லக அளவில் பொருளாதார மந்தம் நிலவும் நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு பணம் தேடி அலைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வங்கி வழி கடன்வாங்க முடியாமல் தவிப்பவர்களைக் குறிவைத்துக் கிளம்பியுள்ளது செயலிகளின் மூலம் கடன் தரும் கும்பல்.

இணையவழியில் நடக்கும் மோசடிகள், உருட்டப்படும் உயிர்கள், ஆட்டிப்படைக்கும் ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் சூதாட்டத் திற்கு தடை, ஆப்பு வைக்கும் கடன் ஆப்கள் என மக்களை உஷார்படுத்தும் விதமாக இணையவழியாக நடக்கும் மோசடிகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது நக்கீரன்.

d

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவேக் என்ற 27 வயது இளைஞர் ஆன் லைன் செயலி மூலம் 4000 ரூபாய் கடன்பெற்று அதைத் திரும்பச் செலுத்த முடியாமல் அந்நிறுவனம் கொடுத்த மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அந்த மரண ஓலம் அடங்குவதற் குள்ளேயே அடுத்த மோசடி தலைகாட்டியிருக்கிறது.

Advertisment

சென்னை வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். கொரோனா காலத்தில் தன் குடும்பச் சுமை காரணமாக ங-M-RUPEE ஆன்லைன் செயலிமூலம் 5000 ரூபாய் கடன்பெற்றுள்ளார். 5000 ரூபாய்க்கு 1500 வட்டி என்று 3500 ரூபாயை மட்டுமே கையில் கொடுத்துள்ளது. கடனை திரும் பச்செலுத்த குறுகியகால அவகாசத்தை மட்டுமே அந்நிறுவனம் கொடுத்ததால் குறித்த நேரத்தில் அவரால் கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதற்குப் பிறகுதான் M-RUPEE செயலி தன் ஆட்டத்தை ஆரம்பித் திருக்கிறது.

செயலியை பதிவிறக்கும் போதே தொடர்பு எண்களையும், புகைப்படங்களையும் கையாள்வதற்கான அனுமதியை செயலி பெற்றுவிடும். கடன் தாமதமாகும்போது, சம்பந்தப் பட்டவர்களின் மரியாதை, கௌரவத்தைக் குறிவைத்தே இந்த கடன் செயலிகள் தாக்குதலைத் தொடங்குகின்றன. ""கணேசனின் நண்பர்கள், உறவினர்களுக்கு அவதூறு செய்திகள் அனுப்புவது, குடும்ப உறுப்பினர்களைத் தரங்கெட்ட வார்த்தைகளால் பேசுவது, கணேசனின் புகைப்படத்தை வைத்து, "இவன் எங்கள் நிறுவனத்தில் கடன் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டான்' என்று கணேசனின் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது'' என எல்லை மீறியிருக்கிறது.

இதனால் மனமுடைந்த கணேசன் சென்னை ஆணையர் மகேஷ் அகர்வாலிடம் நேரடியாக புகார் கொடுக்க, தொடர்ந்து இப்படியான புகார்கள் வருவதால் உடனே சைபர் க்ரைமிற்கு மாற்றி தனிப்படை அமைத்தார் ஆணை யர். கணேசனுக்கு கடைசியாக வந்த தொலைபேசியின் அலை வரிசையைக் கண்டறிந்த தனிப்படையினர் பெங்களூர் விரைந்தனர் பெங்களூர் தெற்கு, இந்திரா நகர், துப்பனஹள்ளி பகுதியில் பிரமோதா என்பவரையும். தும்கூர் மாவட்டம், சிராதாலுகா சிக்கனஹள்ளி பகுதியில் சி.ஆர்.பவான் என்பவரையும் காவல்துறை கைதுசெய்தது.

Advertisment

dd

விசாரணையில் பெங்களூரில் ட்ரு கிண்டில் டெக்னாலஜி என்ற பெயரில், மகளிர் சுய உதவிக் குழுவினரை இலக்காக்கி செயல்பட்டுள்ளனர் இக்குழுவினர். கொரோனா காலத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கு மேலானவர்களிடம் கடன்கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணிக்கு அமர்த்தப்பட்டி ருப்பவர்கள் பெரிதும் இளம் பெண்கள் மட்டுமே.

அந்த நிறுவனத்திட மிருந்து 21 லாப்டாப், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சி.ஆர். பவான் மற்றும் பிரமோதா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் இருவரையும் வழிநடத்திய சீனாவைச் சேர்ந்த ஜியா யாமோ மற்றும் ஊயான் லூன் என்ற இருவர் கைதுசெய்யப்பட்ட னர். இவர்களிடமிருந்து 6 செல்போன்கள், இரண்டு லேப்டாப்களோடு, ஜியா யாமோ வங்கிக்கணக்கில் 1 கோடியே 98 லட்சம் ரூபாயும், ஊயான் லூன் வங்கிக்கணக்கில் 48 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இந்தியாவிற்கு டூரிஸ்ட் விசா மூலம் வந்திருப்பதாகவும் அந்த விசா காலாவதியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதும் விசா ரணையில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு சீன மோசடிக்காரர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது யாங் என்ற சீனர். அவர் கொரோனா காலத்திற்கு முன்பு இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் புதிய புதிய தொழில்களை ஆரம்பித் துள்ளார். ட்ரு கிண்டில் டெக்னாலஜி மூலம் சுமார் 40 செயலிகளை இவர்கள் உருவாக்கியுள்ளார்கள். MY CASH, ARONA LOAN, QUICK LOAN, T.MONEY, RABBIT LOAN, EASY CASH, NEW RUPEE , RUPEE LOAN என்பன அவற்றுள் சில.

சென்னை கோடம்பாக் கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் இதேபோன்று இணையவழி செயலி மூலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய கைபேசியிலிருக்கும் அம்மாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, இவள் விலைமகள் பணம் கொடுத்தால் வருவாள் என்று பலருக்கு அனுப்பி மிரட்டியிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்ளவும் முடியாமல், கடனை அடைக்கவும் முடியாமல் தற்கொலைக்கு முயன்ற தினேஷை, நக்கீரன் தலையிட்டுக் காப்பாற்றி அந்த சிக்கலிலிருந்து வெளியேவர உதவிசெய்தது .

பணம் தேவைப்படு பவர்கள், கடன் கிடைத்தால் போதுமென எங்கே வேண்டு மானாலும் கடன் வாங்கத் துணியக்கூடாது என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். இணையத்தில் குவிந்துகிடக்கும் கோடிக்கணக்கான செயலிகளில் எது போலியானது எது நம்பகத்தன்மை வாய்ந்தது என்று யார் தீர்மானிப்பது? இந்திய ரிசர்வ் வங்கி இணையவழி கடன் செயலிகளுக்கு அங்கீகாரம் கொடுக்காத நிலையில் ஏன் அரசாங்கம் இதை கண்டும் காணாமல் இருக்கிறது?

-அரவிந்த், சேகுவேரா