"ஹலோ தலைவரே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலியைப் பதவிநீக்கம் செய்வதற்கான வேலைகள் வேகமெடுத்திருக்கு.''”
"விளையாட்டுத்துறையின் சீரியஸ் பிரச்சினையில இருந்து ஆரம்பிக்கிறியேப்பா. பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போடலைன்னா, கிரிக்கெட் வாரியப் பதவியில் யாரும் இருக்கமுடியாதுன்னு அந்தத் தரப்பு காட்ட நினைக்குது.''”
"உண்மைதாங்க தலைவரே, கங்குலி, பா.ஜ.க.வில் சேருவார். அவர் மூலம் மேற்குவங்கத்தில் கட்சியைப் பலப்படுத்தி, அங்கு மம்தாவுக்கு எதிராக கங்குலியைக் களமிறக்கலாம்னு பா.ஜ.க. கணக்குப் போட்டுதான், அவரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ஆக்குச்சு. ஆனால் பலமுறை அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மூலம் நிர்ப்பந்தம் கொடுத்தும், கங்குலி, அதுக்கு வேற ஆளைப் பாருங்கன்னு உறுதியாகச் சொல்லிட்டாராம். இதனால் கடுப்பான பா.ஜ.க. தலைமை, 2025 வரை நீடிக்கவேண்டிய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து கங்குலியை, பாதியிலேயே தூக்கும் முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கு கங்குலியின் பரம எதிரியான இந்தியா சிமெண்ட் சீனிவாசனும் ஒத்து ஊதறாராம். யாருக்கு எதிராக கங்குலியைக் கொம்பு சீவிவிட பா.ஜ.க. நினைத்ததோ, அந்த மம்தாவே கங்குலிக்கு ஆதரவாக, பா.ஜ.க.வின் நடவடிக்கைகளைக் கண்டித்து, பா.ஜ.க.வுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.''”
"பிரதமர் மோடி, தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க, 30-ஆம் தேதி தமிழகம் வரப்போறார்ன்னு தகவல் வருதே?''”
"இது ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான மருது அழகுராஜ் தரப்பால் கிளப்பிவிடப்பட்ட செய்தின்னு பரவலா தகவல் அடிபடுது. இதனால் இவர்கள் மீது தமிழக பா.ஜ.க. தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறதாம். காரணம், தென்மாவட்டங்களில் இருக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியையும் வளைக்கணும் என்பது பா.ஜ.க.வின் திட்டமாம். இந்த நிலையில் தேவர் ஜெயந்திக்கு மோடி வருவதாகச் செய்தி பரவினால், அது அவர்களின் வாக்கு வங்கியைப் பெரிதும் பாதிக்கும்னு பா.ஜ.க. தரப்பு நினைக்குது. இந்த நிலையில் டெல்லிவரை இந்தத் தகவல் பரவியதால், பிரதமர் அலுவலகம், யார் இப்படி தேவை இல்லாத செய்திகளை எல்லாம் கிளப்பறதுன்னு காட்டமாகவே விசாரித்ததாம்.''”
"எடப்பாடி தரப்பைச் சேர்ந்த கே.பி.முனுசாமி யை, சசிகலா தொடர்புகொண்டு பேசியிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் பொன் விழா குறித்து விவாதிக்க எடப்பாடி கூட்டிய அ.தி. மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில், அவர் தரப்பைச் சேர்ந்த சீனியரான கே.பி.முனுசாமி கலந்துகொள்ளாதது குறித்து, நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். இதற்கு, அவருக்கு வைரஸ் காய்ச்சல்ன்னு அவர் தரப்பில் இருந்தே காரணமும் சொல்லப்பட்டிருந்தது. இந்தத் தகவல் ஓ.பி.எஸ். மூலம் சசிகலா காதுக்குப் போக, அவர் உடனே கே.பி.முனுசாமியைத் தொடர்பு கொண்ட
"ஹலோ தலைவரே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலியைப் பதவிநீக்கம் செய்வதற்கான வேலைகள் வேகமெடுத்திருக்கு.''”
"விளையாட்டுத்துறையின் சீரியஸ் பிரச்சினையில இருந்து ஆரம்பிக்கிறியேப்பா. பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போடலைன்னா, கிரிக்கெட் வாரியப் பதவியில் யாரும் இருக்கமுடியாதுன்னு அந்தத் தரப்பு காட்ட நினைக்குது.''”
