மிழகத்திலேயே முதன்முறையாக, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியின் முயற்சி யில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில், பத்து ஏக்கர் நிலத்தில், கருத்தரங்குக்கூடம் உட்பட அனைத்து வசதிகளுடன், ரூ.11 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஏ.சி. வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்வரை இலவசமாகப் பயிற்சிபெற முடியும். இந்த பயிற்சி மையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் சக்கரபாணியும் பல்வேறு வகுப்புகளை திறந்து வைக்க, மார்ச் மாதம் முதல் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ex

இங்கே தங்கியிருந்து போட்டித் தேர்வுக்குத் தயாராகிவரும் பாச்சலூரைச் சேர்ந்த மாணவன் யோகேஷிடம் கேட்ட போது, "தமிழகத்திலுள்ள தனியார் பயிற்சி மையங்களில் பணம் வாங்குவதில்தான் குறியாக இருந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, போட்டித்தேர்வு பயிற்சி மையங்களை அரசே இலவசமாக நடத்தி னால் மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்குமென்ற ஏக்கம் பலகாலமாக இருந்துவந்தது. எங்களுடைய ஏக்கத்துக்கு தீர்வாக, எங்க அமைச்சரய்யா சக்கரபாணி, கலைஞர் நூற்றாண்டை முன் னிட்டு, கலைஞர் பெயரில் போட்டித் தேர்வு மையத்தைக் கட்டி, முதல்வர் ஸ்டாலின் மூலம் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் பத்தாயிரம் ரூபாய் கட்டி பயிற்சி வகுப்பில் படித்துவந்த நான், அது வேண்டாமெனக் கூறி விட்டு, கலைஞர் போட் டித்தேர்வு மையத்தில் சேர்ந்து இலவசமாகப் படித்து வருகிறேன். காலேஜ் மாதிரி தினமும் காலை 10 மணிக்கு வந்தோமென்றால் மதியம் ஒரு மணி வரை க்ளாஸ் நடக் கிறது. அனுபவமிக்க பேராசிரியர்களை வைத்து க்ளாஸ் எடுக்கிறார்கள். வாரம் ஒருமுறை தேர்வு வைத்து மதிப்பீடு செய்வதால், நன்கு பயிற்சிபெற்று, குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் சேர்ந்து விடுவேன்'' என்று நம்பிக்கையுடன் கூறினார்.

"கடந்த வருடம் தான் காலேஜ் படிப்பை முடித்தோம். வீட்டிலிருந்தே போட்டித்தேர்வுக்கு படித்துவந்தபோது தான் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு எங்க அமைச்சர் சக்கரபாணி இலவசமாகவே போட்டித்தேர்வு மையத்தை ஒட்டன்சத்திரம் அருகே திறந்திருப்பதாகச் சொன்னார்கள். இங்கு வந்து பார்த்த போது, தனியார் காலேஜை மிஞ்சுமளவிற்கு டிஜிட்டல் வகுப்பறைகளுடனும், புத்தகத்தை வைத்துப்படிக்க வசதியான சேர்களுடனும், ஏ.சி. வசதியுட னும் இருப்பதைப் பார்த்து வியப்பானோம். பாத்ரூம் வசதியும் சுகாதாரமான முறையில் உள்ளது. மாணவிகளுக்கான பாது காப்பும் சிறப்பாக இருக்கிறது. எனவே தினசரி வந்து பயிற்சி பெறுகிறோம். இங்கேயே ஹாஸ்டல் வசதிகள் இருந்தால் தங்கிப் படிப்பதற்கு நன்றாக இருக்கும். அதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் தொகுதிக்குள் இரண்டு கல்லூரிகளையும், ஒரு தொழில்நுட்பக் கல்லூரியையும் அமைச்சர் சக்கரபாணி கொண்டு வந்திருக்கிறார். அதனால இனிமேல் காலேஜுக்காக வெளியூர்களுக்கு சென்று ஹாஸ்டலில் தங்கிப்படிக்கத் தேவையில்லை. படிச்சு முடிச்சதும் போட்டித்தேர்வுக்கு தயாராவதற்கும் இனி பிரச்சினையில்லை'' என்று கூறினார்கள் இடையக்கோட்டையைச் சேர்ந்த மாணவிகளான சந்தியா, தர்ஷினி, அனிதா ஆகியோர்.

Advertisment

e

"திண்டுக்கல்லிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் மூன்று மாதத்திற்கு ஆறாயிரம் செலுத்தி படித்து வந்தேன். அப்படியிருந்தும் கடந்த முறை நடந்த போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்நிலையில் தான் எங்க தொகுதியிலேயே இலவசமாகப் பயிற்சி மையம் செயல்பட்டு வருவதைக் கேள்விப்பட்டு இங்கு சேர்ந்து படித்து வருகிறேன். இங்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் ஸ்போக்கன் இங்கிலீசும் கற்றுக்கொடுக்கிறார்கள். அதுபோல் ப்ரேக்கில் டீ, பிஸ்கட் இலவசமாகக் கொடுத்து போட்டித் தேர்விற்கான மாதிரி வினாவிடைத் தாள்களையும் இலவசமாகக் கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டுமென்பதில் முழுக்கவனம் செலுத்தி வருவதைப் பார்க்கும் போது, வரும் ஜூன் மாதம் நடக்கும் குரூப் 4 தேர்வில் இங்கு படிக் கும் பலரும் தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. இதேபோல் தமிழகமெங்கும் போட்டித் தேர்வு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தா ரென்றால் என் போன்றவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்'' என்றார் அத்திக்கோம்பையைச் சேர்ந்த ராஜசேகர்.

eess

Advertisment

கிராமப்புற மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கான நற்செயலைச் செய்துள்ள அமைச்சர் அர.சக்கரபாணியிடம் கேட்டபோது, "தலைவர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இலவச போட்டித் தேர்வு மையம், முதல்வர் ஸ்டாலின் மற்றும் எங்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் உத்தரவின்பேரில் கட்டப்பட்டதால், பெரும்பாலான மாணவ-மாணவிகள் போட்டித் தேர்விற்கு ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள். ஆனால் தற்போது ஹாஸ்டல் வசதி இல்லாததால் தினசரி வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிந்தபின் இருபாலருக்கும் ஹாஸ்டல் வசதிகள் செய்து தரப்படும். மேலும், தேவையான வசதிகள் செய்து தரப்படும்'' என்றார் உறுதியாக! தமிழ்நாடு அரசின் சிறப்பான முன்னெடுப்புகளில் ஒன்றாக இம்மையம் விளங்கும்.

-சக்தி