"ஹலோ தலைவரே, வானிலை ஆய்வாளர்களையே குழப்பியடித்து, பெரிதாக மிரட்டி வந்த "ஃபெஞ்சல் புயல் ஒருவழியாகக் கடந்திருக்கிறது.''
"ஆமாம்பா, கடலோர மாவட்டங்களில் புயல் அதிக மூர்க்கம் காட்டிய நிலையிலும் சென்னை தப்பித்திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த ஃபெஞ்சல் புயல் பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்த போதே, சென்னைக்கு பெரும் பாதிப்பும் சேதமும் இருக்கும் என பலரும் கணித்தனர். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் நேரடிப் பார்வையில் பாதுகாப்புப் பணிகளை மேற் கொண்டதால், தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் தப்பித்துவிட்டது. அதே நேரம், பிற கடலோர மாவட் டங்களை புயலின் முரட்டுத்தனம், விட்டு வைக்கவில்லை. குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் மூர்க்கத் தாண்டவம் ஆடியிருக்கிறது.''”
"டிசம்பர் 6-ல் தன்னை மையமாகக் கொண்டு உருவாக இருந்த ஒரு பெரும் சூறாவளியை, திருமாவளவன் திடீரெனத் தவிர்த்திருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செய லாளரான லாட்டரி மார்ட்டினின் மருமகன் அர்ஜுன் ரெட்டி, பல கோடிகள் செலவில் டிசம்பர் 6-ல் நடத்தும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க.வை விமர்சித்துவரும் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யையும், திருமாவளவனையும் ஒரே மேடையில் ஏற்றி, அரசியல் களத்தில் பெரும் சூறாவளியை உருவாக்கத் திட்டமிட்டார். இதன்மூலம் திருமாவை, தி.மு.க. கூட்டணியை விட்டு நகர்த்திவிட வேண்டும், அல்லது அதுபோன்ற தோற்றத்தையாவது உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் இது ஒரு நூல் வெளியீட்டுவிழாதானே என்ற கோணத்தில் விஜய் வருவது தெரிந்தும், இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்த
"ஹலோ தலைவரே, வானிலை ஆய்வாளர்களையே குழப்பியடித்து, பெரிதாக மிரட்டி வந்த "ஃபெஞ்சல் புயல் ஒருவழியாகக் கடந்திருக்கிறது.''
"ஆமாம்பா, கடலோர மாவட்டங்களில் புயல் அதிக மூர்க்கம் காட்டிய நிலையிலும் சென்னை தப்பித்திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த ஃபெஞ்சல் புயல் பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்த போதே, சென்னைக்கு பெரும் பாதிப்பும் சேதமும் இருக்கும் என பலரும் கணித்தனர். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் நேரடிப் பார்வையில் பாதுகாப்புப் பணிகளை மேற் கொண்டதால், தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் தப்பித்துவிட்டது. அதே நேரம், பிற கடலோர மாவட் டங்களை புயலின் முரட்டுத்தனம், விட்டு வைக்கவில்லை. குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் மூர்க்கத் தாண்டவம் ஆடியிருக்கிறது.''”
"டிசம்பர் 6-ல் தன்னை மையமாகக் கொண்டு உருவாக இருந்த ஒரு பெரும் சூறாவளியை, திருமாவளவன் திடீரெனத் தவிர்த்திருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செய லாளரான லாட்டரி மார்ட்டினின் மருமகன் அர்ஜுன் ரெட்டி, பல கோடிகள் செலவில் டிசம்பர் 6-ல் நடத்தும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க.வை விமர்சித்துவரும் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யையும், திருமாவளவனையும் ஒரே மேடையில் ஏற்றி, அரசியல் களத்தில் பெரும் சூறாவளியை உருவாக்கத் திட்டமிட்டார். இதன்மூலம் திருமாவை, தி.மு.க. கூட்டணியை விட்டு நகர்த்திவிட வேண்டும், அல்லது அதுபோன்ற தோற்றத்தையாவது உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் இது ஒரு நூல் வெளியீட்டுவிழாதானே என்ற கோணத்தில் விஜய் வருவது தெரிந்தும், இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்திருந்தார் திருமா. தி.மு.க. தரப்போ, நடிகர் விஜய்யுடன் அவர் ஒரே மேடையில் ஏறுவதை விரும்பவில்லை. ஆனாலும் இதை வெறும் நூல் வெளியீட்டு விழாவாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று திருமா சொல்ல, விஜய் மேடையில் நீங்களா? யோசியுங்கள் என்று கறாராக இருந்தது அறிவாலயம். இதனால், கடைசி நேரத்தில் ரெட்டி ஏற்பாடு செய்த இந்த நூல் வெளியீட்டு விழாவைத் தவிர்த்து, அவரது திட்டத்தை முறியடித்திருக்கிறார் திருமா.''”
