தமிழக மீனவர்கள் மீது சொந்த நாட்டு கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் கட்டிவைத்து இரும்புக்கம்பியால் தாக்கிய கொடுமை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி, தரங்கம்பாடி, செருதூர் ஆகிய மீனவக் கிராமங்களைச் சேர்ந்த வீரவேல், செல்வகுமார், சுதீர் உள்ளிட்ட 10 மீனவர்கள், கடந்த 15-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
21-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மன்னார் வளைகுடா பகுதியான சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது, அங்கு வேகமாக வந்த இந்திய கடற்படைக் கப்பல், படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது இந்திய கடற்படையின் கப்பல் எனத் தெரியாத தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினர் என நினைத்து படகை அதிவேகமாக கரை நோக்கிச் செலுத்தியுள்ளனர்.
படகு நிற்காமல் சென்றதைக் கண்ட இந்திய கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது த
தமிழக மீனவர்கள் மீது சொந்த நாட்டு கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் கட்டிவைத்து இரும்புக்கம்பியால் தாக்கிய கொடுமை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி, தரங்கம்பாடி, செருதூர் ஆகிய மீனவக் கிராமங்களைச் சேர்ந்த வீரவேல், செல்வகுமார், சுதீர் உள்ளிட்ட 10 மீனவர்கள், கடந்த 15-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
21-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மன்னார் வளைகுடா பகுதியான சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது, அங்கு வேகமாக வந்த இந்திய கடற்படைக் கப்பல், படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது இந்திய கடற்படையின் கப்பல் எனத் தெரியாத தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினர் என நினைத்து படகை அதிவேகமாக கரை நோக்கிச் செலுத்தியுள்ளனர்.
படகு நிற்காமல் சென்றதைக் கண்ட இந்திய கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடற்படை சரமாரியாகச் சுட்டதில், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என்கிற மீனவரின் தொடையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்தது. உச்சகட்டமாக, படகைச் சுற்றி வளைத்து, படகில் தவித்துக்கொண்டிருந்த மீனவர்களைப் பிடித்துக் கட்டிவைத்து, சுமார் 2 மணி நேரம் விசாரணை என்கிற பெயரில் இரும்பு ராடால் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.
இதன்பின்னர், குண்டு பாய்ந்த மீனவர் வீரவேலை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் உச்சிப்புள்ளி இந்திய கடற்படை விமான தளத்திற்குக் கொண்டுசென்று முதலுதவி சிகிச்சையளித்து, பின்னர் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குண்டடிபட்ட வீரவேலை தவிர்த்து, விசைப்படகில் எஞ்சியிருந்த தமிழக மீனவர்கள் 9 பேர், ராமேஸ்வரத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு படகுடன் அழைத்து வரப்பட்டு, நாகை அரசு மருத்துவ மனையில் முதலுதவிச் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர்தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில், "நாங்கள் அதிகாலையில் கடலில் வலை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்துக் கப்பல் ஒன்று வந்தது. அது இந்தியக் கப்பலென்று தெரியாது. இலங்கைக் கப்பல் என நினைத்து அவர்களிடமிருந்து தப்பிக்க, கரை நோக்கி வேகமாகப் போனோம். ஆனால் இந்தியக் கடற்படையினர் சற்றும் யோசிக்காமல் மிகஆவேசமாக எங்களின் விசைப்படகு மீது சுட்டாங்க. சுமார் 15 நிமிடம் குண்டு மழை பொழிந்ததைக் கண்டு, இனி நாங்கள் யாரும் உயிரோடு திரும்ப மாட்டோம் என நினைத்தபடியே படகில் படுத்துக்கொண்டோம். பிறகு எங்களோட விசைப்படகில் ஏறிய இந்திய கடற்படை வீரர்கள், அனைவரையும் தலை முடியைப்பிடித்து தரதரவென இழுத்துச்சென்று கட்டிவைத்து, விசாரணை என்கிற பெயரில் இரும்பு ராடால் அடித்து சித்திரவதை செய்தனர். இவர்களின் தாக்குதலுக்கு இலங்கைக் கடற்படையோ, கடற்கொள்ளையர்களோ எவ்வளவோமேல்'' எனக்கூறியபடி, துப்பாக்கிச் சூட்டில் விசைப்படகில் சிதறிக்கிடந்த குண்டுகளை ஆதாரமாகக் காண்பிக்கின்றனர்.
இவ்விவகாரம் குறித்து, "இந்திய கடற் படையின் இத்தகைய செயல், மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று பிரதமருக்கு கடிதமெழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மீனவர்களுக்கு நிவாரணத்தை வழங்கியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற் படையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். உலகிலேயே சொந்த நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரே கடற்படை, இந்திய கடற்படையாகத்தான் இருக்கும். வெட்கம் கெட்ட ஒன்றிய அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது'' என்றார் ஆவேசத்துடன்.
மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில், "மீனவர்களின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய கடற்படையினர் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. பதற்றம் நிறைந்த இந்திய இலங்கை கடற்பகுதியில் மீனவர்களின் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இந்திய கடற்படைக்கு பயிற்சியும், இந்திய கடற்படை அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என மீனவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
மீனவ சங்க பிரதிநிதிகளும், தவைவர்களும் கூறுகையில், "இந்த தாக்குதல் எதேச்சையாக, சாதாரணமாக நடந்த நிகழ்வு அல்ல. திட்டமிட்டே, தமிழக மீனவர்களின்மீது வன்மம் கொண்டே நடத்தியுள்ளனர். பதற்றமான சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்க மத்திய பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறது. அதில் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கினால் நாடு பதற்றமாகும், அது தமிழக அரசிற்கு அவப்பெயரை உருவாக்கும் என்பதைத் திட்டமிட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இத்தோடு மத்திய அரசு இத்தகைய வேலைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கமாட்டோம்'' என்கிறார்கள்.