கள்ளக்குறிச்சியில் அரசியல் களம் தகிக்கிறது. அங்கு அ.தி.மு.க. தனது மா.செ.வான குமரகுருவை களமிறக்கியிருக்கிறது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும் இன்னும் சில பதவிகளிலும் அமர்ந்திருக்கும் குமரகுரு, ’"நான் பார்க்காத பதவியா?'’என கட்சிக்காரர்களிடமே அடிக்கடி ஜம்பம் அடிப்பாராம்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எப்படியும் அமைச்சராகிவிட வேண்டும் என்று இவர் முட்டி மோதியபோது, ’"நான் முதலமைச்சராக இருக்கும்போது, உனக்கு எதுக்குத் தனியாக ஒரு பதவி?'” என்று எடப்பாடி கேட்டாராம். அந்த அளவுக்கு அவரோடு நகமும் சதையுமாக இருப்பவர் குமரகுரு. அப்படிப்பட்டவர் இங்கு நிறுத்தப்பட்டதால் கட்சியினர் மத்தியில் உற்சாகம் மிகுந்திருக்கிறது.
நமக்கு டெல்லி அரசியல் வேண்டாம். சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்கலாம் என்ற நினைப்பில், இந்தமுறை குமரகுரு எம்.பி. தேர்த லில் நிற்க விருப்பமில்லாமல் இருந்தாராம். கள்ளக்குறிச்சிக்கு பலரும் சீட் கேட்டு கட்சித் தலைமையிடம் பணமும் கட்டிய நிலையில், அவர்களில் சிலரை மட்டுமே எடப்பாடி நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார்.
அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் மாலதி. இவர் அகரகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர். கள்ளக்குறிச்சி காம்ப்ளக்ஸ் ஒன்றில் நிர்வாக மேலாளராக பணி செய்துவரும் இவரை எம்.பி. வேட்பாளராக நிறுத்துவதற்கு குமரகுரு பெரும் முயற்சி செய்தாராம். நேர்காணலின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட முக்கிய நிர்வாகி களான மா.செ. குமரகுரு, முன் னாள் அமைச்சர் மோகன் ஆகி யோரும் இருந் தனராம்.
அப்போது மாலதியைப் பார்த்த மோகன், "இவர் நம் கட்சியி லேயே இல்லையே. இவர் எப்படி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்?''’என்று கேள்வி எழுப்பினார். இதில் கடுப்பான குமரகுரு ஆவேசமாகக் குறுக்கிட்டு "இல்லை... இல்லை.... அவசரப்பட்டுப் பேசாதீங்க. அவர் நம் கட்சியில் உறுப்பினராகத்தான் இருக்கிறார். ஆர்வமா கட்சிப்பணிக்கு வர்றவங்களை நாம் டேமேஜ் பண்ணக்கூடாது''’என்று குரலுயர்த்திச் சொல்லியிருக்கிறார். இதைப் பார்த்த எடப்பாடி, ”"பொது இடத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டாம். வேட்பாளரை நான் தீர்மானிக்கிறேன்''’ என்று சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் குமரகுருவை அழைத்த எடப்பாடி, "கள்ளக்குறிச்சியில் நீயோ அல்லது உமது மகன் நமச்சிவாயமோ தான் நிற்கவேண்டும். இன்று இரவுக் குள் முடிவு செய்துகொள்'' என்று கறாராகக் கூற, மறுநாளே "நானே நிற்கிறேன்'' என்று எடப் பாடியிடம் வந்து சொல்லிவிட்டாராம் குமரகுரு.
இங்கு தி.மு.க. வேட் பாளராக களமிறக்கப் பட்டிருப்பவர் மலையரசன். இவர் மா.செ.வும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தன் கார்த்திகேயனின் சித்தி மகன். எனவே, ”"தேர்தல் செலவு முழுவதையும் நாங் களே பார்த்துக் கொள் கிறோம். இவரை வெற்றி பெறவைத்து உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன்''’ என்று நேர்காணலின் போது அவர் உத்தரவாதம் கொடுத்து, மலையரசனுக்கு சீட்டை வாங்கினாராம்.
