Advertisment

FOLLOW-UP சேர்மனின் பாலியல் சேட்டை! கல்ஞூரிக்கு மூடுவிழா!

ff

ருப்புக்கோட்டை அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியின் சேர்மனும், முன்னாள் பா.ஜ.க. நிர்வாகியுமான டாஸ்வின் ஜான் கிரேஸ், தனது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்த மாணவி ஒருவருடன் ஆடைகளற்ற நிலையில் சாட்டிங் செய்த விவகாரம், அந்தக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் வெளிச்சத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி கைதான நிலையில், மதுரை மத்திய சிறை யில் அடைக்கப்பட் டுள்ளார் டாஸ்வின் ஜான் கிரேஸ்.

Advertism

ருப்புக்கோட்டை அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியின் சேர்மனும், முன்னாள் பா.ஜ.க. நிர்வாகியுமான டாஸ்வின் ஜான் கிரேஸ், தனது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்த மாணவி ஒருவருடன் ஆடைகளற்ற நிலையில் சாட்டிங் செய்த விவகாரம், அந்தக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் வெளிச்சத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி கைதான நிலையில், மதுரை மத்திய சிறை யில் அடைக்கப்பட் டுள்ளார் டாஸ்வின் ஜான் கிரேஸ்.

Advertisment

அந்தக் கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, "இந்தக் கல்லூரி எந்தப் பல்கலைக்கழ கத்தின் கீழ் வரு கிறது?''’ எனக் கேட்க, "NEHM (Naturo Electro Homeopathy Medicos of India) நியூ டெல்லியின் அங்கீகாரம் பெற்றது'” எனப் பதிலளித்தனர்.

Advertisment

ff

அவர்களிடம் மேகநாதரெட்டி, "நீங்க எல்லாரும் எங்கே படிக்க விரும்புகிறீர்கள்'' என்று ஒரு லிஸ்ட் கொடுங்க, நான் NEHM-ல் பேசுகிறேன். உங்களது படிப்பு கெடாமல் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அனைத்தையும் நான் செய் கிறேன். நீங்கள் விரும்பும் கல்லூரிகளில் உங்களைச் சேர்த்துவிடுவோம். தாசில்தார் தினமும் அந்தக் கல்லூரிக்கு வருவார். உங்க எல்லாருக்கும் பாது காப்பு கிடைக்கும்''’என உத்தரவாதம் அளித்தார்.

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி சொன்னதுபோலவே, வருவாய்த்துறையிலிருந்து டெபுடி தாசில்தார் இருவர் அந்தக் கல்லூரிக்கு வருகிறார்கள். வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்து, பெற்றோருடன் வரும் மாணவர்களின் கையில் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங் கள் தரப்படுகின்றன. அக்கல்லூரியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே செலுத்திய கல்விக் கட்டணத்தை மாணவர்கள் திரும்பப்பெறும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உரிய வசதிகள் இல்லையென்று ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட அந்தக் கல்லூரிக்கு, மூன்றாவது தடவை மேற்கொண்ட முயற்சியில் தான், நியூ டெல்லி சஊஐங-ன் அங்கீ காரம் கிடைத்தது. ‘அரசு’ எனக் கல்லூரிக்குப் பெயர் வைத்து, தமிழக அரசின் கல்லூரி என்னும் பிம்பத்தைத் திட்டமிட்டு உருவாக்கி, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரையும் மாணவர்களையும் நம்பவைத்தது, டாஸ்வின் ஜான் கிரேஸின் பித்தலாட்டமே.

"ஒரே ஒரு மாணவியிடம் நிர்வாண வீடியோ சாட்டிங் செய்து மாட்டிக்கொண்டேன். அந்த ஒரு தவறுக்காக, கல்லூரியை இழந்து அவமானத்துக்கு ஆளானேன். இனி அந்தப் பெயரில் நான் கல்லூரி யை நடத்த முடியாது. இந்த விவகாரம் ஓரளவுக்கு ஓய்ந்த பிறகு, வேறு பெயரில், வேறு ஊரில் பாரா மெடிக்கல் கல்லூரி ஆரம்பித்தால்தான் உண்டு''’ எனச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் புலம்புகிறாராம், டாஸ்வின் ஜான் கிரேஸ்.

கல்லூரிக்குப் பெயர் வைத்தது முதல் மாணவிக்குத் தொல்லை தந்ததுவரை அனைத்திலும் தில்லாலங்கடியாக இருந்ததன் பலனை டாஸ்வின் அனுபவிக்கத்தானே வேண்டும்.

nkn250622
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe