""ஹலோ தலைவரே, 2024 பிறந்திருக்கும் இந்த நேரத்தில், தமிழக அரசிய லில் நிறைய அதிரடி மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழல்கள் தெரியுது.''’’
""ஆமாம்பா, தமிழகத்தில் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் திட்டத்தில் டெல்லி இருக் குதே?''’’
""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை அ.தி. மு.க.வுடனான கூட்டணி விவகாரத்தில், மௌன மாக இருப்பது போல் வெளியில் தெரிந்தாலும், தங்கள் கூட் டணிக்கு வந்தே தீரவேண்டும் என்று பலர் வழியாகவும் மிரட்டல் தொனியில் அது அ.தி.மு.க.வுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. எடப்பாடி, கூட்டணிக்கு ஒத்து ழைக்காத பட்சத்தில், அதி.மு.க. மாஜி மந்திரிகளான வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது ரெய்டு நடவடிக்கைகளைக் கடுமையாக மேற்கொள்ளவும் டெல்லி தயாராக இருக் கிறதாம். இதற்கிடையே, அ.தி.மு.க.வில் எடப் பாடிக்கு இருக்கும் செல்வாக்கை குறைக்கும் வகையில், வேலுமணியைக் கொண்டு அ.தி.மு.க.வை உடைப்பது என்றும், அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்றும், அப்படி உடைத்து உருவாக்கப்படும் கட்சிக்கு சசிகலாவை பொதுச் செயலாளராக அமர்த்துவது என்றும் பல்வேறு வியூகங்களை டெல்லி வகுத்து வருகிறதாம். அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா முடிந்த பிறகு, எடப்பாடிக்கு எதிரான பா.ஜ.க.வின் அதிரடி ஆக்சன்கள் தொடங்க லாம் என்கிறது டெல்லியிலிருந்து வருகிற தகவல்கள்.''’’
""தமிழகம் வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அ.தி.மு.க. கூட்டணி வேண்டவே வேண்டாம்னு அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?''’’
""ஆமாங்க தலைவரே, இரண்டு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்திருந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி சொன்னதன் பேரில் தீவுத் திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல் நாளே அஞ்சலி செலுத்திவிட்ட அண்ணாமலையை மீண்டும் அங்கே அழைத்துச்சென்றார் நிர்மலா. இந்த அஞ்சலி எல்லாம் முடிந்ததும், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசில் நிர்மலா சீதாராமன் ஓய்வு எடுத்தார். அப்போது அண்ணாமலையுடன் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தார். அப்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணியை மீண்டும் நாம் உருவாக்கக் கூடாது என்று அண்ணாமலை சொன்னதோடு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதும் நாம் ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் மக்கள் நம்மீது ஆர்வம் காட்டுவார்கள் என்றும் வலியுறுத்திப் பேசினார். டெல்லியில் என்ன நடக்குதுன்னு தெரியாமலே பேசுறியேப்பாங்கிற பார்வையோடு, அவர் பேசுவதையெல்லாம் கொட்டாவி விட்டபடியே கேட்டுக் கொண்டாராம் நிர்மலா சீதாராமன்.''’’
""பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருக் கிறாரே?''’’
’""தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதன் முதலாக கடந்த 29ஆம் தேதிதான் தலைமைச் செய லகத்துக்கு ஜி.கே.மணி யுடன் சென்று முதல்வரை சந்தித்தார் ராமதாஸ். பரஸ்பர நல விசாரிப்பிற்குப் பின், வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் , தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்திய ராமதாஸ், இவற்றைச் செய்வதன் மூலம் இந்த அரசு பெரியாரின் சுயமரியாதை அரசு என்கிற பாராட்டை வெகுவாகப் பெறலாம் என்றும் சொல்லியிருக்கிறார். ஸ்டாலினோ, இது குறித்து கவனிக் கிறேன் என்று சொன்னதோடு அமைதியாகிவிட்டார். இந்த சந்திப்பின் போது, அரசுத் தரப்பில் அமைச் சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு மற்றும் அரசின் உயரதிகாரிகள் சிலரும் இருந்திருக் கிறார்கள். ராமதாஸின் சந்திப்புக்கு முதல்வரிடம் நேரம் வாங்கிக்கொடுத்தவர் அமைச்சர் துரைமுருகன்தான் என்கிறார்கள்.'' ’’
""இந்த சந்திப்பு, கூட்டணி மாற்றமாக மாற வாய்ப்பிருக்கா?''
