அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதுகுறித்து தனிக்குழு அமைத்து குளறுபடிகள் குறித்து விசாரணை செய்யவேண்டும் எனவும், அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சென்னை சேப்பாக்கத்தில் 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறது. இதில் இந்தியா முழுவதுமுள்ள அறுவைச் சிகிச்சை மருத்துவர் கள் மொத்தம் 42,793 பேர் உறுப்பினராக இருந்துவருகிறார்கள். இந்த சங்கத்துக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்தலும், வருடந்தோறும் ஒரு தேர்தலும் நடத்தப்படுமாம்.
அதில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் தேர் தலில் ஒவ்வொரு மாநிலத் திற்கும் சுமார் 2-லிருந்து 4 பேர் வரை நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வுசெய்ய தேர்தல் நடத்தப்படும். அதேபோல வரு டந்தோறும் நடத்தப்படும் தேர்தல் துணைத் தலை வருக்கான தே
அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதுகுறித்து தனிக்குழு அமைத்து குளறுபடிகள் குறித்து விசாரணை செய்யவேண்டும் எனவும், அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சென்னை சேப்பாக்கத்தில் 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறது. இதில் இந்தியா முழுவதுமுள்ள அறுவைச் சிகிச்சை மருத்துவர் கள் மொத்தம் 42,793 பேர் உறுப்பினராக இருந்துவருகிறார்கள். இந்த சங்கத்துக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்தலும், வருடந்தோறும் ஒரு தேர்தலும் நடத்தப்படுமாம்.
அதில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் தேர் தலில் ஒவ்வொரு மாநிலத் திற்கும் சுமார் 2-லிருந்து 4 பேர் வரை நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வுசெய்ய தேர்தல் நடத்தப்படும். அதேபோல வரு டந்தோறும் நடத்தப்படும் தேர்தல் துணைத் தலை வருக்கான தேர்த லாக இருக்கும். இதில் தேர்வாகும் துணைத்தலைவர் அடுத்தவருடம் நேரடி யாகத் தலைவராக நியமிக்கப்படுவார். அந்த தலைவர் தலைமையில்தான் இந்த இரு தேர்தலும் நடக்கும்.
அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்க தலைவரை, ஆரம்பகால கட்டத்தில் உறுப்பினர்களின் மூலமாக நேரடியாக வாக்கெடுப்பு நடத்தி தேர்வுசெய்து வந்துள்ள னர். காலப்போக்கில் ஒரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டு, அந்த நிறுவனத்தின் மூலமாக மின்னணு தேர்தல் இயந்திரம் மூலமாக நடத்தப்படுகிறது. அப்படி கடந்த மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாக புகாரெழுந்துள்ளது.
இந்தாண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தேர்தல், தலைவர் பிரவின் சூரிய வன்சி தலைமையில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் பொறுப்பை, தனியார் நிறுவனமான நித்தியம் கம்ப்யூட்டர் மின்னணு நிறுவனத்திடம் ஒப்ப டைத்துள்ளார். இந்த சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களின் ஈ-மெயில் ஐ.டி.யையும், தொலைபேசி எண்ணையும் வைத்து ஒரு லிங்க் உருவாக்கி அதன்மூலமாக ஓ.டி.பி. அனுப்பி, உறுப்பினர்களின் கைபேசி அல்லது மடிக்கணினி வழியாக வாக்குகளை அவர்களே நேரடியாக இருந்த இடத்திலிருந்தபடியே செலுத்தும்வகையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு 31.07.24 தேதி வெளி யிடப்பட்டு, இறுதி முடிவு 04.11.24-ஆம் தேதி அறிவிக்கப் படும் எனத் தெரி வித்திருந்தது.
அறுவை சிகிச்சை நிபுணர் சங் கத்தின் துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த மருதுபாண்டியும், ரமணமூர்த்தி ஆகியோரும் போட்டியிட்டுள்ளனர். அதேபோல தமிழக மாநில 4 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் மாரிமுத்து, பாலமுருகன் கோவிந்தராஜ், ராஜசேகர், விவேகானந்தன், செந்தில்குமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவளிக்கும்படி உறுப்பினர்களிடம் வாக்கு சேகரிக்கலாமே தவிர, உறுப்பினர்களின் வாக்குகளை இவர்களே அவர்களின் ஓ.டி.பி.க் களைப் பெற்று வாக்குகளை செலுத்தக் கூடாது. ஆனாலும் இவர்கள் அந்த வகையில்தான் வாக்குகளைச் செலுத்தியுள் ளார்களாம். அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு நபரை வைத்து காய் நகர்த்தியுள்ளாராம் மருதுபாண்டி.
இந்த முறை தனக்குவேண்டியவரை துணைத் தலைவராக தேர்வுசெய்துவிட்டால் அடுத்தாண்டு அவர் தலைவர் ஆகிவிடுவார். அந்த துணைத் தலைவர் பதவி உனக்குத்தான் என மருதுபாண்டி சொல்லவே, அந்த ஆசையில் மேலும் ஒரு மருத்துவர், தனி டீம்வைத்து வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இவர் மட்டுமின்றி, வேட்பாளர் பாலமுருகனும் மற்றொரு மருத்துவரிடம் தொலைபேசியில், “"உங்களின் ஓ.டி.பி. மட்டும் சொல்லுங்க. மற்றதை நான் பாத்துக்கிறேன்'' என பேசும் ஆடியோ சிக்கியுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளைக் கடந்து தேர்தல் நடந்து முடிந்து, 4-ஆம் தேதி காலையில் வெற்றி பெற்றவரை அறிவிக்கவேண்டும். 9 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தாமதமாகிக்கொண்டே சென்றது. அரைமணி நேரத்தில் அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை, சர்வர் சிக்கல் எனக்கூறி காலதாமதம் ஏற்படுத்தி 9 மணி நேரம் கடந்து 6.15 மணிக்கு அ.தி.மு.க. மருதுபாண்டி வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர்.
நித்தியம் கம்ப்யூட்டர் மின்னணு நிறுவனம் 6.28 மணி தொடங்கி 6.49 மணி வரை டெக்னிக்கல் பிரச்சனையில் இருந்ததாகத் தெரிவித்திருந்த நிலையில், எப்படி 6.15 மணிக்கு வெற்றிபெற்றதாக அறிவிக்கமுடியும்? இந்த நித்தியம் நிறுவனம் ஆர்த்தோ சங்கத் தேர்தலையும் இதேபோலவே, விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று முறைகேடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த தேர்தலை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்” என விவேகானந்தன் புகார் கொடுத்துள்ளார்.
சங்கத் தேர்லுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை என்ற கேள்வியெழலாம். உலக அளவில் உள்ள அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இந்த சங்கத்தின் மூலமே நடைபெறும். இதில் தலைவராக இருப்பவரிடம் செல்வாக்கைச் செலுத்த, மருந்து நிறுவனங்கள், மருத்துவ உபகரண நிறுவனங்கள் வருடத்திற்கு 20 கோடிக்கு மேல் செலவழிப்பார்கள். இதுவே இந்த சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு வர அடிபிடி ஏற்பட முதன்மைக் காரணம் என்கிறார்கள்.
-சே