"உண்மைதாங்க தலைவரே, கங்குலி, பா.ஜ.க.வில் சேருவார். அவர் மூலம் மேற்குவங்கத்தில் கட்சியைப் பலப்படுத்தி, அங்கு மம்தாவுக்கு எதிராக கங்குலியைக் களமிறக்கலாம்னு பா.ஜ.க. கணக்குப் போட்டுதான், அவரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ஆக்குச்சு. ஆனால் பலமுறை அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மூலம் நிர்ப்பந்தம் கொடுத்தும், கங்குலி, அதுக்கு வேற ஆளைப் பாருங்கன்னு உறுதியாகச் சொல்லிட்டாராம். இதனால் கடுப்பான பா.ஜ.க. தலைமை, 2025 வரை நீடிக்கவேண்டிய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து கங்குலியை, பாதியிலேயே தூக்கும் முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கு கங்குலியின் பரம எதிரியான இந்தியா சிமெண்ட் சீனிவாசனும் ஒத்து ஊதறாராம். யாருக்கு எதிராக கங்குலியைக் கொம்பு சீவிவிட பா.ஜ.க. நினைத்ததோ, அந்த மம்தாவே கங்குலிக்கு ஆதரவாக, பா.ஜ.க.வின் நடவடிக்கைகளைக் கண்டித்து, பா.ஜ.க.வுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.''”
"பிரதமர் மோடி, தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க, 30-ஆம் தேதி தமிழகம் வரப்போறார்ன்னு தகவல் வருதே?''”
"இது ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான மருது அழகுராஜ் தரப்பால் கிளப்பிவிடப்பட்ட செய்தின்னு பரவலா தகவல் அடிபடுது. இதனால் இவர்கள் மீது தமிழக பா.ஜ.க. தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறதாம். காரணம், தென்மாவட்டங்களில் இருக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியையும் வளைக்கணும் என்பது பா.ஜ.க.வின் திட்டமாம். இந்த நிலையில் தேவர் ஜெயந்திக்கு மோடி வருவதாகச் செய்தி பரவினால், அது அவர்களின் வாக்கு வங்கியைப் பெரிதும் பாதிக்கும்னு பா.ஜ.க. தரப்பு நினைக்குது. இந்த நிலையில் டெல்லிவரை இந்தத் தகவல் பரவியதால், பிரதமர் அலுவலகம், யார் இப்படி தேவை இல்லாத செய்திகளை எல்லாம் கிளப்பறதுன்னு காட்டமாகவே விசாரித்ததாம்.''”
"எடப்பாடி தரப்பைச் சேர்ந்த கே.பி.முனுசாமி யை, சசிகலா தொடர்புகொண்டு பேசியிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் பொன் விழா குறித்து விவாதிக்க எடப்பாடி கூட்டிய அ.தி. மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில், அவர் தரப்பைச் சேர்ந்த சீனியரான கே.பி.முனுசாமி கலந்துகொள்ளாதது குறித்து, நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். இதற்கு, அவருக்கு வைரஸ் காய்ச்சல்ன்னு அவர் தரப்பில் இருந்தே காரணமும் சொல்லப்பட்டிருந்தது. இந்தத் தகவல் ஓ.பி.எஸ். மூலம் சசிகலா காதுக்குப் போக, அவர் உடனே கே.பி.முனுசாமியைத் தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து கனிவாக விசாரித்து விட்டு, நான் நேரில் வந்து பார்க்கிறேன்னு சந்தடிச் சாக்கில் பிட்டைப் போட்டிருக்கார். இதைக்கேட்டு அரண்டுபோன முனுசாமி, அதெல்லாம் வேண்டாம். குட்டையைக் குழப்பிடாதீங்க. நீங்கள் விசாரித்ததே போதும்னு சொல்லிட்டாராம்.''”
"இது எடப்பாடிக்கு ஷாக்கைக் கொடுத்திருக்குமே?''
