கடந்த மாதம் 23ம் தேதி நக்கீரனில் "போர்வைக்குள் ஜெபம்! போலி பாதிரியாரின் கிளுகிளு விளையாட்டு!' என்ற தலைப்பில் செய்தி வெளி யிட்டிருந்தோம். அந்த செய்தி வந்ததுமே, உடனடியாக டேனியின் உறவின ரான ஆல்பர்ட் பிரேம்குமார் உடனடியாக வாட்ஸ்-அப், மின்னஞ்சல், அஞ்சல் வழியாகத் தொடர்புகொண்டதுடன், செய்தியை உடனே மறுக்க வேண்டுமெனவும், இந்தத் தகவலை டேனியின் உறவினரான சுகுமார்தான் திட்டமிட்டுச் செய்வதாகவும் அவற்றில் தெரிவித்திருந்தவர், சுகுமாரின் குணாதிசயங்கள் மோசமானவை என பக்கம், பக்கமாக விவரித்திருந்தார்.
பின் அவற்றுக்கு நமது நக்கீரன் இதழ்மூலம் சட்டபூர்வமாக பதிலளித்திருந்த நிலையில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதி, தங்கள் தரப்பில் மட்டுமே நியாயம் இருப்பதாகவும், நக்கீரன் செய்தி மூலம் பிளாக்மெயில் செய்வதாகவும் குற்றம்சாட்டி யிருந்தார்.
டேனியால் பாதிக்கப்பட்ட பெண் நக்கீரனைத் தொடர்புகொண்டு அவரது அத்து மீறிய ஆட்டங் களைப் பற்றி புகார் செய்ததாலேயே இந்த விவகாரத்தில் நக்கீரன் ஆர்வம் காட்டியது. மேலும் டேனியின் குணாதிசயங்கள் குறித்த மேலும் அதிக தகவல்களை ஸ்டெல்லா (பெயர் மாற்றப்பட்டுள் ளது) நம்மிடம் விவரித்தார்.
"டேனி பிரைட் என்ற நபர் முகநூலில் ஜெபம் செய்கிறேன் என்று என்னிடம் அறிமுகமானவர். என் வாழ்க்கையை சீரழிச்சதுமில்லாமல் என்னைப்போல் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதேபோல் நடந்து ஏமாற்றியிருக்கிறான். நான் பெரிய ஆபத்தில் இருப்பது தெரிந்து அவனிடமிருந்து விலகினேன். இப்படியே விட்டால் இன்னும் பல பெண்கள் இவன் விரித்தவலையில் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்துவிடுவார்கள் என்பதால்தான் உங்களிடம் பேசுகிறேன்''’என்று நம்மிடம் கூறினார்.
நாம் அதன் உண்மைத் தன்மையை விசாரிக்கத்தான் களத்தில் இறங்கினோமே தவிர, யாரையும் அவதூறு செய்வதற்காக இல்லை.
அதன்பின்பும் இவனிடம் ஏமாந்த இரு பெண்களிடம் முழுமையாக விசாரித்துவிட்டும், டேனியின் சித்தப்பா சுகுமார் சொன்ன பாதிரியாரிடமும் விளக்கம் கேட்டு விட்டும், ஒரு பெண் ணிடம் தான் செய்த தவறை மன்னிக்கும்படி டேனி கெஞ்சிய ஆடியோவை அந்த பெண்ணே அனுப்பிய பின்புதான் அந்த செய்தியைப் பதிவு செய்தோம்.
அந்த செய்தியைப் பார்த்த பின்பு "நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சார்'' என்று நம் லைனுக்கு வந்த அந்த பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ. ”
"டேனியிடம் முகநூலில்தான் பழக்கம் ஏற்பட்டது. முதன்முதலில் எனக்காக ஜெபம் பண்ணுவதாக வந்தவர் என்னிடம் பழகி என்னை திருமணம் செய்கிறேன் என்று நிச்சயம்வரை கொண்டுசென்றார். பின்பு ஒருநாள் அவரின் போனைப் பார்த்தபோது பல பெண்களுடன் இருந்ததைப் பார்த்துவிட்டேன் அதுபற்றி கேட்ட போது தன் கையை பிளேடால் கிழித்து காலில் விழுந்து என்னை மன்னித்துவிடு... இனி அப்படிச் செய்யமாட்டேன்'' என்று அழுதார். அதிலிருந்து அவரிடமிருந்து விலக ஆரம்பித்தேன். இந்நிலை வேறொரு பெண்ணை பார்த்து நிச்சயம்வரை சென்றுள்ளது. அவர்களிடமிருந்து கார், பணம் என்று வாங்கியிருக்கிறார். இது எனக்குத் தெரியவந்து கேட்டபோது "ஊழியத்திற்கு போகுமிடத்தில் அவர்கள்தான் பிரியப்பட்டு கார் கொடுத்தார்கள். மற்றபடி நிச்சயம் செய்யவில்லை' என்று சொன்னார்.
விசாரிக்கையில் அவன் சொன்னது பொய்யென ஊர்ஜிதமாகியது. லேட்டஸ்டாக பெங்களூரில் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்யப்போவதாக தகவல் வருகிறது. ஏமாந்த வர்கள் யாரும் போலீஸுக்கு போயிரக்கூடாது என இப்போது அவனால் பாதிக்கபட்ட பெண்களை மிரட்டுகிறான். இவனை இப்படியே விட்டால் தவறை தொடர்ந்துகொண்டே இருப்பான்'' என்றார்.
இதுகுறித்து பாதிரியார் டேனியின் சித்தப்பா சுகுமார் நம்மிடம், "எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்தால் கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார் என்றுதான் உங்களிடம் சொன்னேன். ஆனால் அவன் என்னை மிரட்டத் தொடங்கியுள் ளான். தற்போது என் மனைவியின் புகைப்படத்தை எடிட் செய்து தவறாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளான். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்போகிறேன். அந்த பையனுக்கு முழு ஆதரவு கொடுத்து இப்படி தவறான வழியில் கொண்டுசெல்வது ஆல்பெர்ட் பிரேம்குமார். நான் வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் கொடுத்துள்ளான். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும், பல பெண்களை காப்பாற்றிய மனநிம்மதி கிடைக்கும். அதுபோதும் எனக்கு''’என்றார்.
டேனியிடம் ஏமாந்த பெண்களின் லிஸ்ட்டை வாட்ஸ்-ஆப்பில் அனுப்பிவைத்தார். “"நக்கீரன் செய்தியில் வந்த மூன்று பெண்களை மிரட்டி யிருக்கிறான். மிரட்டினால் எந்தப் பெண்ணும் தன்மீது புகார் கொடுக்க வரமாட்டார்கள். அதன்மூலம் அரசையும் சட்டத்தையும் ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறான்''’என்றார்.
ஆல்பர்ட் பிரேம்குமார், தனது உறவினரான டேனிக்கும் ஷாரோனுக்குமான உறவு குறித்து, “"இவர்கள் இருவருக்கும் பூவைத்தல் நிகழ்வு என கேள்விப்பட்டேன். இருவரும் நெருங்கிய லிவிங்டுகெதர் உறவில் இருந்ததாக கேள்விப்பட் டேன்''…என மறுக்கிறார். ஆக, தன் அண்ணன் மகனின் பூவைத்தல் நிகழ்வு, லிவிங் டுகெதர் வாழ்க்கை பற்றியே உறுதியாகத் தெரியாதவருக்கு, அதில் பங்கேற்காதவருக்கு டேனியின் அந்தரங்க வாழ்க்கை குறித்து உறுதியாக என்ன தெரிந்திருக் கும் என்பதுதான் நமது கேள்வி!