- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி
ஒரு காலைப் பொழுதில் அந்த இளைஞனை சந்தித்தேன். சூரியன் கண் விழித்துப் பார்க்காத விடியற் காலையைப் போல அந்தப்பொழுது காணப்பட்டது. குளிர் பிரதேசங்களில் காலை என்பது, 11 மணிக்கு மேல்தான். இருள் கொஞ்சம் விலகியும் பெரும் பகுதி விலகாமலும் இருந்த அந்த சூழலில், அந்த இளைஞனின் இருப்பிடம் எனக்கு மங்கலாகவே தெரிந்தது. அதை உற்றுக் கவனித்தேன். அதுவும் ஒரு டெண்ட்தான்.
சிங்கு எல்லையில் பல வகையான டெண்ட்களை’நான் பார்த்திருக்கிறேன். பெரும் பாலானவை ஒழுங்கற்று அலங் கோலமாய் இருக்கும். அவசரத் தில் தற்காலிகமாகத் தங்குவதற் கென்று அமைத்துக் கொண் டவை, ஆனால் இந்த ‘டெண்ட்’ ஒழுங்குடன் காணப்பட்டது. உய ரம், அகலம் எல்லாம் அளவோடு பார்ப்பதற்கு கச்சிதமாக இருந் தது. அதன் தோற்றம்தான் என் னை முதலில் இதைக் கவனிக்க வைத்தது. போராட்டக் களங் களில் இரண்டு அல்லது மூன்று மூங்கில் கழிகளை நட்டு, டெண்டு களை அமைத்துவிடுகிறார்கள்.
முன் பக்கத்தில் இருந்த மூங்கில் கழியில் துணி சுற்றப் பெற்று, பார்க்க அழகாக இருந் தது. அதில் தொங்கிய அட்டை யில் ஒரு வாசகம் எழுதப்பட்டி ருந்தது. ‘"நீங்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங் கள்'’என்ற வாசகம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழு தப்பட்டிருந்தது.
வாசகத்திற்கு கீழே தொங் கிக்கொண்டிந்த ஒரு பொருள் என் கண்ணில் பட்டது. அது காற்றில் இலேசாக ஆடிக்கொண் டிருந்தது. அதை மேலும் இரண்டு முறை கூர்ந்து கவனித்தேன். அது ஒரு நக வெட்டி. வடிவத்தில் கொஞ்சம் பெரிய நக வெட்டி. அதன் மேல் ரோஜாப்பூ நிற
- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி
ஒரு காலைப் பொழுதில் அந்த இளைஞனை சந்தித்தேன். சூரியன் கண் விழித்துப் பார்க்காத விடியற் காலையைப் போல அந்தப்பொழுது காணப்பட்டது. குளிர் பிரதேசங்களில் காலை என்பது, 11 மணிக்கு மேல்தான். இருள் கொஞ்சம் விலகியும் பெரும் பகுதி விலகாமலும் இருந்த அந்த சூழலில், அந்த இளைஞனின் இருப்பிடம் எனக்கு மங்கலாகவே தெரிந்தது. அதை உற்றுக் கவனித்தேன். அதுவும் ஒரு டெண்ட்தான்.
சிங்கு எல்லையில் பல வகையான டெண்ட்களை’நான் பார்த்திருக்கிறேன். பெரும் பாலானவை ஒழுங்கற்று அலங் கோலமாய் இருக்கும். அவசரத் தில் தற்காலிகமாகத் தங்குவதற் கென்று அமைத்துக் கொண் டவை, ஆனால் இந்த ‘டெண்ட்’ ஒழுங்குடன் காணப்பட்டது. உய ரம், அகலம் எல்லாம் அளவோடு பார்ப்பதற்கு கச்சிதமாக இருந் தது. அதன் தோற்றம்தான் என் னை முதலில் இதைக் கவனிக்க வைத்தது. போராட்டக் களங் களில் இரண்டு அல்லது மூன்று மூங்கில் கழிகளை நட்டு, டெண்டு களை அமைத்துவிடுகிறார்கள்.
முன் பக்கத்தில் இருந்த மூங்கில் கழியில் துணி சுற்றப் பெற்று, பார்க்க அழகாக இருந் தது. அதில் தொங்கிய அட்டை யில் ஒரு வாசகம் எழுதப்பட்டி ருந்தது. ‘"நீங்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங் கள்'’என்ற வாசகம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழு தப்பட்டிருந்தது.