"உண்மைதாங்க தலைவரே, சசிகலா கே.பி. முனுசாமியுடன் பேசினார்னு தெரிஞ்சதுமே, கிளி எதிர் மரத்துக்குப் பறந்திடுமோன்னு பதறிப்போன எடப்பாடி, ’"என்னண்ணே… அந்த அம்மா உங்ககிட்ட பேசினாங்களாமே?'ன்னு கேட்க, "பொதுவா உடல்நலம் விசாரிச்சாங்க. நேரில் வர்றேன்னும் சொன்னாங்க, நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்'னு சொல்லியிருக்கிறார் முனுசாமி. எடப்பாடியோ, "அண்ணே, நாம எந்த சதிக்கும் பலியாயிடக் கூடாதுண்ணே'ன்னு கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். இந்த நிலையில் கே.பி.முனுசாமி, கட்சி தாவப்போகி றார்னு ஓ.பி.எஸ். தரப்பிலிருந்தே செய்தி கசியவிடப் பட, டென்சனான முனுசாமியோ, ‘"அடிக்கடி அணி தாவுற ஆள் நான் இல்லை'ன்னு’ குரல் உயர்த்தியிருக்கார்.''
"எடப்பாடி தரப்புக்கு ஆப்பு வைப்பதிலேயே மோடி அரசு குறியா இருக்கு போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, அது நிலைக் குழுக்களை அமைக்கும் விசயத்திலும் அப்பட்டமா தெரிஞ்சிருக்கு. அ.தி.மு.க.வின் 3 ராஜ்யசபா எம்.பி.க்களில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.யாக இருக்கும் ஒரே ஒரு எம்.பி. தர்மர். ஒன்றிய அரசின் நாடாளுமன்ற நிலைக் குழுக்களில், தொழிலாளர் மற்றும் ஜவுளித்துறையைச் சார்ந்த நிலைக்குழுவின் உறுப்பினராக அவரை நியமித்திருக் கிறது மோடி அரசு. இந்த நிலைக்குழுவின் உறுப்பினராக தங்கள் தரப்பைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தை நியமியுங்கள்னு பரிந்துரை செய்திருந்தார் எடப்பாடி. ஆனால், அதைத் தூக்கிக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி. யான தர்மருக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது டெல்லி. இதனால் மூடு அவுட் ஆகியிருக்கிறார் எடப்பாடி. சீனியரான சண்முகத்தை தவிர்த்து விட்டு, தர்மருக்கு வாய்ப்பு தந்திருப்பது அ.தி. மு.க.வில் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்குது.''
"கனியாமூர் சக்தி பள்ளிக்காக பெரும் பணம் வசூல் நடந்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, கனியாமூர் சக்தி பள்ளி நிறுவனரான ரவிக்குமாரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வழக்கு செலவுகளுக்காகவும், பள்ளித் தரப்பை ஆதரித்துப் பேசுகிறவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்காகவும், பள்ளியைப் புனரமைப்பதற்காகவும் ரூ.100 கோடி அளவுக்கு நிதியைத் திரட்டித் தந்திருக்கிறார்களாம். சமூக விசுவாசத்தில், அ.தி.மு.க. மாஜிக்களான எடப் பாடி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரின் பினாமிக் கணக்குகளில் இருந்தும் பெருந்தொகை இங்கே பெயர்ந்திருக்கிறதாம். இதனால் குஷி மூடில் இருக்கும் ரவிக்குமார், தன் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இப்படி சமூகத்திடமிருந்து போனஸாக வந்த தொகையில் எந்த வருடத்தையும் விட இந்த வருடம் தாராளமாக தீபாவளி போனஸ் போட்டிருக்கிறாராம். இதற்கிடையே மாணவி ஸ்ரீமதியின் அம்மாவான செல்வி, தன் மகள் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு பதிலாக சிறப்பு டீம் விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு, முதல்வரைச் சந்திக்க இருக்கிறாராம்.''”
"சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.க்கான காய் நகர்த்தல் வேகமெடுத்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, தற்போதைய டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு விரைவில் ஓய்வுபெற இருப்பதால், அந்த இடத்தை யாரைக்கொண்டு நிரப்புவது என்கிற கேள்வி எழுந் துள்ளது. டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதமும் ஐ.பி.எஸ். அதிகாரியான சங்கரை அந்த இடத்தில் அமர்த்தும் முயற்சியில் இருக்கிறார்கள். சங்கர் கேரளக்காரர். இதே பதவியைக் குறிவைத்திருக்கும் மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரியான மகேஸ்குமார் அகர்வாலை, சி.பி.சி.ஐ.டி.யின் டி.ஜி.பி.யாக மாற்ற நினைக்கிறாராம் டேவிட்சன். டெல்லியில் இருந்து உள்துறை அமித்ஷா தரப்போ, மகேஷ்குமார் அகர்வாலை டி.ஜி.பி.யாக ஆக்கும் முயற்சியில் இருக்கிறது. காரணம், அவரது சகோதரர் பா.ஜ.க. ஐ.டி. விங்கில் இருக்கிறாராம்.''”
