னகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் இயக்ககத்தின் கண்காணிப்பாளர் பாண்டியனின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள், வைர நகைகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றியது லஞ்ச ஒழிப்புத்துறை. பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

cc

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலுர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வாணியம்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் அதிகாரியாக இருந்த பன்னீர்செல்வத்தின் அலுவலகம் மற்றும் வீடுகளில் கடந்த அக்டோபரில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடியே 25 லட்சம் ரூபாய், மூணரை கிலோ தங்கம், 60-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவ மும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் துறையினர், ""சுற்றுச்சூழல் இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையின் இரண்டாம் தளத்தில் இயங்குகிறது. இங்கு இரண்டு குழுக்கள் உள்ளன. சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் பெற இந்த இயக்ககத்தில் விண்ணப்பிக்கப்படும் மனுக்கள், முதல் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, இரண் டாவது குழுவிற்கு பரிந்துரைக்கப்படும். இங்கும் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தேவையேற்படின் கள ஆய்வுகளை நடத்தி தங்களது பரிந்துரைகளை இயக்ககத் துக்கு இரண்டாவது குழு அனுப்பி வைக்கும். இதனையடுத்து உரிய ஆணையை இயக்குநர் பிறப்பிப்பார்.

Advertisment

cc

பொது மக்களிடம் கருத்துக் கேட்பு நடந்ததாகச் சொல்லி, சம்மந்தப்பட்ட விண்ணப்பங்களில் கையெழுத்திட்டு இயக்ககத்திற்கு பரிந்துரைத்து சுற்றுச்சூழல் அலுவலர் வழியாக அனுப்பி வைப்பார் மாவட்ட கலெக்டர். கண் துடைப்பு கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பான ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளை தயாரித்து உரிய ஆணைகளைப் பெற்றுத்தருவதற்கு சுற்றுச்சூழல் கன்சல்டன்சிகள் இருக்கின்றன.

பினாமி பெயர்களில் சில கன்சல்டன்சிகளை நடத்தி வருகிறார் பாண்டியன். இவற்றின் மூலம் வரும் கோப்பு களுக்கு தடையில்லா சான்று விரைந்து வழங்கப்பட்டு விடும். இதற்காக பல லட்சங்கள் கைமாறும். மற்ற கன்சல்டன்சி களின் கோப்புகள் நகரவே நகராது. நிர்ணயிக்கப்பட்ட லஞ்ச தொகையை கொடுத்தால் மட்டுமே காரியம் சக்சஸ் ஆகும்.

Advertisment

இதனையெல்லாம் மோப்பம் பிடித்து பாண்டியனை குறிவைத்து சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, இரண்டாம் தளத்தில் இயங்கும் இந்த அலுவலகத்திலும், பாண்டியனின் பினாமி கன்சல்டன்சிகளிலும் ரெய்டு நடத்தியிருந்தால் இரண்டு குழுக்களின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள், அலுவலர்கள் பலரும் சிக்கியிருப்பார்கள். அவர்களின் லஞ்ச பணமும் ஆவணங்களும் பல கோடிகள் பிடிபட்டிருக்கும்.

சுற்றுச்சூழல் துறைக்கு வனத்துறையிலிருந்துதான் உயர் அலுவலர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். வனத்துறையிலும் மலைகளில் கட்டிடம் கட்ட ஹாக்கா சான்றிதழ் எனும் தடையில்லா சான்று பெற வேண்டும். இதற்காக பரப்பளவிற்கு ஏற்றாற்போல லட்சத்திலும் கோடியிலும் பேரம் பேசப்பட்டு வசூலிக்கப்படுகிறது. மர அறுவை ஆலை அமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுகிறது. இருந்தும் வனத்துறையை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுகொள்ளவில்லை'' என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

