தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

Advertisment

அவர் சிங்கு போராட்டப் பகுதிக்கு வருவதற்குமுன் அரசு மருத் துவமனையில் சிறப்பு பொறுப்பேற்று, கொரோனா பிரிவில் செயல்பட்ட அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். குளிர்காலம் ஆரம்பித்த நேரத்தில் கொரோனா தீவிரம் அடைந்தது என்றார். நோயாளிகள் எண்ணிக்கை கூடுதலானது. என் கண் முன்னாலேயே பலர் இறந்துபோனதைப் பார்த்திருக்கிறேன் என்றார். சிங்கு எல்லையிலோ மற்ற போராட்ட எல்லைகளிலோ நிகழ்ந்த அனுபவங்கள் வேறு வகையில் இருந்தது என்றார்.

நான் சிங்கு எல்லை வந்துசேர்ந்த பின்னர் முகக்கவசம் அணியவும் இல்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் இல்லை. கொரோனா அச்சம் என்னைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகியிருந்தது. இதனால் டெல்லி அல்லது சென்னையில் ஏற்பட்ட நெருக்கடி எனக்கு இங்கு இல்லை. நாள் முழுவதும் கொரோ னா குறித்து ஊடகங்கள் பிரச்சாரம் செய்து, ஏற்படுத்தும் எந்தப் பயமும் என் மனதில் இல்லை.

கொரோனா அச்சத்தில் உலகமே பயந்து ஓடி ஒளிந்துகொள்ள இடம் தேடிக்கொண்டிருக்கும் போது, போராட்டக் களத்தில் யாருமே ஏன் பயப்படாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வியை அவரிடம் கேட்டேன். அவர் லேசாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டார். "இந்த சிரிப்புக்கு அர்த்தம் என்னவென்று கேட்டேன். “நான் மனம்திறந்து உங்களிடம் பேசுகிறேன். உலகில் எத்தனையோ நிகழ்வுகளுக்கு விடை கிடைப்பதில்லை. அதைப்போலதான் இதுவும் எனக்கு'“என்றார்.

அடுத்து ஒரு கேள்வியை அவரிடம், “""நீங்கள் போராட்டக் களத்திற்கு வந்து எத்தனை காலம் இருக்கும்''’என்று கேட்டேன். அதற்கு அவர் ""இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது''’என்றார். ""இந்த இரண்டு மாதத்தில் நீங்கள் ஏதாவது கொரோனா நோயாளிகளை சந்தித்திருக்கீறீர்களா?'' என்று கேட்டேன். அவர் சில நொடிகள் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பின்னர் அவரிடம் “"இல்லை'’என்ற தெளிவான பதில் வந்தது.

நான் டெல்லி விமான நிலையத்தில் இறங்கியவுடனேயே, என்னுடன் வந்த சக பயணி கூறினார். ""டெல்லியின் கேஜ்ரிவால் ஒரு புதிய சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்'' என்று கூறினார்.

அது என்ன சட்டம் என்று புரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவரிடம் கேட்டேன். "டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் என்றார். முககவசம் அணியாத குற்றத்திற்கு அபராதம் ரூபாய் இரண்டாயிரம் என்பது எனக்கு கொஞ்சம் அதிகமாக தெரிந்தது. அப்பொழுது நான் போராட்டக் களத்தைப் பற்றியோ கொரானாவை பற்றியோ எதுவுமே யோசித்துப் பார்க்கவில்லை.

போராட்டம் நடைபெறும் சிங்கு எல்லையில், எந்தக் காவல்துறையும் இல்லை. போராட்டக் களம் தேர்வுசெய்து வைத்துள்ள தொண்டர் படைதான், எல்லாப் பிரச்சினை களையும் தீர்த்து வைக்கிறது. அன்புகலந்த கண்டிப்புடன் அவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை கவனித்திருக்கிறேன். எல்லாவற்றிலும் சுயக் கட்டுப்பாடு தெரிந்தது. அந்தப் போராட்டக் களத்தை விவசாயிகள் தனித்துவமிக்க தங்கள் உலகமாகவே மாற்றியிருந்தார்கள்.