வாசகத்திற்கு கீழே தொங் கிக்கொண்டிந்த ஒரு பொருள் என் கண்ணில் பட்டது. அது காற்றில் இலேசாக ஆடிக்கொண் டிருந்தது. அதை மேலும் இரண்டு முறை கூர்ந்து கவனித்தேன். அது ஒரு நக வெட்டி. வடிவத்தில் கொஞ்சம் பெரிய நக வெட்டி. அதன் மேல் ரோஜாப்பூ நிறத்தி லான பிளாஸ்டிக் வேலைப் பாடுகள் இருந்தன. இவ்வாறான வடிவத்தில், இதுபோன்ற நிறத் தில் நகவெட்டியை நான் பார்த்ததில்லை.
நகம் வெட்டிக்கொள்ளுதல் மனிதரின் தேவைகளில் ஒன்று. பல் துலக்குதல், உடலின் அழுக்கைப் போக்கிக்கொள்வதைப் போல இது அன்றாட நடவடிக்கை இல்லை. பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இது நமக்கு தேவைப்படுகிறது. நகம் வளர்ந்து சில நேரங்களில் பிரச்சனைகளைத் தந்துவிடும். அந்த நேரங்களில் நகவெட்டி தேடி கிடைக்காவிட்டால் நம் மீதே நமக்கு கோபம் வந்துவிடும். காற்றில் ஆடிக்கொண் டிருந்த நகவெட்டி, இப்பொழுது உற்ற நண்பனைப் போல எனக்கு காட்சி தந்தது. அதன் அருகே சென் றேன். வெட்டப்படாமல் சிறிது அழுக்குடன் காணப் பட்டன நகங்கள். அருவெறுப்புடன் அதைக் கவனித்தேன். என் வாழ்க்கையில் சிலவற்றில் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறேன். எனக்குள் குற்ற உணர்வு வந்துவிட்டது. கவனமாக ஒவ்வொரு நகமாக வெட்டிக்கொண்டேன். என் போன்ற மனிதரின் பிரச்சனையை உணர்ந்து எத்தகைய பொறுப்புடன் இந்த நக வெட்டியை வைத்திருக்கிறார்கள். மனதுக்குள் ஒரு சிறு மகிழ்ச்சி.
இந்த தருணத்தில் அந்த டெண்ட்டை மிகவும் நெருக்கத்தில் என்னால் பார்க்க முடிந்தது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதி பெரி யது. மற்றொன்று சிறியது. சிறிய பகுதியில் தங்கிக் கொள்ளுவதற்குரிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு கட்டில் இருப்பது தெரிகிறது. அடுப்பு ஒன்று இருக்கிறது. எழுதுவதற்கு, படிப்பதற்கு ஏற்றவாறு ஒரு மேஜையும் நாற்காலியும் இருக்கிறது.
டெண்டின் பெரிய பகுதி மருத்துவத்திற்கான பகுதி. மருந்தும், மருந்து பாட்டில்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கண்ணில்படுமாறு இரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவியும், ஸ்டெத்தும், வேறு சில மருத்துவ உபகரணங்களும் இருந்தன. வயது முதிர்ந்த சிலர் வரிசை யாக நிற்கிறார்கள். அவர் களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அளந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் இளைஞர்.
இளைஞர் மருத் துவரா? மருத்துவத் துறை சார்ந்தவரா என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நான் வரிசை யில் நின்று அவர் அருகில் செல்கிறேன். ரத்தத்தில் சக்க ரையைச் சோதிக்க வேண் டுமா? என்று இந்தியில் கேட் கிறார். நான் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறேன். அவர் என்னை அண்ணாந்து பார்க்கிறார். நானும் அருகிலிருந்து பார்க்கிறேன். நடுத்தர உயரம் கொண்டவர். கண்களில் கனிவு இருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்தவன் என்று என்னை நான் அறிமுகம் செய்துகொள்கிறேன். அவர் நெஞ்சில் கைவைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். கை கூப்பி வணக்கம் தெரிவிப்பதைவிட, நெஞ்சில் கை வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறை அங்கு கூடுதலாக இருக்கிறது.
"நான் உங்களோடு பேச வேண்டும்'“ என் கிறேன். வரிசையைப் பார்க்கிறார். ஏழு பேர் நிற் கிறார்கள். கை கடிகாரத்தைப் பார்க்கிறார். "மதியம் இரண்டு மணிக்கு வர முடியுமா?' என்கிறார். மதியம் இரண்டு மணிக்கு அவரை சந்தித்தபோது, எனக்காக பல அரிய தகவல்கள் காத்திருந்தன. "மருத் துவப் பட்டம் பெற்றவரா? அல்லது வேறு மருத் துவப் பிரிவைச் சேர்ந்தவரா?' என்ற சந்தேகத்திற்கு சரியான விளக்கம் அங்கு எனக்கு கிடைத்தது.