""பா.ம.க.வைப் பொறுத்தவரை அன்புமணிக்கு தி.மு.க. கூட்டணியில் சேரலாம்கிற எண்ணமிருக்கு. அவரது மாமனாரான தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மூலமாக தனக்கொரு எம்.பி. சீட்டை உறுதி செய்யலாம்னு நினைக்கிறாரு. ஆனால் ராமதாஸை பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணியில் இருந்த பழைய அனுபவங்களால் இதற்குப் பெரிதாய் விருப்பமில்லையாம். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்த வரை ராமதாஸ்-முதல்வர் சந்திப்பு குறித்து ஒருவித சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதாம்.''
""தீயணைப்புத்துறை இணை இயக்குநரான பிரியா ரவிச்சந்திரன், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக்கப்பட்டிருக்கிறாரே?''’’
""ஆமாங்க தலைவரே, ஏறத்தாழ காவல்துறையைப் போன்றதுதான் தீயணைப்புத்துறை. இதில் பணி யாற்றிய எவரும் இதற்கு முன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாய் ஆனதில்லை. இந்த நடைமுறை இப்போது உடைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முதல்வரின் செயலாளராக இருந்த உதயசந்திரன் இதற்காக செய்த சிபாரிசை நிலுவையில் வைத்திருந்த ஒன்றிய அரசு, இப்போது அதைக் கிளியர் செய்து, பிரியாவை ஐ.ஏ.எஸ். ஆக்கியிருக்கிறது. இதற்கு முன்பும் இப்படி ஒரு பெண் அதிகாரி விவகாரத்தில் உதயசந்திரனின் சிபாரிசு பலித் திருக்கிறது என்கிறார்கள் கோட்டைத் தரப்பினர். பிரியா ரவிச்சந்திரன், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணிக்கு உறவினராம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க தி.மு.க. வெற்றிபெற்ற நிலையிலும் கொங்குமண்டலமான கோவையில் 11 இடங்களில் அ.தி.மு.க. பலமாக வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக இருந்தது வேலுமணி தரப்பின் தாராளமான கரன்சிப் பாசனமாம். பெரும்பாலும் இந்த கரன்சிப் பாசனத்துக்கு அப்போது பிரியாவின் உதவியால் தீயணைப்புத்துறை வாகனங்களே பயன் படுத்தப்பட்டதாம். அப்படிப்பட்ட பிரியா, தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்த்தப்பட்டிருப்பது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பிலேயே திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.''’’
""சர்ச்சைக்குரிய காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறதே?''’’
""எடப்பாடி தலைமையிலான கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அரங்கேற்றப்பட்ட துப்பாக்கிச் சூடையும், உயிர்ப்பலிகளையும் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த விவகாரத்தை விசாரிக்க அமைக்கப் பட்டிருந்த அருணா ஜெகதீசன் கமிட்டி, இந்த கொடுஞ்செயலுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை தனது விசாரணை அறிக்கையில் பட்டியல் போட்டுக்காட்டியிருந்தார். அவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த சைலேஷ்குமார் யாதவ்விற்கு தற்போது டி.ஜி.பி.யாக பதவி உயர்வு தரப்பட்டிருக்கிறது. இது காவல்துறை தரப்பிலேயே புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.''’’
""’சென்னையின் புறநகர் பகுதியில் க்ரைம் ரேட் அதிகமாகிறது என்கிற டாக் காவல்துறையிலேயே இருக்கிறதே?''’’
""உண்மைக்தாங்க தலைவரே, குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கூலிப் படையினரின் அட்டகாசம் அதிகமாகிவிட்டது என்கிறார்கள் பலரும் திகிலோடு. காரணம், கடந்த 6 மாதத்தில் மட்டும், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காட்டூர் காளி, செங்கல்பட்டு பா.ம.க. நகர செயலாளர் பூக்கடை நாகராஜ், மண்ணிவாக்கம் மெடிக்கல் கடைக்காரர் வினோத் குமார் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் லோக்கல் ஆட்கள் அதிகம் இல்லை. பெரும்பாலும் வெளியூர் கூலிப் படையினர்தான் இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார் களாம். இது குறித்து காவல்துறை மேலிடமே மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத்திடம் கடுமையாக விசாரித் திருக்கிறதாம். நம்மிடம் இது குறித்துப் பேசிய சில காவல்துறை அதிகாரிகள், ‘ கூலிப்படையினரை வளர்த்து விடுவது இந்தப் பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு ரவுடிதான். அவருக்கு அரசியல் ரீதியில் உதவிகள் கிடைப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என்கிறார்கள் சங்கடமாய்.''’’