சேலம் கிழக்கு மா.செ.வான எஸ்.ஆர்.சிவ லிங்கம், இந்தமுறை தனக்குத்தான் கட்சித் தலைமை இங்கு வாய்ப்பு தரும் என்று தீவிரமாக எதிர்பார்த்தாராம். ஆனால் மலையரசனுக்கு ஜாக்பாட் அடித்துவிட்டது. இதனால் சீட் கிடைக்காத சிவலிங்கம், கடும் அதிருப்தியில் மூழ்கினாராம். இதையறிந்த அறிவாலயம், அமைச்சர் நேரு மூலம் அவரை சமாதானப் படுத்தியிருக்கிறது. அதோடு, வேட்பாளர் மலையரசனே, சாஷ்டாங்கமாக சிவலிங்கத்தின் காலில் விழுந்து, "என்னை வெற்றிபெறச் செய்யுங்கண்ணே''’என்று மனமுருகிக் கேட்டுக்கொண்டாராம். இதனால் நெகிழ்ந்து போன சிவலிங்கம், "கவலைப்படாதீர்கள் உங்கள் வெற்றிக்கு நாங்கள் உழைப்போம்'' என்றாராம். இவரோடு, மலையரசனை வெற்றிபெற வைப்பதற்காக எம்.எல்.ஏ.க்களான உதய சூரியனும் வசந்தன் கார்த்திகேயனும் தற்போது கடுமையாக தேர்தல் பணியில் இறங்கியிருக் கிறார்களாம்.
பா.ஜ.க. கூட்டணி சார்பில் இங்கே பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் தேவதாஸ் உடையார். இவ ருக்காக பா.ம.க. வினர் ஓடியாட ஆரம்பித்திருக் கிறார்கள்.
கள்ளக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் என்கிற ஜெகதீசன் பாண்டியன். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை ஆறுமுகம் கம்யூ னிஸ்ட் (சி.பி.ஐ.) கட்சியின் தீவிர தொண்டர். ஜெகதீசன், திரைத்துறையில் அடியெடுத்து வைத்தது முதல் இயக்குனர்கள் சீமான், சிம்புதேவன், சேரன், வெற்றிமாறன் ஆகியோருடன் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சீமான் நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதல் அவரது கட்சியில் கலை பண்பாட்டு பாசறை மாநில பொறுப்பாளராக இவர் பணி செய்துவருகிறார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இயக்குனர் பாரதிராஜாவிடம் ஆசி பெற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உடையார் சமூகத்தினர் அதிகம் அதனால் இங்கு பிரதான கட்சிகள் மூன்றும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் களையே இங்கு வேட்பாளர்களாக நிறுத்தி யுள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவும், மலையரசனுக்காக வரிந்துகட்டியுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயனும் உறவினர்களாம். எனினும் அரசியல் களத்தில் உறவு, நட்பு என்பதை எல்லாம் பார்க்கக்கூடாது என்று இவர்கள் எதிரும் புதிருமாக விறுவிறுப்பாக மோதிவருகிறார்கள்.
தேர்தல் பணியாற்றுவதில் எம்.எல்.ஏ.க்களான வசந்தன் கார்த்திகேயனும் உதயசூரியனும் கைதேர்ந்தவர்கள் என்கிறார்கள் எதிர்த்தரப்பினரே. அதனால் ஏனைய இரு தரப்பும் உதயசூரியனைத் தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சியைப் பொறுத்தவரை களத்தில் பல வேட்பாளர்கள் இருப்பினும், இங்கே மும்முனைப் போட்டியே நடக்கிறது என்கிறார்கள் தொகுதியின் பல்ஸ் ரேட்டை அறிந்தவர்கள்.
கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றப்போவது யார்?