"அமித்ஷா கூட்டும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்குவாராங்கிற கேள்வி டெல்லிப் பக்கம் இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, இந்திய மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறை செயலாளர்கள், மாநில காவல்துறை தலைவர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் மாநாட்டை அக்டோபர் 27, 28-ல் அரியானா மாநிலத்தில் கூட்டுகிறார், ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருப்பவர்களே பெரும்பாலும் அந்தந்த மாநிலத்தின் முதல்வராகவும் இருக்கிறார் கள். எனவே, பெரும்பாலான மாநில முதல்வர்கள் இந்த மாநாட்டில் கலந்துக்க இருக்காங்க. அந்த வகையில் தமிழகத்தின் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், அமித்ஷா கூட்டி யுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்வாரா? என்ற கேள்வி இப்போதே டெல்லி வட்டாரத்தில் சுழன்றடிக்கத் தொடங்கியிருக்கிறது.''”
"இந்த விசயத்தில் முதல்வரின் மூடு எப்படி?''”
"தமிழகத்தின் நலன்களுக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் எதிராக ஆளுநரை வைத்து, இணை அரசாங்கத்தை நடத்தத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமித்ஷா கூட்டும் மாநாட்டை முதல்வர் புறக் கணிக்கலாம் என்று கோட்டையில் பேசப்படுகிறது. அதேசமயம், தமிழக மக்களுக்கு நல்லது நடக்கணும்னா, ஒன்றிய அரசுக்கு இணக்கமாகத் தான் செல்லவேண்டும்; அதனால் அந்த மாநாட் டில் கலந்துகொண்டு தமிழக மக்களின் உணர்வு களைப் பதிவுசெய்யும் வகையில் ஒன்றிய அரசுக்கு எதிராகச் சொல்லவேண்டிய கருத்தை அழுத்தமாக முதல்வர் பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் தேசிய அளவில் ஸ்டாலினின் இமேஜ் இன்னும் உயரும்ன்னு தமிழ்ப் பற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொல்றாங்க.''
"ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, இந்த விசயத்தில் எந்த ரியாக்சனையும் அதிகாரிகளிடம் கூட காட்டாமல் இருக்கிறாராம்.''”
"மறைந்த உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவிற்கு அஞ்சலி செலுத்த இருந்த கனிமொழி, கடைசியில் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டாரே?''
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. சார்பில் முலாயம் சிங்கிற்கு அஞ்சலி செலுத்த யாரை அனுப்பு வதுன்னு டிஸ்கஷன் நடந்தது. இதைத் தொடர்ந்து எம்.பி.க்களான டி.ஆர்.பாலுவையும் கனிமொழியை யும் உ.பி.க்கு சென்று வரச்சொன்னார் ஸ்டாலின். பிறகு, திடீரென கனிமொழிக்கு பதிலாக அவர் உதயநிதியை அனுப்பிவைத்தார். இதுகுறித்து அறிவாலயத் தரப்பில் விசாரித்தபோது, கனிமொழி செல்வதாக இருந்தது உண்மைதான். ஆனால், டி.ஆர். பாலுதான், உதயநிதியை அழைத்துச் செல்கிறேன். தேசிய அளவில் அவருக்கு ஒரு டச் இருக்கும்னு தலைவர் ஸ்டாலினிடம் சொல்ல, அதற்கு முதல் வரும் இசைவு தெரிவித்துவிட்டார். அதனால்தான் கனிமொழி போகவில்லை என்றார்கள்.''”
"அது சரிப்பா, டி.ஆர்.பாலுவுக்கும் அமைச்சர் ஒருவருக்கும் உரசல் ஏற்பட்டிருக்கே?''”
"தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமாக மதுபான உற்பத்தி ஆலை ஒன்று இருக்கிறது. இங்கிருந்தும் மதுபானங் களை கொள்முதல் செய்துவரும் அரசின் டாஸ்மாக் நிறுவனம், அண்மைக்காலமாக கொள்முதல் செய்யும் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டதாம். அவரது ஆலை மேனேஜரோ, சில பல விசயங்களைச் சொல்லி, அமைச்சர் செந்தில்பாலாஜி யிடம் "நீங்கள் ஒருமுறை பேசினால் எல்லாம் சரியாகும்' என்று சொல்ல, நேற்று தி.மு.க.வுக்கு வந்தவரிடம் போய் நான் பேசணுமா? என்று டென்ஷனான பாலு, வேறு வழியின்றி, அமைச்சரைத் தொடர்புகொண்டு அதிகார தொனியில் கேட்டிருக்கிறார். எல்லாவற் றிற்கும் சரி, சரி என தலையாட்டிய செந்தில் பாலாஜி, "பார்க்கலாம் வாங்க'’என்று அலட்சிய மாகச் சொன்னாராம். டி.ஆர்.பாலு தன்னிடம் பேசிய முறை பற்றி, முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார் செந்தில்பாலாஜி. இதைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலுவைத் தொடர்புகொண்ட ஸ்டாலின், டாஸ்மாக் கொள்முதல் விசயத்தில் நீங்க தலையிடாதீங்க. முறைப்படி என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்னு கறார் தொனியில் சொல்ல, ரொம்பவே நொந்துபோய்விட்டாராம் பாலு.''
"நானும் ஒரு தகவலை பகிர்ந்துக்கிறேன் தலைவரே... அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 51-ஆவது ஆண்டு தொடக்கத்தை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பு தனித்தனியாக கொண்டாடி பரபரப்பை கிளப்பியிருக்காங்க. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த எடப்பாடி, அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றி, கட்சி நிர்வாகிகளோடு குரூப் போட்டோ எடுத்துட்டு அலுவலகத்துக் குள்ள போயிட்டார். தி.நகர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்குப் போன ஓ.பி.எஸ்., அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெ. மற்றும் தலைவர்கள் படங்களுக்கு மலர் தூவி வணங்கி விட்டு, அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித் தார். அடுத்ததா, புறாவையும் பறக்க விட்டார். இந்த சமாதானப்புறா யாரை சமாதானப்படுத்தன்னு கட்சித் தொண்டர்கள் பேசிக்கிட்டாங்க.''
__________
இறுதிச் சுற்று!
தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத் திற்கு அக்டோபர் 17, திங்களன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. அ.தி. மு.க.வில் ஏற்பட்டுள்ள அதிகார மோதலில் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ்.ஸை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரை சமீபத்தில் நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நீக்கத்தையும் நியமனத்தையும் அங்கீகரிக்குமாறு எடப்பாடி தரப்பிலிருந்து சபாநாயகரிடம் கடிதம் தரப்பட்டது. "அந்த கடிதத்தை ஏற்கக்கூடாது என்றும், அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அதன் முடிவு தெரியும் வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது' என்றும் ஓ.பி.எஸ். தரப்பிலும் கடிதம் கொடுக்கப்பட்டது.
இதனால், யாருடைய கோரிக்கையை சபாநாயகர் ஏற்பார் என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.வில் நீடித்தே வந்தது. இந்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸின் கோரிக்கையை ஏற்றி ருக்கிறார் சபாநாயகர். சட்டசபைக்கு வந்த ஓ.பி.எஸ்., எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார். அ.தி.மு.க. உறுப்பினர் களின் இருக்கைகளில் எந்த மாற்ற மும் செய்யப்படவில்லை. மேலும், சபாநாயகர் தலைமையில் இயங்கும் அலுவல் ஆய்வுக்குழுவின் உறுப்பின ராக ஓ.பி.எஸ். இருப்பதால் அவரையே ஆய்வுக்குழுவின் கூட்டத்திற்கும் அழைத்தார் அப்பாவு. ஆக, பேரவை யின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்.தான் என்பதை தி.மு.க. அரசு அங்கீகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் லோக் சபாவின் அ.தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் ரவீந்திரநாத்தின் அங்கீ காரத்தை ரத்து செய்யுமாறு எடப்பாடி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாதது போல, தமிழக சட்டமன்றத்திலும் எடப்பாடி வைத்த கோரிக்கை நிராகரிக்கபட லாம் என்று ஏற்கனவே நக்கீரனில் நாம் பதிவு செய்திருந்தோம். அதை சபாநாயகர் தற்போது உறுதி செய்திருக்கிறார். எடப்பாடியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் உட்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேரவையில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். தனக்கும் ஓ.பி. எஸ்.ஸுக்கும் அருகருகே இருக்கை இருப்பதால் "கூட்டத்தொடர் முழு வதையும், தான் மட்டும் புறக்கணிக்க லாமா?' என்கிற யோசனையில் இருக்கிறார் எடப்பாடி.
-இளையர்