தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒ.செ.வான முன்னாள் எம்.எல்.ஏ., அதிகாரிகளை கண்டித்து 40 ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சிமன்ற செயலாளர்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mm

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் தி.மு.க.வில் இணைந்து பதவி பெற்ற சாந்திபெருமாள். கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வார்டு கவுன் சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்ற போளூர் தொகுதியின் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம். எல்.ஏ. ஜெயசுதா, போளூர் ஒன்றிய சேர்மன் பதவிக்கு, தி.மு.க.வை சேர்ந்த சாந்திபெருமாளுடன் மோதி தோல்வியைச் சந்தித்தார். சேர்மன் பதவியைப் பிடிக்கமுடியாமல் போன கோபமிருந்தாலும், போளூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்துகொண்டு, அதிகாரிகள் துணையோடு ஒப்பந்தப் பணிகளை மொத்தமாக அவரே எடுத்துக்கொள்கிறார் என இவரையும், அதிகாரிகளையும் எதிர்த்து போளூர் ஒன்றியத்திலுள்ள 40 ஊராட்சிகளின் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 40 பஞ்சாயத்துக்களின் ஊராட்சிமன்ற செயலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி போளூர் ஒன்றியக் குழு அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவரான அ.தி.மு.க. பிரமுகர் வெண் மணி கணேசனிடம் கேட்டபோது, ""சமீபத்தில் என்.ஆர்.ஜீ.எஸ் திட்டத்தில் 4 கோடி ரூபாய் சொச்சம் போளூர் ஒன்றியத்துக்கு வந்துள்ளது. இந்தத் ddதொகையை ஒவ்வொரு ஊராட்சிக்கும் பிரித்து பஞ்சாயத்து செயலாளர் பெயரில் பணி ஆணை வழங்கவேண்டும். நாங்கள் பணி செய்தபின் பில் வாங்கி தலைவர்களிடம் தந்துவிடுவார்கள். இது ஒரு நடைமுறை. சில தினங்களுக்கு முன்பு பஞ்சாயத்து செயலாளர்களை மீட்டிங் என அலுவலகத்துக்கு வரவைத்து கிராம வளர்ச்சி பி.டி.ஓ. ஆனந்தன், ஒர்க் ஆர்டர் காப்பியில் கையெழுத்து வாங்கி அதனை முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. ஒ.செ.வுமான ஜெயசுதாவிடம் தந்துள்ளார். இதனை பஞ்சாயத்து செயலாளர்கள் எங்களிடம் கூறியபோது அதிர்ச்சியடைந்தோம்.

Advertisment

சேர்மன் சாந்திபெருமாள் இந்த பதவிக்கு மட்டுமல்ல...… அரசியலுக்கும் புதியவர். அவருக்கு நிர்வாக விஷயம் தெரியவில்லை, ஊராட்சிமன்ற தலைவர்களின் பிரச்சனைகள் புரியவில்லை. ஜெயசுதாவின் மிரட்டலுக்குப் பயந்துகொண்டு எல்லா வேலைகளிலும் 50 சதவிகிதத்தை அவருக்குத் தந்துவிடுகிறார். மீதி 50 சதவிகித வேலையை கவுன்சிலர்களுக்கு பிரித்துத் தருகிறார்.

கடந்த 4 வருடமாக அதிகாரிகள்தான் பஞ்சாயத்து நிர்வாகத்தை கவனித்து வந்தார்கள். இப்போதுதான் தேர்தல் நடந்துவிட்டதே… ஜெயசுதா ஒதுங்கிக்கொண்டு போகாமல் தலைவர்கள் செய்யவேண்டிய வேலை கள், பஞ்சாயத்து நிர்வாகம் செய்யவேண்டிய வேலைகளைக்கூட மிரட்டி வாங்கிச் செய்வது எந்த விதத்தில் நியாயம்'' என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பி.டி.ஓ. ஆனந்தனிடம் நாம் கேட்டபோது, ""இன்னார்க்கு இதனை தரச் சொல்லி கட்சி முக்கிய பிரமுகர்கள் சொல்கிறார்கள், தலைவர்கள் அதை கேட்பதில்லை. இது அவர்களுக்குள்ள பிரச்சனை. அதில் நாங்கள் எப்படி தலையிடமுடியும்'' என்றார்.

Advertisment

குற்றச்சாட்டு குறித்து கவுன்சிலரும், அ.தி.மு.க. ஒ.செவுமான முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதாவை தொடர்புகொண்டு கேட்டபோது, ""நான் ஒரு மீட்டிங் கில் இருக்கேன், பிறகு உங்களைத் தொடர்புகொள் கிறேன்'' என்றவர், அதன்பின் நம்மைத் தொடர்பு கொள்ளவில்லை.

""இந்த பிரச்சனை போளூர் ஒன்றியத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர் பதவிகளை 70 முதல் 80 சதவிதம் வரை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இவர்களுக்கு எந்த ஒப்பந்தமும், பஞ்சாயத்து நிதியையும் நேரடியாக தரக்கூடாது. அ.தி.மு.க. அமைச்சர், எம்.எல்.ஏ, ஒ.செ. சுட்டிக்காட்டும் நபர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டுமென வாய்மொழி உத்தரவு துறையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்களும், கவுன்சிலர்களும், தலைவர்களும்கூட பாதிக்கப்பட் டுள்ளார்கள். அதுதான் போளூரில் வெடித்துள்ளது, விரைவில் தமிழகம் முழுவதும்கூட வெடிக்கலாம்'' என்கிறார்கள்.

-து.ராஜா