- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி

ந்துத்துவத்தின் வருண தருமம், மக்களை சாதி அடிப்படையில் பிரித்து, இழிதொழில் செய்வதற்கு சில சாதிகளையும், சுரண்டிப் பிழைப்பதற்கு சில சாதிகளையும் உருவாக்கிக் கொண்டது. இறந்த பின்னர் பிணத்தைப் புதைப்பது, முடி திருத்துதல், துணி வெளுத்தல், செருப்புத் தைத்தல் போன்ற தொழில்கள், இழிதொழில்கள் என்ற கருத்தை உருவாக்கி, இந்தத் தொழில் களை செய்பவர்களை இழிசனங்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும், முத்திரை குத்தி வைத்துக் கொண்டது இந்துத்துவா.

வருண தருமத்தை லங்கர் என்னும் சீக்கியர்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். தீண்டாமை மிகவும் விநோதமான ஒன்று. வெளித்தோற்றத்திற்கு தீண்டாமையின் எதிரிகளாகப் பலர் காட்டிக்கொண்டாலும் அடியாழத்தில் சாதி பலரை விட்டு அகலுவதில்லை. சில நேரங்களில் அணுகுமுறைகளில் இல்லை என்றாலும் மனதள வில் சாதி செயல்படுவதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளா கிறோம். ஆனால் லங்கர் வருண தருமத்தை அங்கீகரிக்க வில்லை. வேறுபாடுகளற்ற பொதுமனித இணக்கத்தை இது வலியுறுத்துகிறது. லங்கரில் சாதியின் சுவடுகளோ தீண்டாமையோ இல்லை. இது மட்டுமல்லாது, இதில் அடங்கியிருக்கும் நுட்பமான செயல்பாடு ஒன்று, எனக்கு வியப்பை அளித்தது. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இவ்வாறான செயல்பாடுகள் இல்லை.

போராட்டக் களத்தில் உணவு தரும் அமைப்புகளைத் தவிர வேறு லங்கர்களும் இருந்தன. இந்த அமைப்புகளைப் பற்றி புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக எனக்கு நிஷாந்த்சிங் என்ற நண்பன் கிடைத்தான். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சார்ந்த சிறுநகரமான ராஜ்புராவைச் சேர்ந்த வன். அவனது சந்திப்பு ஒரு வித்தியாசமான சூழலில் நிகழ்ந் தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் எனக்குக் குளிக்க வாய்ப் பில்லாமல் போய்விட்டது. உடைகளிலும் அழுக்கேறி விட்டது. குளிப்பதற்கும் துவைப்பதற்கும் இங்கு வாய்ப் பில்லையே என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது அவனிடம் இது பற்றிக் கேட்டேன். அவன் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு ஓரிடத்திற்குச் சென்றான். அது நான்குமாடிக் கட்டிடத்தின் முன் பகுதி.

Advertisment

mm

கட்டிடம் ஒரு வணிக வளாகமாக இருந்திருக்க வேண்டும். அதில் ஃஎஈ என்னும் விளம்பரப் பலகை அப்படியே இருக்கிறது. இப்பொழுது அது போராடும் விவசாயிகளின் தங்கும் இடமாக மாறியிருக்கிறது. சில கட்டிடங்களை, அதன் உரிமையாளர்கள் போராட்டக் காரர்கள் தங்கி, பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி தந்திருக்கிறார்கள். கடுங்குளிரில் மக்கள் இறந்து போய் விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். போராட்டக்காரர்கள் அதில் டெண்டு அமைத்திருக்கிறார்கள். அதில் ஆண்களுக்கு தனி இடம் என்றும், பெண்களுக்கு தனியிடம் என்றும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது பார்ப்பதற்கே வித்தியாசமாகத் தோற்றம் தருகிறது. பல வண்ணங்களில் டெண்டுகள். அந்த சிறிய குடில் வாழ்க்கை, அவர்களுக்கு தனித்த மகிழ்ச்சியை தருகிறது.

நிஷாந்த்சிங் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பஞ்சாப் இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாட்டுப் போட்டிகள் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. தாய், தந்தை, பெற்றோர் கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் என்று விளையாட்டு வீரர்களைப் பெருமையாக பேசிக்கொள்வதை நான் கவனித்திருக்கிறேன். நிஷாந்த்சிங் மிகச்சாதாரணமாக, ஒரு தகவலை என்னிடம் சொன்னார். தான் கபாடிக் குழுவின் தேசிய ஆட்டக்காரன் என்று. என்னால் இதை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவனது உடல் கபாடிக்குரிய பலம் பொருந்தியதாக எனக்கு தெரியவில்லை.

Advertisment

நான் சந்தேகம் கொள்வதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். அதற்குப்பின் மேலும் அவனது இரண்டு நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்தான். அவர்களும் தேசிய விளையாட்டு வீரர்கள் என்றான். எனக்கு மேலும் குழப்பம் ஏற்பட்டது. சில நேரங்களில் தங்கள் முக்கியத்துவத்தை, மற்றவர்கள் கூடுதலாக உணர வேண்டும் என்பதற்காக சிலர் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்வார்கள். அப்படித்தான் நிஷாந்த்சிங் சொல்வதும் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது.

அந்த இருவரும் நிஷாந்த்சிங் வயதை ஒத்தவர்கள். ஒருவர் பெயர் ஷஸ்விந்திர் சிங். வயது 18 வயது. மற்றவர் சேகஷ்பீரித்சிங் சந்த், வயது 20. இருவரும் அண்ணன்-தம்பி. என்னைக் கூர்ந்து பார்த்தார்கள். பணிவுடன் வணக்கம் சொன்னார்கள். அண்ணன்-தம்பி உறவு எப்பொழுதுமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தம்பி கலகலப்பான சுபாவம் கொண்டவர். அண்ணன் அவ்வாறு இல்லை. எதையும் சிந்தித்துப் பேசும் இயல்பு கொண்டவர். அவரிடம் ஒரு வித்தியாசமான உணர்வைக் கவனித்தேன்.