cc

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க மான ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப் பின் சுந்தர்ராஜனிடம் நாம் பேசியபோது, ""சுற்றுச்சூழல் துறையில் நடத்தப்படும் சோதனைகளை வரவேற்கிறோம். ஆனால், சின்ன மீன்களுக்கு எதிராக மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை பாய்கிறது. பெரிய பெரிய ஊழல் திமிங்கலங்கள் மீது பாய்வதில்லை. அதனால் உயரதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை பாய வேண்டும். இல்லையேல் லஞ்ச ஒழிப்புத்துறையின் நேர்மை சந்தேகத்திற்குரியது'' என்கிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் செல்வராஜிடம் நாம் பேசியபோது, ""குறிப்பிட்ட 3, 4 துறை களைத் தவிர மற்ற துறைகளில் ரெய்டு நடத்தவோ, ரெய்டு நடத்தப்பட்ட துறைகளின் மேலதிகாரிகளை வளைக்கவோ லஞ்ச ஒழிப்புத்துறை விரும்புவதில்லை. முக்கிய துறை களுக்கு எதிரான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தாமல் அமைதியாக இருப்பது மேலிட அரசியல் தான் காரணம்'' என்கிறார் அழுத்தமாக.

இதற்கிடையே இத்தகைய ரெய்டுகள் அமைச்சர்கள் வட்டாரங்களில் அதிருப்தி களை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதவாளர்களான அதிமுக சீனியர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ""வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் தேர்தல் நிதி தொடர்பாக எடப்பாடியின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றவில்லை. அதனாலேயே அவர்களின் துறைகளில் அவர்களுக்கு செல்லும் வருவாயை தடுக்கவே இந்த வேட்டையை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்கு நர் ஜெயந்த் முரளிக்கு சில இன்ஸ்ட்ரக் சன்களை கொடுத்துள்ளார் எடப்பாடி. இது, குறிப்பிட்ட அமைச்சர்களுக்கு வைக்கப்பட்ட குறி மட்டுமல்ல; தன்னோடு முரண்படும் அமைச்சர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணிதான். இதனால் அமைச்சர்கள் பலரும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள்'' என்கின்றனர் சீனியர்கள்.

தமிழக ஐ.பி.எஸ். வட்டாரங்களில் விசாரித்த போது, ""தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக ஏற்கனவே ஒருமுறை ஜெயந்த்முரளி இருந்திருக்கிறார். முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமானவர் என்பதால், அமைச்சர்களுக்கு எதிரான புகார்களில் அக்கறை காட்டியதில்லை. அதேசமயம், அத்துறையிலிருந்து அவர் மாற்றப்பட்ட நிலையில், இயக்குநர் பதவியை டிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தி விஜயக்குமாரை நியமித்தனர். இவரது பணிகாலத்திலும் பெரிய அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டுகளை நடத்திய தில்லை. விஜயகுமார் செப்டம்பரில் பணி ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் இயக்குநர் பதவியை ஏ.டி.ஜி.பி. அந்தஸ்துக்கு இறக்கம் செய்யப்பட்டு ஜெயந்த் முரளியை மீண்டும் இயக்குநராக நியமித்தார் எடப்பாடி. ஆனால், ஜெயந்த் முரளியோ சென்னை போலீஸ் கமிஷனராக விரும்பியுள்ளார். அதனை எடப்பாடி நிறைவேற்ற வில்லை. அந்த வருத்தத்தில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத் தக்கூட பழைய புகார்களை தூசு தட்டி இந்த ரெய்டுகளுக்கு அவர் உத்தரவிட்டிருக்கலாம்.

அதேசமயம், ஜெயந்த் முரளியின் மனைவி ஜெயந்தி, சுற்றுச் சூழல் துறையில் உயர் பொறுப்பில் இருந்துள்ளார். நேர்மையான அதிகாரியான அவர், ஊழல் பெருச்சாளிகளான பாண்டியன் உள்ளிட்ட பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார். அப்படிப்பட்ட வரை அங்கிருந்து வனத்துறைக்கு மாற்ற வைத்திருக்கிறார் பாண்டியன். இவருக்கு எடப்பாடியின் அலுவலக உயரதிகாரிகள் சிலர் உதவியுள்ளனர். இந்த கோபமும் ஜெயந்த் முரளிக்கு இருந்திருக்க லாம்! இத்தகைய பின்னணியி லேயே இந்த ரெய்டுகள் நடத் தப்பட்டிருக்கலாம்'' என்கின்றனர்.

-இரா.இளையசெல்வன்