மருத்துவப் பட்டம் பெற்று, போட்டித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, சுகாதாரத் துறையில் மாவட்டத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். இதை அறிந்துகொண்டபோது, அவரை நான் கொஞ்சம் ஆச்சரியத்தோடு பார்த்தேன். சில மாதங்கள் விடுப்பு கொடுத்துவிட்டு போராட்டக் களம் வந்து சேர்ந்ததாகவும் கூறினார். போராட்டத்திற்கு மருத்துவப் பணியாளர் மாத விடுப்புடன் வந்திருப்பது எனக்கு சிறிது அதிர்வைத் தந்தது. அவர் கிராமப்புறக் கல்வி கற்று, மருத்துவப் பட்டம் பெற்று, மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்றவர்.
நான் அவரைப் பற்றிய தகவல்களை அறிந்தவுடனேயே, இன்றைய கார்ப்பரேட் மருத்துவ உலகத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டேன். மனிதஉடலை ஒரு வர்த்தகம் சார்ந்த பொருளாகத்தான் பார்க்கிறது கார்ப்பரேட் மருத்துவம். மனித உடலின் மீதான அபிமானமோ, அதன் உறுப்புகள் மீதான எந்த மரியாதையோ அதற்குச் சிறிதுகூட இல்லை. உடலையும் உயிரையும் பணயமாக எடுத்துக்கொண்டு, பணத்தைக் கொள்ளையடிக்கப் பேரம் பேசும் நடவடிக்கையாகத்தான் அனைத்தும் தெரிகிறது. உலக அளவில் விரிந்துநிற்கும் இந்த கார்ப்பரேட் மருத்துவத்தின் கோரமுகத்தையும் இந்த இளைஞ னின் முகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். மனதிற்குள் நம்பிக்கையும் அதை ஒட்டிய மகிழ்ச்சியும் பிறக்கிறது.
மேலும் அவரிடம் எனக்கு சில தகவல்கள் தேவைப்படு கின்றன. அரசு மருத்துவப் பணியில் இருந்துகொண்டே அதற்கு விடுப்பு கொடுத்துவிட்டு, போராட்டத்திற்கு வந்ததிருக்கிறார். அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, அங்கு நடந்தவற்றை ஒவ்வொன்றாக விளக்கத் தொடங்கினார். மக்கள் ஆதரவோடு பஞ்சாபிலிருந்துப் புறப்பட்ட போராட்டம் பல்வேறு புதிய பிரச்சினைகளைச் சந்திக்கிறது.
நவம்பர் மாதத்தில் தொடங்கிய போராட்டம்.... டிசம்பர், ஜனவரி மாத்ததில் கடும் குளிரை சந்ததிக்க நேர்ந்தது. அப்பொழுது கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள் மரணமடையத் தொடங்கினார்கள். அதன்பின்னர்தான் "நம்மால் முடிந்ததைச் செய்வோம்' என்று புறப்பட்டு வந்ததாக மருத்துவர் கூறினார். மருத்துவத் துறை சார்ந்தவர்கள் அனைவரும் அப்பொழுது புறப்பட்டு போராட்டக் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.
அவருடன் நடத்திய உரையாடல் எனக்கு உற்சாகத்தைத் தந்தது. எல்லா விபரங்களையும் அவர் தெளிவாக அறிந்தவராக இருந்தார். உலக கார்ப்பரேட் அரசியல் பற்றிய அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார். இறுதியாக அவர் கூறிய வார்த்தை என் நெஞ்சத்தின் ஆழத்தில் அப்படியே நின்றுவிட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பத்தில் வெள்ளையனைப் புரிந்து கொண்டதைப் போலவே, இந்த கார்ப்பரேட் கொள்ளையனையும் புரிந்து கொண்டு போராடத் தொடங்கிவிட்டோம் என்கிறார்.
இந்த நேரத்தில் இவரை ஒத்த மற்றொரு இளைஞர் அங்கு வந்துசேர்ந்தார். அவர் பொறியியல் பட்டதாரி. இந்த மருத்துவரின் நெருங்கிய உறவினர். அவரும் தனியார் துறை ஒன்றில் நல்ல ஊதியம் பெற்றுவருபவர். அவரும் தனக்கு உதவிசெய்ய வந்திருப்பதாக மருத்துவர் கூறினார். "இவர் உங்களுக்கு என்ன உதவி செய்கிறார்?' என்று கேட்டேன். அதற்கு அவர், ‘"அவன் பாதி டாக்டர் ஆகிவிட்டான்'’என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
அந்த தருணத்தில்தான் நான் புதிய கேள்வி ஒன்றை மருத்துவரிடம் கேட்டேன் அது,‘கொரோனா’ பற்றியது.
(புரட்சிப் பயணம் தொடரும்)