விவசாயிகளின் இந்தப் போராட்ட உலகம் முடியும் இடத்தில், டெல்லி ராஜ்ஜி யம் தொடங்கி விடுகிறது. இங்கு கொரோனா என்ற ஒன்று இருப்பதாகவே மக்கள் உணர்ந்துகொள்ளவே இல்லை. ஆனால் டெல்லியின் கேஜ்ரிவால் பிரதேசத்தில், அங்கு முகமூடி அணியவில்லை என்றால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம். விவசாயிகள் உலகத்தில் அது இல்லை. வெளியுலகத்திலிருந்து எல்லாவிதத்திலும் வேறு பட்டிருக்கும் இந்த உலகம் எனக்கு கொரோனாவைப் போலவே ஆச்சரியத்தைக் கொடுத்தது.

மருத்துவரிடம் எனது உரையாடல் மேலும் தொடர்ந்தது. இவரைப் போன்ற எத்தனையோ மருத்துவர்களைப் போராட்டக் களத்தில் நான் பார்த்திருக்கறேன். எல்லோருமே ஊதியமின்றி பணியாற்றுகிறார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவர்களுடைய செயல்பாடுகள் பற்றி இன்னமும் ஆழமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.

அவசர ஊர்தி ஒன்று விநோத ஒலி எழுப்பி வருகிறது. மருத்துவர் அதை கூர்ந்து பார்க்கிறார். இதுபோன்ற ஊர்திகள் அடிக்கடி செல்வதைப் பார்த்திருக்கிறேன். பஞ்சாப், அரியானா, டெல்லியி லுள்ள சில மருத்துவமனைகளின் பெயர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. குளிர்கால மரணங்களுக்குப் பின்னர்தான் இந்த இந்த ஊர்திகள் வந்ததாக மருத்துவர் கூறினார்.

மருத்துவமனைகள் அனைத்தும் டெண்ட்டால் அமைக்கப்பட்டிருந்தாலும், சிறிய மருத்துவமனைகளும் பெரிய மருத்துவமனைகளும் இருந்தன. சிறிய மருத்துவ மனைகள் எண்ணிக்கையில் அதிகம். ஒருவர், ஒரு இடத்தில் நின்று பார்த்தால், அவர் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு மருத்துவமனை தெரிந்துவிடும். எல்லா இடத்திலும் மருந்துகளுக்கும் பஞ்சம் இல்லை. இந்த மருந்துகள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பது எனது மற்றொரு கேள்வி.

பஞ்சாப்பில் விவசாயிகள் செயல்பட்டதைப்போல, கண்ணுக்குத் தெரியாமல் மருத்துவமனைகளும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும், மருத்துவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இதை மருத்துவர் எனக்கு ஒவ்வொன்றாக விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்.

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் எல்லா இடங்களிலும் மக்களுக்கு சமமாக கிடைப்பதில்லை. பணம் இருந்தால் பெற்றுக்கொள்ளலாம். பணம் இல்லாதவருக்கு இவை எல்லாம் மறுக்கப்பட்டவை. போராட்டக்களத்தில் இவை மக்களுக்குக் கிடைத்தன. இவ்வாறு கிடைக்காதவர்களுக்கு அவை, கிடைப்ப தற்குக் கூர்ந்து கவனித்து கிடைக்கச் செய்கிறார்கள். உணவு, உடை, இருப்பிடம், மருத்துவத்தை அடுத்து சமுதாயத்திற்கு தேவைப்படுவது கல்வி. அது போராட் டக்களத்தில் எப்படி கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட் டுள்ளது என்பதும் ஒரு முக்கிய அனுபவமாகும்.

(புரட்சிப் பயணம் தொடரும்)