"நடிகர் விஜய் இந்த விழாவை எப்படிப் பார்க்கிறாராம்?''”
"விஜய்யும் கூட, திருமாவுடன் ஒன்றாக மேடை ஏறி தி.மு.க. கூட்டணியில் ஒரு நில நடுக்கத்தை ஏற்படுத்தலாம் என்றுதான் நடக்கும் இந்த விழாவுக்கு ஆர்வமாக தேதி கொடுத்தாராம். இருப்பினும் பசை பார்ட்டி யான அர்ஜுன் ரெட்டி தன் பக்கம் வந்தாலும் லாபம்தான் என்று இப்போது அவர் கருதுகிறாராம். அதேசமயம், வெளியிடப்படும் நூல் அம்பேத்கரைப் பற்றியதாக இருந்தாலும், விழாவில் அம்பேத்கர் பேரன் ஆனந்த் கலந்து கொண்டாலும் அதிகமாக அம்பேத்கரைப் பற்றி பேசவேண்டாம். அப்படிப் பேசினால் வன்னிய சமூக மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும் என்று விஜய்க்கு அவரது நண்பர்கள் எச்சரிக்கை விடுத் தார்களாம். எனவே, அதை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர், மிகுந்த நிதானத்தோடு தனது உரையைத் தயார் செய்திருக்கிறார் என்கிறார்கள்.''”
"ஓஹோ...''”
"இந்த நிலையில் அர்ஜுன் ரெட்டியை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற குரல் சிறுத்தைகள் கட்சியிலேயே வலுக்க ஆரம் பித்திருக்கிறது. அர்ஜுன் ரெட்டியும் நீங்கள் என்னை வெளியேற்றினால் நல்லதுதான். விஜய்யுடன் சேர்ந்துகொண்டு அரசியல் செய்ய, எனக்கொன்றும் தடையில்லை என்று சொல் கிறாராம். அதேபோல் தனது நிறுவனமான ’வாய்ஸ் ஆஃப் காமன்’ அமைப்பிற்கு சமூக ஊடகவியலாளர்களை இப்போது அதிகம் சேர்த்துக்கொண்டிருக்கிறார் அர்ஜுன் ரெட்டி. அதன் மூலம் அரசியலில் காய் நகர்த்தி, தனது சாணக்கியத்தனத்தைக் காட்டவேண்டும் என்பதுதான் அவர் திட்டமாம். ஏற்கனவே தி.மு.க.வுக்கான அரசியல் வியூக டீமில் இருந்த அவர், சிறுத்தைகளையும் கைகழுவிவிட்டு, நடிகர் விஜய்யுடன் புது ரூட்டில் பயணிப்பது என்றும், அப்போதுதான் எதிர்காலத்தில் ஒரு பதவியைப் பெறமுடியும் என்றும் நினைக் கிறாராம். அதற்கான சந்தர்ப்பத்துக்கு அவர் காத்திருக்கிறார். மேலும் சீமானை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கும் முயற்சிக்கிறார் என்கிறார்கள்.''”
"அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்திற்கு உறுப்பினரல்லாத பலரையும் எடப்பாடி அழைத்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, 15ஆம் தேதி கூடுகிற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு ஏறத்தாழ 2,500 பேருக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், வழக்கத்திற்கு மாறாக இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப் பாளர்கள் என்ற பேரில் எடப்பாடியின் புதிய நபர்கள் 1000 பேரும் அழைக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்களை அழைக்கக் காரணம், அ.தி.மு.க. கள ஆய்வுக் கூட்டங்களில் நடந்த கலாட்டாக்களைப் போல், பொதுக்குழுவிலும் எடப்பாடிக்கு எதிரான களேபரங்களை, உட்கட்சி எதிரிகள் அரங்கேற்றிவிடக்கூடாது என்பதற்காகத் தானாம். எடப்பாடிக்கு எதிராகக் குரல் எழாதபடி இவர்கள் தடுப்பார்களாம். இந்த ’கப்சிப்’ பொதுக்குழு மூலம்... முழுக்க, முழுக்க அ.தி.மு.க. தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதைக் காட்ட எடப்பாடி ஆசைப்படுகிறார் என்கிறார்கள். எடப்பாடியின் இந்த அதிரடி வியூகம், கட்சியின் சீனியர்களை அதிரவைத்திருக்கிறதாம். எடப்பாடி ஆசைப்பட் டதுபோல், அ.தி.மு.க. பொதுக்குழு அமைதி யாக நடந்து முடியுமா? அது கூடும்போது தெரிந்துவிடும்.''”
