சி.பி.எம். கட்சியின் இலக்கியப்பிரிவான த.மு.எ.க.ச. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழி உரிமை பாதுகாப்பு மாநாடு, கடந்த நவம்பர் 5, சனிக்கிழமை, திருச்சி கலைஞர் அறிவாலயத் தில் நடந்தது. மொழிப்போர் தியாகிகளான நடராஜன் - தாளமுத்து நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மொழியுரிமை போராட்ட வரலாற்றுக் கண்காட்சியை திருச்சி மாநகர மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழியுரிமை பாதுகாப்பு மாநாட்டிற்கு த.மு.எ.க.ச. மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

cc

மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், "முன்பெல்லாம் இந்தித் திணிப்பை தமிழகம் மட்டும் தான் எதிர்த்தது. ஆனால் இன்று அனைத்து மாநிலங்களும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டன. இந்த மொழிப்போரின் புயல் செங்கோட்டை வரை வீசும். பேருந்தில் ஏறி இடம் பிடிப்பது போல் தான் இந்தி முதலில் துண்டு போட்டு இடத் தைப் பிடிக்கும். அருகிலேயே அமைதியாக வந்து சமஸ்கிருதம் அமரும். இந்தியை ஒருபோதும் இங்கு திணிக்க முடியாது. இடம்போடவும் முடியாது, அருகில் அமரவும் முடியாது'' என்று கூறினார்.

Advertisment

மாநில துணைத்தலைவர் நந்தலாலா பேசுகையில், "பஞ்சாப் மொழி மீது மதச்சாயம் பூசப்பட்டதாலேயே அது அழியக் காரணமானது என்று பகத்சிங் சொன்னார். அண்ணாவைப் பயன்படுத்தி இந்தியை எதிர்க்கும் பெரியாரை வீழ்த்த வேண்டும் என்று ராஜாஜி திட்டம் போட்டார். ஆனால் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் முன்பே திருச்சியில் இருந்த பெரியாரைச் சந்திப்பதற்காக வந்தார். முதலமைச்சரான பிறகும் முதலாவதாக பெரியாரைச் சந்தித்தவர் அண்ணா. எனவே அங்கு ராஜாஜியின் திட்டம் அரங் கேறாமல் போனது'' என்றார்.

cc

வரலாற்று ஆய்வாளர் செந்தலை கௌதமன், "அம்பேத் கர் ஒரு மராட்டியராக இருந் தாலும் இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரே மொழி தமிழ் என்று அவர் தன்னுடைய புத்த கத்தில் எழுதுகிறார். அன்று கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் இருந்த மொழி கள் மூன்று. பாலி, பிராகிருதம், தமிழ் ஆகியவை மட்டுமே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தன. அவற்றில் இரண்டு அழிந்தாலும் தமிழ் மட்டும் இன்றும் நிலைத்து நிற்கிறது. அதன் தொன்மையை ஏற்க மறுத்து ஒரு பெரிய சமூகத்தின் கலாச்சாரத்தை, அதனை அடிப்படையாகக் கொண்ட தமிழை அழிக்க நினைக்கிறார்கள்'' என்று குற்றம் சாட்டினார்.

திராவிடர் கழக பரப்புரைச் செயலாளர் அருள் மொழி, "ஒன்றிய அரசின் தந்திரம் எப்படி என் றால், புதிய கல்விக் கொள்கையில் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருத மொழியை திணித்துக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே தான் அவர்கள் புதிய கல்விக் கொள்கையை தொ டர்ந்து கட்டாயப்படுத்துகிறார்கள். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி அவசியம். இந்த வகுப்புகளுக்குள்ளும் இந்தியை, சமஸ்கிருதத் தைத் திணித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. தமிழக அரசு மருத்துவப் படிப்பிற்கான பாடத்திட்டங்களை தமிழில் உருவாக்கியிருக்கிறது. இதுதான் நம்முடைய பலம் என்பதை நாம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறோம்'' என்றார்.

Advertisment

cc

ஒன்றிய அரசின் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு என்ற தலைப்பில் மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், "இந்தி பேச வேண்டும் என்று கூறும்போதெல்லாம், மற்றவர்கள் சும்மா இருக்கும்போது தமிழன் மட்டும் தான் கேட்கும் செவி உள்ளவன் போல அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறான். அதுதான் நம்முடைய பலம் என்று இன்று பல மாநிலங்களுக்கு புரிய வைத்துள்ளோம். நம்முடைய தமிழகத்திற்கு மிக நீண்ட நெடிய மொழிப் போராட்ட வரலாறு உண்டு. இந்த போராட்டம் திருச்சியில் இருந்துதான் பற்றியது. 1965-ல் மீண்டும் இந்தி திணிப்பிற்கு எதிராக கோவையில் 12ஆயிரம் தொழி லாளர்கள், கடையடைப்பு மூலமும், வேலை நிறுத்தம் செய்தும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

இந்த எழுச்சி, மாணவர்களிடமிருந்து மடாதிபதிகளிடம் வந்தது. அதனால் தான் காவித்துண்டை எடுத்துப் போட்டுவிட்டு சாலையில் இறங்கினார் குன்றக்குடி அடிகளார். அவரை போலீஸ் கைது செய்தது. அவருக்கு 6 நாள் சிறைத் தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதே சமயத்தில் சங்கராச்சாரியார், இந்தித் திணிப்பு அவசியம் என்று கடிதம் எழுதுகிறார். இந்தி எதிர்ப்புப்போர், மாணவர்கள், சமுதாயம் என்பதைத் தாண்டி, சமயத்திலும் நடக்கும் என்று பதிவு செய்தவர் குன்றகுடி அடிகளார்'' என்றார்.

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் இந்தித் திணிப்புப் பரிந்துரைகளுக்கு எதிராக பரப்புரை செய்து மக்களைத் திரட்டு வதற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஒத்த கருத்துள்ள அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது, மொழிப்போர் வரலாற் றையும், இந்தித் திணிப்புஆபத்தையும் விளக்கிடும் வகையில் மாவட்டங்களில் மாநாடு, கண்காட்சி, கருத்தரங்கம், பேரணி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்கள் எடுத்துரைக் கப்பட்டன.