கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுமார் 8 ஆண்டுகள் வரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ச ராக இருந்த விரா-மலை விஜயபாஸ்கர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், கட்சியிலும் ஆட்சியிலும் அதிகார பலத்துடன் கோலோட்சி வந்த விஜயபாஸ்கர், அடுத்தடுத்து கல்வி நிறுவனங்கள், கனிம வளங்கள் வெட்டி எடுப்பது என வேகமாக வளர்ந்தார். ஆட்சியில் இருக்கும் போதே குட்கா வழக்கு, ஆர்.கே.நகர் தேர்தலில் பணப் பட்டுவாடா என சோதனைகளில் சிக்கியும் சோர் வில்லாமல் வெளியே சுற்றிவந்தார்.
இந்த நிலையில் ஆட்சி மாறியதும் தி.மு.க.வின் கடுமையான பார்வை விஜயபாஸ்கர் மீது இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளைப் பொய்த்துப் போக வைத்தார். ஆளுங்கட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் ரகசியமான நெருக்கம் அவரைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. மணல் மாஃபியாக்கள், கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களை சட்ட மன்றத்தில் பேச வசனம் எழுதிக் கொடுத்தவர்கள் என பலரை யும் இன்றைய ஆட்சி அதி காரத்தில் உள்ளவர்களிடம் தூதுவர்களாக அனுப்பிவைத்து தன்னைத் தற்காத்துக்கொண் டார்.
இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்த சில வழக்குகளில் அவரது வீட்டில் சோதனை நடத்திவருகிறது. சில வருடம் முன்பு, திருவேங்கை வாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது குவாரிகளில் சோதனை செய்தனர். அடுத்து வீடு, அலுவலகம் ஆகியவை சோதனைக்குள்ளாயின. அவ்வளவுதான். அதேபோல செவ்வாய்க்கிழமையும் இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவிலுள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் புதுக் கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மணிகண்டன் தலை மையிலான போலீசார் 7 பேர் அதிகாலையில் நுழைந்து சோத னைகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூரில் உள்ள ஐசரிகணேஷுக்குச் சொந்த மான வேல்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டவே படாத நிலையில், 250 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவ தாகவும், மருத்துவமனை மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்குத் தகுதி யானது என்றும் சான்றிதழ் வழங்கி னார். இது தேசிய மருத்துவக் குழுமத் தின் விதிமுறைகளுக்கு எதிரானது. மருத் துவமனைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடாகச் சான்றுகள் வழங்கியது தொடர்பாகவே சோதனை நடத்தப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சோதனை நேரத்தில் விஜயபாஸ் கர் சென்னையில் இருந்தார். இலுப்பூர் வீட்டில் அவரது தந்தை சின்னத்தம்பி, அண்ணன் உதயகுமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். தகவல் பரவியதும் வழக்கம்போல விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்து கோஷங்களை எழுப்பு வார்கள். இந்த முறை 100-க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர். இதனைப் பார்த்த பலரும், விஜயபாஸ்கருக்கான செல்வாக்கும், ஆதரவும் சொந்த மாவட்டத்தில் குறைந்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது என்றனர். மாலை வரை நீடித்த சோதனையில் ஒரே ஒரு பையில் சில ஆவணங்களை மட்டுமே எடுத்துச் சென்றனர்.
"எப்போது சோதனைகள் நடப்பதாக இருந் தாலும் மாஜிக்கு முன்னதாகவே தகவல் கொடுக்கப் பட்டுவிடுவது வழக்கமாகவே உள்ளது. 13-ஆம் தேதி சோதனையும் 2 நாட்களுக்கு முன்பே தெரிந்து விட்டதால் குவாரிகளில் நின்ற ஏராளமான வாகனங்கள் இடமாற்றம் செய்யப்பட்ட துடன், கிரஷர் இயந்திரங்களும் நிறுத்தப்பட்டி ருந்தன. இப்படி சோதனைகளுக்கு முன்பே தகவல் தெரிந்துவிடுவதால் எதுவும் சிக்காமல் மாற்றி வைத்துவிடுவதும் தொடர்கிறது என்ற வர்கள்... இதுவும் வழக்கமான ஒரு சோதனைதான். இவரது ஆட்களான மணல் மாஃபியாக்களும், புரவலர்களும் பவர்புல் தி.மு.க. அமைச்சர்களிட மும், ஆளும் தலைமையின் கீழே உள்ள சில ரகசிய நபர்களிடமும் நெருக்கமாக இருக்கும்வரை எந்த நடவடிக்கையும் இருக்காது' என்கிறார்கள்.
சோதனைகள் முடிந்த பிறகு மாலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., “"என்னிடம் இருந்து 2 செல்போன் களையும், எங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர். வேறு எந்த ஆவணங்களையும் எடுக்கவில்லை என்பதை அதிகாரிகளே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்'' என்றார்.
________________
வேலுமணி பினாமிகளிடம் சோதனை
கோவை முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
வடவள்ளி பகுதியிலுள்ள மாநகராட்சி ஒப்பந்த தாரரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எல்.இ.டி. விளக்கு கொள் முத-ல் ரூ 500 கோடி ஊழல் புகாரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 10 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுக் குழு சோதனை மேற்கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினரான திருச்சி மேலபு-வார்டு சாலையிலுள்ள மகா-ங்கம் என்பவருக்கு சொந்தமான கணேசா டிரேடர்ஸ் நிறுவனத்தில், அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையிலும், திருச்சி திருவானைக்காவல் கணபதி நகரில் ஒருவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
-துரை.மகேஷ்