"மணல் குவாரி உரிம விவகாரத்தில் இன்னும் இழுபறி நீடிக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே எஸ்.ஆர்.குரூப்ஸ் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகிய மும்மூர்த்திகள்தான் தமிழக அரசின் மணல் குவாரிகளை எடுத்து, கொழித்து வந்தார்கள். இவர்கள் தி.மு.க.வின் அரசியல் எதிரிகளுக்கும் வாரி வழங்கி, ஆதரவு நிலையைக் கடைப்பிடித்ததை அறிந்த ஆட்சி மேலிடம், குவாரி உரிமங்களைக் கைமாற்றும் எண்ணத் திற்கு வந்தது. அந்த வகையில் அவர்கள் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜப்பாவின் பெயரை ஆலோசிக்க, அமைச்சர் செந்தில் பாலாஜியோ கொங்குமண்டலத்தைச் சேர்ந்த பொன்னர் சங்கரை தன் சார்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இந்த பொன்னர் சங்கருக்கு சீனியர் அமைச்சர் துரைமுருகன் தரப்பும் தன் ஆதரவைக் கொடுத்து வருகிறது. அதனால் குவாரி உரிமங்களைப் பெறுவதில் அந்த பழைய மும்மூர்த்திகள் தரப்பிற்கும், இவர்களுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ரத்தினம் தரப்பின் மீது இப்போது ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதால், அவர் கைதாகும் நிலை ஏற்பட்டிருக்கிறதாம். எனவே, மணல்குவாரிகள் உரிமத்தில் இன்னும் ஒரு முடிவை ஆட்சி மேலிடம் எடுக்கவில்லை என்கிறது அறிவாலயத் தரப்பு.''”
"சரிப்பா, உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலைவர் களுக்கு டார்ச்சர் தருகிற போக்கு இப்போதும் தொடர்கிறது என்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை செயல்பட விடாமல் தடுக்கும் போக்கு இப்போதும் தொடர்கிறது. திராவிடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் இந்த தி.மு.க. ஆட்சியிலும் சமூகநீதி நொண்டி யடிப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க. ஒ.செ. ஒருவர் நடத்திவரும் மிரட்டல் சாம்ராஜ்யம், மாவட்ட தி.மு.க.வினரையே அதிர்ச்சியடைய வைக் கிறதாம். அங்கே, உடுமலை கிழக்கில், ஒன்றிய பெருந்தலைவராக மகாலட்சுமி முருகன் என்பவர் இருக்கிறார். இவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேரடி பரிந்துரையால் ஒன்றிய பெருந்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர். இங்குள்ள கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மெய்ஞானமூர்த்தி என்கின்ற தங்கராசு, இந்த மகாலட்சுமி முருகனுக்கு நிர்வாக ரீதியாகத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துவருகிறார் என்கிறார்கள். குறிப்பாக, டெண்டர் விடுவதில் ஒன்றிய பெருந்தலைவரைச் செயல்பட விடாமல் தனக்கு வேண்டப்பட்டவரான தனபால் என்பவருக்கே டெண்டர் கொடுக்கவேண்டும் என மிரட்டிவருகிறாராம்.''”
"என்னப்பா சொல்றே?''”
"ஆமாங்க தலைவரே, அதுமட்டு மில்லாமல், பேரூராட்சி நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் மெய்ஞான மூர்த்தியின் தலையீடு அதிகரித்து வருவதால் உடுமலை கிழக்கு ஒன்றியத்தில் ஏகப்பட்ட பணிகள் தேக்கமடைந்து வருகிறதாம். மேலும், திருப்பூர் மாவட்ட அமைச்சர் சாமிநாதன் மற்றும் மா.செ. இல.பத்மநாபன் இருவரின் பெயரையும் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து, டாஸ்மாக் கடை வசூல், மணல் லாரி வசூல் என ஒரு குட்டி சாம் ராஜ்யத்தையே மெய்ஞானமூர்த்தி நடத்திவருகிறாராம்.''”
"நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக் கறேன். தமிழக சட்டமன்றம் அடுத்த வாரம் கூடுகிறது. அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கும் அதானிக்கும் இடையில் நடந்த சந்திப்பு பற்றிய உண்மை நிலையை சபைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத் தில் பா.ம.க. பிரச்சினை எழுப்பத் திட்டமிட்டிருக்கிறது. மேலும் சபை நடக்கும் நாட்களில், தி.மு.க. அரசை கண்டித்து கருப்புச் சட்டையோடு பங்கேற்கும் யோசனையிலும் அவர்கள் தரப்பு இருக்கிறது. இதுகுறித்து கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸின் ஆலோசனையைப் பெறவும் அவர்கள் ஆலோசித்திருக்கிறார்களம்.''”