தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்செம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை. கடந்த 31ஆம் தேதி, இந்த ஆலை முன்பு திரண்டுவந்த ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர், "சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் எங்களைப் புதைத்து விட்டு ஆலையை நடத்துங்கள்!' என்று ஆக்ரோஷக்குரலோடு போராட்டம் நடத்தினார்கள்.
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் சங்கத்தின் செயலாளர் செங்கமலம் கூறுகையில், "அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டுவதற்காக 1984ஆம் ஆண்டுவாக்கில் சுமார் 300 ஏக்கர் நிலத்தை எங்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொண்டது அரசு. அப்போது நிர்வாகம், குறைவான இழப்பீட்டுத்தொகையை வழங்க முன்வந்ததால் அதனை ஏற்க மறுத்தோம். எங்களை சமாதானப்படுத்த விரும்பிய அதிகாரி கள், "வீட்டுக்கு ஒருவருக்கு ஆலையில் வேலை வாங்கித் தருகிறோம்' என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததால் அதனை நம்பி நிலத்தைக் கொடுத்தோம். அப்போதிலிருந்
தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்செம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை. கடந்த 31ஆம் தேதி, இந்த ஆலை முன்பு திரண்டுவந்த ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர், "சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் எங்களைப் புதைத்து விட்டு ஆலையை நடத்துங்கள்!' என்று ஆக்ரோஷக்குரலோடு போராட்டம் நடத்தினார்கள்.
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் சங்கத்தின் செயலாளர் செங்கமலம் கூறுகையில், "அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டுவதற்காக 1984ஆம் ஆண்டுவாக்கில் சுமார் 300 ஏக்கர் நிலத்தை எங்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொண்டது அரசு. அப்போது நிர்வாகம், குறைவான இழப்பீட்டுத்தொகையை வழங்க முன்வந்ததால் அதனை ஏற்க மறுத்தோம். எங்களை சமாதானப்படுத்த விரும்பிய அதிகாரி கள், "வீட்டுக்கு ஒருவருக்கு ஆலையில் வேலை வாங்கித் தருகிறோம்' என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததால் அதனை நம்பி நிலத்தைக் கொடுத்தோம். அப்போதிலிருந்து பல்லாண்டு களாக, எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கேட்டுப்போராடி வருகிறோம். அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றாமல், பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆலைக்கு ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2020, பிப்ரவரி மாதத்தில் சுரங்கம் தோண்டும் பணியின்போது வினோன் மணி என்ற இளைஞர் மண் சரிவில் சிக்கி இறந்தார். விதிமுறைகளை மீறி அபாயகரமாக சுரங்கம் தோண்டுவதையும், எங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்காததையும் கண்டித்தும், எங்கள் ஊரில் சுரங்கம் தோண்டக்கூடாது என்றும் பெரும் போராட்டத்தில் இறங்கினோம்.
அப்போதைய குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, சுரங்கம் தோண்ட அனுமதி தரும்படி கேட்டுக்கொண்டார். அப்போதைய தொழில்துறை அமைச்சர் சம்பத், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோரைக் கொண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். பிள்ளைகளுக்கு வேலை வாங்கித்தர உதவுவதாகவும் உறுதியளித்தார். ஆனால் பேச்சு வார்த்தையின்போது, நீங்களே அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் எனக்கூறி நழுவிவிட்டார். பேச்சுவார்த்தையில் அமைச்சர் சம்பத், "உங்கள் பிள்ளைகளுக்கு படிப்படியாக வேலை வழங்கப்படும்' என்று உறுதியளித்தார். அதையும் காற்றில் பறக்க விட்டனர். பின்னர், "உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற நிகழ்ச்சிக்காக ஸ்டாலின் வந்தபோது, அவரிடம் கோரிக்கை மனுவை அளித்ததும், நிலம் கொடுத்த விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்கு நிச்சயம் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஆலை நிர்வாகம், வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கான நேர்முகத் தேர்வு நடத்தியது. அதில் எங்கள் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். எப்படியும் வேலை கிடைக்குமென்று காத்திருந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சீனியர் அசிஸ்டன்ட் பணி வழங்கிய செய்தி இடியென இறங்கியது. அதிகாரிகளின் தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்கு, அரசு சிமெண்ட் ஆலையில் மாறவே இல்லை. ஏற்கெனவே இங்கு பணி மேலாளராக இருந்த பாலச்சந்தர், துணை மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் எங்களை பல்வேறு விதங்களில் பழிவாங்கி வந்தனர் அவர்களுக்குப் பிறகும் அதேநிலை தொடர்கிறது. வாழ்வை இழந்து தவிக்கும் எங்களையும், எங்கள் குடும்பத்தினரையும் சுரங்கக் குழியில் போட்டுப் புதைத்துவிட்டு சிமெண்ட் ஆலையை நடத்துங்கள் என்று கூறி போராட்டத்தில் இறங்கினோம். இந்த விவகாரம், எங்கள் மாவட்ட அமைச்சரான சிவசங்கரின் கவனத்திற்கு தற்போது சென்றுள் ளது. வரும் 14ஆம் தேதி அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவெடுக் கப்படுமென்று அமைச்சர் தரப்பில் உறுதி யளித்துள்ளதால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். டான்செம் அதிகாரிகளின் சர்வாதிகாரப் போக்குக்கு கடிவாளம் போடவேண்டும். கன்னியாகுமரி மாவட் டத்தைச் சேர்ந்த வருக்கு வழங்கப் பட்ட பணி நிய மனத்தை ரத்து செய்து, எங்கள் வீட் டுப்பிள்ளைக்கு பணி வழங்கு வார்களென்று நம்புகிறோம்'' என்றார்.
"மாவட் டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் சிமெண்ட் ஆலைகள் விதிமுறைகளை மீறி சுரங்கம் தோண்டுகிறார்கள். சிமெண்ட் ஆலைகளுக்கு சரக்கு ஏற்றிவரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள். அதிகாரிகளின் சர்வாதிகாரத்தன்மைக்கு தமிழ்நாடு அரசு முடிவுகட்ட வேண்டும்'' என்கிறார் நிலம் கொடுத்தோர் சங்கத் தலைவர் பெரியசாமி. "சுற்றுச்சூழலை மோசமாகப் பாதிக்கும்படியாக விதிமுறைகளை மீறி சுரங்கம் தோண்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிமெண்ட் ஆலைகள் இயக்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தைக் கொடுத்துவிட்டு வேலை கேட்டுப் போராடும் எங்கள் கோரிக்கையை தமிழ்நாடு முதல்வரும், அமைச்சரும் நிறைவேற்றித் தருவார்களென நம்புகிறோம்'' என்கிறார் நிலம் கொடுத்தோர் சங்கப் பொருளாளர் சரவணன்.
பொய்யான வாக்குறுதியை வாங்கிக்கொண்டு எங்கள் நிலத்தை வாங்கி மோசடி செய்த அரசு அதிகாரிகளால், நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். அதிகாரிகளின் சர்வாதிகாரத்துக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று கேட்கிறார்கள் ஆனந்தவாடி கிராம விவசாயிகள்.