""அ.தி.மு.க. பொதுக்குழுவில் கே.பி.முனுசாமியைப் பார்க்க முடியவில்லையே?''’’
’""ஆமாங்க தலைவரே, கடந்த 26ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனு சாமி பங்கேற்கவில்லை. இது அந்தக் கட்சியினர் மத்தியிலேயே முதலில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத் தியது. பின்னர் விசயம் தெரிந்த பிறகுதான் எல்லோரும் அமைதி யானார்களாம். அண்மையில் கே.பி. முனுசாமியின் தந்தையார் பூங்காவனம் மறைந்துவிட்டார். அவரது 16-ஆம் நாள் காரியம் 27ஆம் தேதி நடக்க இருந்தது. இந்த நிலையிலும் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் அவர் இருந்தாராம். ஆனால் எடப்பாடிதான், 16 ஆம் நாள் காரியம் முடியாமல் எந்த நிகழ்ச்சியிலும் நீங்கள் கலந்து கொள்ளாதீர்கள். அது தீட்டு. நீங்கள் அதை மீறி பொதுக்குழுவுக்கு வந்தால், நிகழ்ச்சியே தீட்டாகிவிடும். அதனால் நம் கட்சிக்கு கெடுபலன்கள்தான் ஏற்படும் என்று தவிர்க்கச்சொல்லிவிட்டாராம். அதேசமயம், பகுத்தறிவாளரான கே.பி. முனுசாமி, எடப்பாடியின் சடங்கு பற்றிய சென்டிமெண்ட்டை ரசிக்கவில்லை என்கிறார்கள், அவரது நண்பர்கள்.''’’
""கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலைய குத்தகையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வருதேப்பா''’’
""ஆமாம் தலைவரே, இந்த ஒப்பந்தத்தை பி.வி.ஜி. இந்தியா என்ற தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 2,40,00,000 லட்சம் ரூபாய் என்ற தொகைக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தின் மூலம், ஆண்டுக்கு சுமார் 71 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்க வாய்ப்பு இருப்பதா சொல்றாங்க. 40,000 சதுர அடியில் 105 கடைகள் கட்டப் பட்டுள்ளன. ஒரு சதுரஅடிக்கு 500 ரூபாய் மாத வாடகைன்னாகூட 40,000 சதுர அடிக்கு 2 கோடி ரூபாய் வரையில் மாத வாடகை வசூல் ஆகும். இதுலயே வருடத் துக்கு 24 கோடி கிடைக்கும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஒரு ஆம்னி பேருந்து உள்ளே வருவதற்கு 400 ரூபாய் கட்டணம். பேருந்து நிலையத்தில் நிறுத்தப் படும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம், விளம்பரக் கட்டணம், தங்கும் விடுதிக் கான வாடகை என ஆண்டுக்கு சுமார் 70 கோடி ரூபாய் வருமெனவும் துறையின் அமைச்சர் சொல்லியும், அவரைப் பொருட்படுத்தாமல் கட்சித் தமைமையில் செல்வாக்குள்ள ஐய்யப்பனின் மாற்றுப் பெயர்கொண்ட ஒருவரின் அழுத் தத்தால் குறைந்த தொகைக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டி ருப்பதாக அரசு அதிகாரிகளே புலம்புறாங்களாம்.''’’
""“நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அமலாக்கத்துறையின் ரெய்டு நட வடிக்கைக்கு ஆளான மணல்புள்ளிகளில் ராமச்சந்திரனும், ரத்தினமும் தெலுங்கானாவுக்குச் சென்று சந்திரசேகர ராவிடம் அடைக்கலமாகிவிட்ட நிலையில், தனியொரு நபராக மணல் களத்தில் புகுந்து விளையாடி வருகிறார் கரிகாலன். அவர் தற்போது எம்.பி. சீட்டு கேட்டு தி.மு.க. தரப்பை அணுகியிருக் கிறாராம். தனது மணல் விவகார சிக்கல்களை எளிதாக சமாளிக்க, எம்.பி. பதவி இருந்தால் வசதியாக இருக்கும் என்று நினைத்துதான், அவர் எம்.பி. பதவியைக் குறி வைத்திருக்கிறாராம். கட்சியின் மேல் மட்டத்தில், பலரோடும் நெருக்கம் பாராட்டிவரும் கரிகாலனுக்கு என்ன பதில் சொல்வது என்று இன்னும் அறிவாலயத் தரப்பு யோசித்துக் கொண்டு இருக்கிறதாம்.''