இருவரைப் பற்றியும் நிஷாந்த் சொன்னபோது எனக்கு கூடுதல் சந்தேகம் வந்தது. "தூப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய அளவில் nnமுதன்மைநிலையில் இருப்பவர்கள்' என்றார். இதை நிஷாந்த் சொன்னவுடனேயே அண்ணன் சேகஷ் பீரித்சிங் சந்த் பேசத்தொடங்கினான். அது அவர் தம்பி திறமை பற்றியது. "துப்பாக்கிச் சுடும் போட்டியில் நான் ஏற்படுத்திய சாதனையை தம்பிதான் முறியடித்தார்' என்பதைச் சொல்லும்போது அவரது முகத்தில் தம்பியைப் பற்றிய பெருமை வெளிப்பட்டது. ஆனால் அவரது தம்பியை இந்த வெற்றியோ, பெருமைகளோ எதுவுமே செய்துவிடவில்லை. அவர் விளையாட்டுத் தனத்துடன் காணப்பட்டார். இவர்கள் தெரிவித்த தகவல்கள் என்னை மேலும் குழப்பமடைய வைத்தது.

நிஷாந்த்சிங், அவரது நண்பர்கள் பற்றி தர்க்கரீதியாக சிந்திக்கத் தொடங்கினேன். விளையாட்டு வீரர்கள் பயிற்சி குறித்த, பல்வேறு தகவல்களை வாசித்திருக் கிறேன். தேசிய விளையாட்டு வீரர்கள் என்றால், அவர்கள் அன்றாடம் மிக கடினமான பயிற்சி செய்ய வேண்டியவர்கள். போராட்டக் களத்தில் தங்குவதே பெரும்பாடு, எவ்வாறு இவர்களால் பயிற்சி செய்யமுடியும் என்ற யோசனை எனக்கு வந்துவிட்டது. இங்கு தங்கி உங்களால் கடினமான பயிற்சி களைச் செய்ய முடியுமா என்பதையும் கேட்டுவிட்டேன். "உடற்பயிற்சி அனைத்தையும் செய்துகொண்டுதானே இருக் கிறோம்' என்றார்கள். இந்தப் பதில் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அதன் பின்னர் எனக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

அது அந்த வணிக வளாகத்தின் தலைமறைவுப் பகுதி. அரையிருள். கொஞ்சம் வெளிச்சம் மட்டும் வந்துகொண்டிருந் தது. வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம். அதில் அந்தப் பயற்சிக்கூடம் இருந்தது. பார்த்தவுடனேயே அதிர்ச்சியில், மௌனமானேன். எல்லா விளையாட்டுக்குமான பயிற்சி சாதனங்கள் அங்கு இருந்தது. சில இளைஞர்களும் சிறுவர்களும் பயிற்சியும் செய்துகொண்டிருந்தார்கள். ஒரு குறு கிய காலத்தில் தேவையான வசதிகளுடன் அந்த தற்காலிகப் பயிற்சிக்கூடத்தை அமைத்திருந்தார்கள். "போராட்டக் களத்தில் இவ்வாறான வாழ்க்கை முறை உலகில் எங்காவது இருந்திருக்குமா?' என்று யோசிக்கத் தொடங்கிவிட்டேன்.

அந்த விளையாட்டு வீரர்கள் மூவரும் பயிற்சிக்கூடத்தில் பயிற்சிகளை செய்யத் தொடங்கினர். அவர்கள் செய்த பயிற்சி, நாங்கள் தேசிய விளையாட்டு வீரர்கள்தான் என்பதை எனக்கு நிரூபித்துக் காட்டுவதைப்போல இருந்தது. நிஷாந்த்சிங், தன் மேலாடைகளைக் களைந்து பயிற்சிக்குத் தயாரான போது, அவன் வேறுவிதமாக எனக்குத் தெரிந்தான். அவனது வயிற்றுப் பகுதியைத் தொட்டுக் காட்டினான். ""சிக்ஸ்பேக் தெரியுமா?'' என்றான். அப்பொழுதுதான் சிக்ஸ்பேக் பற்றி தெரிந்துகொண்டேன். அவன் வயிற்றில் ‘சிக்ஸ்பேக்’ இருந்தது. அவன் ஒரே இடத்தில் நின்றுகொண்டே உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினான். நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். வானத்தை நோக்கிப் பாய்ந்து மூன்று பல்டிகள் அடித்து தரைக்கு வந்து உடலில் குலுக்கல் எதுவும் இல்லாமல் நின்றான். இது கபாடி விளையாட்டுக்குத் தேவையான பயிற்சி என்றான். பார்வைக்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் அவனுக்குள் இத்தனை திறமையா? நான் நிஷாந்த்சிங் கையைப் பற்றிக் குலுக்கினேன்.

அவன் மேலும் சொன்னான், ""எங்கள் மூவருக்கும் இங்கு இரண்டு கடமைகள். ஒன்று விளையாட்டு, பயிற்சி மற்றொன்று என்று அவன் கூறியவை... "இவர்களிடம் இப்படி ஒரு வாழ்க்கை முறையா?' என்ற எண்ணத்தை எனக்கு தோற்றுவித்துவிட்டது.

(புரட்சிப் பயணம் தொடரும்)