மிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10-ந்தேதி சென்னை திரும்புகிறார். அவருடன் சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் படையும் அன்றைய தினமே திரும்புகிறது. முதல்வரும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அரசு எப்படி இயங்குகிறது என கோட்டை வட்டாரங்களில் ஒரு ரவுண்ட் வந்தோம்.

cm

""எடப்பாடியும் முக்கிய அமைச்சர்களும் இல்லாத நிலையில் கோட்டை வெறிச்சோடிதான் இருக்கிறது. அ.தி.மு.க.வினரின் நடமாட்டம் குறைந்துள்ளது. மாறாக, அமைச்சர்களின் வீடுகளுக்கு படையெடுக்கின்றனர் கட்சியினர்.

தலைமைச்செயலகத்துக்கு வருகிற துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது துறை சார்ந்த அதிகாரிகளிடம் விவாதிக்கிறார்கள். இந்த விவாதம் அமைச்சர்களின் வீடுகளிலும் நீண்ட நேரம்வரை செல்கிறது.

Advertisment

முதல்வரின் பயணத்தில் இருக்கும் அவருடைய செயலாளர்கள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மூவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் துறைகளின் செயலாளர்களிடம் தினமும் இரண்டுமுறை ஆலோசிக்கிறார்கள். கோட்டையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் மூலம் அறிந்து எடப்பாடிக்கு தகவல் சொல்லியபடி இருக்கின்றனர் அவரது செயலாளர் கள்.

ddd

முதல்வர் இல்லாத சூழல் குறித்து மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, முதல்வர் வெளிநாட்டில் இருக்கும்போது அவரது பொறுப்பை தற் காலிகமாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப் பட்டது. அதற்கேற்ப டெல்லியும் சில முயற்சிகளை எடுத்தது; ஆனால், பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க விரும்ப வில்லை எனவும், ஒப்படைத்துத் தான் ஆக வேண்டுமெனில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியிடம் ஒப்படைக் கிறேன் எனவும் அழுத்தமாக டெல்லிக்கு சொல்லி அதில் உறுதியாகவும் இருந்தார் எடப் பாடி.

Advertisment

ஒரு கட்டத்தில் அதனை டெல்லி ஏற்றுக்கொண்டதால் பொறுப்புகளை மடைமாற்றம் செய்யாமல் ப்ளைட் ஏறினார் முதல்வர்.

seec

வெளிநாட்டில் இருக்கும் எடப்பாடி, இந்திய நேரத்தை அட்ஜஸ்ட் செய்து தின மும் காலையிலும் இரவிலும் தங்கமணியிடமும் வேலு மணியிடமும் ஆலோசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். மூத்த அமைச்சர்கள் இருவரிடமும் சில அசைன் மெண்டுகளை கொடுத்துவிட்டு சென்றதால் அது தொடர்பாக, அவர்களிடம் விவாதிக் கிறார் எடப்பாடி. குறிப்பாக, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச் சர்கள், எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கு மாறு சொல்லப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் க்ளோஸாக கண்காணிக்கப்பட்டு வருகிறார் கள்.

உளவுத்துறை அதிகாரிக ளிடம், அவர்களுக்கு கிடைக் கும் ரகசிய தகவல்களை தங்கமணி -வேலுமணியிடம் பகிர்ந்துகொள்ள எடப்பாடி அறிவுறுத்தியிருப்பதால், உளவுத்துறை ரிப்போர்ட்டுகள் இவர்களிடம் பகிர்ந்துகொள் ளப்படுகின்றன.

சமீபத்தில் ஓ.பி.எஸ். வசமிருக்கும் சி.எம்.டி.ஏ.விலும் குடிசை மாற்று வாரியத்திலும் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந் திரநாத்தின் தலையீடு அதிக மிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் தந்துள்ளது.

அண்மையில் குடிசை மாற்று வாரியத்தின் தலைமைப் பொறியாளர் ராஜசேகர், தேனி சென்று ரவீந்திரநாத்தை சந் தித்து சில டீலிங்குகளை பேசி முடித்துவிட்டு வந்திருப்பதை மோப்பம் பிடித்து, அதன் முழு விபரங்களையும் மேலிடத் தில் ஒப்புவித்திருக்கிறது உளவுத் துறை.

மேலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் கிழக்கு கடற்கரைசாலையிலுள்ள ஒரு ரிசார்ட்டில் ரகசிய ஆலோசனை நடத்திய விவகாரத்தையும், அவர்களுக்கு பின்னணியில் மூத்த அமைச்சர்கள் இருவர் தூண்டுகோலாக இருப்பதை யும் உளவுத்துறை சொல்லி யுள்ளது.

இதையெல்லாம் வெளி நாட்டிலிருந்தபடியே அறிந்து கொள்கிறார் எடப்பாடி. இப்படி பல வில்லங்கங்கள் எடப்பாடிக்கு போய்க் கொண்டிருக்கின்றன.

ddafa

இதற்கிடையே, தனது செயலாளர்கள் மூலம் துறை யில் நடக்கும் ஒவ்வொரு விச யத்தையும் அறிந்துகொள்கிறார் எடப்பாடி. இதில் டெண்டர் விவகாரங்கள், அமைச்சர்களை அணுகும் காண்ட்ராக்டர்கள், அதில் நடக்கும் பேரங்கள் என அனைத்தும் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு செல் லப்படுகிறது. ஆக, எடப்பாடி இல்லாத நிலையில், தமிழகத் தின் செயல் முதல்வர்களாக தங்கமணியும் வேலுமணியும் இயங்குகின்றனர். அவர்களை ரிமோட் மூலம் இயக்கி வரு கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி'' என சுட்டிக் காட்டுகிறார்கள் அமைச்சர் களுக்கு நெருக்கமான அ.தி.மு.க. சீனியர்கள்.

எடப்பாடி இல்லாத நிலையில், ஜூனியர் அமைச் சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.செ.க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என பலரும் தங்கமணி, வேலுமணியிடமே நெருக்கம் காட்டி வருகின்ற னர்.

இதனால், அவர்களின் வீடுகள் எப்போதும் பரபரப் பாகவே இருக்கின்றன. முதல்வ ருக்கு அடுத்த நிலையில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சை ஜூனியர் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் தவிர்த்து வருவது ஓ.பி.எஸ்.சை அப்-செட்டாகவே வைத்திருக்கிறது.

உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ""வெளிநாடு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூனியர் அமைச்சர் களிடமும் சீனியர் எம்.எல்.ஏ.க்கள் பலரிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார் முதல்வர்.

அப்போது, "நான் இல்லைங்கிறதினால ஓ.பி.எஸ்.சை வைத்து எதையும் சாதிக்கலாம்னு திட்டம் போடாதீங்க. உங்களுக்கான பிரச்சனை எதுவாக இருந்தாலும் தங்கமணி அல்லது வேலுமணியிடம் சொல்லுங்கள். என்னிடம் அவர்கள் விவாதிப்பார்கள். முன்பு போல டெல்லியில் ஆளுமை செலுத்தும் வகையில் எந்த செல்வாக்கும் ஓ.பி.எஸ்.சுக்கு இல்லை. அம்மா இருந்த வரையில் கார்டனுக்கு அனுப்பி வைத்தது போல, டெல்லிக்கு இப்போது அனுப்பி வைக்கிறேன். அதனால் என் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளது டெல்லி.

ஆட்சியிலும் கட்சியிலும் எந்த அதிகார மாற்றமும் வராது. விரைவில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் நான்தான் இருக்கப்போகிறேன். கட்சியும் ஆட்சியும் ஒற்றைத் தலைமையில் இருக்க வேண்டுமென்பதை டெல்லியும் இப்போது புரிந்து கொண்டிருக் கிறது. அதனால், வெளிநாட்டிற்கு நான் போகும் நிலையில் ஓ.பி.எஸ்.சுடன் சேர்ந்து ஏதேனும் செய்யலாமென திட்டமிட்டிருந்தால் அதை ஓரங்கட்டிவிட்டு தங்கமணி-வேலுமணியுடன் ஆலோசிப்பதை வழக்கமாக வைத்துக்கொள் ளுங்கள்' என அட்வைஸ் செய்திருக்கிறார் முதல்வர்.

இதனை மனதில் நிறுத்திக்கொண்ட ஜூனியர் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் தங்கமணி-வேலுமணியிடமே விவாதிக்கின்றனர்'' என்கின்றனர் உளவுத்துறையினர்.

-இரா.இளையசெல்வன்