போதைப் பொருள்களை ஒழிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஒருபக்கம் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அதைப்பற்றிக் கொஞ்ச மும் கவலைப்படாமல் சமூக விரோதிகள் சிலர், சட்டவிரோத போதைப் பொருட்களை கடத்தியும், விநியோகித் தும் சட்டம் ஒழுங் கிற்கு சவால் விட்டு வருகின்றனர்.
குறிப் பாக, தமி ழகத்தின் கிழக்குக் கடற் கரைப் பகுதியை சர்வதேசக் கடத் தல் கும்பல்கள் விருப்பம்போல் தங்களின் வில்லங்க விவகாரங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றன. அதிலும் வேதாரண்யம் முதல் ராமநாதபுரம், தூத்துக்குடி வரையிலான பகுதிகளில் அவர்கள் இஷ்டம்போல் விளையாடி வருகின்றனர்.
ஆந்திராவில் தங்கியிருக்கும் கஞ்சா புரோக்கர்கள், அங்கிருந்து பண்டல் பண்டலாக கஞ்சாப் பொருட்களை வாங்கி, கிழக்கு கடற் கரை வரை கார்களில் கடத்திச் சென்று, பிறகு கடல் மார்க்கமாக மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குக் கொண்டு செல்கின்றனராம்.
இப்படி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மற்றும் கஞ்சா லேகியம் போன்ற பொருட்கள் பிடிபட்டுள்ளன. இதையும் மீறி, பல நூறு டன் கஞ்சா பொருட்கள் போலீஸின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இலங்கைக்குப் போய் சேர்ந்திருக்கிறதாம்.
இதையறிந்த போலீசார் தங்கள் உளவாளிகள் மூலம் தகவல்களைக் கறந்து, அதன்மூலம் கடத்தல் கஞ்சா பண்டல்களை கைப்பற்றிவருகின்றனர். எந்த இடத்திலிருந்து கடலுக்குள் கடத்திச் செல்ல திட்டமிட்டிருக்கிறார்களோ, அதிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் பண்டல்களை வைத்துப் பாது காக்கின்றனராம். பல இடங்களில் இறால் பண்ணைகளை கஞ்சா பதுக்கல் குடோன்களாக அவர்கள் மாற்றி வைத்துள்ளனர் என்று விபரமறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.
அதேபோல், ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பண்டல்களில் பாதியை, சென்னையில் இறக்கி வைத்துவிட்டு, மீதியை புதுக்கோட்டை -அறந்தாங்கி வழியாக ராமநாத புரம் மாவட்டம் தொண்டி கடற்கரைக்கு கொண்டுபோய், அங்கிருந்தும் இலங்கைக்கு அனுப்ப உள்ளனர் என்ற தகவல் அண்மையில் காவல்துறைக்குக் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே, மாவட்ட போலீசாரை அலர்ட் செய்ய, அவர்கள் தீவிரக் கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு சிவப்பு நிற கார் மற்றும் 2 பைக்குகளை அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார், குரும்பூர் அருகே மறித்தனர். அப் போது, காரில் வந்த ஒரு நபர் தப்பி ஓடிவிட... மற்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்ல, சந்தேகம் தீராத போலீஸார் அவர்களின் காரை சோதனை செய்தனர்.
அப்போது அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து கார் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரனை செய்தபோது... அவர்கள் சென்னை, எம்.ஏ நகர், முண்டியம்மன் கோயில் தெரு, பாரதிராஜா மகன் நாகராஜன், ராமநாதபுரம் மாவட்ட புழுதிக்குளம் தவமுருகன், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஸ்டாலின் கிறிஸ்டோபர் என்று தெரியவந்தது. தப்பி ஓடியவர் சென்னை பாடியநல்லூர் ஜோதிநகர் போஸ் மகன் ராகுல் என்பதும் தெரியவந்தது.
தப்பியோடிய ராகுலை போலீசார் தேடிவந்த நிலையில்... தடுமாறி விழுந்து கால் ஒடிந்த நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த ராகுலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவர்கள் சொன்ன தகவலின் பேரில் சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த 50 கிலோ கஞ்சா பண்டல்களையும் போலீசார் கைப்பற்றினர். சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய சில போலீ சார் "திருவாரூர், நாகபட்டினம் கடற்கரை பகுதியைச் சேர்ந்த சிலர் ஆந்திராவில் போய் தங்கியுள்ளனர். இவர்கள் கஞ்சாவை மொத்த மாக வாங்கி, வெளியில் அனுப்புகின்றனர். இவர்களைத் தொடர்பு கொள்ளும் கஞ்சா வியாபாரிகளுக்கு மொத்தமாக பண்டல் பண்டலாக கட்டி அனுப்புகின்றனர். இந்த கஞ்சா கடத்தலுக்கு இளைஞர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிகமாக இலங்கைக்கே இவை கடத்தப்படுகிறது. அதற்கு கிழக்கு கடற்கரையையே தேர்ந்தெடுக்கிறார்கள் இந்த கடத்தல் வில்லன்கள். கடற்கரை வரை அவற்றைக் கொண்டு செல்ல ஒரு டீம், கடலுக்குள் கொண்டு போக ஒரு டீம் என பல டீம்களாக அவர்கள் வேலை செய்கின்றனர். இந்த வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையை அவர்கள் கடத்தல் சாலையாக மாற்றி வருகின்றனர்.இவர்களால் எங்கள் துறையே மிரட்சியில் இருக்கிறது''’என்கிறார்கள் கவலையாய்.
இப்படி சட்டவிரோத போதைப் பொருட் களைக் கடத்தும் வில்லாதி வில்லன்களால், இளைய சமுதாயத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாவதால், இப்படிப்பட்ட கிரிமினல்களைத் தீவிரமாகக் கண்காணித்து முற்றிலுமாக ஒடுக்க, காவல்துறை முன்வர வேண்டும். இதுவே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.